புதன், 27 மார்ச், 2019

பன்னிரு தமிழ் வேத மாநாட்டு அழைப்பு

பன்னிரு தமிழ் வேத மாநாட்டு அழைப்பு
30 ஆம் ஆண்டு ( 100 தமிழ் வேத மாநாட்டின் நிறைவு விழா)
திருமுறைகளின் சதாபிசேக விழா
நாள் 30.03.2019 31.03.2019, மற்றும்1.04.2019 ( சனி,ஞாயிறு,திங்கள்)
இடம் ; காஞ்சீபுரம் /கே.பி.கே. திருமண மண்டபம், காமராஜர் சாலை
01.04.2019 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி அளவில்
திருமுறை நாதருக்கு கோடி அருச்சனை
மற்றும் அனுதினமும் தமிழ் வேத இசை முழக்கமும். ஆன்மீக செம்மல்களின், ஆன்மீக கருத்துரையும், சிவனடியார்களின் தமிழ் வேத இசை முழக்கங்களும் நடைபெறும்
மேலும் தெளிவான விபரங்கள் அறிய
தமிழ் வேதம் மார்ச் 2019 இதழ் வாசிக்கவும்
சிவநேயச் செல்வர்களை அன்புடன் சிவ அருள் பெற அழைக்கும்;
விழா அமைப்பாளர், சிவத்தொண்டு சிவ.ஆ.பக்தவச்சலம் அய்யா அவர்கள் குடியாத்தம், ஆசிரியர் தமிழ் வேதம் மாத இதழ்
நற்றுணையாவது நமச்சிவாயவே
திருச்சிற்றம்பலம்

ஞானதீபம் ஏற்றுங்கள்

சிவபெருமானாருடைய திரு கழலடி அடைய ஞானதீபம் ஏற்றுங்கள்
என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறும் வழியை காண்போம்  உடம்பென்னும் வீட்டினுள் மனம்என்கிற அகல் விளக்கு வைத்து சிவ உணர்வை நெய்யாக ஊற்றி உயிர் என்னும்திரியை இட்டு, சிவஞானம் என்கிற ஒளியை ஏற்றி அசைவற்ற தியானத்திலிருந்தால் சிவபெருமானாருடைய கழலடி காணலாம்
பாடல் திருமுறை 4.75.4

உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
 

உடம்பே வீடு. உள்ளமே தகளி ( அகல் ), உணர்வே நெய். உயிரே திரி. ஞானமே தீ. உடலான வீட்டில், சிவமானபொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது. விளக்கேற்றிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக் கொள்ள, அச் சிவஞானப்பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான பொருளைக்காணலாம்.

திருநாவுக்கரசர் அருளியுள்ள மெய்யே விளக்கு என்பது கருணை அல்லது அருள் என்பதாகும். மனித மனங்களில் அருள் கருணை குடிகொள்ள வேண்டும்


பாடல் எண் : 9
மெய்யுளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோ ருபாயம் பற்றி யுகக்கின்றே னுகவா வண்ணம்
ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே  4.54,9 திருமு.

 இந்த கருணை உள்ளத்ததில் வளர்ந்து கொண்டே வரவேண்டும். மனம் என்கிற அறைக்கு ஐம்பொறிகள் / மெய்,வாய்,கண்,மூக்கு, காது என்ற ஐந்து சன்னல்கள் உண்டு. இந்த பண்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வர வேண்டும். இதனைத்தான் வேண்டளவு உயரத்துண்டுதல் என்கிறார்
 ஆசை அல்லது சுயநலம் என்கிற காற்ற (உணர்வு) ஐந்து சன்னல்களின் வழியாக (ஐம்பொறிகளின் வாயிலாக) மனத்தினுள் நுழைந்து விடுமானால் கருணை என்கிற தீபம் நிலைத்து நிற்காது. ஆதலால் ஐந்து பொறிப் புலன்களையும் மடைமாற்றம் செய்து விட்டால் அவற்றின் சேட்டைகள் நம்மிடம் செல்லாமல் போய்விடும்.
  உலக சுகபோகங்களில் நம் மனததை இழுத்துச் செல்லும்ஐந்து பொறி புலன்கட்கும் மாற்று வேலையை கொடுத்து பழக வேண்டும்.
இப்படி செய்தால் அவை நம்மனத்தில் ஏற்றி வைத்துள்ள கருணை என்கிற தீபத்தை (கருணை உணர்வை) மேன்மேலும் பிரகாசிக்க செய்யும், மனத்தில் கருணை என்கிற உணர்வு நிலைத்து நிற்குமானால் கருணையே வடிவமான சிவபெருமான் திருவடியை காணலாம் / அடையலாம்
மனம் மடைமாற்றத்திற்கு சேரமான் பெருமான் நாயானார் கூறும் பாடல்
சிந்தனை செய்ய மனமமைத்
    தேன்செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்யத் தலையமைத்
    தேன்கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத்
    தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்
    கிவையான் விதித்தனவே

என்னுடைய மனத்தை இடையறாது உன்னுதற்கு வைத்தேன்; நாவைப் புகழ்சொல்லுதற்கு வைத்தேன்; தலையை வணங்குதற்கு வைத்தேன்; கைகளைக் கும்பிடுதற்கு வைத்தேன்; அன்பை அகப்படுத்தற்கு வைத்தேன்.
உடம்பை மயர்க்கூச்சு எறிவ தற்கு வைத்தேன்; வெந்து தணிந்த வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற இறை வனுக்கு யான் நேர்ந்தன இவை.
  நம்முடைய மனம் எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்மனத்தை எப்பொழுதும் சிவபெருமானாரை நினைக்கும்படி செய்ய வேண்டும்.  வாயால் வேண்டாதவற்றை தீயனவற்றை பேசுகிறோம். அந்த வாய் இறைவனின் புகழை பேசவேண்டும்.
யார் யாரையோ தலையும் கையும் வணங்கி வந்தன. இனி அவை எம்பெருமான் சிவனையே வணங்கும் படி செய்ய வேண்டும்
நிலையில்லா பொருள்களின் மேல் செலுத்தும் அன்பை இறைவன் பால் செலுத்த செய்ய வேண்டும்
 இப்படி செய்து உடலுடன் கயிலாயம் சென்றவர் சேரமான் பெருமான் நாயனார் இவர் கூறுவதை நாம் காெள்ள வேண்டும் கடவுளை வைத்து வியாபாரம் செய்யும் கடவுள் வியாபாரிகளின் சொற்களை தள்ள வேண்டும்
 அழகிய செந்தமிழ் பாடல்களால் இறைவழிபாடு செய்ய வேண்டும்
 தாய்மொழியில் இறைவழிபாடு செய்வது தாய்பால் போலவாகும்
தீந்தமிழ் பாடல்கள் பாடும் போது மனம் இறைமையில் ஒன்றும். நம்மை இறைமையுடன் இணைக்கும் பாலம் செந்தமிழ் பாடல்கள் என்பதை மறக்கக் கூடாது. ஆன்மா சிவமாம் தன்மையைப் பெறும்
 கடவுளைக் கண்டுணர்ந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ள உரிய வழிகளை விட்டுவிடுகிறோம். பரிகாரம் என்ற பெயரில் எள்ளுப் பொட்டலம் போடுவது,சனிக்கிரக வழிபாடு,ராகு கேது கிரக வழிபாடு, இரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து படைப்பது போன்ற வேண்டாததும், பயனற்றதுமான சடங்குகளையே நம்பி அப்பாவி மக்கள்  மோசம் போகிறார்கள்.
 வாழ்க்கையில் பிற்பகுதி முதுமை பருவத்தில் கழிந்து விடுகின்றது. (இயலாமையால் கழிந்து விடுகின்றது) இடையில் எஞ்சும் சில ஆண்டுகளில் அச்சம், ஆசை, வெகுளி அழுக்காறு என கழிந்து விடுகிறது.
 எனவே புல்லிய சடையையும் மூன்று கண்களையும் உடைய சிவபெருமான் மேல் இனியும் தாமதம் செய்யாமல் விரைந்து சரண்  அடைய வேண்டும். இனியும் இறை வழிபாட்டிற்கு காலம் இருக்கின்றது பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது பாெருளை நாடி பொருளை ஈட்டுவதிலேயும் மரணம் நெருங்கி வந்து விடும் காலம் வந்து நம்மால் எதுவும் செய்ய முடியாத காலம் உதயம் ஆகும் முன் இனியும் காலம்தாழ்த்தாது  இறைவன் பான் நேரத்தை செலுத்தி அவன் அன்பு கருணை பெற மெய் தீபம் ஏற்றி அவன் கருணை பெறுவோம்
திருச்சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம்

வெள்ளி, 22 மார்ச், 2019

29வது உழவாரப்பணி

இராஜபாளையம் / இராமலிங்காபுரம் திருநாவுக்கரசர் குருகுலத்தின் மூலம் நடைபெறும் 29வது உழவாரப்பணிபடம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி மற்றும் உரை
நாள் 31.03.2019 ஞாயிறு
இடம் ஆள்வார்குறிச்சி / நெல்லை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம் ஆள்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு ஆவுடையம்பாள் உடனுறை நரசிங்கநாதர்
ஆலயத்தில் உழவாரப்பணியுடன் ஆன்மீக கலந்தாய்வு பயிற்சி வகுப்பும், தேவார, திருவாசக திருமுறை பராயண வகுப்பும் சிறப்புடன் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிவனடியார்கள் யாவரும் கலந்து பயன் அடைய அன்புடன் அழைக்கப்படுகிறது
இவ் உழவாரப்பணிக்கு வருகைதரும் சிவனடியார்களுக்காக முதல்நாள் (30,03,2019 சனிக்கிழமை இரவு சுமார் 8.00 மணியளவில் திருநாவுக்கரசர் குருகுலத்திலிருந்து வாகனம் (வேன்) செல்ல உள்ளது எனவே சிவனடியார்கள் அனைவரும் முதல்நாள் இரவு வந்து உழவாரப்பணியில் கலந்து சிவன் அருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகொள்கிறோம்.
இக்கோயிலின் சிறப்பு ; இது முற்காலத்தில் பிரசித்தி பெற்ற சிவ மிக பழைமையான சிவ ஆலயத்துடன் தற்போது
சக்தி வழிபாட்டிற்கான சிறந்த தலமாக விளங்குகிறது.
திருமண தடைகள் நீங்க பரிகாரத்தலம்
கணவர் நீண்ட ஆயுள் பெறவும் நோய் இன்றி இனிது வாழ வேண்டும் தலம்
சிவனருள் பெற அன்புடன் அழைக்கும் நம் குருநாதர் அய்யா
திருநாவுக்கரசர் குருகுலத்தின் குருநாதர்
சிவச்சாரியார் சிவத்திரு. க.கணேசன் அய்யா
திருநாவுக்கரசர் குருகுலம்,இராமலிங்காபுரம்
தொடர்புக்கு ; 99521 95895. 8637601171
இராஜபாளையம்
உழவாரம் அதுவே தேவராம் இறைப்பணியுடன் இணைந்த ஆன்மீகப்பணி
திருச்சிற்றம்பலம்

வியாழன், 21 மார்ச், 2019

மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு பழம் பெரும் புத்தகம் 1

மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு பழம் பெரும் புத்தகம் 1: கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய  'ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்' என்ற நூலில் எழுதியுள்ள பல விடய...

சனி, 9 மார்ச், 2019

திரி குண ரகசியம்



Image result for திரிகுண ரஹஸ்யம்
திரி குண ரகசியம்

வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு.
 இறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.
மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.

மூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.

தனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.

தன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.

இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.

சவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.

விலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.

காலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.

கனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.

இயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.
உதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.

பரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.

நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.

மனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.

யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.

நம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.

மேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.


இறைவன் பிரபஞ்சத்தில் முழுமையான நிர்குணமாகவும், அதே சமயம் குணமாக மாற்றமடைந்து வடிவமான திரிகுணத்தில் அமர்ந்ததை திருமூலர் தன் மந்திரத்தில் விளக்குகிறார்.

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகில் எடுத்த சதாசிவன் தானே
                                                      - 1713

திருச்சிற்றம்பலம்

பக்தி யோகம்











பக்தி யோகம்


யோக மார்க்கத்தில் ஐந்து முக்கிய யோக முறைகளில் பக்தி யோகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உணர்வு மிகுந்த ஆளாக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய யோக மார்க்கம் பக்தி என்பதே ஆகும். பக்தி என்பது நம் உணர்ச்சிகளால் உருவாகக்கூடியது. பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பக்தி காற்றின் வடிவம் கொண்டது.  நம் உணர்வுகளும் காற்றை போல நிலையற்றது அதே சமயம் இவ்வுலகில் காற்று இல்லாமல் வாழவும் இயலாது. 
 நம் கலாச்சாரத்தில் பக்தியோகம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தென்னகம் பக்தியில் மிக சிறப்பு வாய்ந்தது என பாகவதமும் , நாரத பக்தி சூத்திரமும் சொல்லுகின்றது. சிவ பக்தியில் மிகுந்த நாயன்மார்களும், வைணவ பக்தியில் மிகுந்த ஆழ்வார்கள் என பக்தியில் அதிக எண்ணிக்கையாளர்களை கொண்டது தமிழ் தேசம்.

உலக உயிர்களின் மேல் வைக்கும் உணர்வுகளை நாம் இறைவனிடத்தில் செலுத்தி அதனால் இறைவனுடன் கலப்பதே பக்தி யோகம்.
 இறைவனை நீங்கள் தாயாக, தந்தையாக கொண்டு பக்தி செய்யலாம். பெரும்பாலும் இப்படித்தான் பக்தி செய்கிறார்கள். காதலனாக காதலியாக கண்டு பக்தி செய்யலாம்.  ஐய்யயோ இது தவறாயிற்றே என பாவச்செயலை போல சிந்திக்க வேண்டாம். இதுவும் பக்தியே. ஆண்டாளும், மீராவும் இதைத்தானே பக்தியாக செய்தார்கள்? மேலும் குழந்தையாக, நண்பனாக, முதலாளியாக இப்படி ஐந்துவகையாக உணர்வை கொட்டி பக்தி செய்யலாம்.

 தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது. 

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்
1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம்.
நீங்கள் பக்தி மார்க்கத்தில் பயணித்து பக்தியில் உள்ளார்து இறைவனுடன் இரண்டற கலக்க என் ப்ரார்த்தனைகள். 

திருச்சிற்றம்பலம்

புதன், 6 மார்ச், 2019

மயானக் கொள்ளை

இன்று...
மயானக் கொள்ளை..!சிறப்பு பதிவு..!!
மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும்..!
இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்..!
அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா..!
அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான்..!
அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன்..
கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது...!
இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்' என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள்..!
அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது..!
அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது..!
போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை..
இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி..
அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு..
"கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக!' என சாபமிட்டாள்..!
அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள்..!
அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள்..!
அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள்..!
எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள்..!
அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது.!
மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள்..!
உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது..!
அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள்.!
ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது...!
இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை எனும் விழா கொண்டா டப்படுகிறது...!
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இவ்விழா விமரிசையாக நடக்கும். அங்கு மட்டுமல்ல..
எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ..
அங்கெல்லாம் இம்மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பா நடைபெறும்...!!
அன்னை பரமேஸ்வரின் நினைவு இனிய நாளாகட்டும் !!