வியாழன், 25 பிப்ரவரி, 2016

மன அமைதி

மன அமைதி
(ஸ்ரீ சுவாமி சிவானந்தர்)
நல்லாரோக்கியமும் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவை இரண்டும் இருப்பினும் பலரும் தொடர்ந்து மன அமைதி இன்றியே அல்லல் படுகின்றனர். நீங்கள் பிறர் விசங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் தவறாக இருக்கலாம், ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் உறுவானனேன்?, யாரையும் எதையும் குறை கூறாதீர்கள். பிறருக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்க வில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படியே நடக்கின்றனர். ஏனனெனில் அவர்ககளுக்குள்ளே இயங்கும் கடவுள் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறார். உங்கள் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல விதியாகும்.
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் எவரையும் எதையும் குறை கூறாதீர்கள், குறை கூறுவது என்பது திட்டுவதற்கு நிகர். எது நடந்தாலும் அது கடவுளின் இச்சையால் நடக்கிறது அது கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை ஏதாவது நிகழ்ந்தது என்றால் அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்று பொருள். அது கடவுளின் செயலாலேயே நடந்தது என கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களுக்கு அமைதி கிட்டும். எல்லாமே கடவுனின் பார்வையிலேயே நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களை கடவுளின் ஸ்தானத்தில் வைத்து பாருங்கள். எல்லாம் உங்கள் விருப்பத்திலேயே நடைபெறுகிறது என்று உணருங்கள். உடனே உங்களுக்குள் அபரிதமான அமைதியும் ஆற்றலும் ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.

பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், காரணமின்றி துன்புறுத்துவதாகவும் நினைத்தால், அது உண்மையாகவே இருந்தாலும், அதற்காக அலட்டிக் கொள்ளாதீர்கள். நிலைமையை பொறுமையுடன் சமாளியுங்கள். இந்நிலையில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள். பிறர் உங்களை திட்டினால் கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக இருங்கள். அவர்கள் விரும்புவதை சொல்லட்டும். இந்தக் காலம் முட்டாள்கள் நிறைந்தது. எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். நீங்கள் நினைக்கும் தீய - வேண்டாத செயல் நடந்தது குறித்து வாழ்நாள் முழுவதும் எண்ணி எண்ணி வாழ் நாளை வீணாடிக்க வேண்டாம். ஏனெனில் மனித வாழ்வு மிகவும் சுருங்கியது. இதனை மறக்க உங்களுக்கு வருப்பமான வேலை ஒன்றி பூரணமாக மனத்தை லயிக்க செய்யவும். நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவரிடமும் கடவுளைக் காண கற்றுக்கொண்டால் இது சாத்தியமாகும். கடவுள் இதைத்தான்விரும்புகிறார் என்பதைக் சொல்லிக் கொண்டு பிறர் நிந்திக்கையில் நீங்கள் மெளனமாக இருங்கள். கலக்கம் அடையாதீர்கள். பழிச் சொற்களை ஏற்றுக் கொண்டால் அடக்கத்திலும் தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். ஆன்மீகத்தில் நீங்கள்ள உயர்வடைவீர்கள் என்பது தின்னம்.

பொது மக்களின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காதீர்கள். ஒழுக்க நியதிகள், நன்னெறிகள் மறைநூல் வாக்கியங்கள் பணிவாளர்கள், மற்றும் மகான்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள், நீங்கள் தவறவே மாட்டீர்கள். பொறாமை அடிக்கடி அமைதியைக் குலைக்கிறது. பொறாமை ஒரு வியாதி. உங்களது முன்னேற்றத்தை யாராலும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. நீங்கள் முன்னேற வேண்டும் என்று இருந்தால் உலகம் முழுவதும் ஒன்று திரண்டு தடுத்தாலும் நிறுத்த முடியாது. அதற்கு மாறாக நடக்க வேண்டுமெனில் அப்போதும் உலகம் ஒன்றும் செய்ய இயலாது. ஒவ்வொரு மனிதனும் அவனது விதியினாலேயே ஆழப்படுகிறான். இதை நினைவு கொள்ளுங்கள். எனவே ஒரு பொழுதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள். உங்கள் துன்பத்திற்கு பிறரைப் பழிக்காதீர்கள்.
உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், சூழ்நிலையை மாற்றுவதற்கு பதிலாக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் இப்போதைக்கு இது ஒத்துப்போகாதாக இருந்தாலும் உங்களை மாற்றத்திற்கு கொண்டுவருவதை படிப்படியாக நீங்கள் உணர்வீர்கள். முயன்று பாருங்கள். வெற்றி உண்டு.
எது நடந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லா தொல்லைகள் துன்பங்களையும் பொறுத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். பொறுமை, உள்பலம் மற்றும் இச்சாசக்தி உங்களிடம் அதிகரிக்கும். உங்களின் அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை எதிர் கொள்ளாதீர்கள். முடிந்த மட்டும் முயலுங்கள். உங்களால் தன் காலில் நிற்க முடியும் என்று தன்னம்பிக்கைை ய வளர்த்துக் கொள்ளுங்கள்.இதுவே உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனாலும் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். உங்களால் முடிந்தமட்டும் திறமையுடன் உங்ளது பொறுப்புகளை நிறைவேற்றப் பாருங்கள். ஆனால் ஒன்றை மட்டும்மனதில் கொள்ளுங்கள், நான் செய்கிறேன், என்ற ஆணவத்துடன் தினமும் மேலும் மேலும் புதிய பொறுப்புக்களை கூட்டிக்கொண்டே போகக் கூடாது. இதுவே நடைமுறை பாசையில் வம்பை விலைக்கு வாங்குவது என்பதாகும். உங்களது பொறுப்பு களுக்கு ஏற்ப உங்களது புற வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகமதிகம் நேரத்தை பிராத்தனை, சிந்தனை மற்றும் தியானத்தில் செலவிட விருப்பம் கொள்ளுங்கள். மனமே இல்லாதாகும் பொழுதுதான் பூரண அமைதி கிட்டுகிறது. மனம் என்பது எண்ணங்களே, எண்ணங்கள் என்றால் சலனம், செயல் குறையக் குறைய எண்ணங்களும் குறையும். எவ்வளவுக்கெவ்வளவு எண்ணங்கள் குறைகின்றனவோ, அந்த அளவு மன அமைதி அதிகரிக்கும். எண்ணமின்மை தான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.
ஒழுங்காக தியான நேரத்தை கடைபிடியுங்கள், தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நிஸ்சலத்தன்மையை அது உருவாக்கிறது. இதனால் மனம் அலைந்து திரியாது. படிப்படியாக தியான நேரத்தை கூட்டுங்கள். இது உங்கள் அன்றாட வேலையுடன் குறுக்கிடாது. ஏனனெனில் தியானம் உங்களது பல்வேறு திறமைகளை குறைந்த நேரத்தில் வேலைகளை செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு அளிக்கிறது. நீங்கள உடலளவில் ஓய்வெடுத்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள். ஜபம், மானசீக பிராத்தனை மற்றும் ஏதாவது நூல்கள் படிப்பதில் ஈடுபடுங்கள். எல்லாத் தொல்லையும் மனதில் தான் ஆரம்பிக்கிறது. கடும் சொற்களும் தீய செயல்களும் மனதில் தான் உதிக்கின்றன.எனவே ஆரம்ப ஸ்தானத்தில் மனதை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்வாகிய நதி ஸ்படிகம் போல தூய்மையாக பாயும்.
நீங்கள் சில நல்ல காரியங்களை செய்யும் போது பல இடையுறுகள் வராலாம். அதறகாக மனம் தொய்வு அடையக்கூடாது.இடர்களை களைவது நமக்கு ஒரு பாடமாகக் கூட இருக்கலாம், இதனால் மனம் தளரக் கூடாது. இடுக்கண் எதிர் கொள்ள நீங்கள் தயங்கினால் உங்களால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. வாழ்க்கைப் போராட்டத்தை வீரத்துடன் எதிர் கொள்ள வேண்டும். எதற்கும் வருத்தப்பட வேண்டாம், உங்களுடைய கடந்த கால அனுபவங்களிலிருந்து நீங்கள் பாடங்களாக கறறுக் கொள்ளுங்கள்.நான் அப்படி செய்திருந்தால் இப்படி ஆகியிருப்பேன் என்று எண்ணுவதெல்லாம் வீணான சிந்தனையாகும். நேரம் வீண். ஏனனெனில் கவலை சக்தியை கரைத்து விடுகிறது. உண்மை எதுவெனில் எது நடந்ததோ அது அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது ஆண்டவனின் திட்டம். அதற்கு மாறாக அது நடந்திருக்க முடியாது, ஒரு சிறு துகளின் அசைவு முதல் பிரபஞ்சத்தில் பிரமாண்டமான இயக்கம் வரை கடந்த கால, நிகழ்கால எதிர்காலத்தின் ஒவ்வொரு காரண காரியமும் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த பரம்பொருளின் இச்சையால் இப்படித்தான் நிகழ வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழ வேண்டும் என்று விதிக்கப்ட்டிருக்கின்றனவோ அவ்வாறே நிகழ்கின்றன. அதன்படி இச்சைப்படியே அனைத்தும் நிகழ்கின்றன. கடவுளின் விருப்பத்தை மாற்ற எந்த மனித சக்தியாலும் இயலாது. நிகழ்வது நிகழ்ந்தே தீரும் என்ற பிரபஞ்சமெங்கும் உள்ள உண்மையாகும். கவலைப்படுவது வருந்துவது என்பது மன அமைதியைக் குலைக்கும். இதனை உணர்ந்து உலகத்துடன் அமைதியாக வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

நீங்கள் சுயநல வாதியாக இருக்காது,தன்னால் இயன்ற அளவு பிரதிபலனும் எதிர்நோக்காது பிறருக்கு தொண்டு புரியுங்கள் இது உங்களுக்கு மனதில் அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். மன அமைதியும்,பொருள்களில் போராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப் போகா. உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுங்கள். ஆசைகளும் தேவைகளும் மிக மிகக் குறையுமளவு மன அமைதி மிகவும் அதிகரிக்கும். உங்களுக்கு மன அமைதி வேண்டுமென்றால் நீங்கள் செய்யக்கூடாது என்று எதை எல்லாம் நினைக்கின்றீர்களோ அந்த காரியங்களை செய்யாமல் நிறுத்துங்கள். நம்பிக்கை தேவை. அன்பு காட்டப்பட வேண்டும். தன்னலமற்ற பண்பை கடைபிடிக்க வேண்டும். வைராக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். பக்தியை வளர்க்க வேண்டும். இந்த குணஙகள் எல்லாம் திடீரென்னு ஒரே நாளில் வந்துவிடாது. இதை பயிற்சியின் வாயிலாகத்தான் படிப்படியாக கொண்டுவரவேண்டும். நீங்கள் மற்றவர்களிடம், அதாவது உங்கள் உறவு உள்ளவர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளும் அன்பு, பாச, நேச, வறன்முறை நெறிகளின்படி நடந்து கொள்வது போன்றே உங்களுக்கும் அது எதிரொலிக்கும்.

ஆன்மீக முன்னேற்றத்தால் மன அமைதி ஏற்படுகிறது.ஆன்மீக முன்னேற்றம் என்பது அகமுக மார்க்கம். ஆன்மீக வாழ்வு என்பது அகமுக வாழ்வு . இந்த அகமுக வளர்ச்சியானது புற ஆதரவுடன் பெரிதும் சீரழிக்கப்படுகிறது.எனவே தான் சாத்வீக படிப்பு,சாத்வீக சேர்க்கை, சாத்வீக சூழ்நிலை, சாத்வீக பழக்க வழக்கங்கள் தேவை என்று சொல்கிறார்கள். எனவே தான் பிராத்தனை, யாத்திரை, சுவாத்யாயம்,சத்சங்கமம் விரதங்கள்,மற்றும் விழாக்கள் போன்றவைகளை வலியுறுத்துகிறார்கள். இந்த சக்தி வாய்ந்த புற உதவிச் சாதனங்களை விட்டு விடாதீர்கள்.நீங்கள் முன்னேறி விட்டால் அவை தானவே கழன்று விடும்.

நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து நம்பிக்கை இழந்து இருக்கும் பொழுது நமது மறைநூல்களின் பால் உங்கள் கவனத்தை திருப்புங்கள். அல்லது மகான்களின் நூல்களைப் படியுங்கள், அல்லது தீர்த்த யாத்திரை மேற்கொள்ளுங்கள். அங்கு மாறுபட்ட நோக்கில் நாளை கழியுங்கள், பிராத்தனை,ஜபம், தியானம், கீர்த்தனை ஆகியவற்றில் மனதை செலுத்துங்கள். சிதறுண்ட மனம் புது தெம்பு பெறும். அனைத்து லெளகிய ஆவல்களையும் விடுங்கள்.
ஒரு முறை இலட்சியத்தை உங்கள்முன் வைத்துக் கொண்டால், அதன்பின் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க ஆரம்பித்து விடுவிர்கள். சொல் , செயல்களிடைய ஒற்றுமையை உண்டாக்கி, சொல்வதையே செய்யுங்கள்.எல்லா போலித்தனத்திலிருந்து விடுபடுங்கள். மன அமைதியின் முக்கிய பகைவன் போலித்தனமே ஆகும்.
லெளகிய அளவில் உங்களைவிட கீழான நிலையில் இருப்போரையும், ஆன்மீக அளவில் உங்களைவிடமேல் நிலையில் உள்ளோருடன் ஒப்பு நோக்குங்கள்.இது உங்களிடம் லெளகியதிருப்தியையும் ஆன்மீகஅதிருப்தியையும் தூண்டம். அதில் தான் முன்னேற்றமும் அமைதியும் அடங்கியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக நீங்கள் ஒப்பு நோக்காதீர்கள். இது பயங்கர விளைவுகளை உண்டுபண்ணும், நல்லவர்களுடன் மட்டுமே நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.
காரணத்துடன் மட்டுமே பேசுங்கள், எல்லா விதமான தேவை அற்ற பேச்சையும் தவிருங்கள், அளந்தே பேசுங்கள், களங்கமற்ற நல்நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில வேளைகளில் பிரிவை உண்டாக்கிறது. எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்லப் போகாதீர்கள். நீங்கள் கேட்கப்பட்டாலன்றி உங்கள் வேலையை பாருங்கள். விவாதம் செய்யாதீர்கள், விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம், அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும். எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால்எதிர்பார்ப்பு பரபரப்பையும் பரப்பு ஏமாற்றத்தையும் அளிக்கிறது,எதிர்பார்ப்பு இல்லையேல் ஏமாற்றமும் இல்லை. நீங்கள் எதை அனுபவிக்க வேண்டும் அல்லது எதில் துன்படப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அனுபவித்தோ, அல்லது துன்பப் பட்டோ ஆகவேண்டும், ஸ்ரீபகவத் கீதையில் கூறியது போன்று எது எப்படி நடக்கவேண்டுமோ? அது அப்படியே நடந்தே விடும். என்பதை சிந்தியுங்கள், உங்கள் பொறுப்புக்களை நீங்கள் செயல் படுத்துங்கள், பலன்களை கவனிக்க கடவுள் இருக்கிறார் ,
உங்களைப் பற்றி எவரும் நாட்டம் கொள்வதில்லை இந்த விசயத்தை நன்கு நினவில் கொள்ளுங்கள், உங்களது ஒவ்வொரு மோசமான நிலையிலும், உங்களது உதவிக்கு உலகம் ஒடிவரும் என்று எதிர்பார்க்காதீர்கள், கடவுளிடம் நம்பிக்கைகொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடு படுங்கள். உங்களுக்கு கடவுள் துணை இருந்தால் உலகமெல்லாம் எதிர்த்தாலும் நீங்கள் வெற்றியடைவீர்கள். உலகின் உதவியை எல்லாம் பெற்றாலும் நீங்கள் தோல்வியே அடைவீர்கள் கடவுளின் நட்பை பெறுங்கள் அதுவே மிகச் சிறந்த செல்வம். அதைப் பெற்றுவிட்டால் மன அமைதி உங்களுடையதே. பயம் ஒடிவிட்டது பரபரப்பு மறைந்து விட்டது. அனைத்திலும் ஆண்டவனைக் காணுங்கள்.அனைவரிடமும் ஆன்மீக அளவில் ஒருமைப்பாட்டை உணருங்கள்,கடவுளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்சிந்தியுங்கள்,பேசுங்கள்,நடவுங்கள், நேரிய பாதையில் உங்கள் வாழ்வை செல்லத் தொடங்கும்.உங்கன் ஆன்மிக முன்னேற்றம் விரைவாயிருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்தும் மன அமைதியை அடைவீர்கள்.
தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது இரண்டு நிமிடம் கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள், உங்களைப் படைத்தவருக்கு இந்த நேரத்தை நீங்கள் ஒதுக்கலாம் இல்லையா? இறைவா ! இன்று உமது விருப்பத்தை நிறைவேற்ற எவ்விதம் நீர் விரும்பு கிறீரோ அவ்விதம் என்னை பயன் படுத்துவீராக. நான் என்னை உங்களிடம்விட்டு விடுகிறேன் , ( என் வாழ்க்கை உமக்கு நான் செய்யும் ஆரத்தியாக அமையட்டும்) என்று பிராத்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இறைவனது விருப்பமாக ஏற்றுக் கொள்ளுங்கள், உங்களை அவரது பொறுப்பில் விட்டுவிடுங்கள். அனித்யம், அஸகம், லோகம்,அசாஸ்வதம், துக்காலயம் உங்கள் மறை நூல்களை பத்தியுடன் படியுங்கள்,அவற்றின் போதனைகளை யாண்டும் நினையுங்கள், அதன்படி வாழுங்கள் இதைத் தவிர மன அமைதிக்கு வேறு மார்க்கமே கிடையாது.
இறுதியாக இந்தஉலகம் முழுக்கவும்பொய்யானது என்பதை நம்புங்கள், அனைத்து மகன்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக இந்த பிரபஞ்ச உலகம் வெறும் கனவுலகமே, கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும் போது கூட இதனைத்தும் பொய்யே என்பதை உணர்வீர்கள்,
உங்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் அருள்வாராக.

வழங்கியது

ஸ்ரீசுவாமி சிவானந்தர்
திருச்சிற்றம்பலம்,
தொகுப்பு . வை.பூமாலை
மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக