ஞாயிறு, 31 மார்ச், 2013

திரு நீரு


திரு நீரு மங்கல மங்கையருக்கு அழகு - நெற்றியில் குங்குமம் ஆன்மீக அழகனுக்க அழகு - நெற்றியில் திருநீரு சிவ அடையாளம் திருநீரு, உத்திராட்சம், சடைமுடி. இதில் சைவ மதத்தின் முதன்மை அடையாளமாக முன்னிருப்பது திரு நீரு. வேதத்தில் உள்ளது - நீரு.வெந்துயிர் நீக்குவது - நீரு. போதம் தருவது - நீரு. புண்ணியமாவது - நீரு, முக்தி தருவது - நீரு. முனிவர் அணிவது நீரு. சத்தியமாவது - நீரு. தத்துவ மாவது - நீரு. பரவ இனியது - நீரு. பக்தி தருவது - நீரு. சக்தி தருவது - நீரு. கீர்த்தி தருவது நீரு. காண இனியது - நீரு. பெருமை கொடுப்பது, மானம் தருவது, பூச இனியது, மதியைதருவது, புண்ணியமாவது, ஆசை கெடுபபது, பேசஇனியது, தேசம் புக்ழ்வது, அவலம் கெடுப்பது, பாவம் தொைல்ப்பது, வேதம் புகழ்வது -நீரு, இதுபோன்ற திரு நீருன் பெருமையை நால்வர் திருநீற்று பதிகத்தின் மூலம் இதன் தனி சிறப்பை விள்க்குகிறது, சிவன் - பித்தன் - அக்னியாக இருப்பதால் அக்னியின் முதிர்ச்சி சாம்பல் எனவே அக்னி சொருபவமான சிவனுக்கு சாம்பல் கொண்ட விபூதியே பிரசாதமாக வழங்க்படுகிறது, திருஞான சம்பந்தர் கூற்றின்படி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம் கவர் கள்வன்- சுடுகாட்டுசாம்பலை உடலில் பூசியவர் என்கிறார் விஷ்ணு - வாதம் - நீர் வடிவம் - திருபாற்கடலில் பள்ளிகொண்டவர் எனவே வாதம் - நீர் கொண்ட தீர்த்தம் பிரசாதமாக வழங்க்ப்படுகிறது. இதன்படி சைவத்ததின் - சிவத்தின் முன்னின்ற அடையாளமான திரு நீரு எவ்வாறு தயாரித்து பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பதை மிஸ்டிக் செல்வம்ஐயா தனது விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு மூலம் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். விபூதிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது பசுஞ்சாணம், கோமாதா என்று தெய்வமாக கொண்டாடும் பசுஞ் சாணத்திலிருந்து தான் சாம்பல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக கோவில்களில் பேணப்படும் கோசாலை ஆதாரவற்ற பசுமாடுகள் பராமரிக்கப்படும் இடம்- இங்குள்ள பசுஞ்சாணத்தின் மூலம் சாணம்சேகரித்து அதனை உருண்ட கவலங்களாக உருட்டி நெருப்பிட்டு சாம்பல் பஸ்பமாக கொள்ளப்படுகிறது, இந்த சாம்பல்பஸ்பம் 2 கிலோ. இவற்றுடன் கீழ்கண்ட படிகாரங்கள் சமவிகதத்தில் சேர்த்து கலவை செய்யப்படுகிறது, சேர்க்கப்படும் படிகாரங்கள் : படிகார பஸ்பம் , குங்குலிய பஸ்பம், சங்கு பஸ்பம், ஆமை ஓடு பஸ்பம், பவள பஸ்பம், சிரா பஸ்பம், சிரஞசி பஸ்பம், முத்து சிப்பிபஸ்பம், நத்தை ஒடு பஸ்பம், ஆகிய பஸபங்கள் ஒவ்வொன்றும் சரியாக 2 கிராம் வீதம் கலந்து ஒரு அகன்ற தாம்பாளத்தட்டில் நன்றாக கலந்து அதற்கு ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திர உருவேற்றி பின் ஏதேனும்ஒரு சிவன் கோவிலில் விபூதி அபிசேகம் செய்து இந்த மந்திர விபூதியை தயார் செய்து பயன்படுத்தலாம் இருப்பு வைத்தல்: இதனை சுத்தமான ஈரமற்ற பட்டர் பேப்பர் அல்லது காந்தமில்லாத பாத்திரம் அல்லது பட்டு துணி கொணட பை இவற்றில சேமித்து வைக்கலாம், இதனைபிரசாதமாக அனுப்ப வேணடுமெனில் பூவரசு இலையில் மடித்து அனுப்பவது மிகுந்த சக்தியை யும் பாதுகாப்பையையும் தரவல்லது, இன்னும் சில சிவலாய்ங்களில் இது போன்றுதான் விபூதி பிரசாதம் அனுப்பப்படுகிறது, அணிதல்: திரு நீரை பெருவிரல், ஆள்காட்டி விரல் நடுவிரல் ஆகியமூன்று விரல்களால் எடுத்து , வாழ்த்து பெறுவோருக்கு பூசுவதனால் பெருவிரலால் பூச வேண்டும் தனக்கு தானே பூசி வேண்டுமெனில் நீரில் கொழைத்து பட்டையாக நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும் விபூதியைஉடலில் எங்கு வேண்டுமாலும் யார் வேண்டுமானலும் பூசிக் கொள்ளலாம், தற்போதும் பிணிகண்டவர்கள் விபூதியை மந்திரித்து பிணி கண்ட இடங்களில் பூசிக் கொள்வதைகாணலாம், திரு நீரு பூசும் போது கீழே சிதறாமல் முகம்ஆகாயத்தை பார்த்து கொண்டு ஓம் சிவ சிவ ஓம் என்று மந்திரம் ஜெபித்துக்கொண்டுபூசினால் நம்மை பிடித்த பிசாசுக்ளவிலகும் பிணகள் அகலும்,நற்பலன் கிடைக்கும், மந்திர விபூதியை இளம் குழந்தைகளுக்கு தவிர்ப்பதுநன்று, ஏனெனின் மந்திர விபூதியின் சக்தி அதிகம் குழந்தைகள் தாங்காது, நன்றி ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு அன்றாரின் விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு ஒலிபேழை மூலம் விபரம் சேகரிக்கப்பட்டது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக