ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

பாவங்கள் தீர ......... நல்வினைகள் செய்தல்.

 பாவங்கள் தீர ......... நல்வினைகள் செய்தல்.






நாம் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை செய்திருந்தாலும் அவற்றை தவறு என உணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளை செய்தால், இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்க செய்யவேண்டிய பணிகள் பற்றி சற்று சிந்திப்போம்.

 1, சிவாலய திருப்பணி செய்தல்;  சிவபெருமானார் எழுந்தருளியுள்ளசிவாலங்களைப் புதுப்பித்தல், மிக மேலான நல்வினை- புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்துமான சிவலாயங்களைத் திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுத்து கொடுத்தல் தலையாய நல்வினையாகும். இதனை வலியுறுத்திய 11ம் திருமுறை பாடல் வரிகள்

 காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்ல வண்ணம்

 பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டு

பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீீர் 

  வணீர் எளிதோ மருதப்பிரான்கழல் மேவுதற்கே  ,,, பட்டிணத்தடிகள் 

   சிவபெருமானுடைய திருவருளை பெறுவதற்கு கீழ் காணும் ஐந்து நல்வினைகளை- புண்ணிய செயல்ளை செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்த பட்டிணத்தடிகள்

  1. திருஐந்தெழுத்தை / சிவாயநம / ஓதுதல்

 2, சிவலாய திருப்பணிகளைச் ெசய்தல்

 3. சிவபெருமானுடைய திருப்புகழைப்பேசி மகிழ°தல்

 4, உருத்திராக்கம் அணிந்து கொள்ளல்

 5, உடலில் திருவெண்ணீறுஅணிந்து மகிழ்தல்

2, சிவாலயத்தை தூய்மை செய்தல்

    சிவாலயங்களை பெருக்குதல், மெழுகிடல், தேவையற்ற மரம் செடிகளை காெடிகளைட அகற்றி தூய்மை செய்தல்.அன்று மலர்ந்த மலர்களை கொய்து மலை கட்டுதல், புகழ்ந்து பாடதல், தலையால் வணங்குதல், இதனை கூறும் பாடல்

   நிலைபெறுமாறு எண்ணுதியேல்நெஞ்சே நீவா

  நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்

  புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு

 பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி

  தலையாரக் கும்பிட்டு கூத்துமாடி

சங்கரா சயபோற்றி போற்றியென்றும்

 அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்

 ஆரூரா என்றென்றே அலறா நில்லே  ...... அப்படிரடிகள் தேவாரம் 6ம்திருமுறை

3, மலர் தொண்டு செய்தல்

    மேலே உள்ள பாட்டில் கண்டவாறு அனுதினமும் அன்று மலர்ந்த பூக்களை பறித்து மாலை ஆக்கி சமர்பித்தல்

4, இறை நாமத்தை சிந்தித்தல்

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார் சுந்தரர்

  காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்  என்றார் திருஞானசம்பந்தர்

 நானேயாே தவம் செய்தேன் சிவா நம எனப் பெற்றேன்   என்றார் மணிவாசகர்

  பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே ..4ம் திருமுறையில் அப்பர் அடிகள்

    நம்முடைய தீவினைகளை நீக்கி நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திரு நாமத்தை சிந்தித்தல் / செபித்தல்/ அவசியமாகும். இதற்கென பெருஞ்செலவு செய்ய வேண்டியதில்லை. எளிய வழியும் இது எனலாம்.

 5, சிவாலங்கள் யாத்திரை செய்தல்

    பாடல் பெற்ற சிவத்தலங்கள் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி அங்குள்ள மூர்த்தியினை நேரில் வணங்கி வழிபாட்டால்  சிவஆகமங்களில் கூறிய மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற வாறு சிவ தரிசனம் செய்து வினைகளை நீக்கி புண்ணியம் பெறலாம்

 6, சிவாலயத்ததில் விளக்கேற்றுதல்

  நமிநந்தி அடிகள், கலிய நாயனா் , கணம்புல்லர் ஆகியோர் சிவாலயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணத்தால் அறியலாம். விளக்கேற்றலுடன் இறைவனுக்க நறும் புகையிட்டும் கலய நாயனார் போல் தொண்டு செய்து புண்ணியங்களை பெறலாம்.,

 7, திருமுறைகளை பாராயணம் செய்தல், மிகச் சிறந்த புண்ணிய செயல்களில் இதுவும் ஒன்று, தேவாரப்பதியங்களில் கூறிய வார்த்தைகள் சொற்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளாக போற்றப்படுகின்றன, அதுவே அவனைப்போற்றும் அருச்சனை எனவே அருச்சனையே பாட்டே ஆகும் என்றார் சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமான், இதனால் நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் சம்பந்தர் பெருமான்

  ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த

  திருநெறிய தமிழ்வல்லர் தொல்வினை தீர்தல் எளிதாமே,   சம்பந்தர்

 8. அடியார் தொண்டு செய்தல்

   சிவபெருமானை இடைவிடாது மனத்தி் நினைந்து வாழும் சிவனடியார்களை "நடமாடக் கோயில் " என்றார் திரமூலர், இத்தகையவர்களுக்கு தொண்டு செய்தாலும் அவரை வணங்குதலும் இறைவருக்கு செய்த தொண்டாகும். இக்கருத்தினை கூறும் புராணமே திருத்தொண்டர் புராணமான ெபரியபுராணம்.

 9. சான்றோர்களுடன் இணங்கியிருத்தல்

  புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நெறியை கடைப்பிடித்தும் அவர்களிடமிருந்து வேதங்கள் புராணங்கள் சாஸ்திர நூல்களின் கருத்து கேட்டல் தெளிதல் சிந்தித்தல் நிட்டை கூடல் பலன் கிடைக்கும்.

  தானம் தர்மங்கள் செய்தல்

 ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன்காரணம் ஏழைக்ட்கு உதவுவதற்குத்தான் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்கிறார் அப்பர் அடிகள்

  இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

  கரப்பவர்தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்,  என்கிறார் திருவையாற்று பதிகத்தில்

  மேலும் திருமூலர் " யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி " என்கிறார்

  கொடுத்து பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவத்தின் மூல விதை இது அழிய இதுவே வழி

  பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் உயிர்கட்கு தீமையை செய்தல் கூடாது,

  செல்வம் உள்ளவர்கள் மறைக்காமல் திருப்பணிகளையும், தொழுவார்க்கு வேண்டிய வசதிகளையும்,அடியார் சேவையும், ஏழைக்களுக்கு உதவுவதும் செய்யவேண்டும். இதில் கூறப்பட்டுள்ள நல்வினைகளை அன்றாடம் செய்து பாவங்களிலிருந்து விடுபட்டு இன்பமாய் வாழலாம். தேவை மன உறுதிதான், இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணியச் செயல்கள்.

 திருச்சிற்றம்பலம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக