வெள்ளி, 25 டிசம்பர், 2015


தில்லை ஆருத்ரா திருநடனம் மாதங்களில் சிறந்த மாதமான மார்கழி திங்களில் திருவாதிரை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் முக்கிய விரதம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரம் பிறப்பற்ற சிவபெருமானின் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தான் மகா முனிவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதா் என்ற முனிவர்களுக்கு ஆருத்தரா நடனம் காட்டி காட்சி தந்ததாக வழங்கப்படுகிறது. ஒரு தடவை மகாவிஷ்ணு திடீரென ஆதிசேசன் படுக்கையிலிருந்து இறங்கி செல்லும் போது , ஆதிசேசன் மகாவிஷ்ணுவிடம் காரணம் கேட்க, அதற்கு விஷ்ணு பிரான் நான் தில்ைல சிதம்பரத்தில் நடராஜ பெருமானின் ஆருத்ரா நடனம் காண செல்கிறேன் என்று கூற, இதைக் கேட்ட ஆதிசேசனுக்கு இந் நடனத்தை காண விருப்பம் ெகாண்டு அதற்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்க, அதற்கு தில்ைல சென்று சிவபெருமான் மேல் பக்தி கொண்டு கடும்தவம் மேற்கொண்டால் இத்தரிசனம் கிடைக்கும் என்றார், அதன்படி ஆதிசேசனும் தில்லை சென்று சிவனாரை நினைந்து கடும்தவம் செய்தார். இத்தருணத்தில் தான் வியாக்கிர பாதார் என்ற புலிக்கால் முனிவரும் நீண்ட நாள் தவம் இருந்தார் இவர்களுக்கும் இந் நாளில் தான் சிவனார் இந்த ஆருத்ரா நடனக்காட்சியை அளித்தார் என்பது வரலாறு. ஆருத்தரா நடனம் புரிந்த வரலாறு தாருகா வனத்து முனிவர்கள் யாவரும் சிவனாரை நிந்தித்து பெருவேள்வி ஒன்று நடத்தினர். அப்போது சிவனார் பிச்சாடனர் வேடம் பூண்டு முனிவர்களின் இல்லங்களுக்கு சென்றார், அப்போது முனிவர்களின் மாத்ர்கள் யாவரும் பிச்சாடனர் பின்னால் செல்வது கண்டு வெகுண்ட முனிவர்கள் யாகத்த்தில் மதயானை, முயல், மான் முதலிய மிருங்களை ஏவினார்கள், சிவனார் அம் மிருங்களான யானையின் தோலை உரித்து போர்வையாகவும்,மான் முதலியனவற்றை கையிலும், முயலகனை காலிலும் மிதித்து திருநடனம் ஆடினார். இக்காட்சி நடந்த நாளே மார்கழிதிருவாதிரை நட்சத்திர காலமாகும். இதுவே திருவாதிரை ஆருத்ரா நடனம் என்பது. இக்காட்சியே மகா முனிவர்கள் கண்டுகழித்தனர். இந்நாளில் தேவரகளும் இங்கு வந்து இந் நடனத்தை காண்பதாக ஐதிகம். திருவாதிரை களி பிறந்த கதை தில்லை அருகில் உள்ள ஒரு குக் கிராமத்தில் சேந்தனார் என்ற சிவபக்தர் அனுதினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பின்தான் தான் உண்பார். இவ்வாறு செய்துவரும் காலத்தில் வறுமை வாட்டியது, சிவனடி யார்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் மழைகாலத்தில் ஒருநாள் சிவனாரே அவர் வீட்டிற்கு வந்தார், அந்நேரத்தில் சிவனடியாருக்கு உணவளிக்க முடியாத நிலையில் யாது செய்வதென்று அறியாத நிலையில் அவர் வீட்டிலிருந்த மாவை களியாக்கி சிவனடியாரான சிவனாருக்கு படைத்தார், அவரும் அந்த களியை விரும்பி உண்டு, தனது இல்லத்திறகும் கொண்டு செல்லவேண்டுமென்று கேட்டு மீதமுள்ள களியையும் வாங்கி சென்றுவிட்டார். மறுநாள் காலையில் தில்லை யில் உள்ள சிவலாயத்ததில் சிவாச்சாரியார்கள் கோவிலை திறந்தபோது கருவறையில் களி ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை அறிந்தார்கள். இதுகுறித்து சிவனாரிடம் அடியார்கள் வேண்ட என்பத்தன் சேந்தனார் அளித்த அமுது இந்த களி என்றாராம். அது முதல் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் பகவானின் பிரசாதமாக திருவாதிரைக் களி என்றே இன்றும் சிவலாயங்களில் வழங்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக