செவ்வாய், 10 ஜூலை, 2012

ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம்


ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் -

 ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் பற்றி வழங்கப்பட்ட நெறிமுறைகளும் அதன்பயன்களும் 1) புத்தியால் அறியப்படுவதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய, பேரின்பத்தை எங்கு காணப்படுமோ, அந்நிலை அறிந்த பின் இவன் உண்மையிலிருந்து வழுவுவதில்லை
 2) எந்த ஒரு பேரின்ப நிலையை அடைந்த பிறகு , அதைவிட அடைவதற்கு மேலான பேரின்பம் வேறொன்றும் இல்லை என எண்ணுகிறானோ, அப்பேரின்பத்தில் நிலைத்த பிறகு மிகப்பெரிய துக்கம் வந்தாலும் கலங்குவதில்லை
3) எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் ஆசைகள் அனைத்தையும் துறந்து மனதால் இந்திரியக் கூட்டத்தை எல்லா பக்கங்களிலும் வசப்படுத்தும்
4) உறுதி பூண்ட மதியால் மனதைமெதுவாக பரமாத்மாவில் பொருத்திய பின் வேறு எதைப் பற்றியும் சிந்தித்தல் கூடாது,
5) எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசம் அழைத்துச் செல்க
 6) தியானத்தால் மனம் சாந்தமாகி ரஜோ குணம் அமைதி பெற்று, மாசு நீங்கி பிரம்மமேயாகி இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது,
 7) யோக நிலையில் பாபங்கள் நீங்கப் பெற்று ஆத்மாவில் நிலைபெற்று பிரம்ம சம்பந்தத்தால் உண்டாகும் உன்னதமான சுகம் எளிதில் கிடைக்கிறது
8) யோத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயர்களிடத்தும் தானிருப்பதையும் தன்னுள் எல்லா உயிர்களும் இருப்பதையும் காண்கிறான்,
9) எவனொருவன் தன்னை பரமாத்மாவிலும், பரமாத்மாவில் தன்னையும் காண்கிறானோ அவனை விட்டு பரமாத்மா ஒருபோதும் விலகுவதில்லை, அவனும் அதனை விட்டு விலகுவதில்லை
10) இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் மற்றும் சமப்பார்வை பெற்றவன் பரமயோகியாகக் கருதப்படுவான்
அதன்பயன்கள;
1)தியானத்தில் மனைத் கட்டுப்படுவத்து கடினம்,அது சலனமுடையது, ஐயமில்லை,ஆனால்பழக்கத்தாலும், பற்றின்மையாலும் கட்டி விடலாம்

2)சுயக்கட்டுபாடு இல்லாதவனுக்கு யோகம் அரிதென்று, ஆனால் கட்டுபாட்டுடன் இருப்பவனுக்கு முயற்சியால் அடைய வழி உண்டு

3) நம்பிக்ைகயுடையவன் முயற்சியுள்ளவன் யோகத்தினின்று ஒருபொழுதும் தோற்று்ப்போவது இல்லை,
4)யோகத்தில் தவறியவன் புண்ணியம் செய்வோரின் உலங்களை அடைந்து அங்கு கணக்கில்லா வருடங்கள் வாழ்ந்து தூய்மையுைடய செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான்
5)யோகியனவன் யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்,இவ்வுலகில் இதுபோன்ற பிறவிகிைடப்பது அரிது,
 6)அவ்வாறு பிறப்பவன் பூர்வ ஜன்மபுத்திைய பெறுகிறான், அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி ெசய்கிறான்
7)தனது பழைய பழக்கத்தால் தன் வசமின்றி யோகப்பாதையில் ஈர்க்கப்படுகிறான், யோகத்ைத பயில ேவண்டுமென்ற ஆவலினால் அவன் வேகத்ைதயும்கடந்து செல்கிறான்
8) ஊக்கத்தோடு முயன்று, மனதை தன் வசப்படுத்தி பாவம் நீஙக பெற்ற யோகியானவன் அப்ேபாது பல பிறவிகளில் ெபற்ற பக்குவத்தால் மேலான நிலையை அைடகிறான்
9) தவஞ்செய்ேவாைரக்காட்டிலும் யோகி சிறந்தவன்,ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருத்ப்படுகிறான்,கருமிகளிலும் அவன் சிறந்தோன்,
10) எவனொருவன் பரமாத்மாவில் நம்பிக்கை கொண்டு ேபாற்றுகிறானோ அவன் மிக மேலான யோகியாவான்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக