நிட்டை பேறு
சைவ சித்தாந்தம் / நிட்டைபேறு
நிட்டை என்பது நிலைப்பேறு ஆகும்.உண்மை ஞானம் நான்கினுள் ஒன்று, கேட்டு சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி நிற்றல். முத்தியே நிலைபேறு. ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே என்பதால் அந்த ஈசனாகிய சிவபெருமான் திருவடிப்பேறே நிட்டை .நிட்டை பேறு என்பது சைவ சித்தாந்தத்தில் ஞான பாதத்தின் உச்சக்கட்ட நிலையான, இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலை (சமாதி) ஆகும். இது கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகியவற்றிற்குப் பின் வரும் இறுதி நிலையான ‘நிட்டை கூடல்’ ஆகும். இது தியானம், நோன்பு, நிலைபேறு, அல்லது தற்போதத்தை (அகங்காரம்) இழந்து சிவனை உணரும் நிலை எனப் பொருள்படும்
படிநிலைகள்: ஞான நெறியில் சரியை, கிரியை, யோகக் பயிற்சிகளுக்குப் பின், பக்குவம் பெற்ற சாதகன் அடையும் நான்காவது மற்றும் இறுதி நிலை.
சிவபெருமான் எப்ேபாதும் ஒரு நிலையில்விளங்கும் சத்து. உயிர்களோ சார்ந்ததன் வண்ணம் விளங்குவன. நிலையற்ற அசத்தாகிய உலகத்தைச் சார்ந்து அசத்தாம் தன்மை கொண்டு உழன்று வரும் உயிர்கள் சத்தாகிய சிவத்தைச் சார்வதன் மூலம் நிலைப்பேற்றினை அடைய முடியும்.
நிலைப்பேறாம் நிட்டை கூடுதல் இறுதிநிலை. சிவஞானிகளுக்கு மட்டுமே இந்தச் சாதனையினை நிகழ்த் இயலும். அவர்களுக்கே கூட நிட்டை கூடும் இறுதிநிலையில் இடையூறுக்கு காரணம் பண்டைப்பயிற்சியாம் உடல் சார்பே. உடல்சார்புக்கு காரணமாய் விளங்கும் மலவாதனையை முற்றிலுமாக நீக்கி,உடல் சார்பினைபற்றறக் களைந்து சிவபொருமான் திருவடியைச் ேசர்வதற்கு தக்க உபாயங்களைத் தெரிவிக்கும் நூல்கள் உபாய நிட்டடை வெண்பா.
இப்போது நாம் செய்து வருகின்ற சிவவழிபாடுகள் யாவும் ஞான நிட்டையினையே இலக்காக கொண்டுள்ளன. எனவே இலக்கினை பற்றித் தெளிவாக அறிந்து கொண்டால் தான் இலக்கினை நோக்கிச் செய்யும்பயணமாகிய சரியை, கிரியை, ஆகியன ஊக்கமுடன் செம்மையாகநடைபெறும். பயணத்தை நோக்கபவர் சென்றடையும் இடம் தொலைவில் இருப்பினும் அவ்விடத்தினை அடையும் போது தோன்ற வாய்ப்புள்ள இடர்பாடுகளையும், அவற்றை களையும் முறையினையும் முன்னரே உணர்ந்து கொள்வது நன்மைதானே ேமலும் சிவனடியார் பெருமக்கள் தம் பக்தியைப் பெருக்கி நிட்டைக்கும் தமக்கும் உள்ள தொலைவினைக் சுருக்கிக் கொள்ள அவனருள் ேவண்டி நிற்றலன்றோ இயல்பு. அதற்கு நல்ல துணையாக விளங்கும் ஈடு இணையற்ற சாத்திரம் உபாய நிட்டை வெண்பா. நிட்டை கூடுதல் பெருநிலையாக இருக்கவும், அந்நிலையினை எல்லோரும் இப்போதே எய்தலாம் என்று கூறிவருகின்ற போலி கருத்துக்களும் இருந்து வருகின்றன.போலி நிட்டையினை மறுத்து உண்மை நிட்டையானது சரியை, கிரியை, யோகம் என்னும் சிவவழிபாடுகளைப் படிமுறையில் உரிய தீக்கைகளைப் பெற்று செம்மையாக இயற்றுவதன் மூலமே எய்தப்பெறும்.
திருச்சிற்றம்பலம்
தகவல் தொகுப்பு; பாண்டார சாஸ்திரம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக