சனி, 20 செப்டம்பர், 2014

திருஐந்தெழுத்தின் ஆற்றல்


திருஐந்தெழுத்தின் ஆற்றல் அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகள் ஆவனவும் அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் நஞ்சவித்த காளத்தி யார்யார்க்குங் காண்டற்கு அரிதாய்ப் போய் நீளத்தே நின்ற நெறி .... நக்கீர தேவநாயனார் திருமறை 11 திருஐந்தெழுத்தே அருமறை ஆகும், அஞ்செழுத்தை ஓதி மந்திரயோகம் கைவரப் பெற்றவர்க்கு முத்தி நெறி (பிறவாநெறி) மிக எளிதாகும், மற்றவர்களுக்கு மிக அரிதாகும். பிறவாமை வேண்டுவோர் பல வழிகளை மேற்கொள்கிறார்கள், இது இயல்பே ஆகும். மிக எளிய வழி திருஐந்தெழுத்தை ° சிவாய நம° எப்பொழுதும் ஓதுவதுதான் நக்கீர தேவ நாயனாரின் அனுபவ வாக்கு ஆகும். கோபம் வரும் காலங்களிலும் துன்பம் வருங்காலங்களிலும் நோய் மிகும் காலங்களிலும் ஐந்தெழுத்தை ° சிவாய நம° சொல்லிப்பழகிவிட வேண்டும்,பழக்கத்தினால் இதனை செய்யலாம். காளத்தியிலிருந்தே கயிலையைக் கண்டு வணங்கிய நக்கீர தேவ நாயனார் அல்லரோ இதனைக் கூறுகிறார், மகா மந்திரம் இம்மந்திரம் என்கிறார் திருச்சிற்றம்பலம் நன்றி தமிழ்வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக