சனி, 2 அக்டோபர், 2021

எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !


 எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !



" யாதெரு தெய்வங் கொண்டீர்அத்தெய்வ மாகியாங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்

வேதனைப் படும் இறக்கும்பிறக்குமேல் வினையுஞ் செய்யும்

ஆதலான் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே ,,,,...... சிவஞான சித்தியார்


" ஈறிலாதவன் ஈசன் ஒருவனே " என்கிறார் திருநாவுக்கரசர்


நல்வினையுள்ளுஞ் சிறந்தது தெய்வ வழிபாடு, அது எவ்வாறு எனில் ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையவராய் , தத்தம் மதத்திற் கேற்றவாறு, எவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு, எவ்வெவ் தெய்வத்தை வழிபடினும் அவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு , அவ்வெவ் தெய்வத்தை தமது சக்தியால்( இறைவி) அதிட்டி நின்று அவ்வெவ் வழிபாடு கண்டு, அதனை ஏற்று அனுகிரகிப்பவர், முன்னைப்பழம் பொருட்டு,முன்னைப் பொருளாகிய சிவபெருமான்ஒருவரே,

எவ்விடத்து யாதொரு தெய்வத்தை பொருளாகக் கொள்ளினும், அவ்விடத்து அவ் வழிபாட்டை அறிந்து உயிர்களுக்கு பலனை கூட்டுபவர். அச் சிவபெருமானர் ஒருவரே,ஏனைய தெய்வங்கள் சுதந்திர அறிவின்மையால் தாமே பலன் கொடுக்க மாடடா. எத்தெய்வத்தை வழிபடினும் அவ் வழிபாட்டிற்கு சிவபெருமானே பலன் தருவார்.

அவ்வாறாயின், பிற தெய்வ வழிபட்டவர்க்கு அவ்வத் தெய்வமே எதர் தோன்றி நின்று பலன் கொடுத்ததே என நூல்களிற் கூறப்படுகின்றதே யெனின் அன்றுஅரசன் ஆணையே மந்திரி முதலாயினோர் மாட்டு நின்று பிறர்க்கு பலன் கொடுக்குமாறு போல சிவபெருமானே தமது ஆணையை தம்ஏவர் வழி நிற்கும். அவ்வவ் கடவுள் மாட்டு , அவரோடு நின்று பலன் கொடுப்பார். அங்ஙன மின்றி அக்கடவுள் பிறருக்கு பலன் கொடுத்தல் ஒருபோதும் பொருந்தாது. அது அரசர் ஆணையை மீறியது போன்றே.

பிற தெய்ங்கள் அனைத்தும் பிறப்பு இறப்புக்குஉட்பட்டவை யாதலால் அது பசுவர்க்கமாகும். எனவே அவ் வழிபாட்டால் கிடைப்பது பசு (உயிர்) புண்ணியமே, பதி புண்ணியமன்று, பதியாகிய சிவனை நோக்கி வழிபாடே பதி புண்ணியம். எனவே ஏணைத் தெய்வங்களை யே முழுமுதற் கடவுள் என்று எண்ணி செய்யும் பசு புண்ணியம் சிவ புண்ணியமாகாது. எனவே ஏனை சிறு தெய்வ வழிபாடுகளையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டு பலன் தருவார். என்பதால் நேரிடையாக சிவபெருமான் திருவடியை வழிபடுதலே நல்ல அறமாம்.மற்றவை வீண் செயலாகும்.

தொகுப்பு : சிவ, பூமாலை, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்

திருச்சிற்றம்பலம்


3 கருத்துகள்: