புதன், 27 பிப்ரவரி, 2019

முக்தி நெறி பயக்கும் சாதனைகள்

முக்தி நெறி பயக்கும் சாதனைகள்

இறைவனுடைய திருவருளை அடைவதற்கு வழிகள் பற்பல. அவற்றுள் , தாசமார்க்கம், சத்புத்திரமார்க்கம் சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கும் தமிழ் திருமுறை வழியாகும் இதுவே திருநெறி வழியான சாஸ்திர வழியில் வழங்குவது, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன என்று சைவ சித்தாந்தம் கூறும் நெறிகளாகும்.
 இதில் நமக்கு வழிகாட்டிய உள்ள நால்வர் பெருமக்கள் கையாண்ட வழியில் சங்கரனை அடைந்து நன் மார்க்கம் பெற்று முத்திய அடைந்தவர்கள் கண்ட நெறியே மேற்கண்ட நெறியாகும்.
திருமுறை காட்டும் வழி 

இதில் தாசமார்க்கம் ஆவாது இறைவனை எசமானனாகவும், தன்னை ( உயிர்கள் ) பணியாளனாகவும் இருந்து வழிபடும் நெறியாகும் இது திருநாவுக்கரசர் காட்டிய நெறி. 
 சத்புத்திரமார்ககம் என்பது, இறைவனை தந்தையாக எண்ணி, வழிபடும் ஆன்மா புத்திரனாகவும் அமைந்து வழிபடும் நெறியாகும்.
  சகமார்க்கம் என்பது, இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும். இது சுந்தரர் காட்டிய வழி.
 சன்மார்ககம் என்பது இறைவனை ஞானாசாரியராக(குருவாக ) கொண்டு வழிபடும் ஆனமா, சீடனாக இருந்து வழிபடும் வழியாகும்
இது மாணிக்கவாசகர் வாழ்ந்து காட்டிய நெறி.

சைவ சித்தாந்தம் காட்டும் திருநெறிகள்
சரியை 
இது புறவவழிபாடு எனப்படும். உருவம் கொண்ட உயிர்கள்  உருவம் கொண்ட இறைவனை புறத்தொழில்களால் இயற்றப்படும் வழிபாடு   சரியையாவது திருக்கோயில் சென்று அலகிடல், மெழுகுதல், பூமாலை தொடுத்தல், அருட்பாக்களால் பாடுதல், தீபமீடுதல், நந்தவனம் அமைத்தல், (உழவாரப்பணிகளால் கோயில்கள் சுத்தம் செய்தல்) சிவனடியார் சேவை, என்பன போன்று இது புறவழிபாடு எனப்படும். இது வே திருமுறைகாட்டிய தாச மார்க்கம் ஆகும். இது நாவுக்கரசர் கையாண்ட வழி இவ்வழியில் செல்வோர் அடையும் பயன் சாலோகம் அதாவது இவரகள் சிவலோகம் கெல்வர் என்கிது சிவஞான சித்தியார்

இதனை அப்பர் பெருமான் தன் பாடலில்

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு
பூமாலை புனைந்தேற்றி புகழ்ந்து பாடி
தலையார கும்பிட்டு கூத்தும் ஆடி
சங்கார சய போற்றி போற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே என்கிறார்

திருமந்திரப்பாடல்

எளிஅனல் தீபம் இடல்மலர் கொயதல்
அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றம் பல்மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான் தாசமார்க்கம்   திருமந்திரம்

திருவிளக்கு ஏற்றுதல், பூகொய்தல், மெழுகுதல், சுத்தம் செய்தல், இறைவனை வாழ்த்தி பாடல், கோயில் மணிகளை ஒலிக்க செய்தல், இறைவனுக்கு திருமுழுக்கு செய்யும் போது அபிசேகப் பொருட்களை அளித்தல் என்ற செயல்கள் சரியை அதாவது தாசமார்க்கம் எனப்படும்

கிரியை பயன்
கிரியை யாவது சரியை நெறியான வழிபாட்டுடன் சிவபூசை செய்தல், அக, புற வழிபாடு செய்தல், வாசனையுடைய மலர் திரவியங்களுடன் அபிசேக ஆராதனை செய்தல், தூப தீபம் காட்டுதல், திருமஞ்சனம் திருவமுது முதலியவற்றை அமைத்துக் கொண்டு பூத சுத்தி, ( உடல் சுத்தி) தான சுத்தி ( இட சுத்தம்), திரவிய சுத்தி ( திரவியங்கள் சுத்தம்) மந்திர சுத்தி , இலிங்க சுத்தி என்ற ஐந்து வகை சுத்திகள் செய்து ஆசனமிட்டு ஆகாவனம் செய்து மூர்த்தியை எழுந்தருளச் செய்து அம் மூர்த்தி எழுந்தருளிய மூர்த்தி மானாகி இறைவனை (முத்திரை , பாவனை ) பாவனை செய்து ஆவாகித்து மெய் அன்போடு அருச்சித்து வழிபட்டு போற்றி விருப்பத்தோடு அக்கினி காரியமும் (வேள்வி யாகம்) செய்து அக புற வழிபடு செய்தல் கிரியைநெறியாகும். இதுவோ திருமுறை வழியான சத்புத்திர மார்க்கம் ( ஞானசம்பந்தர் காட்டிய வழி) இக் கிரயையால் சாதனை செய்வோர் ஈட்டும் பயன் சாமீபமுக்தி அதாவது இறைவன் அருகில் இவர்கள் செல்லத்தக்கவராவர்

திருமுறை காட்டும் பாடல் அப்பர் பாடிய பாடல்
 " சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் 
 தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உ்ன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்ததறியேன் ......

திருமந்திரப்பாடல்
பூசித்தல் வாசித்தல் போற்ற் செபித்திடல்
ஆசற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட ன்னமும் நீசுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத்ததிரமார்க்கம் ஆகும்.......  திருமந்திரப்பாடல்

யோக நெறி பயன்
யோக நெறியாவது சுந்தரர் காட்டிய தோழ மார்க்கமான சகமார்க்க நெறியாகும். இந்நெறியல் சரியை, கிரியை நெெறியுடன் அக புற வழிபட்டுடன் சேர்தது யோக சாதனை யாவது புலன்களை ஒடுக்கி சுவாசத்தை தடுத்து கும்பித்து மூன்று கோண வடிவுடைய மூலாதாரம் , நாலுகோண வடிவுடைய சுவாதிட்டானம் முதலிய ஆறு ஆதார வழியைஅறிந்து மூலாதாரம் தொடக்கம் அந்தந்த ஆதாரத்திலுள்ள மூர்த்தியை வழிபட்டு மேலே சுழுமுனை வழியாக சென்று கண்டத்தானத்திற்கு மேலே உள்ள சந்திர மண்டலத்திலுள்ள பிரமந்திர தாமரை மலரின் முகமாகிய பூரண சோதி வடிவமாகிய பரம் பொருளை தியானித்து சமாதி கூடியிருப்பதாகும் யோக நிலை.
இதன் மூலம் சாதனையாளர் அடையும்பயன் சாரூப முக்தி அதாவது ஈஸ்வர ரூபம் பெறுவர் ( ஆருரார் இதன் வழியில் தான் ஈஸ்வரர் ரூபம் பெற்று முத்தி பெற்றவர்)

திருமுறை பாடல்

காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லங்கமாக
நேசமே நெய்யும் பாலா நிறைய நீர் அமையஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்றி அவிகாட்டரின்மே  .... அப்பர் அடிகள்

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே    ..... சமபந்தர்

ஞானம் 
ஞான சாதனை பயன்
இது திருமுறை கூறும்  மாணிகக வாசகர் கையாண்ட சன்மார்க்க நெறியாகும்

ஞான சாதனையாகிய சன்மார்க்கமாவது கலை ஞானங்கள் எல்லாம் புராணங்கள் தேவதங்கள் சாஸ்திரங்கள் பிற சமய நூல்கள் ஆகிய எல்லாம் கற்றுணர்ந்து பல சமய நூல்கள் சொல்லும் பொருட்கள் உணர்ந்து பதி,பசு, பாசம் எனும் முப்பொருட்கள் உண்மை தெளிந்து அவற்றுள் பசு எனப்படும் ஆன்மாவானது பாசம் என்னும் பந்தத்தை அறுத்து பதி எனும் சிவபரம் பொருளை அடையச் செய்யும் மார்க்கமாகும்.
 சிவஞானத்தின் இயல்பை அறிந்து சிவனோடு கலந்து நிற்கும் நிலையை தருவதாகிய சிவஞானத்தை பெற்ற பெருமையுடையோர் அடையும்பலன் சிவசாயுச்சிய முத்தி ( சிவத்தோடு / உருவமற்ற பேறு பிறப்பற்ற பேறு பெறுவர் 

திருமந்திரப்பாடல்
தெரிசிக்கப் பூசிக்க சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபக்தி செய்யும் குவலயத்தோர்க்குத்
தருமுத்கிச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே

குருவைக்காணுதல் பூசித்தல், நினைத்தல் அவரை தொட்டு கும்பிடுதல், அவர் புகழை பரப்புதல் அவர் திருவடியை சிரமேல் கொள்ளுதல் ஆகிய நெறி சன்மார்க்க நெறி இவ்வழியில் செல்பவர் மோட்சமாகிய இன்பத்தை அனுபவித்து உணர்வர்

திருமுறை பாடல்

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய்
நின்ற இறைவி போற்றி .......... பாேற்றித்திருத்தாண்டகம் அப்பர்

இன்று நன்று நாளை நன்று என்று நின்ற  ......  சம்பந்தர்                தேவாரம்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு தமிழ் திருமுறை மற்றும் 
சிவஞான சித்தியார்

புதன், 27 டிசம்பர், 2017

முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு

முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம்உடையவன் என்று பொருள். இவ்வரசன் சோழர்களின் பரம்பரையில் பிறந்தவன். தியாகராசப் பெருமானை இந்திர உலகில்இருந்து இம்மண்ணுலகிற்கு கொண்டு வந்தவன். கந்தபுராணத்தில் இவன் வரலாறு பேசப்படுகிறது.
   கயிலை மலைச்சாரலில் ஓர் அழகிய பூஞ்சோலை, அச்சோலையில் உள்ள வில்வமரத்தின் கீழ், சிவபெருமானாரும் உமையம்மையும்எழுநதருளியிருந்தனர். இந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து பாோட்டுக் கொண்டே இருநதது. கீழே பெருமானாரும் பிராட்டியும் எழுந்தருளியிருப்பதை இக்குரங்கு அறியவில்ைல.
  அந்த நாள் சிவராத்திரி நாளாகும். அறியாமல் வில்வ இலைகளை முடிமேல் போட்டதைப் பெருமானார் அற்சனையாக கொண்டார். அந்தக் குரங்கின் மீது பார்வையைச் செலுத்தினார். அக் குரங்கிற்கு சிவஞானம் உண்டாயிற்று.கீழேஇறங்கி அம்மையப்பரை வணங்கி நின்றது.
   செவ்வான வண்ணராகிய பெருமானார்  " நீ செய்த சிவராத்திிரி பூசையால் இவ்வுலகை யாளும் அரசனாக பிறப்பாய் " என அருளிச்செய்தார். உடனே குரங்கு " பெருமானே அரசனாகப் பிறந்து அரச போகத்தில் மூழ்கி விடுவேன். ஆதலால் குரங்கு முகத்துடன் பிறக்கும் வரத்ைத அருளுங்கள் மேலும் மாறாத சிவபக்தியை யான் பெற வேண்டும் " என்று வேண்டி நின்றது. பெருமானாரும் வேண்டியதை அருளினார்.
  அக்குரங்கு கருவூரில் சோழர் குலத்தில் குரங்கு முகத்துடன் பிறந்து முசுகந்தன் எனப்பெயர் பெற்றது. இவனே கருவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். மாறாத சிவபக்தியுடன் திகழ்ந்தவன். முடிவில்் தன் மகனுக்கு முடி சூட்டிவிட்டு கயிலை மலையின் கீழ் பெருமானைக் குறித்து கடுந்தவம் இருந்தான். சிவனடி சேர்ந்து கணங்களின் தலைவர்களில் ஒருவனானான்.
திருச்சிற்றம்பலம்
நன்றி   தமிழ்வேதம்

முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு

முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறுRelated image
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம்உடையவன் என்று பொருள். இவ்வரசன் சோழர்களின் பரம்பரையில் பிறந்தவன். தியாகராசப் பெருமானை இந்திர உலகில்இருந்து இம்மண்ணுலகிற்கு கொண்டு வந்தவன். கந்தபுராணத்தில் இவன் வரலாறு பேசப்படுகிறது.
   கயிலை மலைச்சாரலில் ஓர் அழகிய பூஞ்சோலை, அச்சோலையில் உள்ள வில்வமரத்தின் கீழ், சிவபெருமானாரும் உமையம்மையும்எழுநதருளியிருந்தனர். இந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து பாோட்டுக் கொண்டே இருநதது. கீழே பெருமானாரும் பிராட்டியும் எழுந்தருளியிருப்பதை இக்குரங்கு அறியவில்ைல.
  அந்த நாள் சிவராத்திரி நாளாகும். அறியாமல் வில்வ இலைகளை முடிமேல் போட்டதைப் பெருமானார் அற்சனையாக கொண்டார். அந்தக் குரங்கின் மீது பார்வையைச் செலுத்தினார். அக் குரங்கிற்கு சிவஞானம் உண்டாயிற்று.கீழேஇறங்கி அம்மையப்பரை வணங்கி நின்றது.
   செவ்வான வண்ணராகிய பெருமானார்  " நீ செய்த சிவராத்திிரி பூசையால் இவ்வுலகை யாளும் அரசனாக பிறப்பாய் " என அருளிச்செய்தார். உடனே குரங்கு " பெருமானே அரசனாகப் பிறந்து அரச போகத்தில் மூழ்கி விடுவேன். ஆதலால் குரங்கு முகத்துடன் பிறக்கும் வரத்ைத அருளுங்கள் மேலும் மாறாத சிவபக்தியை யான் பெற வேண்டும் " என்று வேண்டி நின்றது. பெருமானாரும் வேண்டியதை அருளினார்.
  அக்குரங்கு கருவூரில் சோழர் குலத்தில் குரங்கு முகத்துடன் பிறந்து முசுகந்தன் எனப்பெயர் பெற்றது. இவனே கருவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். மாறாத சிவபக்தியுடன் திகழ்ந்தவன். முடிவில்் தன் மகனுக்கு முடி சூட்டிவிட்டு கயிலை மலையின் கீழ் பெருமானைக் குறித்து கடுந்தவம் இருந்தான். சிவனடி சேர்ந்து கணங்களின் தலைவர்களில் ஒருவனானான்.
திருச்சிற்றம்பலம்
நன்றி   தமிழ்வேதம்
முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம்உடையவன் என்று பொருள். இவ்வரசன் சோழர்களின் பரம்பரையில் பிறந்தவன். தியாகராசப் பெருமானை இந்திர உலகில்இருந்து இம்மண்ணுலகிற்கு கொண்டு வந்தவன். கந்தபுராணத்தில் இவன் வரலாறு பேசப்படுகிறது.
   கயிலை மலைச்சாரலில் ஓர் அழகிய பூஞ்சோலை, அச்சோலையில் உள்ள வில்வமரத்தின் கீழ், சிவபெருமானாரும் உமையம்மையும்எழுநதருளியிருந்தனர். இந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து பாோட்டுக் கொண்டே இருநதது. கீழே பெருமானாரும் பிராட்டியும் எழுந்தருளியிருப்பதை இக்குரங்கு அறியவில்ைல.
  அந்த நாள் சிவராத்திரி நாளாகும். அறியாமல் வில்வ இலைகளை முடிமேல் போட்டதைப் பெருமானார் அற்சனையாக கொண்டார். அந்தக் குரங்கின் மீது பார்வையைச் செலுத்தினார். அக் குரங்கிற்கு சிவஞானம் உண்டாயிற்று.கீழேஇறங்கி அம்மையப்பரை வணங்கி நின்றது.
   செவ்வான வண்ணராகிய பெருமானார்  " நீ செய்த சிவராத்திிரி பூசையால் இவ்வுலகை யாளும் அரசனாக பிறப்பாய் " என அருளிச்செய்தார். உடனே குரங்கு " பெருமானே அரசனாகப் பிறந்து அரச போகத்தில் மூழ்கி விடுவேன். ஆதலால் குரங்கு முகத்துடன் பிறக்கும் வரத்ைத அருளுங்கள் மேலும் மாறாத சிவபக்தியை யான் பெற வேண்டும் " என்று வேண்டி நின்றது. பெருமானாரும் வேண்டியதை அருளினார்.
  அக்குரங்கு கருவூரில் சோழர் குலத்தில் குரங்கு முகத்துடன் பிறந்து முசுகந்தன் எனப்பெயர் பெற்றது. இவனே கருவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். மாறாத சிவபக்தியுடன் திகழ்ந்தவன். முடிவில்் தன் மகனுக்கு முடி சூட்டிவிட்டு கயிலை மலையின் கீழ் பெருமானைக் குறித்து கடுந்தவம் இருந்தான். சிவனடி சேர்ந்து கணங்களின் தலைவர்களில் ஒருவனானான்.
திருச்சிற்றம்பலம்
நன்றி   தமிழ்வேதம்
முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம்உடையவன் என்று பொருள். இவ்வரசன் சோழர்களின் பரம்பரையில் பிறந்தவன். தியாகராசப் பெருமானை இந்திர உலகில்இருந்து இம்மண்ணுலகிற்கு கொண்டு வந்தவன். கந்தபுராணத்தில் இவன் வரலாறு பேசப்படுகிறது.
   கயிலை மலைச்சாரலில் ஓர் அழகிய பூஞ்சோலை, அச்சோலையில் உள்ள வில்வமரத்தின் கீழ், சிவபெருமானாரும் உமையம்மையும்எழுநதருளியிருந்தனர். இந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து பாோட்டுக் கொண்டே இருநதது. கீழே பெருமானாரும் பிராட்டியும் எழுந்தருளியிருப்பதை இக்குரங்கு அறியவில்ைல.
  அந்த நாள் சிவராத்திரி நாளாகும். அறியாமல் வில்வ இலைகளை முடிமேல் போட்டதைப் பெருமானார் அற்சனையாக கொண்டார். அந்தக் குரங்கின் மீது பார்வையைச் செலுத்தினார். அக் குரங்கிற்கு சிவஞானம் உண்டாயிற்று.கீழேஇறங்கி அம்மையப்பரை வணங்கி நின்றது.
   செவ்வான வண்ணராகிய பெருமானார்  " நீ செய்த சிவராத்திிரி பூசையால் இவ்வுலகை யாளும் அரசனாக பிறப்பாய் " என அருளிச்செய்தார். உடனே குரங்கு " பெருமானே அரசனாகப் பிறந்து அரச போகத்தில் மூழ்கி விடுவேன். ஆதலால் குரங்கு முகத்துடன் பிறக்கும் வரத்ைத அருளுங்கள் மேலும் மாறாத சிவபக்தியை யான் பெற வேண்டும் " என்று வேண்டி நின்றது. பெருமானாரும் வேண்டியதை அருளினார்.
  அக்குரங்கு கருவூரில் சோழர் குலத்தில் குரங்கு முகத்துடன் பிறந்து முசுகந்தன் எனப்பெயர் பெற்றது. இவனே கருவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். மாறாத சிவபக்தியுடன் திகழ்ந்தவன். முடிவில்் தன் மகனுக்கு முடி சூட்டிவிட்டு கயிலை மலையின் கீழ் பெருமானைக் குறித்து கடுந்தவம் இருந்தான். சிவனடி சேர்ந்து கணங்களின் தலைவர்களில் ஒருவனானான்.
திருச்சிற்றம்பலம்
நன்றி   தமிழ்வேதம்
முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம்உடையவன் என்று பொருள். இவ்வரசன் சோழர்களின் பரம்பரையில் பிறந்தவன். தியாகராசப் பெருமானை இந்திர உலகில்இருந்து இம்மண்ணுலகிற்கு கொண்டு வந்தவன். கந்தபுராணத்தில் இவன் வரலாறு பேசப்படுகிறது.
   கயிலை மலைச்சாரலில் ஓர் அழகிய பூஞ்சோலை, அச்சோலையில் உள்ள வில்வமரத்தின் கீழ், சிவபெருமானாரும் உமையம்மையும்எழுநதருளியிருந்தனர். இந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து பாோட்டுக் கொண்டே இருநதது. கீழே பெருமானாரும் பிராட்டியும் எழுந்தருளியிருப்பதை இக்குரங்கு அறியவில்ைல.
  அந்த நாள் சிவராத்திரி நாளாகும். அறியாமல் வில்வ இலைகளை முடிமேல் போட்டதைப் பெருமானார் அற்சனையாக கொண்டார். அந்தக் குரங்கின் மீது பார்வையைச் செலுத்தினார். அக் குரங்கிற்கு சிவஞானம் உண்டாயிற்று.கீழேஇறங்கி அம்மையப்பரை வணங்கி நின்றது.
   செவ்வான வண்ணராகிய பெருமானார்  " நீ செய்த சிவராத்திிரி பூசையால் இவ்வுலகை யாளும் அரசனாக பிறப்பாய் " என அருளிச்செய்தார். உடனே குரங்கு " பெருமானே அரசனாகப் பிறந்து அரச போகத்தில் மூழ்கி விடுவேன். ஆதலால் குரங்கு முகத்துடன் பிறக்கும் வரத்ைத அருளுங்கள் மேலும் மாறாத சிவபக்தியை யான் பெற வேண்டும் " என்று வேண்டி நின்றது. பெருமானாரும் வேண்டியதை அருளினார்.
  அக்குரங்கு கருவூரில் சோழர் குலத்தில் குரங்கு முகத்துடன் பிறந்து முசுகந்தன் எனப்பெயர் பெற்றது. இவனே கருவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். மாறாத சிவபக்தியுடன் திகழ்ந்தவன். முடிவில்் தன் மகனுக்கு முடி சூட்டிவிட்டு கயிலை மலையின் கீழ் பெருமானைக் குறித்து கடுந்தவம் இருந்தான். சிவனடி சேர்ந்து கணங்களின் தலைவர்களில் ஒருவனானான்.
திருச்சிற்றம்பலம்
நன்றி   தமிழ்வேதம்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

சிவ பூசை பலன்கள்

சிவ பூசை பலன்கள்


இச்சிவ பூஜனத்திற்கு சிரத்தையும் பக்தியும் மிக மிக அவசியமாகும். சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்யம் செய்து இருந்தால்தான் கிடைக்கும். சிவன் ஒருவரைப் பூஜை செய்துவிட்டால் மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜை செய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர். எவ்வாறு மரத்தின் அடியில் நீர் விடுவதால் மரங்கள் திருப்தி அடைந்து மலர்களையும் பழங்களையும் தருகின்றனவோ, அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர்
சிவனுடைய வழிபாட்டால் மோக்ஷம் கிடைக்கும். போகத்தை விரும்புகிறவர்களுக்கு பெரும் சுகமும் கிடைக்கும். சிவபூஜையினுடைய விசேஷத்தால் அவனுக்கு பெரிய அரண்மனையும், பெரும் யானைகளும், வாயுவேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளும், சந்திரன் போன்ற முகம் அமைந்த சுந்திரகளும் பெரும் செல்வமும் அவனுக்குக் கிடைக்கும் என்பது புராண வசனம், மேலும் சிவன்தான் சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம்.
1. மந்திரங்களுள் சிறந்த காயத்திரி தேவிக்குக் கணவர்.

2. இராமரால் இராவணனை அழிக்க வேண்டி தனுஷ்கோடியில் சிவலிங்கத்தை நிறுவி “ராமேச்வரம்” என்னும் தன் பெயரையே சூட்டி வழிபட்டு இராவணனைவென்று வெற்றி பெறச் செய்தவர்.

3. கண்ணன் கைலாச யாத்திரை சென்று சிவனை வழிபட்டமையால் உலகிலேயே சிறந்த அழகான மன்மதனைப் போன்ற மகனைப் பெறும் பாக்கியத்தை அவனுக்கு அளித்தவர்.

4. அதே மன்மதனை தன் பார்வையாலேயே அழித்தவர்.

5. உலகை அழிக்கத் தோன்றிய காலகூட விஷத்தை விழுங்கியவர்.

6. தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்க யமனின் திமிரை அடக்கியவர்.

7. திரிபுர அசுரர்களை அழித்தவர்.

8. தட்ச யாகத்தை நாசம் செய்தவர்.

9. அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியவர்.

10. நரஸிம்மருடைய கர்வத்தை அடக்க சரப அவதாரம் எடுத்தவர்.

11. காசியில் வேத வியாசர் விஷ்ணு தான் சிறந்தவர் என்று கையை மேலே தூக்கியதை மடங்காமலே ஆக்கச் செய்தவர்.

12. பிரம்மாவினுடைய சிறு அபராதத்தால் தலையைக் கொய்து மாலையாக அணிந்தவர்.

13. வாமனாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அடக்க வாமனரின் தோலை உரித்து சட்டையாக அணிந்து கொண்டவர். சீகாழியில் இன்றும் சட்டைநாதரைக் காணலாம். இன்னும் பல உயர்வுகள் உள்ளன, விரிவஞ்சி இத்துடன் விடுத்தனம்.

மேலும் சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறி முடிப்போம். மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார். எனவே சைவர்களுக்கு சிவனைத் தவிர எந்த தெய்வமும் உரித்தது அல்ல, உயர்ந்தது அல்ல என்னும் எண்ணம் ஏற்பட இது போன்ற சிவஞான பூஜா மலர்கள் மிக மிக அவசியமானதாகும்.
சிவனுக்கே பூஜை செய்யுங்கள், மீண்டும் உங்களுக்கு பிறவி கிடையாது என்று கூறியுள்ளார். சிவனுடைய அடிமுடி காணாது தவித்த பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் கர்வத்தை அடக்கி பெண்ணாயிருக்கும் தன்மையைக் கொடுத்து லிங்கோத்பவராகக் காட்சி அளித்ததை இன்றும் எல்லா சிவாலயங்களிலும் காணலாம். அத்தகைய சிவார்ச்சனத்தை விபூதியையும், ருத்திராட்சங்களையும் அணிந்து கொண்டு செய்ய வேண்டும். தனக்குச் செய்யக் கூடிய உடல் வலிமையோ அறிவு வலிமையோ இல்லாவிடில் மற்றவரைக் கொண்டு செய்வதும் தவறல்ல. அவரவருடைய இயல்புக்குத் தக்கவாறு பூஜா சாமன்களை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அதில் பஞ்சாயதன பூஜை என்பது மிகச்சிறந்தது.

சிவபிரானுடைய உயர்வைத் தெளிவுற உலகமக்களுக்கு வெளியிட அமைந்துள்ள ஹிந்து மத சங்கர மடங்களும் தமது ஶ்ரீமுகத்தில் ஶ்ரீ நாராயண ஸ்ம்ருதி என்றே குறிப்பிடுகின்றன.

திருச்சிற்றம்பலம்
நன்றி சைவம் டாட் காம்