வியாழன், 1 ஏப்ரல், 2021

ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

 






ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படும் நம் ஆத்தடி பிள்ளையார் கோயிலின் சிறப்பு அமுசங்களை சற்று சிந்திப்போம்.

 1) ஒரு கோயில் சிறப்பு அடைய வேண்டுமானால் அது ஆதிகாலத்து நாம் அறியாப் பருவத்தில் தோன்றியிருக்க வேண்டும் ஆனாலும் அதன் பின் அதன் வளர்ச்சி கண்டு பரிகார தெய்வங்களின் வளர்ச்சி பெற்று பெருமை பெறலாம். அதன்படிதான் இங்கு விநாயகர் கோயில் கட்டும் முன்னேயே ஆத்தடியில் தோன்றி அனாதி காலம் தொட்டு அருள்பாலித்து வருகிறார் என்பது ஒரு சிறப்பு

2. ஒரு கோயில் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்றவாறு சிறப்பு (அதாவது நாம் வணங்கும் தெய்வம் )சிறப்பு பெயர் பெற்று நமக்கு விசேடமாக காட்சி அளிப்பது இதனால் இவர் இராஜகணபதி என்ற சிறப்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

3) தலம் என்ற வருசையில் இத்தலம் புகழ் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அடிவாரமாகிய சுந்தரபாண்டியத்தில் அமைந்தபடியால் தல வரிசையில் சிவபெருமானாரே அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்து அருள் செய்த சதுரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பது அதன் சிறப்பு

  மேலும் தலம் என்ற வரிசையில் அங்குள்ள தல விரிச்சம் முக்கியத்துவம் பெறும் அந்த வகையில் இங்கு வெகு சிறப்பு பெற்றது இக்கோயிலின் தல விரிச்சம் வன்னி மரமாகும். வன்னி மரத்தடி விநாயகர் என்றேலே மனம் இறை இச்சை தன்னாலேயே ேதான்றும் இக்கோயிலில் வன்னி மரத்தடியில் விநாயகரும் கைலாய நாதரும் அமர்ந்து அருள் செய்வது சிறப்பிலும் சிறப்பு

4) தீர்த்தம் என்ற வரிசையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி வைப்பாறு நதியுடன் இருக்கண்குடியில் கலந்து கடலில் சங்கமிக்கும் புண்ணிய நதியாம் அர்ச்சுனா நதியின் ஆற்றங்கரையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார், எனவே இக்கோயில் மூர்த்தி, தலம். தீர்த்தம் என்ற அடிப்படையில் ஆகம விிதிப்படி அமைந்த கோயில் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிறப்பு பெறுகிறது.

5, ஓர் ஆன்மா தன் உடலை விட்டு பிரிந்து (பிறப்பு இறப்பு மனித உடலுக்குத்தான் ஆன்மாவிற்கு பிறப்பும் இறப்பும் கிடையாது  அது என்றும் உள்ள நித்திய பொருள் வினைப்பயனை முடித்து சிவமுக்தி பெறவேண்டும்அதுவரை அவ் ஆன்மா மறுபடியும் வேறு உடலில் தோன்று பிறக்கும்)  ஒன்று சிவமுத்தி பெறவோ அல்லது தன் வினைப்பயனால் அடுத்த பிறப்பிற்கு உட்படுவதற்கு அந்த ஆன்மா கடைதேற அதற்கான சிறப்பு வழிபாடுகள் செய்யும் இடம் ஒன்று புண்ணிய நதியாக இருக்க வேண்டும் அல்லது சமுத்திரமாகவோ அல்லது கடலாகவோ இருக்க வேண்டும் உதாரணத்திற்கு இராமேஸ்வரம், காவேரி ஆறு ,அல்லது புனித நதிகள் சங்கமிக்கும் இடம் இவ்விடங்களில் தான் புனி நீர் கொண்டு அபிசேகம் செய்ய எடுத்துச் செல்வார்கள் அதன்படி பார்த்தாலும் இக்கோயில் அமைந்துள்ள அர்ச்சுனா நதிக்கரையில் தான் இங்கு(நம் ஊர்மக்கள்) இவ்விடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே இவ்விடத்திலுள்ள கோயில் இராமேஸ்வரம் காவேரிக்கரைகள் உள்ள கோயில்களுக்கு ஈடாக உள்ளதை நாம் அறியலாம்,ேமலும் நாம் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு தூய உடம்புடன் முதல்தரிசனம் செய்யும் கோயில் தெய்வம் விநாயகர்தான் எனவேதான்ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் விநாயகர் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார் அவ் வரிசையில் அவ்வாறே அமைந்த கோயில் ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதில்லை அதற்காக அதன் சிறப்பில்லாது போய்விடுமா?

6) ஓர் ஆத்மா உடலை வி்ட்டு சென்ற பின் அவ் ஆன்மா தனக்கு ஓர் உடம்பு கிடைக்கவோ அல்லது முக்தி பேறு அடையவோ தவித்துக்கொண்டிருக்கும் அப்போது அவ் ஆன்மா சிறப்பு பெற அவ் ஆன்மாவின் வழித்தோன்றல்கள் செய்யும் கரும (ஈமக்கிரியை) காரியங்கள் செய்யும் இடமும் அவர்கள் (ஆன்மாக்கள் ) முக்தி பேறு அடைய மோட்ச தீபம் ஏற்றும் கோயில் இக்கோயில் தான் ( மோட்ச தீபம் ஏற்றும் கோயில் சிவலாயங்களில் சிதம்பரம் தான் எனவே இக்கோயில் சிதம்பரத்திற்கு ஈடான மோட்ச தீபம்ஏற்றி வழிபடும் கோயிலானதால் இதற்கு தனி சிிறப்பு உண்டு.

