ஞாயிறு, 7 ஏப்ரல், 2013


இளம்பெருமாள் அடிகள் வரலாறு திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர் வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள் பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி. பதினொன்றாம் திருமுறையுள் சிவபெருமான் திரு மும்மணிக் கோவை என்னும் பிரபந்தத்தை அருளியவர் இவர். பெயர்க்காரணம் பெருமான் அடிகள் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்கடவூர்த் திருப்பதிகப் பாடல்கள் தோறும் சிவபெருமானைப் பெருமான் அடிகள் என அவர் போற்றக் காணலாம். இளம்பெருமான் என்ற பெயர் முருகனைக் குறித்த பெயர் ஆகலாம். என்றும் இளமை குன்றா நிலையில் விளங்கும் பெருமானுக்கு இப்பெயர் மிகவும் ஏற்புடையதாகும். கடவுட் பெயரை மக்கட்கு இட்டு வழங்கும் மரபில் பெற்றோர் இப்பெயரை இவருக்குச் சூட்டியிருத்தல் கூடும். இனிச்சிவபிரானுக்கு உரிய பெருமானடிகள் என்ற பெய ருடையார் இருவர் உளராக அவரின் இளையவர் என்ற பொருளில் இவர் இளம் பெருமான் அடிகள் எனப் பெற்றவர் ஆதலும் கூடும். இவர் வாழ்ந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக