சனி, 2 மார்ச், 2019

மகா சிவராத்தி மகத்துவம் விளக்கம்

மகா சிவராத்தி மகத்துவம் விளக்கம்

சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.
சிவ தீக்கை
நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

-சிவவாக்கியர்

ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

அறிவு நிலை

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

-சிவவாக்கியர்
விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும்.

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

-சிவவாக்கியர்

சிவராத்திரி

சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.

நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

-சிவவாக்கியர்

ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

அறிவு நிலை

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

-சிவவாக்கியர்
விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும்.

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

-சிவவாக்கியர்

மகா சிவராத்தி மகத்துவம் விளக்கம்

மகா சிவராத்தி மகத்துவம் விளக்கம்

சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.
சிவ தீக்கை
நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

-சிவவாக்கியர்

ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

அறிவு நிலை

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

-சிவவாக்கியர்
விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும்.

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

-சிவவாக்கியர்

வெள்ளி, 1 மார்ச், 2019

உருவமற்ற ஈசன் உருவம் காெண்ட நமக்கு காட்டும் உருவதிருமேனிகள்

உருவமற்ற ஈசன் உருவம் காெண்ட நமக்கு காட்டும் உருவதிருமேனிகள்



சிவபெருமான் பக்தர்களுக்காக பற்பல திருமேனி தாங்கிய மூர்த்திகளாக விளங்குகிறார்.
உருவமற்ற ஈசன் உருவம் கொண்ட நமக்கு நம் வினைபயனை நீக்க நம்மீது அருள் கொண்டு தானே நாம் விரும்பும் அருஉருவ மற்றும் உருவத்திருமேனிகள் கொண்டு அருள்பாவிப்பதை அவன் கருணையை அளவிடற்கரியது.
 தம்மை வழிபடுமு் அன்பு அடியார்களை ஆட்கொண்டு அருளுவதற்கு அவன் தாங்கிய திருக்கோல மகாத்மியத்தை அளவிடுவதுதான் எங்ஙனம்?

 பரமேசுவரன் தட்சணாமூர்த்தியாக எழுந்தருளி யோகத்திற்கும் ஞானத்திற்கும் பொருளாகவிளங்குகிறார். 
 தில்லையில் உருவமற்ற ஆகாயமாக காட்சியளிக்கும் ஈசன் நம் பொருட்டு இறங்கி நடராஜப்பெருமானாக எழுந்தருளி களி நடனம் புரிந்து கலை நலம் சிறந்தது என்பதனை போதிக்கிறார்.
  நம்பினவருக்கு நடராஜன் நம்பாதவருக்கு எமராஜன் என்பது பழமொழி அவனை நம்புவோர்க்கு எம பயம் ஏது?
 எம்பெருமான் நமது குற்றங்களை எல்லாம் தாம் ஏற்றுக் கொண்டு தம்முடைய சத்குணங்களையெல்லாம் நமக்கு தந்தருளும் திிவ்ய திருக்கோலமே பிச்சானர் திருத்தவக்கோலம்
 பிச்சாடனர், கங்காளர், பைரவர் ஆகிய ஐயனின் மூன்று திருக்கோலங்கள் ஒரே தத்துவ வடிவமாக கொண்ட அருள் கோலங்களாகும்
சிவபெருமான் கொண்ட அழகு திருக்கோலங்களுள் சாேமாஸ்கந்தர் திருமேனி மிகவும் மேன்மையாக கூறப்படுகிறது.
 சிவபெருமான் பக்கத்திலே உமை அம்மை நடுவில் கந்தன், அருமைக்கு சிவன், எளிமைக்கு சக்தி, அழகிற்கு முருகன், ஓம் என்ற ஓங்கார தத்துவத்ததிற்கு விநாயகன், என்ற தத்துவத்தை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற கோலமாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்திரு உருவ மூர்த்தி
  துன்பம் நிறைந்த மரணத்திற்கு அஞ்சாத நிலையை பக்தர்கள் பெறுவதற்கு காலச்சங்காரத்திருமேனி கொண்டு வளங்குகிறார் ஈசன்.
  இறைவனும் இறைவியும் பிரிந்த நிலையில் சகல லாேகங்களும் ஸ்தம்பித்து போகும் என்ற பெருநிலையை உணர்த்துவதற்கு ஐயன் கொண்ட கோலம் காமதகனர்
 சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவமில்லை என்ற தத்துவத்திற்கு சிவனும் சக்தியும் ஒன்றே என்று விளக்குவதற்கு எடுத்த கோலம் சிவசக்தி கோலம்
 மதுரையம்பதியிலே பாண்டியகுமாரியை மணம் புரிவதற்கு அவன் எடுத்த கோலங்களும் அவன் திருவிளையாடல்களும் எத்தனை எத்தனை? 
  தன் அடியார்களுக்கு எடுத்த கோலங்களுள் மாணிக்கவாசகருக்கு குருவாகி அவரை ஆட்கொள்ள பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்டும் பாணபத்திரருக்காக விறகு விற்று ஆடாத ஆட்டம் ஆடி பாண்டிய மன்னனுக்காக கால்மாறி ஆடி காட்டிய திருக்கோலம் கொண்ட மூர்த்தியின் பெருமையை என்னவென்பது.
  இப்படியாக அவன் பூண்ட திருக்கோலங்களுக்கு தத்துவங்கள் பல  உண்டு ஞானங்கள் உண்டு.
 சிவனை முப்போதும்நினைப்பவர்களின் பாவ கருமங்களை நீங்கச் செய்து அரிய பல யாகம் செய்தபேறு கிடைக்கிறது. முப்போதுமின்றி சிவபூசை செய்து வந்தால், முற்பிறப்பு பாவ வினைகள் அற்றுப்போகும். இம்மையிலும் நல்ல மார்க்கம் கிட்டும்
  சஞ்சலமும்இல்லாதவன், உருவங்களில் கட்டுப்படாதவன், இந்திரயங்கள் அனைத்தையும் வென்றாவன், பற்றை அறவே துறந்து அவன் பால் பற்றுடையவன் பால் பற்றுடையவன், ஆனந்தமாயமான சிவனே நம் பெருமான்.
 சிவனை நிந்திப்போர்க்கு சர்வநாசம் தான். அவர்கள் மங்களத்தை எதிர் பார்க்க முடியாது. என்ற ஒப்பற்ற உண்மையை உணர்த்துபவன்
எந்நாட்டவருக்கும் ஈசன் ஆனாலும் தென்னாடு உடைய சிவன்
அவன் அடிபணிந்து அவன் தாள் வழங்குவோம்
திருச்சிற்றம்பலம்

ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல் - விளக்கமும் பயன்களும்

ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல் - விளக்கமும் பயன்களும்

ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுவதால் விளையும் நற்பயன்களை புராணங்கள் வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றன. விளக்கின் ஒளி புற இருளைப் போக்க வல்லது. திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றுதல் அக இருளாகிய அறியாமையைப் போக்கி, ஞானத்தையும் வழங்க வல்லது.

'விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்று தன் தெய்வ வாக்கால் (தேவாரத்தில்) குறிக்கிறார் திருநாவுக்கரசர்.
சோழ நாட்டில் அமைந்துள்ள தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்). தேவாரப் பாடல் பெற்ற இத்தல ஆலயத்தில் திருவிளக்கு ஒன்று அணையும் தருவாயில் இருக்க, அவ்விளக்கில் உள்ள நெய்யை உண்ணும் பொருட்டு வந்த எலி ஒன்றினால் திரியானது நன்கு தூண்டப் பெற்று, பிரகாசித்து ஒளிவிடத் தொடங்கியது.
அப்புண்ணியத்தால் அந்த எலியானது அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறப்பெடுத்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அபுத்தி பூர்வமாய் ஏற்றிய விளக்கிற்கே இத்தகு சிறப்பு எனில், அதன் ஏற்றம் அறிந்து திருவிளக்கு ஏற்றுவோர் பெறும் பலனை சொல்லவும் வேண்டுமோ!

திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம்:-
திருமறைக் காடு தன்னில் நீண்டெறி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிட கணன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் -உலகமெல்லாம்
குறைவரக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

இனி ஒவ்வொரு முறை திருக்கோயிலுக்கு செல்லும் பொழுதும் (எவ்வேளை ஆயினும்), மறவாது திருவிளக்கில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம். அறியாமை இருள் நீங்கப் பெற்று, உள்ளொளியாகிய ஞானம் பிரகாசிக்கப் பெறுவோம்
திருச்சிற்றம்பலம்

பட்டினத்தாரின் ஞானப் பாடல்கள் (பிறவியின் நோக்கம்):

பட்டினத்தாரின் ஞானப் பாடல்கள் (பிறவியின் நோக்கம்):

'பிறவியின் நோக்கம் பிறவாமையை எய்துவது ஒன்றே' என்பது இந்து தர்மத்தின் சாரம். உலகியல் சார்ந்த நோக்கங்கள் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெவ்வேறாக இருப்பினும், முக்தி நிலையை அடை...யும் ஆன்மீக நோக்கமானது அனைவருக்கும் பொதுவான ஒன்று.

'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று பாடுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். ஆன்மீக நோக்கத்தை முற்றிலும் விடுத்து, உலகியல் நோக்கத்தில் மட்டுமே நாட்டம் கொண்டு உழலும் ஆன்மாக்களுக்காக பாடி வைத்த வரிகள் அவை.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, நிற்கிறார்
இனி பட்டினத்தாரின் சில முக்கியப் பாடல்களைக் காண்போம்.

1. உண்டதே உண்டு, உடுத்ததே உடுத்து, அடுத்தடுத்து உரைத்ததே உரைத்து, கண்டதே கண்டு, கேட்டதே கேட்டுக் கழிந்தன கடவுள் நாள் எல்லாம்!!!

ஒரே மாதிரியான செய்கைகளைப் புரிந்தும், ஒரே வகையான அனுபவங்களை திரும்பத் திரும்பப் பெற்றும், மனமானது மீண்டும் அவற்றிலேயே நாட்டம் கொண்டு உழலும் தன்மையை இப்பாடலில் சாடுகிறார் பட்டினத்தார்.

2. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே - வித்தகமாய்க்
காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!!!
பேசிச் சிரித்து கை வீசி நடந்து செல்லும் நிலையிலும், ஒரு பணிப்பெண்ணின் மனம், அவள் சுமந்து வரும் நீர் குடத்திலேயே நிலைத்து நிற்கும் (நீர் தளும்பாது இருக்கும் பொருட்டு). அது போன்று, உலகியலில் எச்செயலைப் புரியும் நிலையிலும் மனம் 'ஆன்ம குறிக்கோளான முக்தி நிலையிலேயே நிலைத்து நிற்றல் வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார் பட்டினத்தார்.

3. மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!!!

இது வரையில் எண்ணற்ற பிறவிகளில், அடியேனை ஈன்ற அன்னையரும் உடலால் வருத்தமுற்று சோர்ந்தனர்; கர்ம வினையில் உழன்று அடியேனின் கால்களும் சலிப்புற்றன; மேலும் அடியேனின் தலையில் விதியை மீண்டும் மீண்டும் எழுதிய தன்மையால் பிரமனின் கைகளும் சலிப்புற்றுத் தளர்ந்து விட்டன.

'இருப்பையூர்' தலத்தில் கோயில் கொண்டருளும் சிவபெருமானே 'இனியும் ஒரு அன்னையின் கருப்பை வாசம் வாராது காத்தருள்வாய்' என்று பிறவிப் பிணிக்கு பெரிதும் அஞ்சிப் பாடுகிறார் பட்டினத்தார்.
திருச்சிற்றமபலம்

'ஏக தெய்வ' வழிபாடு - சில முக்கிய விளக்கங்கள்

இந்து தர்மத்தின் தெய்வங்கள் பரம்பொருளின் பல்வேறு வடிவங்களே என்ற படிநிலை ஞானத்துடன் நின்று விடாமல், மனமும் ஆன்மாவும் எந்த இறை வடிவத்தில் லயம் பெறுகிறதோ, அந்த வடிவத்தை உபாசனை மூர்த்தியாகவும், பிரதான தெய்வமாகவும் கொண்டு வழிபடுதல் வேண்டும்.
இந்து தர்மத்தின் அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம், ஆனால் முக்தி நிலையைப் பெற, நாம் தேர்ந்தெடுக்கும் பிரதான தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டி வழிபடுவது அவசியம். 'அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்' என்ற பழமொழியும் இதற்குச் சான்று கூறும்.

சைவம்; வைணவம்; சாக்தம்; காணாபத்தியம்; கௌமாரம் என்று ஐந்து படகுகள் உண்டு. பிறவிப் பெருங்கடலைக் கடக்க வைத்து, முக்தி நிலையை அடைவிக்க வல்ல இப்படகுகளுள் எவ்வித வேறுபாடும் கிடையாது. எனினும் ஆன்ம பயணம் மேற்கொள்ளும் ஒரு சாதகன், ஐந்து படகுகளிலும் ஒரே சமயத்தில் பாதம் பதித்துப் பயணிப்பது என்பது இயலாது.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு உதாரணம் கூறுகிறார். ஒருவன் நீர் வேண்டி ஒரு இடத்தில் பத்தடி மண்ணைத் தோண்டினான். நீர் கண்ணில் படாத காரணத்தால் பொறுமை இழந்து, வேறொரு இடத்தில் அதே ஆழத்துக்கு மண்ணை அகழ்ந்தான். இவ்வாறு ஐந்து இடங்களில் அகழ்ந்தும் நீர் கிடைக்கப் பெறாது முயற்சி வியர்த்தமானது.

ஒரே இடத்தில் ஐம்பது அடி மண்ணை அகழ்ந்து இருந்தால், நீரைப் பெற்று இன்புற்று இருப்பான் என்று தன் உதாரணத்தை முடிக்கிறார் பரம ஞானியான ஸ்ரீராமகிருஷ்ணர். எத்துனை எளிய உதாரணம் - எத்தகு நுட்பமான கருத்து! பிரதான தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் உபாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியக் கருத்துகளும் உண்டு.

ஒரு உபாசகன், தான் உபாசிக்கும் மார்கம் 'சர்வ நிச்சயமாய் முக்தியைப் பெற்றுத் தரும்' என்ற உறுதி மாறாத நம்பிக்கையை முதலில் கொள்ள வேண்டும். அத்துடன், மற்ற நான்கு மார்கங்களில் உபாசனை செய்வோரும், அம்முக்தி நிலையைப் பெறுவர் என்ற சமயம் சார்ந்த புரிதலும் மிகமிக அவசியமான ஒன்று.
'ஏக தெய்வ வழிபாடு' சிறப்புப் பொருந்தியது. நலம் பயக்கக் கூடியது. வழிபாட்டில் ஒருமுகச் சிந்தனையை ஏற்படுத்த வல்லது. சீர்மிகு ஐந்து மார்கங்களுள் நமது மனம் லயம் பெற்று, எளிதில் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு மார்கத்தை தேர்ந்தெடுத்து உபாசிப்போம். உய்வு பெறுவோம்!!!

திருச்சிற்றம்பலம்Vivekananda

புண்ணியம், பாவம், பிறவிச் சுழல், கர்ம யோகம்:
1. வேதங்கள் - உபநிடதங்கள் - புராணங்கள் - இதிகாசங்கள் - சாத்திரங்கள் - ஞானிகள் மற்றும் அருளாளர்களின் பாடல்கள் போன்றவை 'எவை பாவச் செயல்கள் - எவை புண்ணியச் செயல்கள்' என்று தெளிவாக எடுத்துரைக்கின்றன.

2. புண்ணிய செயல்கள் புரிந்த நிலையிலும், அச்செயல்களின் நற்பலனை அனுபவிக்க ஒரு ஆன்மா மீண்டும் இப்புவியில் பிறப்பு எடுக்க நேரிடுகிறது.

3. பாவச் செயல்கள் புரிந்த ஆன்மாக்கள், அச்செயல்களின் தீய பலன்களை அனுபவிக்க மீண்டும் இப்புவியில் ஜனிக்கும்.

4. புண்ணியம் - பாவம் இவைகளை முழுவதுமாய் இழந்த பின்பே ஒரு ஆன்மா முக்தி நிலையைப் பெறுகிறது.

5. புண்ணியச் செயல்கள் மீண்டும் மீண்டும் பிறவியிலேயே ஆட்படுத்தும். பிறவாமையாகிய முக்தியை நல்காது. எனில் புண்ணியச் செயல்கள் புரிவதை துறந்து விடலாமா?

6. அதுவும் இயலாது. புண்ணியச் செயல்கள் புரிவதற்கு சக்தி இருந்தும் அவைகளை புரியாமல் விடுப்பது பாவச் செயலாக மாறி மீண்டும் பிறவியில் ஆட்படுத்தும்.

7. எனில் இக்கொடிய பிறவிச்சுழலில் இருந்து மீள என்ன தான் வழி? புண்ணியச் செயல்கள் செய்தாக வேண்டும். ஆனால் 'நான் செய்கிறேன்' என்ற தன்முனைப்பு இல்லாது செயல் புரிதல் வேண்டும்.

8.'இறைவனே செய்விப்பவன் - தான் வெறும் கருவியே' என்று கருதி, பலனில் பற்று வைக்காது புரியப்படும் நற்செயல்களின் விளைவுகளுக்கு இறைவன் தானே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆதலால் அவை புண்ணியப் பலன்களாக மாறி ஆன்மாக்களை பந்தப் படுத்தாமல், முக்தி நிலைக்கு படிகளாக மாறுகிறது.

9. இந்து தர்மம் பலனை துறக்கச் சொல்லவில்லை. பலனில் உள்ள பற்றையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே துறக்குமாறு வலியுறுத்துகிறது.

ஆன்மாக்கள் முக்தி நிலைக்கு செல்வதற்கு தடையாக விளங்கும் இரு சங்கிலிகளால் பிணைக்கப் பட்டுள்ளனர். 'புண்ணியம்' என்பது பொன் விலங்கு. பாவம் என்பது 'இரும்பு விலங்கு'. இரண்டுமே பிறவியில் ஆழ்த்தக் கூடியது!!!

திருவாசகத்தில் கர்ம யோகம்:-
'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே'!!!!

சிவபெருமான் உள்ளிருந்து தன்னை முழுவதுமாய் இயக்குவதால், அனைத்தும் அப்பெருமானின் செயலே அன்றி தன் செயல் எதுவும் இல்லை என்று திருவாசகத்தில் குறிக்கிறார் மாணிக்கவாசகர்!!!!

அபிராமி அந்தாதியில் கர்ம யோகம் (அபிராமி பட்டர் அருளியது):
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!!!!

திருச்சிற்றம்பலம்

புதன், 27 பிப்ரவரி, 2019

முக்தி நெறி பயக்கும் சாதனைகள்

முக்தி நெறி பயக்கும் சாதனைகள்

இறைவனுடைய திருவருளை அடைவதற்கு வழிகள் பற்பல. அவற்றுள் , தாசமார்க்கம், சத்புத்திரமார்க்கம் சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கும் தமிழ் திருமுறை வழியாகும் இதுவே திருநெறி வழியான சாஸ்திர வழியில் வழங்குவது, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன என்று சைவ சித்தாந்தம் கூறும் நெறிகளாகும்.
 இதில் நமக்கு வழிகாட்டிய உள்ள நால்வர் பெருமக்கள் கையாண்ட வழியில் சங்கரனை அடைந்து நன் மார்க்கம் பெற்று முத்திய அடைந்தவர்கள் கண்ட நெறியே மேற்கண்ட நெறியாகும்.
திருமுறை காட்டும் வழி 

இதில் தாசமார்க்கம் ஆவாது இறைவனை எசமானனாகவும், தன்னை ( உயிர்கள் ) பணியாளனாகவும் இருந்து வழிபடும் நெறியாகும் இது திருநாவுக்கரசர் காட்டிய நெறி. 
 சத்புத்திரமார்ககம் என்பது, இறைவனை தந்தையாக எண்ணி, வழிபடும் ஆன்மா புத்திரனாகவும் அமைந்து வழிபடும் நெறியாகும்.
  சகமார்க்கம் என்பது, இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும். இது சுந்தரர் காட்டிய வழி.
 சன்மார்ககம் என்பது இறைவனை ஞானாசாரியராக(குருவாக ) கொண்டு வழிபடும் ஆனமா, சீடனாக இருந்து வழிபடும் வழியாகும்
இது மாணிக்கவாசகர் வாழ்ந்து காட்டிய நெறி.

சைவ சித்தாந்தம் காட்டும் திருநெறிகள்
சரியை 
இது புறவவழிபாடு எனப்படும். உருவம் கொண்ட உயிர்கள்  உருவம் கொண்ட இறைவனை புறத்தொழில்களால் இயற்றப்படும் வழிபாடு   சரியையாவது திருக்கோயில் சென்று அலகிடல், மெழுகுதல், பூமாலை தொடுத்தல், அருட்பாக்களால் பாடுதல், தீபமீடுதல், நந்தவனம் அமைத்தல், (உழவாரப்பணிகளால் கோயில்கள் சுத்தம் செய்தல்) சிவனடியார் சேவை, என்பன போன்று இது புறவழிபாடு எனப்படும். இது வே திருமுறைகாட்டிய தாச மார்க்கம் ஆகும். இது நாவுக்கரசர் கையாண்ட வழி இவ்வழியில் செல்வோர் அடையும் பயன் சாலோகம் அதாவது இவரகள் சிவலோகம் கெல்வர் என்கிது சிவஞான சித்தியார்

இதனை அப்பர் பெருமான் தன் பாடலில்

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு
பூமாலை புனைந்தேற்றி புகழ்ந்து பாடி
தலையார கும்பிட்டு கூத்தும் ஆடி
சங்கார சய போற்றி போற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே என்கிறார்

திருமந்திரப்பாடல்

எளிஅனல் தீபம் இடல்மலர் கொயதல்
அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றம் பல்மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான் தாசமார்க்கம்   திருமந்திரம்

திருவிளக்கு ஏற்றுதல், பூகொய்தல், மெழுகுதல், சுத்தம் செய்தல், இறைவனை வாழ்த்தி பாடல், கோயில் மணிகளை ஒலிக்க செய்தல், இறைவனுக்கு திருமுழுக்கு செய்யும் போது அபிசேகப் பொருட்களை அளித்தல் என்ற செயல்கள் சரியை அதாவது தாசமார்க்கம் எனப்படும்

கிரியை பயன்
கிரியை யாவது சரியை நெறியான வழிபாட்டுடன் சிவபூசை செய்தல், அக, புற வழிபாடு செய்தல், வாசனையுடைய மலர் திரவியங்களுடன் அபிசேக ஆராதனை செய்தல், தூப தீபம் காட்டுதல், திருமஞ்சனம் திருவமுது முதலியவற்றை அமைத்துக் கொண்டு பூத சுத்தி, ( உடல் சுத்தி) தான சுத்தி ( இட சுத்தம்), திரவிய சுத்தி ( திரவியங்கள் சுத்தம்) மந்திர சுத்தி , இலிங்க சுத்தி என்ற ஐந்து வகை சுத்திகள் செய்து ஆசனமிட்டு ஆகாவனம் செய்து மூர்த்தியை எழுந்தருளச் செய்து அம் மூர்த்தி எழுந்தருளிய மூர்த்தி மானாகி இறைவனை (முத்திரை , பாவனை ) பாவனை செய்து ஆவாகித்து மெய் அன்போடு அருச்சித்து வழிபட்டு போற்றி விருப்பத்தோடு அக்கினி காரியமும் (வேள்வி யாகம்) செய்து அக புற வழிபடு செய்தல் கிரியைநெறியாகும். இதுவோ திருமுறை வழியான சத்புத்திர மார்க்கம் ( ஞானசம்பந்தர் காட்டிய வழி) இக் கிரயையால் சாதனை செய்வோர் ஈட்டும் பயன் சாமீபமுக்தி அதாவது இறைவன் அருகில் இவர்கள் செல்லத்தக்கவராவர்

திருமுறை காட்டும் பாடல் அப்பர் பாடிய பாடல்
 " சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் 
 தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உ்ன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்ததறியேன் ......

திருமந்திரப்பாடல்
பூசித்தல் வாசித்தல் போற்ற் செபித்திடல்
ஆசற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட ன்னமும் நீசுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத்ததிரமார்க்கம் ஆகும்.......  திருமந்திரப்பாடல்

யோக நெறி பயன்
யோக நெறியாவது சுந்தரர் காட்டிய தோழ மார்க்கமான சகமார்க்க நெறியாகும். இந்நெறியல் சரியை, கிரியை நெெறியுடன் அக புற வழிபட்டுடன் சேர்தது யோக சாதனை யாவது புலன்களை ஒடுக்கி சுவாசத்தை தடுத்து கும்பித்து மூன்று கோண வடிவுடைய மூலாதாரம் , நாலுகோண வடிவுடைய சுவாதிட்டானம் முதலிய ஆறு ஆதார வழியைஅறிந்து மூலாதாரம் தொடக்கம் அந்தந்த ஆதாரத்திலுள்ள மூர்த்தியை வழிபட்டு மேலே சுழுமுனை வழியாக சென்று கண்டத்தானத்திற்கு மேலே உள்ள சந்திர மண்டலத்திலுள்ள பிரமந்திர தாமரை மலரின் முகமாகிய பூரண சோதி வடிவமாகிய பரம் பொருளை தியானித்து சமாதி கூடியிருப்பதாகும் யோக நிலை.
இதன் மூலம் சாதனையாளர் அடையும்பயன் சாரூப முக்தி அதாவது ஈஸ்வர ரூபம் பெறுவர் ( ஆருரார் இதன் வழியில் தான் ஈஸ்வரர் ரூபம் பெற்று முத்தி பெற்றவர்)

திருமுறை பாடல்

காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லங்கமாக
நேசமே நெய்யும் பாலா நிறைய நீர் அமையஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்றி அவிகாட்டரின்மே  .... அப்பர் அடிகள்

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே    ..... சமபந்தர்

ஞானம் 
ஞான சாதனை பயன்
இது திருமுறை கூறும்  மாணிகக வாசகர் கையாண்ட சன்மார்க்க நெறியாகும்

ஞான சாதனையாகிய சன்மார்க்கமாவது கலை ஞானங்கள் எல்லாம் புராணங்கள் தேவதங்கள் சாஸ்திரங்கள் பிற சமய நூல்கள் ஆகிய எல்லாம் கற்றுணர்ந்து பல சமய நூல்கள் சொல்லும் பொருட்கள் உணர்ந்து பதி,பசு, பாசம் எனும் முப்பொருட்கள் உண்மை தெளிந்து அவற்றுள் பசு எனப்படும் ஆன்மாவானது பாசம் என்னும் பந்தத்தை அறுத்து பதி எனும் சிவபரம் பொருளை அடையச் செய்யும் மார்க்கமாகும்.
 சிவஞானத்தின் இயல்பை அறிந்து சிவனோடு கலந்து நிற்கும் நிலையை தருவதாகிய சிவஞானத்தை பெற்ற பெருமையுடையோர் அடையும்பலன் சிவசாயுச்சிய முத்தி ( சிவத்தோடு / உருவமற்ற பேறு பிறப்பற்ற பேறு பெறுவர் 

திருமந்திரப்பாடல்
தெரிசிக்கப் பூசிக்க சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபக்தி செய்யும் குவலயத்தோர்க்குத்
தருமுத்கிச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே

குருவைக்காணுதல் பூசித்தல், நினைத்தல் அவரை தொட்டு கும்பிடுதல், அவர் புகழை பரப்புதல் அவர் திருவடியை சிரமேல் கொள்ளுதல் ஆகிய நெறி சன்மார்க்க நெறி இவ்வழியில் செல்பவர் மோட்சமாகிய இன்பத்தை அனுபவித்து உணர்வர்

திருமுறை பாடல்

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய்
நின்ற இறைவி போற்றி .......... பாேற்றித்திருத்தாண்டகம் அப்பர்

இன்று நன்று நாளை நன்று என்று நின்ற  ......  சம்பந்தர்                தேவாரம்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு தமிழ் திருமுறை மற்றும் 
சிவஞான சித்தியார்