சுந்தரபாண்டியத்தில் திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா
சனி, 22 ஜனவரி, 2022
சுந்தரபாண்டியத்தில் திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா
திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா
சுந்தரபாண்டியத்தில் திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா
ஞாயிறு, 16 ஜனவரி, 2022
பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது
பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது
பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப்,
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்,
இறைவன் அடி சேராதார்” /// என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.
பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும் குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.
முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.
பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.
இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.
இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.
பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.
..... ..... நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு
விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு
பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி,
தலையார கூம்பிட்டு கூத்துமாடி
சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,, என்கிறார்
பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும். உயிர்களிடத்தில் அன்புகாட்டிப் பிறவி அறுக்கும் வழியினை அடுத்த கட்டுரையில் காண்போம்.
திருச்சிற்றம்பலம்
புதன், 22 டிசம்பர், 2021
உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)
உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)
உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந்து அறவு மயங்கி நிற்கும். முக்தி / சுத்த நிலையில் இறையைச் சார்ந்த வண்ணம் ஆகும்.
இவ்விரு வகை சார்புகளுள் இறைச் சார்பே ேமலானது. ஏனென்றால் இறைச் சார்பு இன்பம் தருவது. உலக சார்பு / மாயா மலத்தின் சார்பு துன்பம் தருவது. உலக சார்பு உடைய உயிர்கள் அவற்றின் பற்றுக் கொண்டு அவ்வனுபவங்களை சுமை என்று உணராது சுகமெனக் கருதும். இப்பாரம் குறையக்குறைய இறைவனை அணையும் ஆசை மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒன்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன் கண் உவர்ப்படைந்து விட்டு பின்னர் மெஞ்ஞானத்தை தாணுவினோடு ஒன்றித்து நிற்கத்தலைப்படும். இதனை காளத்தி மலையை கண்டு அதனை அணுகி செல்லும் தோறும் தம்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம்உண்டானதாக கண்ணப்பர் (பெ,பு, 97) கூறுவதால் அறியலாம். கட்டு நிலையில் உயிர்கள் வினைகளை செய்யும் அதன் பலன்களையும் துய்க்கும்.இறைவனிடம் அன்பு கொள்ளும் ேபாது ( இறைவழிபாட்டில்) பாரம் குறைவது போல் உணர காரணமாவதை அறியலாம்.
அவ் உயிர்களின் வினைகளையும் பலன்களையும் இறைவன் ஏற்றுக் கொள்வான். எனவே அவனை எடுத்து சுமப்பான் ( திருவருட்பா 65) என்பார் உமாபதி சிவம்.
உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது என்பது சைவ சித்தாந்த கோட்பாடு.
அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும்அறிகிலார் ..... என்ற திருமந்திரம் கூறியபடி அன்புதான்
சிவம்/ சிவனைச் சார்ந்த சீவனான உயிர்கள் அவனது உருவமாகிய அன்பு உருவ மானதை உணர்த்தும்.
திருச்சிற்றம்பலம்
திருமுறைகளை பாராயணம் செய்வோம்!
திருமுறைகளை பாராயணம் செய்வோம்! சிவன் அருள் பெறுவோம்!
சைவத்துக்கு பொதுநூல் ேவதம், சிறப்பு நூல் ஆகமம் எனவும் கொள்ளப்படுகின்றது. இவை இறைவனால் அருளப்பட்டவை. சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவ பெருமான். திருமுறைகள் தமிழ் வேதம் என போற்றப்படுகின்றன. சிவபெருமான் திரு அருளைப்பெற்ற திருவட் செல்வரகளால் சிவபெருமான் உள் நின்று உணர்த்திப் பாடப்பட்ட தெய்வத் திரு நூல்களே திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. இத்திருமுறைகள் பன்னிரண்டாகும்.
ஆலயங்களிலும், வீடுகளிலும், மற்ற இடங்களிலும் கடவுள் வழிபாட்டின் போது இத்திருமுறை பாடல்களைப் பாடி பரவுவது சைவ மரபாகும். பன்னிரு திருமுறைகளிலும் அடங்கும் தோத்திரப்பாடல்கள் பிரணவ மயமானவை. தமிழ் வேதமாக விளங்குகின்ற திருமுறைப்பாடல்களுடன் வேறு எந்த பாடல்களையும் ேசர்த்து பாடக்கூடாது என்பது சிவ பரம்பொருளின் திருவுள்ளக் கிடக்கை என ஆன்றோர் கருத்து.
திருமுறை பாடல்களை பாட தொடங்கும் முன்னும், பாடி முடித்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓதப்படவேண்டும்.திருமுறைகளில் உள்ள அனைத்து பாடல்பதியங்களையும் பாட இயலாததால் தேவாரம் திருவாசகம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தொண்டர்புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் வேண்டும்.
திருமுறைப்பாடல்களை இறைவனை நினைந்து மனமுருகி , காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் நன்னெறிக்கு இட்டுசெல்லப்படுவர் என்பது அனுபூதி மான்களின் முடிவு. திருமுறைகள் பண்ணாடும் பக்தியோடும் பாடப்படவேண்டும் என்பது அருளாளர்களின் கருத்து.
பரம்பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தித் துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு என்பவற்றை போற்றுதல் செய்வனவாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும் பக்தியையும் தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும் ஓதி உஉணர்வர்களை உய்விப்பனவாகவும் மந்திரம், தந்திரம், மருந்து என மூன்றுமாய் விளங்கித் தீராத நோய் தீர்த்த தருளும் தன்மையானவை யாகவும் விளங்கும் அருள்நூல்கள் திருமுறைகள்.
இறைவன் ஒருவனே, அந்த ஒருவன் சிவனே, அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை. சிவபெருமானே முழு முதற்கடவுள். அப்பெருமான் திருவருட் சக்தியுடன் இணைந்து ஒரு பொருளாகவே உள்ளான். அன்பு நீதி உண்மை, செம்மை, அருள், ஞானம் என்பவற்றை அதிட்டித் நிற்கும் சிவம். அவற்றின்றும் பிரிவிலா ஒரு பொருள் ஆக உள்ளது. எல்லா உயிர்கள் மீதும் அளப்பெரும் கருணை கொண்ட சிவபெருமான் அவைகளி்ன் ஈடேற்றத்தின் பொருட்டு ஐந்தொழில் செய்கிறான்.
அப்பெருமானின் மறைமொழி திருவைந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரமும். சிவ சின்னங்கள் திருநீறு, உருத்திராட்சமும், சிவனடியார் பெருமை சொல்லலும் பெரிதே. அப்பெருமானிடம் சேர்ப்பிக்கும் நால்வகை நெறியான சரியை,, கிரியை, யோகம், ஞானம் என்ற நெறிகளை அறிவிப்பது திருமுறைகள் என்பதை நாம் அறிந்து மனிப்பிறப்பு எடுத்ததின் நோக்கமாகிய கடவுளைட வணங்கி முக்தி இன்பம் பெறுவதலுக்கு உறுதுணையாக விளங்குவது பக்தி இயக்கத்தினை வளர்ப்பதுமான சாதனமான திருமுறைகளை பாராணம் செய்து மீண்டும் பிறவா நெறி அடைந்து நல்வாழ்வு வாழ்வோமாக!
திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 17 டிசம்பர், 2021
திருவாதிரை நோன்பு
திருவாதிரை
திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிப்பதால் திருவாதிரை திருவிழா என போற்றப்படுகின்றது. 2021 டிசம்பர் 19ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரம் தொடங்கி 20ஆம் தேதி இரவு 7.50 வரை நீடிக்கின்றது.
இதன் காரணமாக சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும். ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு (மார்கழி 4) டிசம்பர் 19ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், டிசம்பர் 20 காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
ஆருத்ரா தரிசன பலன்கள் :
ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.
ஆருத்ரா தரிசனம் 2021: சிதம்பரம், உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.
சிவாலயங்களில் மிக முக்கியமாக பஞ்ச சபைகளான
1. திருவாலங்காடு -இரத்தின சபை
2. சிதம்பரம் - கனக சபை
3. மதுரை -ரஜித சபை (வெள்ளி அம்பலம்)
4. திருநெல்வேலி - தாமிர சபை
5. திருக்குற்றாலம் - சித்திர சபை
குறிப்பாக இந்த ஐந்து சபைகளில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.
ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.
திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்
திருச்சிற்றம்பலம்
செவ்வாய், 9 நவம்பர், 2021
எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !
எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !
" யாதெரு தெய்வங் கொண்டீர்அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும்பிறக்குமேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே ,,,,...... சிவஞான சித்தியார்
" ஈறிலாதவன் ஈசன் ஒருவனே " என்கிறார் திருநாவுக்கரசர்
நல்வினையுள்ளுஞ் சிறந்தது தெய்வ வழிபாடு, அது எவ்வாறு எனில் ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையவராய் , தத்தம் மதத்திற் கேற்றவாறு, எவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு, எவ்வெவ் தெய்வத்தை வழிபடினும் அவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு , அவ்வெவ் தெய்வத்தை தமது சக்தியால்( இறைவி) அதிட்டி நின்று அவ்வெவ் வழிபாடு கண்டு, அதனை ஏற்று அனுகிரகிப்பவர், முன்னைப்பழம் பொருட்டு,முன்னைப் பொருளாகிய சிவபெருமான்ஒருவரே,
எவ்விடத்து யாதொரு தெய்வத்தை பொருளாகக் கொள்ளினும், அவ்விடத்து அவ் வழிபாட்டை அறிந்து உயிர்களுக்கு பலனை கூட்டுபவர். அச் சிவபெருமானர் ஒருவரே,ஏனைய தெய்வங்கள் சுதந்திர அறிவின்மையால் தாமே பலன் கொடுக்க மாடடா. எத்தெய்வத்தை வழிபடினும் அவ் வழிபாட்டிற்கு சிவபெருமானே பலன் தருவார்.
அவ்வாறாயின், பிற தெய்வ வழிபட்டவர்க்கு அவ்வத் தெய்வமே எதர் தோன்றி நின்று பலன் கொடுத்ததே என நூல்களிற் கூறப்படுகின்றதே யெனின் அன்றுஅரசன் ஆணையே மந்திரி முதலாயினோர் மாட்டு நின்று பிறர்க்கு பலன் கொடுக்குமாறு போல சிவபெருமானே தமது ஆணையை தம்ஏவர் வழி நிற்கும். அவ்வவ் கடவுள் மாட்டு , அவரோடு நின்று பலன் கொடுப்பார். அங்ஙன மின்றி அக்கடவுள் பிறருக்கு பலன் கொடுத்தல் ஒருபோதும் பொருந்தாது. அது அரசர் ஆணையை மீறியது போன்றே.
பிற தெய்ங்கள் அனைத்தும் பிறப்பு இறப்புக்குஉட்பட்டவை யாதலால் அது பசுவர்க்கமாகும். எனவே அவ் வழிபாட்டால் கிடைப்பது பசு (உயிர்) புண்ணியமே, பதி புண்ணியமன்று, பதியாகிய சிவனை நோக்கி வழிபாடே பதி புண்ணியம். எனவே ஏணைத் தெய்வங்களை யே முழுமுதற் கடவுள் என்று எண்ணி செய்யும் பசு புண்ணியம் சிவ புண்ணியமாகாது. எனவே ஏனை சிறு தெய்வ வழிபாடுகளையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டு பலன் தருவார். என்பதால் நேரிடையாக சிவபெருமான் திருவடியை வழிபடுதலே நல்ல அறமாம்.மற்றவை வீண் செயலாகும்.
தொகுப்பு : சிவ, பூமாலை, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்
திருச்சிற்றம்பலம்
