வியாழன், 31 ஜனவரி, 2013


காயகல்பம் மூலமாக என்றும் இளமையுடன் வாழ்ந்து, உரிய காலம் வந்தவுடன் தமது உடலை உயிருடன் ஜீவ சமாதியாக்கிக் கொண்டவர்கள் சித்தர்கள். அவர் கள் ஜீவசமாதியாகும்போது அங்கே என்ன ஆற்றல் விளைய வேண்டும் என்று எண்ணி முடிவு செய்தார் களோ, அந்த ஆற்றல் அவ்விடங் களில் இன்றும் அவர்களது சக்தியுடன் எழும்பிக் கொண்டிருக்கிறது என் பதுதான் விசேஷ தத்துவமாகும். அப்படி சித்தர் கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம். கமலமுனி- திருவாரூர். கும்பமுனி- கும்பகோணம். அகப்பேய் சித்தர்- எட்டுக்குடி. இடைக்காடர்- திருவண்ணாமலை. திருமூலர்- சிதம்பரம். சட்டைமுனி- சீர்காழி. மச்சமுனி- திருப்பரங்குன்றம். போகர்- பழனி. குதம்பைச் சித்தர்- மயிலாடுதுறை. கொங்கணர்- திருப்பதி. அகத்தியர்- திருவனந்தபுரம். கோரக்கர்- பேரூர். இப்படிப்பட்ட தலங்களில் உள்ள தீர்த்தங் களில் நீராடி, சித்தர்களின் ஜீவசமாதிகளைத் தரிசிப்பது சிறப்பான நன்மைகளைத் தரும். தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங் கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக