திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மயிலே தூது செல்லாயோ?


மயிலே தூது செல்லாயோ? மயிலே தூது செல்லாயோ - மால் மருகனிடம் சேதி சொல்லாயோ! உயிராய் என்னை உணர்ந்திருந்தான் - இந்த உலகம் தனைநான் மறந்திருந்தேன் ! இனிக்கவே பேசி எனக்கவர்ந்தான் - என்றன் எண்ண மெலாம் நிறைந்திருந்தான் ! கனிவாய் பேசிக் கவர்ந்திருந்தான் - அவன் நினைவால் நானு மறந்திருந்தேன் உண்ணவும் என்மனம் விரும்பவில்லை - இமை மூடினும் துயில்கொள்ள முடியவில்லை பண்ணும் எனக்கே இனிக்கவில்லை - ஆவின் பாலும் ஏனோ சுவைக்க வில்லை நடை தளர்ந்தேன் பண் பாடும்இழந்தேன் காண கண்ணும் தளர்ந்தேன் - உன்புகழ் கேட்கும் தயவிழந்தேன் தவிக்கிறேன் உன்தலைவனிடம் என்னிலை சொல்லோயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக