சனி, 9 நவம்பர், 2013


மனம் செம்மை பெற ஆன்மிகம் மனம் படைத்தவன் மனிதன், மனத்தை மறந்தால் மனித இயல்பு அகன்று விடும். மனத்தெளிவும் மன உயர்வும் பெற்றவன் வாழ்வின் சுவையை உணர்வான். ஆறறிவு அற்ற விலங்கினம் உடல் வளர்ப்புடன் நின்று விடும். ஆறறிவு பெற்றவனுக்கு மன வளர்ச்சி தேவை. லோகாய சுகங்கள் உடலோடு நின்றுவிடும். உள்ளத்தை தூய்மையாக்காது. இது நல்லது, இது கெட்டது, இது உண்மை-இதுபொய், இது இருப்பது- இது இல்லாதது, இது அழிவது - இது அழியாதது.இது இன்பபம் கொடுப்பது - இது துன்பம் கொடுப்பது இந்த பாகுபாடுகள் சிந்தனை வளம் பெற்றவனிடம் தென்படுஅ இதை விவேகம் அல்லது பகுத்தறிவு என்கிறோம். உடலை அக்குவேராக ஆனிவேராக ஆராய்ந்தால்இதில் சத்தான உண்மை யான அழிவற்ற ஆன்மாவை அடையாளம் காணலாம். ஆன்மாவைத்தவிர மற்ற உறுப்புகள் எல்லாம் அழிவைச் சந்திக்கும், அழியாதது ஆன்மா அழிவது உடல் , அது பகுத்தறியும் பக்குவ மனம் படைத்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமே இலக்காகும். சேசத்திரி சாஸ்திரிகள் சக்தி விகடன் தங்கள்சிந்தனைக்கு உடலில் சந்தனம் பூசினால் குளிர்ச்சியை மனம் உணரும். உடம்பில் அடிபட்டால் வேதனையை மனம் உணரும். உள்ளதை உள்ளபடி உணர மனத் தெளிவு வேண்டும். அதை அளிக்கும் திறன் பண்டைய அறநூல்களுக்கு உஉண்டு. மாற்று வழி இன்று வரை உருவாகவில்லை சேசத்திரி சாஸ்திரிகள் சக்தி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக