ஞாயிறு, 25 மே, 2025

ஞான வெற்றி திருஉந்தியார்

 

 திருவாசகம் தந்த (எட்டாம் திருமுறை) மாணிக்கவாசகர் பெற்ற ஞான வெற்றி
 திருஉந்தியார் என்ற பதிகம் இது தில்லையில் அருளி செய்யப்பட்டது அதனுள் சிவபெருமானது வெற்றியே கூறப்படதலின் அவ்வெற்றி அப்பெருமானே முதற் பொருள் என்று உணறும் ஞானத்தினது என்பதால் இதனை ஞான வெற்றி என்று குறிப்புரைத்துள்ளனர் சான்றோர்.
  மகளிர் விளையாட்டு வகைகளுள் உந்தி என்று ஒன்று உண்டு, இவ்விளையாட்டினை செய்யும் மகளி்ர் அவ்விளையாட்டின் உந்தி என்னும் புனைப்பெயரை உடையவராய் இருப்பர். 
`அடியார்க்கு நல்லார் காட்டினர்` என மேற்குறித்த சூத்திரத்துள்ளும், `உந்தி` என்பது ஒன்று காணப்படுவதால், இது பல்வரிக்கூத்துள் ஒன்று என்பதும் அறியலாகும். இப்பகுதியுள் வரும் ``உந்தீ பற`` என்ற தொடர்களில் உள்ள, `உந்தீ` என்பது, `உந்தி` என்னும் பெயர் விளியேற்று நின்ற தாகவே கொள்ளக்கிடப்பதால், இவ்விளையாட்டினைச் செய்யும் மகளிர் அவ்விளையாட்டில், `உந்தி` என்னும் புனைபெயரை உடையராய் இருப்பர் எனக் கொள்ளவேண்டியுள்ளது. இதன்கண் ஓரிடத்து, `ஏடி, உந்தி` என வருதலும், அடியார்க்கு நல்லார் காட்டிய சூத்திரத்துள் வரும் சில வரிக்கூத்துக்கள், இதுவும், `உந்தியார்` என ஆர்விகுதி பெற்று நின்றது போலும்! இது, `உந்தி` என்னும் பெயராலும், பறத்தல் தொழிலோடு இயைத்துச் சொல்லப்படுவதாலும், இதனை ஆடும் மகளிர், பறவைபோல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் முடக்கி இருந்து, பின் விரைந்தெழுந்து, இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டிப் பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடுவர் என்று கொள்ளல் பொருந்தும். இவ்வாறு ஆடுதல் மகளிர்க்கு நல்லதோர் உடற்பயிற்சியாயும் அமையும். இவ்வுந்தியார் என்பது, `உந்தீ, என ஒருமையாக விளித்து, `பற` என்னும் ஒருமை ஏவலாலே முடிக்கப்படுகின்றது. அதனால், ஒருவர்க்கொருவர் தோழியராய் ஒத்த நிலையில் உள்ள மகளிர் தம்மில் இவ்வாறு விளித்தும், ஏவியும் பாடி ஆடுவர் என்பது பெறப்படும். ஏனைய விளையாட்டுப் பாடல்கள்போல இவ்விளை யாட்டுப் பாடலும், `உந்திப் பாட்டு` எனப்படும் எனக் கொள்க. இப்பாடல்களின் கருத்துடன் இறைவன்புகழ்பாடும் திறனும் ஆன்மாக்களின் வினையினை போக்கி உயிர்கள் ஞான வெற்றி பெற உதவும் பதிகமாக தச்சன் வேள்வியை அழித்து வெற்றி கண்டதை கருத்தாக கொண்டு அமைந்துள்ளது எனவே இப்பதிகத்தை பாடும் அடியார்களின் வினைப்பயன் நீக்கப்பட்டு இறைவனை உய்ய வழிவகுக்க அடிகளார் நமக்கு தந்த மந்திர பாடல் இதனை அவரது பாடல் வரிகளால் விரித்து காண்போம்
   இறைவனது வில் வளைந்தது, அதனால் அசுரருடைய ேபார் மூண்டது இதனால் முப்புரம் ஒருமிக்க வெந்து நீராயின இதனால்திரிபுரம் அழிந்தது இதனை அழிக்்க
   இறைவன் கையில் உள்ள ஒரு அம்பே அதிகமானது அதுமட்டுமல்ல இந்த அம்பு கூட தேவையில்லை இறைவனின் புன் சிரிப்பே அழித்துவிடும்தன்மையானது.
   தேவர்கள் அழகுபட செய்த தேரில் இறைவனின் திருவடியை வைத்தவுடனே தேரின் அச்சு முறிந்தது முப்புரங்கள் அழிந்தன.
  பிழைக்க வல்லவராயிருந்த சுதன்மன், சுசீலன்,சுபுத்தி என்னும் திரிபுரத்தில் வாழ்ந்த அசுரர்கள் இறைவனால் திரிபுரம் அழிக்கப்பட்டபோது அவர்கள் அழியாது பிழைக்க வைத்து அவர்களை பெருமானது வாயில் காவலாராயினர்
  இறைவனின் இச்செய்கையால் தக்கனது யாகம் குலைதலும், ேதவர்கள் ஓடி ஒழிந்தனர்
   பிரமனின் தந்தையான திருமால் தக்கன் வேள்வியின் அவியுணவைக் கொண்டு இருந்தபடியால் அந்நாளில் வீரபத்திரரால் தண்டாயுத்தால் தாக்கப்பட்டு உயிர்ஒன்று மட்டும் உடையவனாய் மூர்ச்சையுற்று கிடந்தான்
  அவி உணவை உஉண்ண வந்த கொடியவனான அக்கினி தேவனின் கையினை வெடடினான் இதனால் யாகம் கலங்கிற்று
  பார்வதி தேவியை பகைத்து பேசின தக்கனை / குற்றம் செய்தவனை ஒறுத்தல் அரசருக்கு முறையாகா என்றபடியால் அவனை உயிரோடு விட்டவர் ஈசனே
   தக்கன் வேள்வியில் வீரபத்திரருக்கு அஞ்சி இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடி ஒளிந்துவிட்டடான்
  கடுஞ்சினத்தால் தொடங்கிய தச்சன் யாகதது அதி தேவதைகளின் தலை அற்றது  இதனால் ஆட்டின் தலையினை பொருத்திக்கொண்டான்.
  அவிர்பாகத்தை உண்ண வந்த பகனது கண்ணைபறிக்கப்பட்டது
 வீரபுத்திரரால் நாமகள் மூக்கு இழந்தும், பிரம்மன்தலை யிழந்ததும் சந்திரன் தேய்க்கப்பட்டதுமான பங்கம் செய்யப்பட்டது.
  அவி உணவை பெறுவோர் தேவலோக முதல்வனாகிய இந்திரன்பயந்து குயிலாகவும் பின் அவன் தோள் நெறித்து மனவலியிழந்துஓடினான்்
   சூரியனது பற்களை தகர்த்தப்பட்டது 
  தக்கன் இறந்தமையால் பின்னர் வேள்வி அவன் மக்களே சூழந்து நின்றேபாேதும் வேள்வி மடிந்தது
  பிரமனது சிரம் சிவபெருமானால் அரியப்பட்டது. இதுவரை கொடியவனான தக்கனை வீழ்த்தியதும் வேள்வியை அழித்ததும் மான செயல்களால் இறைவன் புகழ் கூறி பாடப்படுகிறது. 
பாலுக்கு பாலகன் அழததற்காகஅவனுக்காக பாற்கடலையே தந்த பிரான் இறைவன்
 தன் தேரை நிறுத்தி கைலாய மலையினை தூக்கும் இராவணது பத்து தலைகளையும் இருபது கைகளையும் நெறித்த இறைவன்திறன் என்னவெண்பது?
  ஆகாயத்திலும் அதற்கப்பாலும் உள்ள முனிவர்கள் அழிந்து போகாமல் காவல் செய்தவர் இறைவனே
  என்று அவன் புகழை புகழ்ந்து பாடி உந்தி பற என்று ஆடிப்பாடி மகளிரை அழைக்கின்றார் அடிகளார்
  திருச்சிற்றம்பலம்   


வெள்ளி, 23 மே, 2025

முப்பிடாரியம்மனும் முளைப்பாரியும்...

 சுந்தரபாண்டியம் சாலியர் சமூக ..

 .....முப்பிடாரியம்மனும்  முளைப்பாரியும்...

  சுந்தரபாண்டியம் சாலியர் சமூக பிரதான பொங்கல் திருவிழாவில்  அருள்மிகு முப்பிடாரியம்மன் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பும் முக்கியத்துவம் பெற்றதாகும் ஏனனெனில் இது சாலியர் சமுதாயம் மட்டும் கொண்டாடும் பாரம்பரிய அனாதி காலம் தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முப்பிடாரியம்மன் அன்னை பராசக்தியின் அம்சமாக அதன் வழிதோன்றலுடன் அமைந்த அம்மனுக்கு பாதுகாப்பாக இறைவனால் ( ஈஸ்வரனால் ) தோற்றிவிக்கப் பட்ட வைரவரும் சேர்ந்து தோன்றி அருள் பாலித்து வருவது நாம் எல்லோரும் அறிந்ததே. அன்னை காளீ ரூபமாக தச்சன் வேள்வியில் மூழ்கி அதனால் சிதருண்ட அன்னையின் அங்கங்களுக்கு பாதுகாவலாக வைரவர் தோற்றுவிக்கப்பட்டார் என்பதும் அந்த அங்கங்கள் சிதரிய இடங்கெல்லாம் அம்மன் கோவிலாகவும், அம்பாளுக்கு பாதுகாவலாக தோன்றியவர் வைரவரும் சேர்ந்து கோவில்கள் தோன்றி அ்ங்காங்கே சிறப்புற்று விளங்கி வருவதை நாம் வரலாறுகள் மூலம் அறியலாம். 

   இவ்வாறு நமக்கு காவல் தெய்வமாக கொண்டாடிவரும் அருள்மிகு முப்பிடாரி யம்மன் பொங்கல் காலகாலமாக கொண்டாடப்பட்டு வரும் தருணத்தில் சமீப காலமாக சுமார் 1955 (தோராயமாக) க்கு மேல் உள்ள காலகட்டத்திலிிருந்து தான் அம்மனுடன் அம்மனுக்காக பக்தர்களின் நேர்த்திக் கடன் முளைப்பாரியும் சேர்தது கொண்டாடப்பட்டு வருகிறது.

  தோன்றிய விதம்°; சுந்தரபாண்டியம் தெற்குக் கீழத்தெருவில் வசித்து வந்த அதாவது முப்பிடாரியம்மன் பொங்கலுக்கு இளந்தாரி( வாலிபர்கள்) பந்தல் அமைத்து தெரு தேங்காய் உடைக்கும் இடத்தின் அருகில் திரு,கன்னியப்பன் அவர்களின் மனைவி திருமதி கோப்பாயி என்ற மாரியம்மாள் அவர்கள் இதற்கு வித்திட்டார்கள். அன்னார் சதுரகிரியில் ஆண்டுதோறும் நவராத்திரி கொழுவிற்கு வைத்தியர் சதுரகிரிி தொடர்புடையர் சுப்பிரமணியம் அவர்களின் ஆசியின் பொருட்டு முளைப்பாரி பாேடும் மகளிர்களில் அன்னாரும் சேர்ந்த பணி செய்து முளைப்பாரி வளர்க்கும் அனுபவம் பெற்்று அதனை நம் ஊரில் நம் முப்பிடாரியம்மனுக்கு படைக்கலாமென தீவிர எண்ணத்தில் முன் கூறிய தோராய ஆண்டுவாக்கில் கீழத்தெரு நிர்வாகதத்தில் அனுமதி பெற்று முளைப்பாரி சக ஆன்மீக மகளீர்களோடு பக்தி சிரத்துடன் தனது வீட்டையே இத்தெய்வீகப்பணிக்கு ஒதுக்கி அர்ப்பணம் செய்து முதன்முதலாக சுமார் ஒன்பது முளைப்பாரிகள் சுத்தபத்தாய் விரதமிருந்து மிகவும் நேரிய முறையில் வளர்த்து பெருமை சேர்த்தனர்.நம் சமுதாய ஏழூர் களில் முளைப்பாரிக்கென பெருமை சேர்த்த ஊர்கள், சத்திரப்பட்டி,திருவில்லிபுத்தூர் சக்கம்பட்டி போன்றவை மட்டும்தான் பிரபலமாக கொண்டாடப்படும் ஊர்கள் எனவே இதுபற்றி நம் ஊர்மகளீரும் மிகந்த வேட்கை கொண்டு நம் ஊரிலும் இம்மாதிரி பொங்கல் கொண்ட ஆர்வம் கொண்டனர், இந்த தாகத்தால் ஏற்பட்டதே இந்த முளைப்பாரி, இம்முளைப்பாரியினை நாங்கள் அம்மனைக் கரைக்கும் போது நாங்களும் அம்மன் பின்னால் தொடர்ந்து வர அனுமதி ஊர் நிர்வாகத்திடம் வேண்டப்பட்டது. ஆனாலும் உங்கள் கோரிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு தர இயலாது என்றும் உங்கள் நேர்த்திக்கடனை செலுத்த எ்ங்களால் தடை செய்ய முடியாது என்றும் நீங்களே அம்மன் பின்னால் கொண்டு வந்து கரைத்துக் கொள்ளலாம் அதற்கு எங்களின் அழைப்பையோ மரியாதையையே கேட்கக்கூடாது என்று கூறிவிட்டனர் இதன் அடிப்படையில் அம்மன் பின்னாலேயே முளைப்பாரியை சுமந்து கொண்டு சென்று அம்மன் ஆத்தடி பிள்ளையார் கோவிலுக்கு திரும்பியவுடன் முளைப்பாரி பாப்பா ஊரணியை அடைந்து அங்கு கரைத்து திிருவிழாவினை சிறப்புடன் முடித்துவந்தார்கள் . அதற்குபின் திருகோப்பாயி மாரியம்மாள் அவர்கள் காலத்திற்கு பின்தெற்கு கீழத்தெரு பொதுமடத்திற்கு இடம்  தனி நபரிடம் விலைக்கு வாங்கி நம் தொழில் உபதொழிலுக்காகவும்,( பாவு நனைத்து உலர்ததுதல், பாவு விழுது ஏற்றுதல், பாவு சுத்துதல் மடி மடித்தல் மற்றும் இரவு நேரங்களில் வீடு வசதியற்றவர்கள் தூங்குதல்) ஒரு இடம் கட்டாயம் தேவைப்பட்டதால்  இதற்காக தெரு நிர்வாகம் ஒரு சிறு மண்டபமாக தோற்றுவித்த தற்போதைய கட்டிடம் தான் இன்றுவரை முளைப்பாரி போடும் புனித இடமாக திகழ்ந்து வருகிறது. இக்கட்டிடத்தில் தான் சற்று முன் காலம் வரை எல்லாத் தெருக்களுக்கும் ேசர்த்தே முளைப்பாரி வளர்த்து இத்தெரு முளைபப்பாரிக்கு பெருமை சேர்த்தது. பின் முளைப்பாரி வளர்க்கு எண்ணிக்கை அதிகமான படியால் ஊரிலிிருந்து அந்தந்த தெரு முளைப்பாரி அந்தந்த தெருக்களிலேயே போட்டு வளர்க்க கூறினார்கள்  வளர்த்த பின் அவர்களே அந்தந்த தெருமுனையில் அம்மன் வரும் போது அம்மனுக்கு பின்னால் சேர்ந்து வர பணிக்கப்பட்டு ஊர் திருவிழாவாகவே மாறி ஒன்றாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எல்லாத்தெரு முளைப்பாரிகளும் அம்மன் முன்னால் கொண்டு வந்து சேர்க்கவும் எல்லா முளைபாரிகளும் அம்மனோடு சேர்ந்து செல்லவும் அனுமதிக்கப் பட்டது. இதன் வளர்ச்சியின் பயனால் நம் குடும்ப உறவுகள் அங்காங்கே பிரிந்து அக்ரகாரம், பள்ளிக்கூடத்தெரு. புதுப்பாளையம் தெரு. மேல மந்தைத்தெரு, என்று பலவாறு பிரிந்து பெருகியபின் அவர்களும் மற்ற தெருக்களைப் போல நாமும் முளைப்ாரி வளர்க்க வேண்டும் என்ற தாகத்தில் புதுப்பாளையம் தெருவிற்கென தனியாக முளைப்பாரி வளர்க்க காேரிக்கையும் வைத்துள்ளதாக அறிந்தேன் இது நம் ஊர் முளைப்ாரியின் வளர்ச்சியை நிலை நாட்டும்.அவர்கள் வேண்டும் கோரிக்கையும் அம்மன் அருளால் கிடைக்க பிராத்தித்திக்கொண்டு அவர்களும் நம்முடன் முளைப்பாரி கொண்டாட அம்மன் அருள் கிடைக்கட்டும் என்று வேண்டுவோம்.

  இவ்வரலாற்று செய்தி என் வயது ஒத்தவர்கள் மூலம் தெரிந்து, கேட்டு அறிந்து செய்தியினை தங்களின் பாதங்களுக்கு என்னால் இயன்றவாறு சமர்பிக்கிறேன். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலும்தவறதலாக தெரிந்தாலும் இச்சிறியோனை மன்னித்து ஏற்று இளம் தளமுறையினர் தெரிந்து கொள்ளட்டும் என்பது எனது சிறிய அவா. நன்றி 

திருச்சிற்றம்பலம்





வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

VID 20250131 122611 திருக்கடையூர் சதாபிசேக நிகழ்ச்சி

VID 20250131 122428 திருக்கடையூர் சதாபிசேக நிகழ்ச்சி

VID 20250131 122054 திருக்கடையூர் சதாபிசேக நிகழ்ச்சி 10

சைவ அனுஷ்டானம்

சனி, 8 பிப்ரவரி, 2025

VID 20250131 065731https://youtu.be/C50VCFE4QiE

VID 20250131 065731

வாழ்வில் ஏற்றத்தாழ்வு வரலாமா?

 


வாழ்வில் ஏற்றத்தாழ்வு வரலாமா? 

 சைவ சித்தாந்தம் கூறும் கருத்து



நாட்டையும் நகரத்தையும் ஆட்சி செய்யும் மன்னன் மக்களுக்கு இடையூறு வாராமல் காக்கும் கடமை உடையவன். அரசாட்சி நெறிமுறைக்கேற்ப வாழ்வோர்க்கு நல்லன செய்வான். நெறியில் இல்லாமல் குற்றம் செய்வோர்க்குத் தண்டனை கொடுப்பான். தண்டனையை மன்னன் நேரே கொடுப்பதில்லை. அங்குள்ள நம்பிக்கைக்குரிய அதிகாரி மூலம் செயல்படுத்துவான். இறைவ உயர்ந்தோர் மூலம் அற நூல்களையும் அருள் நூல்களையும் வழங்கி அறநெறிப்படி வாழ வழிவகுத்துள்ளான். நன்னெறியில் ஒழுகியவர்க்கு அவர் செய்த வினைக்கேற்ப நன்மைகளைத் தருகின்றான். தீய வழியில் நடந்தவர்க்குத் தீமைகளைத் தருகின்றான். தீமை போலத் தோன்றினாலும் உயிர்களைத் திருத்திப் பக்குவப்படுத்தி நன்னிலைப்படுத்துவதற்கே ஆகும்.

‘திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள்கயிலாயா’ என்பது சுந்தரர் வாக்கு. உயிர்களுக்கு நன்மை புரிதலும் தண்டித்தலும் இறைவன் ஆணையாகிய திருவருட்சக்தியின் மூலமே நடைபெறும்.

முற்பிறப்புக்களில் செய்யப்பெற்ற வினைத் தொகுதிக்குப் பழவினை, தொல்வினை, சஞ்சிதம் எனப் பெயர்கள் வழங்கப் பெறும். அத்தொகுயிலிருந்து இப்பிறப்பில் அனுபவிப்பதற்கென்று எடுத்துக் கொண்ட வினை நுகர்வினை, ஊழ்வினை, பிராரத்தம் என்று வழங்கப் பெறும். வினையை நுகரும்போது மனம், மொழி, மெய்களால் செய்யப் பெறும் புது வினை எதிர்வினை, ஆகாமியம் எனப் பெயர் பெறும். வினைக் கோட்பாட்டில் 1) செய்வான், 2) செய்வினை, 3) வினைப்பயன், 4) பயனைக் கொடுப்போன் என்ற நான்கு அடிப்படை சைவ சித்தாந்தத்தில் கூறப் பெறும்.

பழவினையே உயிர் அனுபவிப்பதற்குரிய இன்ப துன்பங்களையும் அவற்றிற்கு இடமான உடம்பையும் தோற்றுவிக்க உயிர் அவ்வுடம்பைப் பொருந்திப் பயன்களை நுகரும். ஊழ்வினையை நுகரும்போது தோன்றும் புதிய வினை அடுத்த பிறவிக்கு வித்தாக அமையும். உழவர் செய்யும் உழவுத் தொழில் நேரே பயன் கொடுப்பதில்லை. விளைநிலம் உழவுத் தொழிலை ஏற்று நின்று அதற்குரிய பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களை இறைவனே ஏற்றுநின்று உயிர்களுக்குப் பயன்களைக் கொடுப்பான். ஒவ்வொரு ஆன்மாவின் வினைப்பயனே அவ்வான்மாவின் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாக அமையும்

திருச்சிற்றம்பலம்

VID 20250130 185330திருகடவூர் திருக்கோயில் சதாபிஷேகம் நிகழ்ச்சி