வியாழன், 26 ஜனவரி, 2023

சிவ பூசை

 சிவ பூசை தத்துவங்களும் அதன் பயனும்




  வாழ்க்கையின் பயனைப் பெறுவதற்கு சிவபூசை இன்றியமைாததாகும், இதனை தற்கால சந்ததியினர் உணர்ந்து அதன்வழி ஒழுகாதிருப்பதால் சிவபூசையின் தத்துவங்களையும்,உணர்வுகளையும் உணராதிருப்பதால் சிவபூசை பற்றிய அறிவு தெளிவது அவசியமாகிறது.

  நாம் முற்பிறபபில் செய்த புண்ணியங் காரணமாக பெறுதற்கரிய இம்மானுட பிறப்பை நமக்கு தந்து, திருவருள் பாலித்தருளியுள்ளார் நம் பெருமான். நமக்கு இம்மானிட தேகம் தந்தது சரியை, கிரியை, யோகம், ஞானம்என்னும் சிவ புண்ணிங்களை செய்து தம்மை வழிபட்டு சிவஞானம் உதிக்கும்படி செய்து முத்தியின்பத்தை தரும் பொருட்டே ஆகும். 

  விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கும் அரும்பு மலர் காய் கனி போன்றே என்னும் தாயுமான சுவாமிகளின் திருவாக்கால் உணரலாம். இது படி முறை என்றமையால் காலை வைத்து தான் அடுத்த படிகளில் ஏறமுடியும் என்பதும், ஏறி இறைவனை அடைய முடியும் என்பதும் கூறாமலே விளங்கும், இதனால் இதன் இன்றியமையாமை புலனாகிறது. இந்நான்கு சரியை யாவது புறத்தாெழிில் மாத்திறையானே சிவபெருமானுடைய உருவத்திருமேனியை நோக்கி வழிபடுதலாகும். நெறியில் இரண்டாம் படிமுறை ஆகிய கிரியை நெறியில் விசேட தீட்சை பெற்று அருவுருவ திருமேனியாகிய சிவலிங்க பெருமானை ஏற்ற அகத்தொழில் புறத்தொழில் என்ற இரண்டாலும் வழிபடுவதாம்.இதில் தான் சிவபூசை அடங்கும்.அது ஆணவத்தை நீக்கி பிறவி ஒழிந்து மோட்சத்தை தரும்படி வேண்டித்தூப தீபங்களாலும், சந்தனம், பஷ்பம், திருமஞ்சனம் முதலிய பூசோபகரங்களை கொண்டு பஞ்ச சுத்தி செய்து அகமும் புறமும் பூசித்து அக்கினி காரிமும் பண்ணி பெருமானுடைய வரத அத்தத்தில் உடல், பொருள் ஆவி மூன்றையும் ஒப்பித்தலாகிய சிவபூசையாம்.

   மந்திரம், கிரியை,பாவனைகளால் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் ஒருமித்து மெய்ணன்போடு கிரியை செய்தல்  வேண்டும்.

   கோடி தீீர்த்தம் ஆடினாலும் அரனுககு அன்பில்லையேல் ,,,,, மூர்க்கரோடு ஒப்பர் 

 நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுள்ளே புக்கு நிற்கும் பொன்னா் சடையன். 

  வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,. தந்த தலைவனை சூழ்த்த மாமலர் தூவி துதியாத உறுப்புகளும் , பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார், நாக்கைக் கொண்டு நாமம் நவில்கிலார் ஆக்கைக்கு இரை தேடி காக்கைக்கே இரையாகி கழிவர் என்ற தேவாரப்பாடல்களால் நமக்கு தந்த ஆக்கையை இறைவனுக்கு பயன் படுத்த வேண்டும் என்பதை தெளிவாகக் காணலாம்,

  மானிட பிறவி எடுத்த காலத்தில் அனுபவிக்கும் துன்பத்தை சிந்தித்தால் பிறவாதிருத்தல் தவீர வேறு ஒன்றும் வேண்டாமென எண்ணும் முடிவிற்கே வரக்கூடும்  எனவே பிறப்பு வேண்டாதிருக்கவும், பிறந்தால் உன்னை மறவாமல் உன்னடியில் இருக்க வேண்டுமென்றனர் அப்பர் அடிகளும், காரைக்கால் அம்மையார்களும். பிற பிறப்புக்களில் ஜீவன் ஒழிந்த பிறகும் அச்சரீரம் ஊழ்வினையால் சிவகாரியத்திற்கு ஆகலாம். பல்வேறு சரீரங்களால் சிவவழிபாட்டிற்கு உதவும்் புனுகு, கவரி, கோரோசனை, தந்தம், தேன், நரம்பு, தோல், போன்றும், தாவரங்களின் பூ,இலை, காய் கனி போன்றும் இறைவனுக்காக தங்களின் பாகங்களை வழங்கி பெருமை சேர்க்கின்றன, ஆனால் மானிட உடம்பால் இறந்தபின் நாற்றம் எடுத்து வேண்டா பெருளாகி விடுகிறது.

 முற்பிறப்பின் புண்ணியத்தால் இம்மானிட சன்மத்தை பெற்றதன் மேலீட்டினால் செய்யும் சிவபூசையானது இருவகைப்படும், அது ஆன்மார்த்த பூசை, மற்றொன்று பிராத்த பூசை என்பனவாகும்.

  ஆச்சாரியாரிடம்தீட்சை பெற்று அடியேன் இச்சரீரம் உள்ள வரையுஞ் சிவார்ச்சனை செய்வேன் என்று உறுதி செய்து அவரிமிருந்து பெற்ற சிவலிங்கத்தை பூசிப்பது ஆன்மார்த்த பூசை அல்லது இட்டலிங்க பூசையாகும்.

   எல்லா ஆன்மாக்களும் அனுக்கிரகம் செய்யும் காரணமாக கோயில்களில் பிரதிஷ்டை செய்து பூசிப்பது பிராத்தலிங்க பூசையாகும்.

  ஆன்மார்த்த பூசைக்கான லிங்கங்கள்,கணிசங்களாலும், ( மண், மாவு, சந்தனம், மஞ்சள், சாதம்), பொன்போன்ற உலோகங்களாலும் (தங்கம், வெள்ளி தாமிரம், இரும்பு, பித்தளை) பிரதிஷ்டை செய்யப்படுவன.

  இட்டலிங்க பூசையானது மூன்று வகையாக சிவகாமங்கள் விரிக்கின்றன, 

1, சுத்த சிவபூசை ( சிவ லிங்கம்மட்டும் கொண்டு வழிபடுவது)

2, கேவல சிவபூசை ( ஐம்மூர்த்திகளை கொண்ட வழிபடுவது)

3, மிக்சிர சிவபூசை ( பலமூர்த்தங்கள் உடைய சிவ வழிபாடு)

 ஆன்மார்த்த பூசை தவிர்த்து பிரார்த்த சிவபூசையில் சுத்த சிவபூசையில் லிிங்கம் பிரதிஷ்டை கீழ்கண்ட வாறு அமையும்

 1,பாணலிங்கம் பூசை அல்லது சுயம்பு லிங்க பூசை

 2, ஏனைய லிங்க பூசை

    பாணலிங்க பூசைக்கு ஆவாகனம் என்ற சடங்கு தேவையில்லை, காரணம் லிங்கத்ததில் இறைவன் தானாகவே தோன்றி அதில் வீற்றிருக்கிறார். இதே போன்றுதான் சுயம்பு லிங்கத்திலும்,

  ஏனைய லிங்கங்களில் ஆவாகனம் செய்து தான் வழிபாடுகளை தொடங்க வேண்டும். ஆவாகனம் என்பது எழுந்தருளுதல், அதன் பின் ஸ்தாபனம், சந்நிதானம் மற்றும் சந்நிரோதனம் ஆகிய நான்கையும் சேர்த்து செய்தலே சிவபூசையின் லட்சணமாகும்.

   ஆன்மார்த்த பூசை செய்யாது பிரார்த்த பூசை செய்தல் பூசையின் பயனை இழப்பதுமன்றி நரகத்துன்பத்தை அடைவர்

   சிவபூசை செய்யாது உண்பவனுடைய உணவானது புழுவாம், பிணமுமாம், பெரும் பாவமுமாம்.

   சிவபூசையின் பெருமையை உலகத்தாருக்கு அறிவிக்க நினைந்த பேரருளாலே உல மாதாவாகிய உமாதேவியாரும், விநாயகரும், கந்தரும், பூவுலகத்தை அடைந்து காஞ்சி திருச்செங்கோடு, செருத்தனி  முதலிய சிவலாயங்களில் சதாக்கிய (லிங்க) திருவுருவை பூசித்து வணங்கினார்கள்.

   சிவபூசை மூன்று காலமாவது, இரண்டு காலமாவது, சக்தியற்றவர்கள் ஒரு காலமாவது தவறாது செய்ய வேண்டுமென்று கால நியமம் பிரதிபாதிக்கிறது.

  ஆன்மார்த்த பூசையை மனவுறுதியுடன் செய்தவர்கள்  பிரமசுத்தி முதலிய பாவங்களையும், பகைகளையும் நீங்கி பெருவாழ்வு வாழ்வார்கள்.

  மூவுலகு ஐசுவரங்களையும் பலவித தானங்களாலும், யாசகங்களாலும் எய்திய பலன்களையும், வெற்றியையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அடைவார்கள்

  ஆணவ மலத்தை வென்று மோட்சத்தை அடைவார்களாக விளங்குவார்கள் என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்கின்றன, 

   சிவார்ச்சனைக்கு அன்பினால் கொண்டு செய்தவர்களும், பூசையை தரிசித்தவர்களும் பிறவித் துன்பம் நீங்கும் மெய்யறிவு பெற்று சிவலோகத்தை அடைவர் என்கிறது புராணங்கள்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; சிவபூசா தத்துவங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக