ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

திருமுறைகள் காட்டும் பக்தி நெறி


திருமுறைகள் காட்டும் பக்தி நெறி இறையன்பு சாதி பேதமற்றது. இந்து சமயத்தில் இறையன்பு பெறவும் வழங்கவும் சாதி ஒரு பேதமாகக் கருதாது, எல்லோரும் ஒன்று சமய சின்னம் தரித்த எவறும் இறையன்பு கொண்டவராகவே கருதி அன்பு செலுத்தப்பட்டது. சாத்திரம் பலபேசும் சழக்கார்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் = திருமுறை 5 இறையருளை பெற சாதி வேறுபாடு ஒரு தடையாக இருக்கவில்லை. பல்வேறு இன வேறுபாடுகள் மற்றும் சாதி சமயம் இருந்தாலும் இறையருளை பெற தடை ஏதும் இல்லாதததை திருமறைகளில் காணலாம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆதிசைவ மரபில் அவதரித்தவர். அவர் இருவேறு குலத்தில் பிறந்த பெண்களையே திருமணம் செய்து கொண்டார். சேரமான் பெருமான் நாயனார் ஒரு பேரரசர் முடிசூட்டு விழா முடிந்தது. யானையின் மீது வீதி உலா வந்து கொண்டிருந்தார் வீதியின் மறுபக்கம் கோடியில் ஒரு சலவைத் தொழிலாளி உவர் மண் தலையில் சுமந்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தார். உவர்மண் அவர் உடம்பில் படிந்து உடம்பெல்லாம் வெள்ளையாக வெளுத்திருந்தது. வீதியின் மறுமுனையில் யானை மீது வந்து கொண்டிருந்த சேரமான் கீழ் இறங்கினார், அதற்குள் சலவைத் தொழிலாளியும் இவர் எதிரில் வந்துவிட்டார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் சேரமான் பெருமானுக்கு திருநீறு பூசிய சிவவேடம் நினைவிற்கு வந்தது.. அவருடைய காலில் வழுந்து வணங்கினார். சலவைத் தொழிலாளி பயந்து நடுநடுங்கி அரசபெருமானே அடிவண்ணான் நான் என்னை அரசர் வணங்குவதா? என்றார். சேரமான் அடிச்சேரன் என தொழுதெழுந்தார். தம்மை சேர அரசர் என்று நினையாது தான் ஒரு சிவனடியாருக்கு அடிமைஎனவே அவர் உணர்ந்தார். இைறயன்பிற்கு வண்ணார் என்றோ அரசர் என்றோ மனம் எழவில்ைல. அப்பூதி அடிகள் அந்தணர் குலத்தில் பிறந்தவர், திருநாவுக்கரசர் வேளாளர் மரபில் வந்தவர். வேளாளர் குலத்தில் பிறந்த அப்பர் அடிகளை அப்பூதி அடிகள் குலகுருவாகவே கொண்டு முக்தி பெற்றார். தம்மை அந்தணர் என்று ஒருபோதும் எண்ணினார் அல்ல. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த நீலகண்ட யாழ்ப்பாணரை தம்முடன் ஆலயங்கட்கு எல்லாம் அழைத்து சென்றார், அந்தணர் குல திருஞானசம்பந்தர் சுவாமிகள். இதைப்போலவே நம்மை ஆட்கொள்ள வேண்டி இறைவரே மானுடவடிவம் தாங்கி குருவாய் வருகிறார். அவ்விதமாக அவதரித்தவர்கள் தான் நால்வர் பெருமக்களும் திருமறை ஆசிரிய பெருமக்களும். தம்முடைய சுய தேவைகளை பற்றி சிறிதும் நினையாமல் உலக மக்களின் நன்மைக்காகவே பாடுபட்டவர்கள் இவர்கள். இவர்கள் நீண்ட கால இடைவெளிக்கு பின்புதான் உலகில் தோன்றுகிறார்கள் இத்தகைய ஞானிகளால் உலகம் நிறைய பயனை பெறுகிறது. யாருடைய வீட்டில் பன்னீரு திருமுறைகள் உள்ளனவோ அது ஒரு கோவிலாகவே ஆகும். திருமுறை நூல்களை கையில் வைத்திருப்பவர் இறையவர் திருவடிகளை தமது கைகளால் பற்றிக் கொண்டுள்ளார் என்பது தான் உண்மை. உலகமக்கள் யாவருக்கும் ஏற்ற உண்மைகளை உணர்த்துபவை பன்னிரு தமிழ° வேதங்களாகும். திருச்சிற்றம்பலம் நன்றி ; தமிழ் வேதம் இன்னும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக