சனி, 8 பிப்ரவரி, 2025

வாழ்வில் ஏற்றத்தாழ்வு வரலாமா?

 


வாழ்வில் ஏற்றத்தாழ்வு வரலாமா? 

 சைவ சித்தாந்தம் கூறும் கருத்து



நாட்டையும் நகரத்தையும் ஆட்சி செய்யும் மன்னன் மக்களுக்கு இடையூறு வாராமல் காக்கும் கடமை உடையவன். அரசாட்சி நெறிமுறைக்கேற்ப வாழ்வோர்க்கு நல்லன செய்வான். நெறியில் இல்லாமல் குற்றம் செய்வோர்க்குத் தண்டனை கொடுப்பான். தண்டனையை மன்னன் நேரே கொடுப்பதில்லை. அங்குள்ள நம்பிக்கைக்குரிய அதிகாரி மூலம் செயல்படுத்துவான். இறைவ உயர்ந்தோர் மூலம் அற நூல்களையும் அருள் நூல்களையும் வழங்கி அறநெறிப்படி வாழ வழிவகுத்துள்ளான். நன்னெறியில் ஒழுகியவர்க்கு அவர் செய்த வினைக்கேற்ப நன்மைகளைத் தருகின்றான். தீய வழியில் நடந்தவர்க்குத் தீமைகளைத் தருகின்றான். தீமை போலத் தோன்றினாலும் உயிர்களைத் திருத்திப் பக்குவப்படுத்தி நன்னிலைப்படுத்துவதற்கே ஆகும்.

‘திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள்கயிலாயா’ என்பது சுந்தரர் வாக்கு. உயிர்களுக்கு நன்மை புரிதலும் தண்டித்தலும் இறைவன் ஆணையாகிய திருவருட்சக்தியின் மூலமே நடைபெறும்.

முற்பிறப்புக்களில் செய்யப்பெற்ற வினைத் தொகுதிக்குப் பழவினை, தொல்வினை, சஞ்சிதம் எனப் பெயர்கள் வழங்கப் பெறும். அத்தொகுயிலிருந்து இப்பிறப்பில் அனுபவிப்பதற்கென்று எடுத்துக் கொண்ட வினை நுகர்வினை, ஊழ்வினை, பிராரத்தம் என்று வழங்கப் பெறும். வினையை நுகரும்போது மனம், மொழி, மெய்களால் செய்யப் பெறும் புது வினை எதிர்வினை, ஆகாமியம் எனப் பெயர் பெறும். வினைக் கோட்பாட்டில் 1) செய்வான், 2) செய்வினை, 3) வினைப்பயன், 4) பயனைக் கொடுப்போன் என்ற நான்கு அடிப்படை சைவ சித்தாந்தத்தில் கூறப் பெறும்.

பழவினையே உயிர் அனுபவிப்பதற்குரிய இன்ப துன்பங்களையும் அவற்றிற்கு இடமான உடம்பையும் தோற்றுவிக்க உயிர் அவ்வுடம்பைப் பொருந்திப் பயன்களை நுகரும். ஊழ்வினையை நுகரும்போது தோன்றும் புதிய வினை அடுத்த பிறவிக்கு வித்தாக அமையும். உழவர் செய்யும் உழவுத் தொழில் நேரே பயன் கொடுப்பதில்லை. விளைநிலம் உழவுத் தொழிலை ஏற்று நின்று அதற்குரிய பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களை இறைவனே ஏற்றுநின்று உயிர்களுக்குப் பயன்களைக் கொடுப்பான். ஒவ்வொரு ஆன்மாவின் வினைப்பயனே அவ்வான்மாவின் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாக அமையும்

திருச்சிற்றம்பலம்

VID 20250130 185330திருகடவூர் திருக்கோயில் சதாபிஷேகம் நிகழ்ச்சி

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

இறை வழிபாடு

 *ஓம்*

*சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய*

*சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய*

இறை வழிபாடு பற்றி சிந்தனை



இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்


இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை, பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்


இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பொரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும்    பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்


இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,


இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்


இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.


இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.


இறை வழிபாடு என்பது ஏழை களுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்


இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.


இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,


இறைவழிபாடு என்பது எல்லாம் செயல்களும் இறைவன் அருளால் அவன் செயலால் நடக்கிறது என்பதை உணர்த்துவது


இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.


இறை வழிபாட்டின் இரண்டு கண்கள்  நேர்மையும், உண்மையும் ஆகும்.


விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு  உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.


நன்றி : தமிழ் வேதம்


தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

சனி, 23 நவம்பர், 2024

இசை அமுதம் - Isai Amudham: திருவானைக்கா திருமுறை திருப்பதிகம் 01

இசை அமுதம் - Isai Amudham: திருவானைக்கா திருமுறை திருப்பதிகம் 01: இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நீர்த்தீரள்நாதர், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அகிலாண்டநாயகி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திர...

புதன், 13 நவம்பர், 2024

சுந்தரபாண்டியம் ஆத்தடி பிள்ளையார் கோயில் ஒரு பார்வை

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் மலையாளத்தான் என்னும் சித்தர் ஒருவர் பிள்ளையார் கோயிலின் அருகில் ஜீவசமாதி அடைந்ததாக வரலாறு உள்ளதாக வும் அதன்பின் இச்சமாதி பராமரிப்பு செலவிற்காகவும் சிவன் கோயில் கட்டும் திருப்பணி செய்ய வேண்டிக்கொண்டதாகவும் அதன் பின் இங்கு ஜீவசமாதி   அடங்கியதாகவும் அய்யா சுந்தரமகாலிங்கம் பணி ஓய்வு சென்னை அறநலத்துறை இணை செயலாளர்அவர்கள் எழுதிய சுந்தரபாண்டியம் திருக்கோயில்கள் மற்றும் இங்கு ஐக்கியமாகியுள்ள ஜீவன் முத்தர்கள் வரலாற்று  கையேட்டில் பதிவு செய்துள்ளார்கள்.

  மேற்கண்ட இந்த வரலாற்று அடிப்படையில் பார்த்தால்  பிரசித்திபெற்ற எல்லா சிவத்தலங்களிலும் யாதேனும் ஒரு சித்தர் சமாதி அல்லது ஜீவசமாதி அடைந்து அக்கோயில் அவரின் அதிர்வு அலைகளால் பிரசித்தி பெற்று சீரும் சிறப்புமாக விளங்கும் என்பது எல்லா ஆன்மீக அருளாளர்கள் அறிந்த உண்மை. எனவே இதன் அடிப்படையில் தான் அவன் அருளால் இங்கு சிவன்கோயில் அருள்மிகு கைலாயநாதர் என்ற மூர்த்தியாக இங்கு எழுந்தருளி அமர்ந்துள்ளார். இங்கு அமைந்த சிவலாயம் ஜீவசமாதி அடைந்தவரின் அருளால் நிச்சயம் சிறப்பு பெறும். ஆனாலும் அவன் அருளை பெற நாம் செய்ய வேண்டியது என்ன?  சிவலாயங்களில் அன்றாடம் நடக்கும் நித்திய பூசை மற்றும் அபிசேக அலங்காரங்கள் இல்லாமல் இறைவனின் அதிர்வலைகள் நமக்கு கிடக்காது. அவ்வாறு கிடக்க நாம் தினம் தோறும் காலை மாலை இறைவனைக்கண்ட அவன்  அருள் பெற்று அவன் அருளால் அவர்கள் மூலம் பாடிச்சென்ற நால்வர் பெருமக்களால் பாடப்பெற்ற தேவார திருவாச திருப்பதிகங்கள் பாடி இறைவன் பூசைகள் அனுதினமும் நடைபெற்றால் நிச்சயம் அவன் அருள் இம் புனித மண்ணிற்கு கிடைக்கும் என்ற உறுதியோ°டு செயல் பட்டால் சுந்தரபாண்டியம் அருள்மிகு கைலாசநாதரின் அருள் இராஜகணபதியின் துணைகொண்டு நிச்சயம் நமக்கு கிடைக்கும் எனவே நித்தம் அவன் திருக்கோயில் சென்றும், அமாவாசை பௌர்ணமி தினங்களில் சிறப்பு அபிசேக பூசைகள் செய்து இக்கோயிலுக்கு புத்துயிர் கொடுத்து அவன் அருளை பெறுவோம்  முதலில் நம் சமுதாயத்திற்கென உள்ள சிவன் கோவில் (சமாதிக்ேகாயில் அல்ல சமாதியில் பிறப்பால் வாழ்ந்து இறப்பால் முத்தி பெற்ற ஜீவன் முத்தர்கள்தான் தான் அருள்பாலிப்பார்கள், ஆனால் நம் ஆத்தடி கோயிலில் கைலாயநாதரே நேரிடையாக தன் அடியார்களுக்காவும், தன்னை வணங்கும் பக்தர்களுக்காவும் அருள்பாலித்து வருகிறார். அக்கோயிலின் வளர்ச்சியை அங்கு வந்துபோகும் அடியார்கள் நன்கு உணர்வார்கள், அதன் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் அவர் அருள்பாலிக்கும் திரனே உதாரணம், அக்கோயிலில் உழவாரப்பணிகளும், மாதம் மூன்று முக்கிய பூசைகளும், தினமும் நடக்கும் சாதாரண அபிசேகமும் அதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.அங்கு உண்டாக்கப்பட்ட நந்தவன பூச்செடிகளும் தெய்வீக மரங்களும் இக்கோயிலின் வளர்ச்சியை மிளரச்ெசய்கிறது. அன்றாடம் இறைவனுக்கு வேண்டி மலர்களும் வில்ல இலைகளும் வந்து ெசல்லும் அடியார்கள் இளப்பார ஆசனங்களும் கோவிலின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன, இதற்கெல்லாம் காரணம் நம் முன்ேனார்கள் இக்கோயிலை எதர்கெலாம் முக்கியத்துவம் கொடுத்து அமைத்துள்ளார்கள் என்பது அன்றைய முதியோர்களுக்குத்தான் ெதரியும்,

ஒரு கோயில் சிறப்பு அடைய வேண்டுமானால் அது ஆதிகாலத்து நாம் அறியாப் பருவத்தில் தோன்றியிருக்க வேண்டும் ஆனாலும் அதன் பின் அதன் வளர்ச்சி கண்டு பரிகார தெய்வங்களின் வளர்ச்சி பெற்று பெருமை பெறலாம். அதன்படிதான் இங்கு விநாயகர் கோயில் கட்டும் முன்னேயே ஆத்தடியில் தோன்றி அனாதி காலம் தொட்டு அருள்பாலித்து வருகிறார் என்பது ஒரு சிறப்பு

 இவர் இராஜகணபதி என்ற சிறப்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். ஒரு கோயில் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்றவாறு சிறப்பு (அதாவது நாம் வணங்கும் தெய்வம் )சிறப்பு பெயர் பெற்று நமக்கு விசேடமாக காட்சி அளிப்பது இதனால்

   தலம் என்ற வருசையில் இத்தலம் புகழ் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அடிவாரமாகிய சுந்தரபாண்டியத்தில் அமைந்தபடியால் தல வரிசையில் சிவபெருமானாரே அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்து அருள் செய்த சதுரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பது அதன் சிறப்பு

  மேலும் தலம் என்ற வரிசையில் அங்குள்ள தல விரிச்சம் முக்கியத்துவம் பெறும் அந்த வகையில் இங்கு வெகு சிறப்பு பெற்றது இக்கோயிலின் தல விரிச்சம் வன்னி மரமாகும். வன்னி மரத்தடி விநாயகர் என்றேலே மனம் இறை இச்சை தன்னாலேயே ேதான்றும் இக்கோயிலில் வன்னி மரத்தடியில் விநாயகரும் கைலாய நாதரும் அமர்ந்து அருள் செய்வது சிறப்பிலும் சிறப்பு

) தீர்த்தம் என்ற வரிசையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி வைப்பாறு நதியுடன் இருக்கண்குடியில் கலந்து கடலில் சங்கமிக்கும் புண்ணிய நதியாம் அர்ச்சுனா நதியின் ஆற்றங்கரையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார், எனவே இக்கோயில் மூர்த்தி, தலம். தீர்த்தம் என்ற அடிப்படையில் ஆகம விிதிப்படி அமைந்த கோயில் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிறப்பு பெறுகிறது.

 ஓர் ஆன்மா தன் உடலை விட்டு பிரிந்து (பிறப்பு இறப்பு மனித உடலுக்குத்தான் ஆன்மாவிற்கு பிறப்பும் இறப்பும் கிடையாது  அது என்றும் உள்ள நித்திய பொருள் வினைப்பயனை முடித்து சிவமுக்தி பெறவேண்டும்அதுவரை அவ் ஆன்மா மறுபடியும் வேறு உடலில் தோன்று பிறக்கும்)  ஒன்று சிவமுத்தி பெறவோ அல்லது தன் வினைப்பயனால் அடுத்த பிறப்பிற்கு உட்படுவதற்கு அந்த ஆன்மா கடைதேற அதற்கான சிறப்பு வழிபாடுகள் செய்யும் இடம் ஒன்று புண்ணிய நதியாக இருக்க வேண்டும் அல்லது சமுத்திரமாகவோ அல்லது கடலாகவோ இருக்க வேண்டும் உதாரணத்திற்கு இராமேஸ்வரம், காவேரி ஆறு ,அல்லது புனித நதிகள் சங்கமிக்கும் இடம் இவ்விடங்களில் தான் புனி நீர் கொண்டு அபிசேகம் செய்ய எடுத்துச் செல்வார்கள் அதன்படி பார்த்தாலும் இக்கோயில் அமைந்துள்ள அர்ச்சுனா நதிக்கரையில் தான் இங்கு(நம் ஊர்மக்கள்) இவ்விடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே இவ்விடத்திலுள்ள கோயில் இராமேஸ்வரம் காவேரிக்கரைகள் உள்ள கோயில்களுக்கு ஈடாக உள்ளதை நாம் அறியலாம்,ேமலும் நாம் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு தூய உடம்புடன் முதல்தரிசனம் செய்யும் கோயில் தெய்வம் விநாயகர்தான் எனவேதான்ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் விநாயகர் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார் அவ் வரிசையில் அவ்வாறே அமைந்த கோயில் ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதில்லை அதற்காக அதன் சிறப்பில்லாது போய்விடுமா?

ஓர் ஆத்மா உடலை வி்ட்டு சென்ற பின் அவ் ஆன்மா தனக்கு ஓர் உடம்பு கிடைக்கவோ அல்லது முக்தி பேறு அடையவோ தவித்துக்கொண்டிருக்கும் அப்போது அவ் ஆன்மா சிறப்பு பெற அவ் ஆன்மாவின் வழித்தோன்றல்கள் செய்யும் கரும (ஈமக்கிரியை) காரியங்கள் செய்யும் இடமும் அவர்கள் (ஆன்மாக்கள் ) முக்தி பேறு அடைய மோட்ச தீபம் ஏற்றும் கோயில் இக்கோயில் தான் ( மோட்ச தீபம் ஏற்றும் கோயில் சிவலாயங்களில் சிதம்பரம் தான் எனவே இக்கோயில் சிதம்பரத்திற்கு ஈடான மோட்ச தீபம்ஏற்றி வழிபடும் கோயிலானதால் இதற்கு தனி சிிறப்பு உண்டு.

 நம் ஊர் கிராமத்து தெய்வமான அருள்மிகு மாரியம்மன் சித்திரை மாதத்தில் 9நாட்கள் கொண்டாடும் தெய்வம் முதல் நாள் அம்மன் எழுந்தருளச் செய்யப்படும் இடம் இக்கோயில் முன் உள்ள மாரியம்மன் பீடத்தில்தான், மேலும் அவ்வாறு எழுந்தருளச் செய்யும் போது நம் ஊர் பெரியகோயில் காவல் தெய்வங்களான பெரிய கருப்பர், மாமுண்டி கருப்பர் ஆகியோர் மருளாடிகளால் எழுந்தருளி அருள் வாக்கு கொடுத்து அம்மனை வரவழைக்க செய்யும் இடமும் இக்கோயில்தான்

நம் ஊர் சாலிய சமுதாயத்தினரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் வைகாசி திங்களில் கொண்டாடும் போது இரண்டாம் நாளான புதன் கிழமையில் அம்மனையும், அம்மனோடு வரும் சுமார் 500 முளைப்பாரி அம்மனும் கரைக்கும் இடமும் இதுதான். எனவே நம் ஊர் கிராம தேவதைகள் திரியோதன சக்தியாக (மறைமுகமாக ) இங்கு ஆட்சி செய்யும் இடம் இக்கோயில்தான்  அது மட்டும் அல்ல 

இன்றைய நாளில் சதுரகிரியில் ஆனந்தவல்லியம்மன் கொலுபூசை முடிந்து அங்கு சிவனடியார்களாக வரும் திருக்கூட்டம் நம் சமுதாய ஏழு ஊர்களிலும் தனது யாத்திரையை தொடங்க வரும் முதல் இடம் நம் பிள்ளையார் கோயிலான கைலாய நாதர் சன்னதியில்தான். அங்குதான் பட்டம் கட்டப்பட்ட பட்டத்துச்சாமியுடன் பூசையுடன் திருக்கூட்டத்தை அழைத்துச் ெசல்லும் இடமும்இக்ேகாயில்தான்

    நம் ஊரில் நூற்றாண்டு விழா கொண்டாடிய சுந்தரமூர்த்திசுவாமிகளின் அருள் ஆணையின்படி நம் ஊரில் ஒரு சிவத்தலம் அமைத்து அருள்பாலிக்க   கைலாய நாதராக இங்கு எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்தும் அவர் முன் தினமும் காலை மாலை மணிவாசகர் அருளிய சிவபுராணம் ஒரு தடவையாவது மனம் மொழி மெய்யால் உணர்ந்து பாடி வர மரண அவஸ்தையில் கிடந்து அவதியுறும்  அவ் ஆன்மாவிற்கு வீடு பேறும் கடைசி காலத்தில் மரண அவஸ்தை நீங்கி எளிய இறப்புடன் முக்தி பேறும்.

ேமலும் இறைவன் முன் திருமுறை பாடல்கள் பாடும் போது வாழும் போது எல்லாச் செல்வங்களும் நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும், தந்து குரு லிஙக, சங்கம பக்தியும் சிவஞானமும் மென்மேலும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம் என்று சைவ சித்தாந்தம் கூறியது இக்கோயிலின் சிறப்பு, சிவ வழிபாட்டால் பெறும் பெருமை யாது என்று அறிந்து இக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கைலாயநாதர் என்று அழைக்கப்படும் நம் ஆத்தடி பிள்ளையார் கோயில் சிவன்ேகாவிலின் சிறப்பு அமுசங்களை நன்கு தெரிந்து கொண்டோம் அதுமட்டுமல்ல இன்றைய சிந்தனையாக அன்னாபிசேகம் பற்றியும் இறைவன் தான் விருப்பிய அன்னாபிசேகம் அன்னதான பிரியர் என்றும் அவரே தன் அடியார்களுக்கு நேரடியாக உணவு வழங்கியதும் கேட்டு வாங்கி உணவு அருந்தியதும் அன்னத்தின் சிறப்பாகும் அதனால்தான் ஐப்பசியில் இறைவனுக்கு அன்னாபிசேகம் செய்து அன்னதானம் வழங்கும் பூசையாக இன்றளவும் எலலா சிவலாயங்களிலும் கட்டாயம் நடந்து வருகிறது.

   தன்மீது அன்பு கொண்ட அடியார்கள் பசிப் பிணியால் துன்புறும் போது இறைவனே தானே முன்வந்தும், தன் அடியார்களைக்கொண்டும் பசியையும் போக்கிய அன்னம் பாலிப்பு என்னும் அன்னதானம் கண்ட தலங்கள் பல உண்டு. இதனை நம் திருமுறைகள் வாய்லாக காணலாம்.அதனால் இறைவனாகிய சிவனை   " பாடுவார் பரவுவார் பிணி களைவாய் "என்று திருப்பதிகம் பாடி போற்றியுள்ளார்,பசிப்பிணியை போக்க இவ்வாறு அடியார்களுக்கு உணவு அளிக்க இறைவனே தானே பிச்சை பெற்றும், பொருள் வழங்கியும், அன்னதானம் செய்ததையும் திருமுறைகளிலும், நாயன்மார்கள் சரித்திரத்திலும் புராணங்களிலும் காணலாம்.

  எனவே சிவபக்தர்கள் சிவனடியார்கள் யாவரும் திருமுறைகள் பாடியும் அபிசேக பூசையில் கலந்து சிவனருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம்.

 



   இதன்படி தற்போது   அருள்மிகு கைலாயநாதருக்கு பல மாதங்களாக அமாவாசை சிறப்பு பூசை இங்குள்ள சிவனடியார்களால் அபிசேக ஆராதனையும், தேவார திருவாச பாடல்களுடன் தமிழ் வழி அர்ச்சனையும், நடத்தப்பட்டு வருகின்றது. எனவே சிவபூசையில் கலந்து கொண்டு சிவன் அருள் பெற விரும்பும் அடியார்கள் அந்நேரம் சிறிது பூவும், வில்வ இலை (முடிந்தால் ) கொண்டுவந்தால் போதும் தாங்களே நேரில்

தேவார பாடல்களுடன் அர்ச்சனை செய்யலாம்.  தேவாரப்பாடல் பாட விரும்பும் அடியார்களுக்கு தேவாரப்பாடல் கொண்ட கைப்புத்தகம் வழங்கப்படும்.

 திருக்கோயில்களில் தேவரரம் பாடுவோம் அவன் அருள்பெறுவோம்


புதன், 6 நவம்பர், 2024

 குருவை தேடி

           -உனக்குள் இருக்கும் ஒருவன் ....வெளியே குருவாக..

உலக பிணிகளில் கொடுமையானது அறியாமை எனும் பிணி. தற்பொழுது இதற்கு வைத்தியமும் இல்லை, வைத்தியரும் இல்லை. அறியாமை என்பது அஹங்காரத்தின் மறு உருவம். நமது அருகில் இருக்கும் இறை சக்தியை நாம் அறியாமல் இருப்பது அறியாமை. இதை நமக்கு உணர்த்த குருவடிவில் இருப்பதும் இந்த சக்தியே ஆகும்.


அனைவரும் குரு என்றால் இருளை நீக்குபவர் என பொருள் கூறுவார்கள். குரு இருளை நீக்குபவர்மட்டுமல்ல. குருவின் செயல் வார்த்தைக்கு உற்பட்டது அல்ல. அறியாமையை போக்கும் குருவை தேடி அலைந்த மக்கள் வேதகாலத்தில் அதிகம். தற்காலத்தில் பணத்தை தேடி அலையும் மக்களே அதிகம். பணத்தை தேடினால் பணம் கிடைக்கலாம். ஆனால் குருவை தேடினால் அனைத்தும் கிடைக்கும் எனும் போது செல்வமும் இதில் அடக்கம் என உணர வேண்டும். குரு என்பவர் எங்குள்ளார், எவ்வாறு நமக்கு ஒளி தருவார் என பார்க்க வேண்டும். இந்த செயல் ,கண்கள் இல்லாத ஒருவர் சிறந்த வண்ணத் துணியை தேர்ந்தடுப்பதற்கு சமம்.


உதாரணமாக தற்பொழுது உள்ள சமூக நிலையில் குரு என்பவர் பல கோடி மதிப்புள்ள ஆசிரமம் வைத்திருக்க வேண்டும், பல லட்சம் மதிப்புள்ள வாகனத்தில் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இவர்களின் குருவை போஸ்டரிலும் , தொலைக்காட்சி பெட்டியிலுமே தேடி அலைகிறார்கள். இதன் விளைவு , 6 மாதத்திற்கு ஒரு ஆன்மீகவாதியை இவர்கள் குருவாக வைத்திருக்கிறார்கள்.


இதற்கும் ஒருவர் சினிமா நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெரிய வித்தியாசம் இல்லை. இது தான் அறியாமையின் வெளிப்பாடு. குரு இந்த ரூபத்தில் தான் இருப்பார் என்பதை இவர்கள் முடிவு செய்வதை விட்டுவிட்டாலே அறியாமை இவர்களை விட்டுவிடும். குரு உங்கள் வீட்டின் அருகில் பிச்சைகாரராக இருக்கலாம். சில சமயம் உங்கள் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய வரலாம். நான் மிகைபடுத்தி சொல்வதாக தெரியலாம்.


ஜென் கதை ஒன்று இதை விளக்கும். ஒருவன் குருவை கொண்டு ஞானமடைய எண்னான். அவனது ஊரில் ஓர் ஜென் குரு இருப்பதாவும் அவரிடத்தில் சென்று கேட்டால் தன் குருவின் இடத்தை கூறுவார் என்று னைத்து அவரிடத்தில் சென்றான். ஜென்குரு அவரின் ஆசிரமத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.



அவரிடத்தில் எனது குரு எங்கு இருக்கிறார் அவரை நான் எப்படி அறிந்து கொள்வது என கேட்டான். புதிய ரோஜாப் பூவின் மணம் கமழ ஒளிபொருந்திய முகத்துடன் யார் இருக்கிறார்களோ அவர் தான் உனக்கு ஞானம் அளிப்பவர் என்றார் ஜென் குரு.


பல வருடங்களாக தனது குருவை தேடி அலைந்தான். இருண்ட காடுகள் மலைகள் அனைத்தும் கடந்தான் எங்குதேடியும் குருவை காணவில்லை. ஓய்வு எடுக்க ஓர் மரத்தடியில் அமர்ந்தவனுக்கு திடீரென சுகந்த வாசனை வருவது அவனது நாசியில் உணர்ந்தான். அந்த மரத்தின் பின்பகுதியில் கண்களை கூசும் ஒளி இருப்பதை கண்டான். அந்த உருவத்தை நோக்கி சென்று வணங்கினான். புதிய ரோஜா பூவின் மணத்துடன் ஒளிபொருந்திய லையில் அங்கே உற்கார்ந்திருந்தவர் , அவனுக்கு முன்பு வழிகாட்டிய ஜென்குரு. கண்களில் கண்ணீர் பெருக அவரை நோக்கி கேட்டான், ஏன் ஐயா இத்தனை காலம் என்னை காக்க வைத்தீர்கள்?".


ஜென்குரு கூறினார், "உன் அறியாமை உன்னிடத்தில் இருக்கும் வரை இந்த ஒளியும் வாசனையும் நீ அறியவில்லை. இது எனக்கு எப்பொழுதும் இருந்தது. உன் தேடலின் பயனாக உன் அறியாமையை களைந்தாய் இதோ நான் உனக்காக காத்திருக்கிறேன்".


இது போலத்தான் நாம் குருவை மறந்து அவர் அருகில் இருப்பதை அறியமுடியாமல் அவரை தேடி அலைகிறோம். சினிமாவுக்கு போகும், உங்களுக்கு சமமாக கிண்டல் செய்யும் அல்லது தனது பைக்கில் ஜாலியாக சவாரி செல்லும் குருவை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். அவர் அமைதியாக புன்னகை புரியவேண்டும், காற்றிலிருந்து தங்க சங்கிலி எடுக்க வேண்டும் அல்லது மாலையை வைத்து ஜபம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இது போல நீங்களே முடிவு செய்வதால் தான் பல தவறான வர்கள் ஆன்மீகத்தில் உதயமாகிறார்கள்.


என்னை சந்திக்க வட இந்தியாவிலிருந்து வந்த ஒருவர். சுவாமிஜீ நீங்கள் கம்யூட்டர் எல்லாம் பயன்படுத்துவீர்களா, ஆச்சரியமாக இருக்கிறது என்றார். எது என் தவறா? அவர் என்னை தான் எதிர்பார்த்ததை போல இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அவருடன் பேசிய சில மணி நேரத்தில் விடைபெறும் போது அவர் கூறிய வாசகம் " இது போல மனதுக்கு மிக அருகில் பேசும் ஒரு நபரை நான் பார்த்ததில்லை".


குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவுசெய்கிறோம். குருவை தேடுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது. உங்கள் தாய் அல்லது மனைவி கூட உங்கள் குருவாக இருக்கலாம். அறியாமை போல அஹங்காரமும் குருவை மறைக்கும் ஒரு உணர்வாகும்.


ஹரிவரதன் என்பவரின் கதை இந்த கருத்தை உணரவைக்கும். ஹரிவரதன் என்பவர் அதிக ஆன்மீக தேடல் கொண்ட பக்தன். குருவை தேடி ஞானம் அடைய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு அதிகமாக இருந்தது. பல ஆண்டுகளாக குருவை தேடி கிடைக்காமல் களைத்து விரக்தியான நிலைக்கு சென்றான். குடும்பம் இவனை நிர்பந்தப்படுத்த திருமண வாழ்க்கைக்கு தயாரானான்.


நல்ல மனைவியுடன் குடும்பவாழ்க்கை துவங்கிய ஹரிவரதனுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சில வருடங்கள் கழித்து மீண்டும் இவன் ஆன்மீக தேடல் அதிகமானது. அந்த வேட்கை கட்டுப்படுத்த முடியாமல், ஒரு நாள் இரவு மனைவியையும் குழந்தையையும் விட்டு பிரிந்தான். உணவையும் உடல் சுகத்தையும் மறந்து பல வருடங்கள் குருவை தேடி அலைந்தான். தன் நிலை மறந்து உடல் இளைத்து உருமாறி இவனின் வைராக்கிய தேடல் அதிகமாகியது.


ஒரு நாள் ஓர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கு சிறு ஆன்மீக கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஒளிபொருந்திய இளைஞன் புன்சிரிப்புடன் ஆன்மீக கருத்துக்களை விவரித்துக்கொண்டிருந்தான். ஹரிவரதனும் களைப்பின் மிகுதியால் அந்த கூட்டத்தின் ஓர் மூலையில் அமர்ந்து, ஆன்மீக பேச்சை கேட்க ஆரம்பித்தார். ஆன்மீக கூட்டம் முடிந்ததும் இளைஞனுக்கு அருகில் சென்று பல ஆன்மீக கருத்துக்களை கேட்டு விளக்கம் பெற்றார். புதிய விடியல் அவருக்குள் பிறந்தது.


இளைஞனின் காலில் விழுந்து வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள மன்றாடினார். அந்த இளைஞன் புன்சிரிப்புடன் அவரை நோக்கி கூறினான், குருவை தேடி இவ்வளவு காலம் அலைந்தீர்கள் இதற்காக அனைத்தையும் துறந்தீர்கள். நான் வேறுயாருமல்ல உங்களுக்கு பிறந்த மகன் தான். குரு என்பவரை மகனாக பெரும் பாக்கியத்தை உங்களுக்கு கடவுள் அளித்துள்ளார். உங்களை ஞானமடைய செய்வேன் என்றான். ஹரிவரதனின் கதை உண்மையில் கதையல்ல உண்மை சம்பவம் கூட. இதே போன்று ரமணர் தனது தாயாருக்கு பிறவா வரம் அளித்த நிகழ்ச்சி இதை உறுதிப்படுத்துகிறது.

குருட்டினை நீக்குங் குருவினை கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குடுடுங் குழிவிழு மாறே.


குருவை நீங்கள் முடிவுசெய்தால் இது போல தவறானவர்களின் கையில் சிக்கி தவிப்பீர்கள். உங்கள் குருவை நீங்கள் முடிவு செய்யாதீர்கள், அவர் உங்களை முடிவுசெய்யட்டும். குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள், அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும்.

திருச்சிற்றம்பலம்


புதன், 14 ஆகஸ்ட், 2024

பாவங்கள் தீர நல்வினைகள் செய்தல்

 


பாவங்கள் தீர நல்வினைகள் செய்தல்

நாம் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை செய்திருந்தாலும் அவற்றை தவறு என உணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளை செய்தால், இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்க செய்யவேண்டிய பணிகள் பற்றி சற்று சிந்திப்போம்.

 1, சிவாலய திருப்பணி செய்தல்;  சிவபெருமானார் எழுந்தருளியுள்ளசிவாலங்களைப் புதுப்பித்தல், மிக மேலான நல்வினை- புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்துமான சிவலாயங்களைத் திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுத்து கொடுத்தல் தலையாய நல்வினையாகும். இதனை வலியுறுத்திய 11ம் திருமுறை பாடல் வரிகள்

 காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்ல வண்ணம்

 பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டு

பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீீர் 

  வணீர் எளிதோ மருதப்பிரான்கழல் மேவுதற்கே  ,,, பட்டிணத்தடிகள் 

   சிவபெருமானுடைய திருவருளை பெறுவதற்கு கீழ் காணும் ஐந்து நல்வினைகளை- புண்ணிய செயல்ளை செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்த பட்டிணத்தடிகள்

  1. திருஐந்தெழுத்தை / சிவாயநம / ஓதுதல்

 2, சிவலாய திருப்பணிகளைச் ெசய்தல்

 3. சிவபெருமானுடைய திருப்புகழைப்பேசி மகிழ°தல்

 4, உருத்திராக்கம் அணிந்து கொள்ளல்

 5, உடலில் திருவெண்ணீறுஅணிந்து மகிழ்தல்

2, சிவாலயத்தை தூய்மை செய்தல்

    சிவாலயங்களை பெருக்குதல், மெழுகிடல், தேவையற்ற மரம் செடிகளை காெடிகளைட அகற்றி தூய்மை செய்தல்.அன்று மலர்ந்த மலர்களை கொய்து மலை கட்டுதல், புகழ்ந்து பாடதல், தலையால் வணங்குதல், இதனை கூறும் பாடல்

   நிலைபெறுமாறு எண்ணுதியேல்நெஞ்சே நீவா

  நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்

  புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு

 பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி

  தலையாரக் கும்பிட்டு கூத்துமாடி

சங்கரா சயபோற்றி போற்றியென்றும்

 அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்

 ஆரூரா என்றென்றே அலறா நில்லே  ...... அப்படிரடிகள் தேவாரம் 6ம்திருமுறை

3, மலர் தொண்டு செய்தல்

    மேலே உள்ள பாட்டில் கண்டவாறு அனுதினமும் அன்று மலர்ந்த பூக்களை பறித்து மாலை ஆக்கி சமர்பித்தல்

4, இறை நாமத்தை சிந்தித்தல்

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார் சுந்தரர்

  காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்  என்றார் திருஞானசம்பந்தர்

 நானேயாே தவம் செய்தேன் சிவா நம எனப் பெற்றேன்   என்றார் மணிவாசகர்

  பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே ..4ம் திருமுறையில் அப்பர் அடிகள்

    நம்முடைய தீவினைகளை நீக்கி நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திரு நாமத்தை சிந்தித்தல் / செபித்தல்/ அவசியமாகும். இதற்கென பெருஞ்செலவு செய்ய வேண்டியதில்லை. எளிய வழியும் இது எனலாம்.

 5, சிவாலங்கள் யாத்திரை செய்தல்

    பாடல் பெற்ற சிவத்தலங்கள் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி அங்குள்ள மூர்த்தியினை நேரில் வணங்கி வழிபாட்டால்  சிவஆகமங்களில் கூறிய மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற வாறு சிவ தரிசனம் செய்து வினைகளை நீக்கி புண்ணியம் பெறலாம்

 6, சிவாலயத்ததில் விளக்கேற்றுதல்

  நமிநந்தி அடிகள், கலிய நாயனா் , கணம்புல்லர் ஆகியோர் சிவாலயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணத்தால் அறியலாம். விளக்கேற்றலுடன் இறைவனுக்க நறும் புகையிட்டும் கலய நாயனார் போல் தொண்டு செய்து புண்ணியங்களை பெறலாம்.,

 7, திருமுறைகளை பாராயணம் செய்தல், மிகச் சிறந்த புண்ணிய செயல்களில் இதுவும் ஒன்று, தேவாரப்பதியங்களில் கூறிய வார்த்தைகள் சொற்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளாக போற்றப்படுகின்றன, அதுவே அவனைப்போற்றும் அருச்சனை எனவே அருச்சனையே பாட்டே ஆகும் என்றார் சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமான், இதனால் நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் சம்பந்தர் பெருமான்

  ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த

  திருநெறிய தமிழ்வல்லர் தொல்வினை தீர்தல் எளிதாமே,   சம்பந்தர்

 8. அடியார் தொண்டு செய்தல்

   சிவபெருமானை இடைவிடாது மனத்தி் நினைந்து வாழும் சிவனடியார்களை "நடமாடக் கோயில் " என்றார் திரமூலர், இத்தகையவர்களுக்கு தொண்டு செய்தாலும் அவரை வணங்குதலும் இறைவருக்கு செய்த தொண்டாகும். இக்கருத்தினை கூறும் புராணமே திருத்தொண்டர் புராணமான ெபரியபுராணம்.

 9. சான்றோர்களுடன் இணங்கியிருத்தல்

  புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நெறியை கடைப்பிடித்தும் அவர்களிடமிருந்து வேதங்கள் புராணங்கள் சாஸ்திர நூல்களின் கருத்து கேட்டல் தெளிதல் சிந்தித்தல் நிட்டை கூடல் பலன் கிடைக்கும்.

  தானம் தர்மங்கள் செய்தல்

 ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன்காரணம் ஏழைக்ட்கு உதவுவதற்குத்தான் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்கிறார் அப்பர் அடிகள்

  இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

  கரப்பவர்தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்,  என்கிறார் திருவையாற்று பதிகத்தில்

  மேலும் திருமூலர் " யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி " என்கிறார்

  கொடுத்து பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவத்தின் மூல விதை இது அழிய இதுவே வழி

  பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் உயிர்கட்கு தீமையை செய்தல் கூடாது,

  செல்வம் உள்ளவர்கள் மறைக்காமல் திருப்பணிகளையும், தொழுவார்க்கு வேண்டிய வசதிகளையும்,அடியார் சேவையும், ஏழைக்களுக்கு உதவுவதும் செய்யவேண்டும். இதில் கூறப்பட்டுள்ள நல்வினைகளை அன்றாடம் செய்து பாவங்களிலிருந்து விடுபட்டு இன்பமாய் வாழலாம். தேவை மன உறுதிதான், இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணியச் செயல்கள்.

 திருச்சிற்றம்பலம்