7) நம் ஊர் கிராமத்து தெய்வமான அருள்மிகு மாரியம்மன் சித்திரை மாதத்தில் 9நாட்கள் கொண்டாடும் தெய்வம் முதல் நாள் அம்மன் எழுந்தருளச் செய்யப்படும் இடம் இக்கோயில் முன் உள்ள மாரியம்மன் பீடத்தில்தான், மேலும் அவ்வாறு எழுந்தருளச் செய்யும் போது நம் ஊர் பெரியகோயில் காவல் தெய்வங்களான பெரிய கருப்பர், மாமுண்டி கருப்பர் ஆகியோர் மருளாடிகளால் எழுந்தருளி அருள் வாக்கு கொடுத்து அம்மனை வரவழைக்க செய்யும் இடமும் இக்கோயில்தான்

8) நம் ஊர் சாலிய சமுதாயத்தினரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் வைகாசி திங்களில் கொண்டாடும் போது இரண்டாம் நாளான புதன் கிழமையில் அம்மனையும், அம்மனோடு வரும் சுமார் 500 முளைப்பாரி அம்மனும் கரைக்கும் இடமும் இதுதான். எனவே நம் ஊர் கிராம தேவதைகள் திரியோதன சக்தியாக (மறைமுகமாக ) இங்கு ஆட்சி செய்யும் இடம் இக்கோயில்தான்

9) முன்னோரு காலத்தில் மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு அடியார் அல்லது சித்தர் இக்கோயிலில் நீண்ட நாள் தங்கியிருந்து இங்கு சமாதி அடைந்ததாக வாய்வழி செய்திகளாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அடக்கம் செய்த இடம் இக்கோயில் அருகில்தான் அமைந்திருந்தது யாவரும் அறிவர் எனவே இவர் சித்தராக இருந்து சமாதி ஆகியிருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அவ்வாறானால் பிரசித்தி பெற்ற தலங்களில் சித்தர்களின் சமாதி இருப்பதை நமக்கு இங்கு உறுதிபடுத்துகிறது. எனவே இவ்வகையிலும் இக்கோயில் சிறப்பு பெறுகிறது.

10.தெய் வழிபாட்டிற்கு சிவ முக்திக்கும் நம் பகுதி இறை தெய்வமான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் நம் ஊரின் வடக்கு திக்கில் அமைந்தபடியால் எல்லோராலும்வடக்கு திக்கு நோக்கியே வழிபாடு செய்வது முக்கியமானதாலும் நம் இஸ்ட தெய்வமான நம்ஆத்தடி விநாயகரும் கைலாய நாதரும் வடக்கு திக்கில் அமர்ந்து நம் ஊருக்கு அருள்பாலித்து வருகிறார்கள் எனவே இக்கோயில் வடக்கு திசையில் அமைந்தது இவ்வூருக்கு கிடைத்த சிறப்பு

நம் ஊரில் சிவதலம் முதன்முதலில் சுந்தரமூர்த்தியின் பிரதிநிதியாக கைலாய நாதராக இங்கு எழுந்தருளி அவர் முன் தினமும்காலை மாலை மணிவாசகர் அருளிய சிவபுராணம் ஒரு தடவையாவது மனம் மொழி மெய்யால் உணர்ந்து பாடி வர அவ் ஆன்மாவிற்கு வீடு பேறும் கடைசி காலத்தில் மரண அவஸ்தை நீங்கி எளிய இறப்புடன் முக்தி பேறும், வாழும் போது எல்லாச் செல்வங்களும் நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும், தந்து குரு லிஙக, சங்கம பக்தியும் சிவஞானமும் மென்மேலும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம்.

 தற்போது இக்கோயிலில் பிரதி மாதமும் அமாவாசை பூசையும், பெளர்ணமி தோறும் அருள்மிகு மாரியம்மன் பீடத்தில் அம்மனுக்கும் மூலவர்மற்றும் கைலாய நாதருக்கும், மற்றும் சங்கடகர சதுர்த்தி தினத்தில் மூலவர் இராஜகணபதிக்கும் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அடியார்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழிபாடு தமிழிலேயே அவர்ரவர்கள் இறைவனை போற்றி பாடி மலர் வில்வம் மற்றும் வன்னிமர இலைகளால் அரச்சனை செய்து சிறப்பு பெறலாம், இதன் மூலம் தான்ஒரு ஆன்மா மனம் மொழி மெய்யால் இறை வழிபாடு செய்ய முடியும்  இவ்வாய்ப்பு இவ் ஆலயத்தில் மட்டுமே உண்டு அவரரவர்கள் செய்தமாக கட்டிய கோயில்களில் கூடசெய்ய முடியாத செயல் இதுதான் எனவே இக்கோயிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் விரும்பி வந்து அபிசேக ஆராதனையிலும் அர்ச்சனையிலும் ஒன்றி பக்தி நெறியில் பங்கு பெற்று அருள் பெற்று உய்ய வேண்டுகிறோம்.

  இக்கோயிலில் வழிபாடு செய்ய விரும்பும் அடியார்களுக்கு "அவன் அருள் இருந்தால் தான் இது கிடைக்கும் எனவே அவன் அருளாலேயே அவன் தாள் வணங்கி வளம் பெறுவோம். தற்போது இக்கோயிலின் உட்பிரகாரத்தில் மலர் செடிகள் வைத்து பூத்துக் குலுங்கி வளம் சேர்த்து மனத்திற்கு ரம்மியமான சூழலில் கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.இதுவும் சிறப்பிற்கு ஒர் எடுத்துக்காட்டே

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக