புதன், 16 டிசம்பர், 2015

பெரியபுராணம் காட்டும் அருளாளர்கள் வாழ்வில் திருநீற்றின் பெருமை


திரு நீறு ( தொடர்ச்சி) பகுதி 2 பெரியபுராணம் காட்டும் அருளாளர்கள் வாழ்வில் திருநீற்றின் பெருமை சேரமான் பெருமான் நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனார் எம்பெருமான் நண்பர், எம்பெருமானின் பெரும் பக்தர், சேரமான் பெருமான், எம்பெருமான் தன் நண்பர் சுந்தரனுக்கு சேரமான் பெருமானை அறிமுகம்செய்து, சுந்தரர் சேரமான் பெருமானுக்கும் நண்பராக்கினார். இதனால் இருவரும் சிவதொண்டில் இணைபிரயா நண்பர்களானர், சேர நாட்டு மன்னர் சேரமான் அரச முடிகொண்டு திருவீதி உலா வந்த போது, எதிரே ஒரு சலவைத் தொழிலாளி உவர் மண் சுமையோடு வரும் போது, அவர் உடம்பெல்லாம் உவர்மண் (வெண்மையானது) படிந்து உடலெல்லாம் திருநீறு பூசியது போன்று காட்சி கண்ட, மன்னர், அவரை வெண்ணீறு அணிந்த சிவனடியார் எனக் கொண்டு யானை மீதிலிருந்து கீழ் இறங்கி, எதிரே சென்று, தொழுதார், இக்து கண்ட சலவைத் தொழிலாளி மனங்கலங்கி, மருண்டு, " அடியேன் , அடி வண்ணான், என்றார், அவர் யாரென்றும், அவர் மீதுள்ளது திருநீறு அன்று தெரிந்த பின்னும், அடிசேரன் என்றார், அரசர். திருநீற்றை பூசிய தோற்றத்திற்கே நாயனார் அளித்த மரியாதை மதிப்பு மிக்கது, என்பதை எண்ணி உவப்போம். "சேரர் பெருமான் றொழக்கண்டு சிந்தை கலங்க முன்வணங்கி யாரென் றடியேனைக் கொண்ட தாயேனடி வண்ணா னென்னச் சேரர் பிரானு மடிசேனடியே னென்று திருநீற்றின் வாரவேட நினப்பித்தீர் வருந்தா தேகுமென மொழிந்தார் " கழறிற்றறிவார் புராணம் -19 ஏனாதிநாத நாயனார்: ஏனாதிநாத நாயனார் அரச குலத்தவர்களுக்கு வாட் பயிற்சி தந்து, அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத்தொண்டாற்றி வந்தார். நாயனாரின் உறவினரான அதிசூரன் என்பவன் அவர் பால்பொறாமை கொண்டும், அவரிடம் பலமுறை சண்டையிட்டு தோல்வியும் தழுவியும், அவரை எப்படியும் நயவஞ்சனையால் கொல்ல தீய எண்ணம் கொண்டு, தான் ஒரு போலி சிவனடியார் வேடம் கொண்டு, நெற்றியில் திருநீறு அணிந்து அதனை கேடயத்தால் மறைத்துக் கொண்டு நாயனாருடன் வாட்போர் புரிய அழைத்து, வாட் போர் இடும் போது, தன் கேடயத்தை சற்று விலக்கி நெற்றியில் அணிந்த திருநீற்றை நாயனார் முன் காட்டி, தான் ஒரு சிவனடியார் என்பது போல் வஞ்சனை செய்தான், இதனைக்கண்ட ஏனாதிநாத நாயனார், திருநீற்றுடன் கண்ட நெற்றியினை சிவனடியார் என்றே எண்ணி, சிவனடியாரை வாட்போர் புரிந்து வெற்றி கொள்வது, எம்பொருமான் சிவனாரையே போர்புரிவதாக ஆகும் என்று எண்ணி , வஞ்சகனை கொல்வது சரியன்று, எனவே தன்போர்புரிவதை தவிர்த்தும், தன் ஆயுதங்களை கீழே போட்டால் , நிராயுத பாணியான தன்னை கொன்ற குற்றம் போலி சிவனடியாரான அதிசூரனுக்கு உண்டாகும் என்று எண்ணியவாராய், ஆயுத ஙகளுடனே நின்று தன்னை கொல்ல ஒத்திருந்தார், இதன் பொருட்டு நாம் காண்பது திருநீறு அணிந்த நெற்றியைக் கண்ட மாத்திரத்திலேயே சிவனடியாருக்கு யாதொரு தீங்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணி தன் உயிர் துறக்க வஞ்சகனுக்கு உடன் இருந்த நிலை நீறுபூசிய தன்மைக்கு அவர் அளிக்கும் மரியாதை நன்கு புலப்படுகிறது. திரு நீறு இட்டாரை ஈசனாகவே கண்டார், அதன்வழீ வீடுபேறு அடைந்தார். உள்ளத்தில் வஞ்சனையுடன் போலி சிவவேடம் தறித்த அதிசூரன் கடுநரகம் அடைந்தான். சிறுத்தொண்டர்: அடியாருக்கு உணவளிக்காமல் தாம் உண்ணா பெருந்தகையாளர் சிறுத்தொண்டர். பயிரவர் வேடத்தில் வந்த ஈசன் தன் உடன் உணவு உண்ண ஒரு அடியார் வேண்டுமென்ற போது, " எங்கு தேடினும் சிவனடியார்களே இல்லை, யானும் யாதும் கண்டீலன் , நான் அறியாதவனாயினும், உலகில் திருநீறிடும் மற்றவர்களைக் கண்டு நானும் இடுபவன்," என்று இறைஞ்சி நின்றார், உடனே இறைவன் திருநீற்றை சிறப்பிக்கும்வகையில் , உம்மைப்போல் திருநீற்றை சிறக்க இட்ட அடியார்களும் உண்டோ? என்று அருளி, தன்னும் உணவு உண்ண இச்சயத்து, அதன் பொருட்டு ஈசனே திருநீற்றை அணிந்தவர்களுக்கு கொடுத்த சிறப்பினை உலகுக்கு உணர்த்தினார், இதன் மூலம் திருநீற்றின் பெருமை ஈசன் வழங்கியது நன்கு விளங்கும். மெய்பொருள் நாயனார்: திருக்கோவலூர் மலையமான் மரபில் வந்த அரசர் மெய்பொருள் நாயனார். இணையிலாத வீரர். பலமுறை அவரிடம் போரிட்டு தோல்வியுற்று,பின், அவரை எப்படியும்வஞ்சனையால் வெல்ல எண்ணிய முத்தநாதன் என்ற மாற்றரசன், உடம்பெல்லாம், திருநீறு பூசியும், சடைமுடி புணைந்து கையில் ஓலைச் சுவடி ஏந்தி, அதனுள் மறைத்த கத்தியுடன், வந்து ஆகம நூல் உபதேசிப்பவன் பேல் நாயனாரின் அந்தப்புறம் வரை வந்து நாயனாரை கத்தியால் குத்தினான். பகைவனை வாளினால் வெட்ட வந்த மெய்க்காப்பாளனை, தடுத்து, " தத்தா, நமர் " எனக்கூறி அவனை பாதுகாப்புடன் நாட்டின் எல்லையில் விடப்பணித்தார். பகைவன் என்று அறிந்தும் திருநீறு பொலிந்த அவன் சிவவேடம் கண்ட நாயனார், அவன் கருதியது முடிக்க உகந்ததுடன், தன் இளவரசர், தேவிமார், அமைச்சர் அவர்களிடம் " திருநீறு பூண்ட சிவவேடம் பூண்டாரை காத்தருள்க, " என வினவி , தான் வீடுபேறு பெற்றுய்தினார். திருஞான சம்பந்தர் : ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தர் வாழ்வில் திருநீறு மிகவும் சிறப்பு பெற்றது. அவர் சிறுகுழந்தைப்பருவத்திலேயே அவர் குழந்தை அழுகையை கட்டுப்படுத்த அவருக்கு அவர் அன்னையார் அளித்த திருமருந்து திருநீறே ஆகும். மேலும் அவர் குழந்தைப்பருவத்தில் திருத்தலங்களில் தேவாரம் பாடிவருங்கலாத்தில் அவருக்கு இறைவன் அளித்த முத்துச் சிவிகை, முத்து தாளம், முத்துப்பல்லாக்கு பெற்று சீர்காளி திரும்பி வரும்போது அங்குள்ள மாதர்கள் அவரை வரவேற்க பொற்கிண்ணம், பொற்தட்டுகளில் ஆராத்தி எடுத்து வரவேற்க சென்றபோது, அவரின் அன்னையார் மட்டும் ஒரு தாம்பளத்தில் இறைவனின் திருநீறுமட்டும் கொண்டுவந்து அவரை வரவேற்று சிறப்பித்தார் என்பதை சேக்கிழார்தனது காவியத்தில் விளக்குகின்றார். பாண்டியம்பதியில் சமணர்களின்ஆதிக்கம் வலுபெற்று, சைவத்தை அழிக்கும் நோக்கில் செயல்பட்டது கண்டு மனம் வறுந்திய பாண்டியநாட்டு அரசி ஞானசம்பந்தரை அழைத்து சமணர்களின் தீங்குகளை நீக்க வேண்டியபோது, அங்கு வந்த சம்பந்தரை அழிக்க அவர் தங்கிருந்த மாடலாயத்திற்கு தீ வைத்த சமணர்களால் பட்ட துன்பம் கண்டு பாண்டிய மனனனுக்கு வெப்பு நோய் கண்டபோது, அதனை நீக்க ஞானசம்பந்தரை அழைத்து திருநீறு அணிவித்து, திரு ஐந்தெழுத்து மந்திரம் ஓதி வெப்பு நோய் நீங்க, திருநீற்று பதிகம் " மந்திரமாவது நீறு வானவர் மேவது நீறு என்று பதிகம் பாடி திருநீற்றுக்கு பெருமைசேர்த்தது இறைவனின் திருவருளால் அன்றோ! திருநாவுக்கரசர்: திருமுனைப்பாடியில் திலகவதியாரின் தம்பியார் தருமசேனர் என்ற நாவுக்கரசர் சிவநெறியை புறக்கணித்து சமண மதம் சார்ந்து, வாழ்ந்து வந்தமை கண்டு மனம் கலங்கிய தமக்கையார், வீரட்டானத்துறை ஈசரிடம்வேண்டி , புலம்ப, இதன் பொருட்டு இறைவன் தம்பியார் தருமசேனருக்கு சூலைநோய் கொடத்து யாரும் குணப்படுத்த வண்ணம் துன்பம் மிகக் கொண்ட தருமசேனர் உன்னிடம் சேர்வார் என்று அருள்புரிந்தார். அதன்படி தருமசேனர் தமக்கையை அண்டி, சூலைநோய் நீங்க உதவ வேண்டினார். தமக்யைார் வீரட்டானத்து இறைவன்பால் அன்பு கொண்டு இறைவனிடம்சூலை நோய் நீங்க தொழுதெழ கூறினார், அதன்படி தருமசேனர் வீரட்டானத்து இறைவனிடம் "கூற்றாயினவாறு விலக்கலீர் " என தேவாரப்பாடல் பதிகம் பாடி இறைவனின் திருநீற்றை வழங்கியும் அணிவித்து திருஐந்தெழுத்து மந்திரம் ஓதியும் தீராத சூலை நோய் நீங்கப் பெற்றார். இதன் பொருட்டு இறைவர் இவருக்கு நாவுக்கரசர் என்ற பெயரையும் சூட்டினார். திருநீறும் ஐந்தெழுத்தும் சார்பு கொள்ளாதோர் திருக்கோவில் புக தகுதி யற்றவர் என்பது இதன் குறிப்பு. அவ்வாறு நீறு அணிந்து நிறைவாகிய மேன்மையும் நாவுக்கரசர் பெற்றார். திரு நீற்றின் பெருமைகளை இன்னும் பல தகவல்களையும் சொல்லலாம். எம்பெருமான் தன் பெருங்கருனையினால், நம்மையெல்லாம் இந்த மண்ணில் பிறக்கச் செய்திருப்பதே நாம் செய்த புண்ணிய பலனாகும். அதிலும் சைவர்களாக பிறக்கச் செய்திருக்கிறார் நாம் அதன் பயனை நன்கு உணர்ந்து திருநீற்றின் நெறியை நம் வாழ்வின் நெறியாக கொள்வோம். நலம் பல பெறுவோம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!! நன்றி : திருவாளன் திருநீறு மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://poomalai-karthicraja.blogspot.in https://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக