சனி, 14 டிசம்பர், 2013

திருநீற்றின் மகிமை


திருநீற்றின் மகிமை விபூதி, பசிதம், பஸ்பம், க்ஷாரம், ரக்ஷா என்ற ஐந்து காரணப் பெயர்கள் திருநீற்றுக்கு உண்டு, நிறைந்த செல்வத்தை அளிப்பதால் விபூதி எல்லாப் பாவங்களையும் உண்டுவிடுவதால் பஸ்பம் , ஒளிவீசச் செய்வதால் பஸிதம், வரக்கூடிய ஆபத்துக்களை கழிப்பதால் க்ஷாரம், பூதம் பிசாசு, பிரமராட்சம், பிறவிநோய், ஆகிய அச்சங்களிலிருந்து காப்பதால் ரக்ஷா என்று கூறப்படுகிறது. சங்கு ஒன்றைத்தவிர மற்ற எந்த வெண்மையான பொருளை எரித்தாலும் அவை கருமை நிறமாக மாறும், ஆனால் கருமையான பசுஞ்சானத்தை எரித்தால் வெண்மையான திருநீறு கிடைக்கிறது, மனதில் ஏற்படும் கருமைகளை போக்கி ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வலிமை திருநீற்றுக்கே உண்டு, சிவாய நம என்று கூறி திருநீறு அணிவதால் கீழ்க்கண்ட சுகங்கள் கிடைக்கும் என்று வள்ளலார் பாடியுள்ளார், " பாடற்கினிய வாக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற்கினிய அடியவர் தம் கூட்டமளிக்கும் ஆடற்கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆனை கண்டால் தேடற்கரிய திருவனிக்கும் சிவாய நம என்றிடு நீறே" திருநீறு சிறந்த கிருமி நாசினி உடலிலி பூச துர்நீைரை இழுக்கும், முகத்தில் பூச முகவாதம் வராது தடுக்கும், நெற்றியில் மூன்று கோடுகளாக திருநீறு தரிப்பதால் கீழ்கண்ட ந்ன்மைகள் உண்டாகும், 1) வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் 2) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும் 3) ஆணவம், கர்மம், மாயை நீக்கும் 4) காமம், வெகுளி, மயக்கம் தீரும் 5) பிராரத்தம், சஞ்சிதம், ஆகாம்யம் என்ற தத்துவங்களை உணர்த்தும் 6) ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம், ஆகியவற்றை தெளிவுறச் செய்யும் 7) சந்தேகம், மயக்கம், விபரீதம், ஆகியவற்றை போக்கும் 8) இறப்பு, நிகழ்வு எதிர்வு ஆகியவற்றை தடுக்கும் 9) காலம், பொருள், சேதம், ஆகியவற்றை தடுக்கும் கூன் பாண்டியன் என்ற மதுரை மன்னனின் வெப்பு நோய் நீங்க திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருநீற்றுப் பதிகத்தை திருநீற்றை பூசிக் கொள்ளும் பொழுது உச்சரிக்க வேண்டும், திரு நீற்றுப்பதிகத்தில் சில வரிகள்: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு ெந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றை போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னவன் உடலுற்ற தீப்பணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!

1 கருத்து:

  1. தீப்பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும்

    என வரும் என நினைக்கிறேன்


    பதிலளிநீக்கு