வெள்ளி, 22 மார்ச், 2019

29வது உழவாரப்பணி

இராஜபாளையம் / இராமலிங்காபுரம் திருநாவுக்கரசர் குருகுலத்தின் மூலம் நடைபெறும் 29வது உழவாரப்பணிபடம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி மற்றும் உரை
நாள் 31.03.2019 ஞாயிறு
இடம் ஆள்வார்குறிச்சி / நெல்லை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம் ஆள்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு ஆவுடையம்பாள் உடனுறை நரசிங்கநாதர்
ஆலயத்தில் உழவாரப்பணியுடன் ஆன்மீக கலந்தாய்வு பயிற்சி வகுப்பும், தேவார, திருவாசக திருமுறை பராயண வகுப்பும் சிறப்புடன் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிவனடியார்கள் யாவரும் கலந்து பயன் அடைய அன்புடன் அழைக்கப்படுகிறது
இவ் உழவாரப்பணிக்கு வருகைதரும் சிவனடியார்களுக்காக முதல்நாள் (30,03,2019 சனிக்கிழமை இரவு சுமார் 8.00 மணியளவில் திருநாவுக்கரசர் குருகுலத்திலிருந்து வாகனம் (வேன்) செல்ல உள்ளது எனவே சிவனடியார்கள் அனைவரும் முதல்நாள் இரவு வந்து உழவாரப்பணியில் கலந்து சிவன் அருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகொள்கிறோம்.
இக்கோயிலின் சிறப்பு ; இது முற்காலத்தில் பிரசித்தி பெற்ற சிவ மிக பழைமையான சிவ ஆலயத்துடன் தற்போது
சக்தி வழிபாட்டிற்கான சிறந்த தலமாக விளங்குகிறது.
திருமண தடைகள் நீங்க பரிகாரத்தலம்
கணவர் நீண்ட ஆயுள் பெறவும் நோய் இன்றி இனிது வாழ வேண்டும் தலம்
சிவனருள் பெற அன்புடன் அழைக்கும் நம் குருநாதர் அய்யா
திருநாவுக்கரசர் குருகுலத்தின் குருநாதர்
சிவச்சாரியார் சிவத்திரு. க.கணேசன் அய்யா
திருநாவுக்கரசர் குருகுலம்,இராமலிங்காபுரம்
தொடர்புக்கு ; 99521 95895. 8637601171
இராஜபாளையம்
உழவாரம் அதுவே தேவராம் இறைப்பணியுடன் இணைந்த ஆன்மீகப்பணி
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக