சனி, 19 ஜனவரி, 2013

திருமந்திரத்தில் ஒரு மந்திரம்


திருமந்திரத்தில் ஒரு மந்திரம் பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறிதத்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே - திருமந்திரம் - 2883 (பசு) மேய்ப்பார் இல்லாததினால் கட்டுபாடின்றி திரிந்த பசுக்கள் மேய்ப்பான் கிடைத்துவிட்டால் , அவைகள் அடங்கி நல்ல முறையில் பாலைத் தருவது போல, (பார்ப்பான்) - ஆன்மா அடங்கியுள்ள (பாற்பசு) ஐம்புலங்களைக் கொண்ட அகத்தினை , ஐம்புலங்களையும் அடக்கி வென்ற சரியான குருவின் (மேய்ப்பான்) அறிவுரைகளைக் கொண்டு வெறி கொண்டு , கட்டுப்பாடின்றி திரியும் மனத்தினை நல்வழி படுத்தினால் அடங்கிய ஐம்பொறிகளும் சிவ புண்ணியத்தை நமக்கு தரும் - என்று கூறுகின்றார் திருமூலர் குருவின் துணையுடன் தான் ஐம்புலங்களை அடக்கி சிவ புண்ணியத்தை அடையமுடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக