சனி, 14 டிசம்பர், 2013

திருநீற்றின் மகிமை


திருநீற்றின் மகிமை விபூதி, பசிதம், பஸ்பம், க்ஷாரம், ரக்ஷா என்ற ஐந்து காரணப் பெயர்கள் திருநீற்றுக்கு உண்டு, நிறைந்த செல்வத்தை அளிப்பதால் விபூதி எல்லாப் பாவங்களையும் உண்டுவிடுவதால் பஸ்பம் , ஒளிவீசச் செய்வதால் பஸிதம், வரக்கூடிய ஆபத்துக்களை கழிப்பதால் க்ஷாரம், பூதம் பிசாசு, பிரமராட்சம், பிறவிநோய், ஆகிய அச்சங்களிலிருந்து காப்பதால் ரக்ஷா என்று கூறப்படுகிறது. சங்கு ஒன்றைத்தவிர மற்ற எந்த வெண்மையான பொருளை எரித்தாலும் அவை கருமை நிறமாக மாறும், ஆனால் கருமையான பசுஞ்சானத்தை எரித்தால் வெண்மையான திருநீறு கிடைக்கிறது, மனதில் ஏற்படும் கருமைகளை போக்கி ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வலிமை திருநீற்றுக்கே உண்டு, சிவாய நம என்று கூறி திருநீறு அணிவதால் கீழ்க்கண்ட சுகங்கள் கிடைக்கும் என்று வள்ளலார் பாடியுள்ளார், " பாடற்கினிய வாக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற்கினிய அடியவர் தம் கூட்டமளிக்கும் ஆடற்கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆனை கண்டால் தேடற்கரிய திருவனிக்கும் சிவாய நம என்றிடு நீறே" திருநீறு சிறந்த கிருமி நாசினி உடலிலி பூச துர்நீைரை இழுக்கும், முகத்தில் பூச முகவாதம் வராது தடுக்கும், நெற்றியில் மூன்று கோடுகளாக திருநீறு தரிப்பதால் கீழ்கண்ட ந்ன்மைகள் உண்டாகும், 1) வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் 2) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும் 3) ஆணவம், கர்மம், மாயை நீக்கும் 4) காமம், வெகுளி, மயக்கம் தீரும் 5) பிராரத்தம், சஞ்சிதம், ஆகாம்யம் என்ற தத்துவங்களை உணர்த்தும் 6) ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம், ஆகியவற்றை தெளிவுறச் செய்யும் 7) சந்தேகம், மயக்கம், விபரீதம், ஆகியவற்றை போக்கும் 8) இறப்பு, நிகழ்வு எதிர்வு ஆகியவற்றை தடுக்கும் 9) காலம், பொருள், சேதம், ஆகியவற்றை தடுக்கும் கூன் பாண்டியன் என்ற மதுரை மன்னனின் வெப்பு நோய் நீங்க திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருநீற்றுப் பதிகத்தை திருநீற்றை பூசிக் கொள்ளும் பொழுது உச்சரிக்க வேண்டும், திரு நீற்றுப்பதிகத்தில் சில வரிகள்: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு ெந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றை போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னவன் உடலுற்ற தீப்பணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!

வியாழன், 12 டிசம்பர், 2013


சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன, அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார். இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும். அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே எனும் கொள்கையுடையவர் தாயுமானவர்

செவ்வாய், 10 டிசம்பர், 2013


பெரியோர் சிறியோர்! பாடியவர்: கணியன் பூங்குன்றன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

சொர்ணாகர்ஷண கிரிவலம்: நேரடி அனுபவம்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013


இறைவழிபாட்டில் மலர் தூவியும் மாலை தொடுத்து அணிவித்து வழிபாடு செய்வது என்பதும் மந்திரங்கள் ஒதி, வழிபடுவது போல் முக்கியத்துவம் கொண்டதாகும், " யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்கிறது திருமந்திரம், "சலம்பூவோடு மறந்தறியேன் " என்கிறார் நாவுக்கரசர், எனவே மலர் தூவி வழிபாடும் இறைவழிபாட்டில் முக்கியத்துவம் அடைந்துள்ளது என அறியலாம். அண்ட சராசரத்தையே அடக்கி ஆளும் ஆண்டவனுக்கு படைக்கும் பபடையல் பொருட்களை நாம் பக்தி சிந்தையுடன் பணிந்து ஏந்தி கொண்டு செல்ல வேண்டும். சிலர் வழிபாட்டிற்கு கொண்டு ெசல்லும் படையல் பொருட்கள் மலர் மாலைகளை யாதொரு சிறத்தையின்றி லவகமாக கொண்டு செல்கின்றனர். நம்மிடம் வேலலைபார்க்கும் பணியாளர்களிடம் நாம் எதிர்பார்க்கும் மரியாதையை பணிவை இறைவனுக்கு காட்ட வேண்டாமா? இதனை நாம் பக்தி சிரத்தையுடன் பபார்ப்பதே இல்லை, இந்த பூத்தொடுத்து செய்யும் எளிய வழிபாட்டையே முக்தியடைந்த முருகநாயனாரைப்பற்றி சேக்கிழார் பெருமான் மிகவும் தெளிவாக பெரியபுராணத்தில் விளக்கியுள்ளார். இவர் மலர்கள் பரித்து மாலை தொடுத்து சிவனுக்கு அணிவித்து சிவத்தொண்டு செய்து , தான் செய்த மலர் வழிபாட்டு தொண்டினாலேயே முக்தி பெற்றவர். அன்னாரின் மலர் வழிபாட்டு முறையே சிவ வழிபாட்டிற்கு இலக்கணம் அமைத்தது,இறைவனுக்கு படைக்கவிருக்கும் படையல் பொருட்களை / அரிச்சனை சாமான்களை தொப்பூளுக்கு கீழே தொங்கவிடக்கூடாது, பணிவுடன் தலையில் சுமந்து செல்லாம் அல்லது கைகளில் தாங்கிப்பிடித்துக் கொண்டு ஏந்திச் செல்லலாம், அது இறைவனிடம் நாம் கொண்டுள்ள பணிவைக்காட்டுமம் அதுபோல ஆசாரமில்லாதவன், நோயாளி கொணர்ந்த பூ, பழையது உதிர்ந்தது , பழுக்கடித்தது எச்சம் பட்டது அசுத்த மண்ணில் விழுந்தது கிடந்தது எனும் பூக்கள் இறைவருக்கு உகந்ததன்று் இவற்றை அறிந்து பணிவுடன் செய்யும் இறைத்தொண்டடு ஒன்றே இறைவனுக்கு உகந்தாகும், அதுவே உயர்வைத் தரும்

புதன், 4 டிசம்பர், 2013


காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது. அஷ்ட லிங்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். ராஜகோபுரம் தரிசித்து, வெளியே வந்ததும், முதலாக வருபவர் இந்திர லிங்கம். தேவர்களின் தலைவன் இந்திரனால் நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் உரிய லிங்கம். நீண்ட ஆயுள், கீர்த்தி வழங்குபவர். கிழக்கு திசைக்கு அதிபதி. இரண்டாவதாக வருபவர், அக்னி லிங்கம். அக்னி பகவானால், நிறுவப்பட்ட லிங்கம். பக்தர்களுக்கு, நோய் நொடிகளையும், பயத்தையும் போக்குபவர். சந்திரனுக்குரிய லிங்கம். அக்னிலிங்கத்துக்கு முன் வரும் அக்னி குளத்தில் நீரில் கால்கள் நனைய, எதிரில் இருக்கும் மலையை ஒரு பௌர்ணமி இரவில் பாருங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு still ஆக இருக்கும். அனுபவித்து பாருங்கள். தென்கிழக்கு திசைக்கு அதிபதி. மூன்றாவதாக எம லிங்கம். எமதர்மரால், நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், செவ்வாய்க்குரிய லிங்கம். தேடி வரும் பக்தர்களுக்கு, நீண்ட ஆயுள் வழங்குபவர். தெற்கு திசைக்கு அதிபதி. அடுத்து வருபவர் நிருதி லிங்கம். தென்மேற்கு திசைக்கு அதிபதி. கருவறை அருகில், நல்லதொரு ஆன்மிக அதிர்வை உணர முடியும். மற்ற தேவர்களை எல்லாம் நாம் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாலும், நிருதி இதற்கு முன் நான் கேள்விப்படாதவர். சீரிய தவத்தினாலே, அவருக்கு இந்த பதவி. உலகில் உள்ள, அத்தனை பூதங்களுக்கும், தலைவர் நிருதி. நவ கிரகங்களில், ராகுவுக்கு உரிய லிங்கம். அண்டி வரும் பக்தர்களுக்கு, ஆரோக்கியம், புகழ், சொத்துக்களை அள்ளி வழங்குபவர். குழந்தை பேறு வேண்டுபவர்கள், இங்கே மனமுருகி வேண்ட, அவர்கள் பலன் அடைவது திண்ணம். அடுத்து வருபவர், வருண லிங்கம். வருண பகவானால், நிறுவப்பட்டு வழிபடும் லிங்கம். நீதிதேவனான சனி பகவானுக்கு உரிய லிங்கம்.இந்த உண்மை தெரிய வந்தால், பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அலைமோதும். . ஆனால், நடந்து செல்லும் பக்தர்களின் ஒரு அவசர கதி 'சல்யூட்' ஐ ஏற்றுக்கொண்டு அமைதியாக அருள் பாலிக்கிறார். வேண்டி வரும் பக்தர்களை நோய் களிலிருந்து விடுவிக்கிறார். குறிப்பாக நீரினால் ஏற்படும், அனைத்து வியாதிகளும் சொஸ்தமாகிவிடும். மேற்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். ஆறாவதாக , வடமேற்கு திசைக்கு அதிபதியாக அருள்பாலிப்பவர் வாயு பகவானால் நிறுவப்பட்ட வாயு லிங்கம். நவ கிரகங்களில் 'கேது' வுக்குரிய லிங்கம். ஆத்மார்த்தமான வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இதயம், நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை நீக்குகிறார். அடுத்து வருபவர், வடக்கு திசைக்கு அதிபதியாக வரும் குபேரனால், நிறுவப்பட்டு வழிபட்டு வரும் குபேர லிங்கம். நவக் கிரகங்களில் 'குரு' பகவானுக்குரிய லிங்கம். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு , வாழ்வில் முன்னேற்றங்களைத் தந்து , பொருளாதார நிறைவை ஏற்படுத்தித் தருபவர். கிரி வலப் பாதையில், கடைசியாக வருபவர் ஈசான்ய லிங்கம். வட கிழக்கு திசைக்கு அதிபதியான ஈசன்யானால் நிறுவப்பட்ட லிங்கம். நவக் கிரகங்களில் புதனுக்குரிய லிங்கம். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குபவர். மேற்கூறிய அஷ்ட லிங்கங்கள் தவிர மலை சுற்றும் பாதையில் ஏராளமான இறை சந்நிதிகள் உள்ளன. வலம் வரும்போது அடி அண்ணாமலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்மனின் அழகு முகத்தை அருகில் இருந்து தரிசித்துப் பாருங்கள். ஆதி அண்ணாமலை கோவிலுள் சென்று தரிசித்து வர நீங்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். உள்ளே இருக்கும்போது நீங்கள் நிச்சயமாக ஒரு அதிர்வை உணர முடியும். அஷ்ட லிங்கங்களை நிறுவிய தேவர்கள் பலமுறை நேரில் வந்து சூட்சமமாக வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள். கலி முற்றி வரும் இந்த காலத்தில், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது எதோ ஒரு தேவை இல்லாத செயல் போல தோன்றுகிறது நிறைய மக்களுக்கு. ஆனால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளேயே உழன்று கொண்டு , எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடும் அன்பர்களுக்கு , அண்ணாமலை ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு முறை கார்த்திகை தீப தரிசனம், உங்கள் தலை முறைக்கே வழி காட்டும். சென்ற கார்த்திகை தீபத்திற்கு, கிட்டத் தட்ட 45 லட்சம் பக்தர்கள் கூடினர். தமிழ் நாட்டில் இது ஒரு அபூர்வ நிகழ்வு. வாஸ்து சாஸ்திரப்படி , அற்புதமாக அமைந்த இரண்டு ஸ்தலங்கள் : திருவண்ணாமலையும் , திருப்பதியும் ஆகும். உங்கள் வாழ்வில் நீங்கள் மென்மேலும் உயர , உங்களால் முடிந்தவரை இந்த ஸ்தலங்களுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். பரம்பொருளின் துணை உங்களுக்கு தேவையான நேரத்தில் கச்சிதமாக கிடைப்பது உறுதி.அருணகிரி நாதர் முதல் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி வரை பலப்பல மகான்கள் வாழ்ந்த ஸ்தலம்.

திருவண்ணாமலையின் அர்ப்புதங்கள்! திருவண்ணாமலை என்று சொன்னாலும் முத்தி, தீப ஜோதியை பார்த்தாலும் முக்தி. கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகள் சித்தர்கள், பார்வையில் மரகத மைலையாகவும், பாமர மக்களுக்கு கல் மலையாகவும், காட்சி தருகிறது, இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன, இம்மலை சித்தர்கள் வாழும் சதுரகிரி மற்றும் அகத்தியர் வாழும் பொதிகை மலை, சேர்வராயன் மலைகளை விட மிகவும் சிறப்பு பெற்றது, இம்மலை பல்லாயிரக்கணக்காணவர்களை கவரும் மகத்துவம் பெற்றது, இங்கு ஆயிரக்கணக்கான சித்தர்கள் அருளாளர்கள், மகான்கள் ஞானிகள் ரிசிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதிகள் உள்ளதால் அவர்களின் ஆத்மாக்கள் இம்மலையிலேயே உலவிவருவதால் அவர்களின் வைப்பிரேசன் என்ற ஈர்ப்புத்தன்மை மக்களை ஆன்மீக வாதிகளை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்குள்ள அண்ணாமலையாகிய இறைவன் முதன்மையான மூலாதரமாக விளங்கினாலும், அவனையே வேண்டி முத்தி பெற்ற அருளாளர்கள் , சித்தர்கள் இறைவனின் - அண்ணாமலையானின் - செயல்திறனை ஊக்குவித்து மக்களுக்கு நேரிடையாக அருளாசி வழங்குகிறார்கள். எனவே தான் மற்ற சிவதளங்களை விட திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிவனின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகும், மற்றவை சிதம்பரம் ஆகாயம், காளகஸ்தி வாயு, திருவானைக்கால் நீர் தலம், காஞ்சி நிலம் இவற்றில் இறைவன் அக்னியாக காட்சி தருகிறார் இங்கு, இம் மலை இமயமலையை விட மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இம் மலை ஈசானம் தத்புருஸம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின்ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக காட்சி ( பஞ்சலிங்கம்) தருகிறது, இக்காட்சியை கிரிவலம் வரும்போது குபேரலிங்கம் தாண்டியவுடன் காணலாம். கிரிவலம் வரும் போது கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஓன்றாக தெரியும் மலையாகவும், சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும் மலையின் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் - கெளதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தால் மூன்று பிரிவாகத் தெரியும், இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள். இந்த திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் சேசத்திரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக் கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண் கறுப்பு சிவப்பு நிறத்தில் காணப்படும், இஙகிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலைகள் போல் காட்சி தரும் வலம் வந்து முடிக்கும் தருவாயில் அதாவது குபேரலிங்கம் தாண்டியவுடன் ஐந்து மலையாக அதாவது பஞ்சலிங்கமாக காணப்படும். திருமால் பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்க சிவபெருமான் லிங்கோத்பவராக ஜோதிப் பழம்பாக காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தி துன்பப்படவே சிவபெருமான் மலையாகி நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. இம்மலையில் தவமிருந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து அர்த்தநாரீஸ்வராக காட்சி கொடுத்த தலமும் இங்கேதான்.இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்கிறது புராணம், திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம், ஒருமுறை வலம் வரவேண்டுமென்று எண்ணி ஒரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனும், இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயேக பலனும், புண்ணிய தீர்ததங்களில் நீராடிய பலனும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேக யாகப் பலனுடன் தான தர்மங்கள் பல செய்த பலன்களும் நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகப்பலன்களும் கிட்டும் என்று அருணாசலபுராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களையும், லிங்கங்களையும் தரிசித்தால் பேறுக்ள பல பெறலாம் என புராணம் கூறுகிறது. கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது இந்திர லிங்கமாகும், கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கமாகும் இது தாமரைக்குளம் அருகே அமைந்துள்ளது, இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம் நீங்கும், மூன்றாம் லிங்கமாக தெற்கு திசையில் இருப்பது எம லிங்கம். இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும். தென்மேற்கு திசையில் நான்காம் லிங்கமாக உள்ளது நிருதி லிங்கம், இங்கிருந்து மலையை பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம் போல் ஒர் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்ததம் எனப்படுகிறது இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும். ஐந்தாவது வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும் நீரிழிவு தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும். ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசித்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் மூட்டுவலி முழங்கால் வலி நாளடைவில் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம் , இந்த லிங்கம் காசுக்களை அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ செழிப்பு வளரும், எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் விலகும். இந்த அஸ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலையோ சிவபெருமானாக உள்ளதால் நந்திகளும் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. மேலும் கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்களும் உள்ளன, விநாயகர் துர்க்கை முதலான ஆலங்களும் உள்ளன வணங்கி பேறு பெற்றுய்யலாம். கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல் அடி அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வரம் வேண்டும் இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாரரத நல்ல பலன்கள் கிட்டும் என்பதில் யாதொரு ஐயமில்லை, ஓம அருணாசல ஈஸ்வராய நம!