வியாழன், 16 ஏப்ரல், 2026

சிவ ஞானத்தை அடைய

 சிவ ஞானத்தை அடைய


 இறைவனை அறிய முதலில் உன்னைஅறி

உன்னை அறிய குருவை தேடு

உலகில் ஈடுஇணை அற்றது  இறை நிலையே

இறைவனை பிடிக்க வேண்டின் குருவை பிடி குருவே துணை

அன்பில்லா இடத்தில் சிவத்தை அறிய / அடைய முடியாது

அன்பேயே கொடு அன்பையே பெறு

அன்பும் அமைதியும் சிவனின் இருப்பிடம்

உன்னில் நிறைந்த பொருள் சிவம் அதுவே ஜீவனுடன் கலந்துள்ளது

உடலை இயக்குவது உயிர் அந்த உயிரை இயக்குவது சிவமே

இறைவனை அடைய இறைவனாகிய குருவே உதவ முடியும்

இறைவனை அடைய இறைவன் நாமம் மட்டுமே உதவும்

இறைவனின் ஒர் நாமத்தை தேர்வு செய் அதில் லயப்்பட்டு கரைந்து விடு

மன விடுதலை இறைவனால மட்டும் தான் தரமுடியும்

சிந்தித்தால் மட்டுமே சிவம்

உன்னை ஜீவனாக பார்க்காதே சிவமாக பார் சிவனாகி போ

மன விடுதலை இறைவனால் மட்டுமே தரமுடியும்

சித்தத்தை சிவன்பால் வை. 

சிவனை அறிந்தபின் நாம் எவரையும் அறிய வேண்டோம்

சுத்த சிவம் எழுவது குருவுக்குள்ளே

உருகி உருகி அழைக்க சிவம் பெருகி பெருகி நிற்பான்

அன்பே சிவம் சிவமே அன்பு 

பக்தி மற்றும் சரணாகதி: சிவபெருமானை முழுமையாக நம்பி, அவரிடம் சரணடைவது முதல் படியாகும்.

தியானம் (Meditation): மனதை அடக்கி, சிவபெருமானின் வடிவம் அல்லது "சிவாயநம" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வது சிவஞானத்திற்கு வழிவகுக்கும்.

நிஷ்காமிய சேவை: தன்னலமற்ற செயல் (Selfless service) மூலம் அகங்காரம் நீங்கி, சிவனருள் கிடைக்கும்.

நூல் கல்வி மற்றும் அனுபவம்: சிவ புராணங்கள், சைவ சித்தாந்தம் போன்றவற்றைப் படித்து, அதன்பின் ஞானத்தை அனுபவபூர்வமாக உணர்வது.

யோகப் பயிற்சி: உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, மூச்சுப் பயிற்சி (Pranayama) மற்றும் சக்கர தியானம் மூலம் சிவ சக்தியை உணரலாம்.

வாழ்க்கை முறை: பொய், வன்முறை தவிர்த்து, உண்மை, தூய்மை மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற தர்மங்களை கடைப்பிடிப்பது. 

 உண்மையான ஞானம் சற்குருவின் அருளாலும், தொடர்ச்சியான பயிற்சியாலும் மட்டுமே கிடைக்கும்

திருச்சிற்றம்பம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக