சனி, 3 ஆகஸ்ட், 2013


இறைவனுடைய திருவருளை அடைவதற்கு வழிகள் பற்பல, அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம், என்னும் நான்கும் அடங்கும், சத்புத்ர மார்க்கமாவது, இறைவனைத தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழிஆகும், திருஞானசமபந்தர் காட்டிய வழி இதுவே, தாசமர்க்கம் என்பது இறைவனை எசமானனாக பாவித்து உயிர்கள் பணியாளனாக இருந்து வழிபடும் நெறியாகும், இது திருநாவுக்கரசர் காட்டிய வழி, சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும்,இது சுந்தரர் காட்டிய வழி, சன்மார்க்கம் என்பது இறைவனை குருவாக - ஞானாசாரியனாகக் கொண்டு, ஆன்மா சீடனாக இருந்து வழிபடும் வழியாகும், இது மாணிக்கவாசகர் காட்டியவழி, அன்னம் பாலில் கலந்த நீரை நீக்கிப் பாலைத் தூய்மையாக்கிப் பருகுகிறது, அதுபோல ஆன்மா தியான வகையில் சக்தி செய்து கொள்ளல், தவம் என்பது காடுகள் வாழ்ந்து கனிகள் உண்டு வாழ்தல் மட்டும் அன்று, இறைவனை த் தியானம் செய்து கொண்டு தம்மால் எவ்வுயிருக்கும் தீங்குகினைச் செய்யாது இருத்தலும் ஆகும் - திரு மூலர் காட்டிய வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக