புதன், 4 டிசம்பர், 2013


திருவண்ணாமலையின் அர்ப்புதங்கள்! திருவண்ணாமலை என்று சொன்னாலும் முத்தி, தீப ஜோதியை பார்த்தாலும் முக்தி. கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகள் சித்தர்கள், பார்வையில் மரகத மைலையாகவும், பாமர மக்களுக்கு கல் மலையாகவும், காட்சி தருகிறது, இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன, இம்மலை சித்தர்கள் வாழும் சதுரகிரி மற்றும் அகத்தியர் வாழும் பொதிகை மலை, சேர்வராயன் மலைகளை விட மிகவும் சிறப்பு பெற்றது, இம்மலை பல்லாயிரக்கணக்காணவர்களை கவரும் மகத்துவம் பெற்றது, இங்கு ஆயிரக்கணக்கான சித்தர்கள் அருளாளர்கள், மகான்கள் ஞானிகள் ரிசிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதிகள் உள்ளதால் அவர்களின் ஆத்மாக்கள் இம்மலையிலேயே உலவிவருவதால் அவர்களின் வைப்பிரேசன் என்ற ஈர்ப்புத்தன்மை மக்களை ஆன்மீக வாதிகளை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்குள்ள அண்ணாமலையாகிய இறைவன் முதன்மையான மூலாதரமாக விளங்கினாலும், அவனையே வேண்டி முத்தி பெற்ற அருளாளர்கள் , சித்தர்கள் இறைவனின் - அண்ணாமலையானின் - செயல்திறனை ஊக்குவித்து மக்களுக்கு நேரிடையாக அருளாசி வழங்குகிறார்கள். எனவே தான் மற்ற சிவதளங்களை விட திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிவனின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகும், மற்றவை சிதம்பரம் ஆகாயம், காளகஸ்தி வாயு, திருவானைக்கால் நீர் தலம், காஞ்சி நிலம் இவற்றில் இறைவன் அக்னியாக காட்சி தருகிறார் இங்கு, இம் மலை இமயமலையை விட மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இம் மலை ஈசானம் தத்புருஸம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின்ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக காட்சி ( பஞ்சலிங்கம்) தருகிறது, இக்காட்சியை கிரிவலம் வரும்போது குபேரலிங்கம் தாண்டியவுடன் காணலாம். கிரிவலம் வரும் போது கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஓன்றாக தெரியும் மலையாகவும், சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும் மலையின் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் - கெளதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தால் மூன்று பிரிவாகத் தெரியும், இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள். இந்த திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் சேசத்திரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக் கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண் கறுப்பு சிவப்பு நிறத்தில் காணப்படும், இஙகிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலைகள் போல் காட்சி தரும் வலம் வந்து முடிக்கும் தருவாயில் அதாவது குபேரலிங்கம் தாண்டியவுடன் ஐந்து மலையாக அதாவது பஞ்சலிங்கமாக காணப்படும். திருமால் பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்க சிவபெருமான் லிங்கோத்பவராக ஜோதிப் பழம்பாக காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தி துன்பப்படவே சிவபெருமான் மலையாகி நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. இம்மலையில் தவமிருந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து அர்த்தநாரீஸ்வராக காட்சி கொடுத்த தலமும் இங்கேதான்.இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்கிறது புராணம், திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம், ஒருமுறை வலம் வரவேண்டுமென்று எண்ணி ஒரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனும், இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயேக பலனும், புண்ணிய தீர்ததங்களில் நீராடிய பலனும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேக யாகப் பலனுடன் தான தர்மங்கள் பல செய்த பலன்களும் நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகப்பலன்களும் கிட்டும் என்று அருணாசலபுராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களையும், லிங்கங்களையும் தரிசித்தால் பேறுக்ள பல பெறலாம் என புராணம் கூறுகிறது. கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது இந்திர லிங்கமாகும், கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கமாகும் இது தாமரைக்குளம் அருகே அமைந்துள்ளது, இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம் நீங்கும், மூன்றாம் லிங்கமாக தெற்கு திசையில் இருப்பது எம லிங்கம். இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும். தென்மேற்கு திசையில் நான்காம் லிங்கமாக உள்ளது நிருதி லிங்கம், இங்கிருந்து மலையை பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம் போல் ஒர் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்ததம் எனப்படுகிறது இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும். ஐந்தாவது வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும் நீரிழிவு தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும். ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசித்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் மூட்டுவலி முழங்கால் வலி நாளடைவில் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம் , இந்த லிங்கம் காசுக்களை அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ செழிப்பு வளரும், எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் விலகும். இந்த அஸ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலையோ சிவபெருமானாக உள்ளதால் நந்திகளும் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. மேலும் கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்களும் உள்ளன, விநாயகர் துர்க்கை முதலான ஆலங்களும் உள்ளன வணங்கி பேறு பெற்றுய்யலாம். கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல் அடி அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வரம் வேண்டும் இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாரரத நல்ல பலன்கள் கிட்டும் என்பதில் யாதொரு ஐயமில்லை, ஓம அருணாசல ஈஸ்வராய நம!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக