சனி, 27 டிசம்பர், 2014

பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம்


பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம் மனதை அடக்கத் தெரிந்தவன் மகான் என்று கூறுகிறோம், நம்மால் மனதை அடக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. சூழ்நிலை காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனையில் மனதை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறோம், இன்றைய காலகட்டத்தில் மனதை அடக்கி ஆள்பவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அந்த காலத்தில் முனிவர்கள் சித்தர்கள் மனதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மகோன்னத நிலையை அடைந்தார்கள் என்று கேள்விப்படுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் சில சிவன் கோவில்களில் பாதாள லிங்கம் என்று பாதாளத்தில் ஒரு சன்னதி அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். அப்படிப்பட்ட கோவில்களில் ஒரு சித்தர் ஐக்கியமாகி இருப்பது தெரியவருகின்றன, மானிட சரீர ரகசியம் அறிந்தவர்கள் உடலை பிறர் கண்களுக்கு புலப்படாமல் மறைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மானிட சரீர ரகசியத்தை உலகத்துக்க யோக சூத்திரமாக அருளிய தவசித்தர் பதஞ்சலி முனிவர். முற்கால சித்தர்கள் தங்களின் தவயோக நிலையினை பாதாள குகைகள் அல்லது செயற்கையான குகைகள் அமைத்து அங்கு தங்களின் உடலை ஐக்கியமாக்கி கொண்டவர்கள் சித்திர் பெருமக்கள், இன்றைய காலகட்டத்திலும் அண்ணாமலையில் பாதாளலிங்கத்தில் யோகம் செய்தவர் தவ சீலர் ரமணர் என்பதை நாம் அறியலாம்,இவர்களுக்காக இறைவன் தன் காட்சிதந்து அவரைகள் முத்தியடையவும் சூச்சமயமான உலகில் இன்றும் உலகிவரவும் அருள்பாவித்துள்ளதை இன்றும்அறியலாம், தில்லையில் சிவத்தாண்டவம் காண்ட சித்தர்கள் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள விஷ்ணு பகவான் சிவபெருமானின் சிவத்தாண்டவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தததைக்கண்ட ஆதிசேஷனும் தானும் அம்பலவாணனின் சிவத்தாண்டவம் காண ஆவல்கொண்டான், சிவன் அவருக்கு காட்சி கொடுத்து "பூமியில் பதஞ்சலி முனிவராகஅவதாரம் எடுக்கும்போது தில்லையம்பலத்தில் சிவத்தாண்டவம் காணும் பேற்றினை கொடுப்பேன், என்று அருள்பாலித்தார். அதேபோல்தவம் இருந்த வியாக்கிரபாத முனிவருக்கும் அருளினார். வியாக்மகிரபாத முனிவர் சிபிசக்கரவர்த்தியின் சாபத்தால் அவயம் இழக்கப்பட்டார், மனம் நொந்த அவர் தில்லைவனத்தில் நந்தவ பூக்களைக்கூட மரம் கொடிகளில் பறிக்க முடியாமல் அவயம் இழந்ததமையால் கஷ்டப்பட்டார், அப்போது ஒரு அதிசயம் நடந்தது. அவருக்கு புலிக்கால்களும் இருளை ஊடுருவி பார்க்கும் ஒளி மிகுந்த கண்களும் இறைவனால் கிடைக்கப் பெற்றார், அப்போது அங்கே வந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் தில்லைவனத்தில் நடராஜபெருமானை வழிபட்டு வந்ததால் அவர்களுடைய ஆசை நிறைவேறியது, சிவபெருமானின் சிவ தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள், இவர்கள் இருவரும் சித்தர்களாக போற்றப்படுகிறார்கள். திருச்சிற்றம்பலம் மேலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக