வியாழன், 12 ஜனவரி, 2023

திருக்குறளில் சைவ சித்தாந்தம் - கடவுளும் வீடு பேறும்

 திருக்குறளில் சைவ சித்தாந்தம்

கடவுளும் வீடு பேறும்


திருக்குறளில் " கடவுள்" என்னும் சொல்லும் " முத்தி" என்னும் பொருளைத்தரும் வீடு என்னும் சொல்லும் ஆட்சி பெறவில்லை. ஆதலின் திருவள்ளுவர் சமயக் கொள்கைகளை பேசவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞான போத சூத்திரம், கருத்துரை மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு வெண்பா ஆகியவற்றில் கூட கடவுள் என்ற செொல்லாட்சி இடம் பெறவில்லை, ஆதலின் மெய்கண்டார் கடவுள் கொள்கையை ஆதரிக்கவில்லை என கூறு முடியுமா? அப்படி கூறினால் அதைவிட பேதமை வேறெதுவும் இல்லை அல்லவா?, அவ்வாறே வள்ளுவரும் கடவுள் கொள்கையை ஆதரிக்க வில்லை என்று கூறுவதும் பேதமையுள் பேதமையே ஆகும். அதாவது தனக்கு பயன்படாத ஒழுக்க நெறியில் பற்று வைத்துக் கேடு விளைவிப்பவைகளை கைக்கொண்டு நன்மை விளைவிப்பவைகளைக் கைவிடுவதையே தொழிலாக உடையவர்கள் தாம் இவ்வாறு கூறுவர்.
கடவுளுக்கு உரிய இலக்கணம் மாறுபடாத சொற்கள் பலவற்றை மெய்கண்ட தேவ நாயனார் சிவஞான போதத்தில் அருளிச் செய்திருப்பது போலவே திருவள்ளுவ நாயனாரும் இறைவன், வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான் தனக்குவமை இல்லாதான், எண் குணத்தான் முதலிய சொற்களில் வைத்து தமது கடவுள் கொள்கையினை உறைப்பை உணர்த்தியருள் கின்றார். அவ்வாறே வீடு பேற்றினை திருவள்ளுவர் சிறப்பு என்னும சொல்லாட்சியில் வைத்து பேசுகிறார், எடுத்துக்காட்டாக
" பிறப்பு என்னும் பேதமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு " குறள் 356
இங்கு பேதமை என்ற சொற்கு ஆணவம் என்று பொருளாகும். பிறப்பிற்னுக் காரணம் ஆகிய ஆணவமல மறைப்பு உயிரை விட்டு நீங்குவதற்கு வீடு பேற்றிக்கு நிமித்த காரணம் ஆகிய செவ்விய பொருள் எனப்படும் பரம் பொருளைக் காண்பதே ஒருவருக்கு மெய்யுணர்வு ஆகும். என்பதே இந்த குறட்பாவிற் குரிய செம்பொருள் ஆகும். இதி்ல் வரும் சிறப்பு என்னும் சாெற்கு பொருள் கூறுகையில் எல்லா பொருளினும் சிறந்தது ஆதலின் வீடு சிறப்பு எனப்பட்டது என்று பரிமேலழகலர் கூறி யிருப்பது இங்கு கருத்தில் காெள்ளத்தக்கது. வீடு பேற்றை சிறப்பு எனவும் சிறந்தது எனவும் தொல்காப்பியரும் வழங்கியுள்ளதை நாம் நினைவில் காெள்ளத்தககது.
திருக்குறளில் இடம் பெறும் சிறப்பு என்னும் சொல் குறள் 31லும், 358லும் வீடு பேறு என்னும் பொருளையே குறிக்கிறது என்பது பெறப்படும். படவே திருவள்ளுவர் தமது நூலில் சமயக் கருத்தை குறித்து கூறியிருப்பது திருக்குறளும் சைய நூலே என்ற கருத்து நமக்கு தெளிவு படும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி திருக்குறளில் சைவ சித்தாந்தம் என்ற நூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக