வியாழன், 12 ஜனவரி, 2023

சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

 சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

உடல் உயிர், கண் அருக்கண்; அறிவு ஒளி போல் பிறிவரும் அத்துவிதம் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை.இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது எனில் இறைவன் உயிர்களுடன் எப்போதும் 1) ஒன்றாயும், 2) வேறாயும், 3) உடனாயும் நிற்கும் சம்பந்தமாகும்.
இம்மூன்றினுள் ஒன்றாதல் என்பதை பற்றி சைவ சித்தாந்தம் உணர்த்துவது, இறைவனும் உயிர்களம் வேறு வேறு பொருள்கள்; ஆனால் இறைவன் உயிர்களோடு கலப்பினால் எப்போதும் ஒன்றாக இருக்கிறான்; எதுபோல எனில் உடலும் உயிரும் போல என்பதாகும். இறைவனும் உயிர்களும் வெவ்வேறு பாெருள்களாக உள்ளன, அப்படி இருந்தும் அவை கலப்பினால் ஒன்று பாேலத் தோன்றுவது போல. அது பற்றி அவை ஒன்று எனக் கூறப்படுவதன்றி அவை இரண்டும்ஒரே பாெருள் அல்ல.
வேறாதல் என்பது உடலும் உயிரும் போலக் கலப்பினால் ஒன்ற என்று கூறப்படும் இறைவனும், உயிரும் பாெருளால் வேறு வேறு தாம் அதாவது இறைவன் உயிர் அல்ல; உயிர் இறைவன் அல்ல, இதற்க சைவ சித்தந்தாம் கூறும் உவமை கண்ணும் சூரியனும் போல என்பதாகும்.
கண் ஒளி உடையது; சூரியனும் ஒளி உடையது, சூரியன் ஒளி கண் ஒளியோடு சேர்ந்தால் மட்டுமே கண் காணும். இல்லையென்றால்காண முடியாது, கண் ஒளி காண்பதற்கு சூரியன் ஒளி அதனுடன் சேர்ந்திருக்க வேண்டும், பொருளைக் காணும் பொழுது கண்ஒளியும், சூரிிய ஒளியும் பிரித்தறிய முடியாதபடி கலந்திருக்கின்றன, ஆனாலும்
கண் ஒளி காண்பது;
சூரியன் ஒளி காட்டுவது; எனவே கலப்பினால் இவை ஒன்றாக இருந்தாலும், பாெருளால் இவை வேறு வேறு தானே.
அதுபோல உயிர் அறிவுடையது, இறைவனும் அறிவுடையவன், ஆனால் இறைவன் அறிவு அறிவித்தால் அன்றி உயிர் அறிவு தானாக எதையும்அறிய முடியாது, இறைவனும் உயிரும் கலப்பினால் ஒன்றாக இருந்தாலும்,
இறைவன் அறிவிப்பவன் ( சூரியன் ஒளி காட்டுவது போல)
உயிர் (இறைவன்) அறிவிப்பதை அறிவது ( சூரியன் காட்டியதை கண் பார்ப்பது போல)
எனவே கலப்பினால் உயிரும் இறைவனும்ஒன்றாக இருந்தாலும் பாெருளால் இறைவன் உயிரிலிருந்து வேறானவன் தானே,
உடனாதல் என்பது இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாகவும் விளங்கும் அதே வேளையில் உயிர்களோடு உடனாயும் உள்ளான். அது எவ்வாறு எனில்;
கண் ஒரு பொருளைக் காணும் போது உயிரின அறிவும் அக்கண் ஒளியோடு உடனாக சென்று அறிந்தால்தான் உயிர்கள் அப்பொருளை அறியவும், அநுபவிக்கவம் முடியும், பொருள் கண்ணில் படுகின்றபோது , உயிரறிவு கண் ஒளியை செலுத்தி அறியாவிடில் உயிர் அப்பொருளை அறியாது. நம் அறிவு வேறாரு சிந்தனையில் ஆழந்திருக்கும் போது, எதிிரில் வருபவரை நாம் கவனிக்காமல் போவது நம்அன்றாட வாழ்வில் நிகழும்அநுபவம் தானே,
அது போல உயிர் ஒரு பொருளை அறிய வேண்டும் என்றால், உயிர் அறிவோடு இறைவன் அறிவும் (திருவருளும்) உடனாக இருந்து இயக்கினால் மட்டுமேஉயிர் அப்பொருளை அறிய முடியும், இறைவன் உயிரின் வேறாக இருந்து அறிவிப்பது மட்டுமன்றி, உயிருடன் உடனாக இருந்து இயக்கி அது பொருள்களை அறியும்படி செய்கிறான்,
ஆக இறைவன் உயிர்களுடன் 1) கலப்பினால் உடலும், உயிரும் பாேல ஒன்றாயும்,
2), பொருளால் கண்ணும், சூரியனும் போல வேறாயும்,
3), உயிர்க்கு உயிராதல் தன்மையால் கண் ஒளியும், உயிர் அறிவும் போல் உடனாயும் பிரிப்பின்றி நிற்கும் உறவே சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் ஆகும். அத்துவிதம் என்ற சொல்லுக்கு வேறின்மை என்று சைவ சித்தாந்தம் பொருள் கொள்ளும். இதனை இருமையின் ஒருமை என்றும் கூறுவர். இரண்டு பாெருள்களாயிருப்பதால் ஒன்று என்று சொல்லமுடியாமல் கலப்பினால் ஒன்றாக தோன்றுவதால் இரண்டு என்று சொல்ல முடியாத நிலையாகும்.
நன்றி ° சிவப்பிரகாசம்
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக