செவ்வாய், 13 ஜனவரி, 2015

சித்தர் திருமூலர்


சித்தர் திருமூலர் கூடுவிட்டு கூடுபாய்ந்த சித்தர்களுள் மிகவும் பிரசித்த பெற்று கூடு மாறிய உடம்புடன் கொண்ட பெயரினைக் கொண்டவர் திருமூலர் என்ற சித்தர், மூலக்குருவாம் தட்சினாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்ற நந்திகள் நால்வருடன் சேர்த்து எண் சித்தர்களில் ஒருவர் சுந்தரர் என்ற ஞானசித்தர் திருமூலர், உடம்பை சுருக்கி சிறிய அணுவாக மாற்றும் அணிமா சக்தியை பெற்றவர் திருமூலர் என்ற சித்தர்,, பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர், கைலாயத்துக்கு சென்று சிவனை தரிசித்து பேற்றைப் பெற்றவர், சித்தர்களில் முதன்மையானவர், திருமூலர் மூவாயிரம் மந்திரங்களைச் செய்ததோடு முந்நூறு மந்திரம், முப்பது உபதேசம் என்னும் நூல்களை செய்தருளியுள்ளார், "மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் மூலன் உரைசெய்தமுந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது பதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றுமே, இந்நூல்களோடு இன்றி வைத்தியம் பற்றியும் இவரின் பாடல்களில் காணலாம், சிவத்தலங்களில் சிவபெருமானைப்பற்றி பாடி காலத்தை கழித்துக் கொண்டு மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது,ஒருமுறை திருவாடுதுறைக் கடக்கும் போது , சாத்தனூர் என்னும்ஊரைக் கடக்கும் போது மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூலன் என்ற இடையன்இறந்து கிடப்பதையும், அதனைக் கண்ட பசுக்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருப்பதைக் கண்டார், பசுக்களுக்கு மூலனிடம் ஏற்பட்டு இருந்த தாய்ப்பாசத்தினை சித்தர் கண்டு மனம் இளகினார, பசுக்களின் மேல் இரக்கம் கொண்டு மாடுமேய்த்த மூலன் என்ற மாடு மேய்ப்பவனின் உடலுக்கு உயிர்ப்பிக்க முடிவு செய்தார், தனியாக ஒரிடத்ததில் தன் உடம்பில் உள்ள உயிரை கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலனின் உடம்பில் சேர்ந்து மூலனாக மாறினார், சித்தர், அன்றிலிருந்து சுந்தரர் என்ற சித்தர் திருமூலர் சித்தரானார், இறந்து கிடந்த இடையன் மூலன் தூக்கித்தில் எழுவதுபோல் எழுந்தான், மூலன் எழுந்ததால் மாடுகளும் கன்றுகளும் உற்சாகம் அடைந்து தங்கள் கால்ளைத் தூக்கி அன்பை வெளிப்படுத்தின, மாடுகள் வழிகாட்டிக் கொண்டு செல்ல மூலன் வீட்டை அடைந்தான், கொட்டிலில் மாடுகளை அடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த மூலனுக்கு அதிர்ச்சி காத்ததிருந்தது. மூலனின் மனைவி கணவன் வீடு திரும்பி விட்டதால் சந்தோசத்துடன் தொடுவதற்கு முற்பட்டாள், மூலனின் உடலில் இருப்பது சித்தர் அல்லவா? எனவே அவர் ஒரடி பின்நோக்கி நகர்ந்து என்னை த் தொடதே நான் உன் கணவன் அல்ல என்று தெரிவித்தார்,கணவன் அல்ல என்று கணவனே கூறியதைக் கேட்ட மூலனின் மனைவி ஊர் பெரியோர்களிடம் தன் நிலை பற்றி கூறினார் மன்றாடினாள், பின் ஊர் பெரியவர்களிடம் சித்தர் தான் ஒரு சித்தர் எனவும் மாடுமேய்க்கும் இடையனான மூலன் இறந்து கிடந்தததையும் அதற்கு ஆவினங்களுக்காக மனம் இறங்கி இவ்வாறு செய்தததையும் ஊர் பெரியவர்களிடம் விவரித்தார் சித்தர், இதனை அறிந்த ஊர் பெரியவர்கள் மூலன் வடிவில் இருப்பது சித்தர் தான் என்பதை இடையனின் மனைவிக்கு உணர்த்தினார் மூலனாக இருந்த சித்தர் திருமூலர் உண்மையான சித்தர் என்பதை அறிந்து ஊர் பெரியவர்கள் அவரை வணங்கினார்கள், பின் திருமூலர் தன் உடல் இருந்த இடத்திற்கு சென்றார், அங்கே தன் உடல் காணப்படாதது கண்டு அதிர்ச்சியுற்றார், மிருகங்கள் தன் உடலை இழுத்து சென்றுவிட்டதோ? இல்லை மூலனின் உடலில் இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் போலும் என்று நினைத்த திருமூலர் திருவாடுதறை கோவிலுக்கு மேற்கே இருந்த அரசமரத்தடியில் தியான நிலையில் அமர்ந்தார், அங்கே பலகாலம் இருந்து திருமந்திரத்தை இயற்றினார், திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாக இருந்தது, மூலனின் உடம்பில் புகுந்ததால் திருமூலர் சித்தர் என்று அழைக்கப்பட்டார், அவர் பெருமையை வெளிப்படுத்த திருவாடுதுறையில் அவருக்கு ஒரு கோவில் ஏற்படுத்தப்பட்டது. சித்தர்கள் சராசரி மனிதர்கள் அல்ல, தாங்கள் அறிந்த ஆத்ம தத்துவங்களை யோக சாதனைகளையும் உலகில் அனுபவங்களையும் பாடியிருக்கிறார்கள், அப்பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒன்றுமறிாத பித்தன் பாடடியிருப்பது போல் தோன்றினாலும் அதன் உள்ளே சென்று பொருளை அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.. ஒரு சித்தர் பாடிய பாடலை மேலோட்டமாக பார்த்தால் ஏதோ டப்பாங்குத்து பாடல் போல் தோன்றினாலும் அதன் உள்பொருள் நமக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது, "நந்தவனத்தில் ஒர்ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி." குயவனாக உருவகப்படுத்தப்படும் பிரம்மாவிடம் ஜீவன் என்னும் ஒரு ஆண்டி பத்து மாதமாக வேண்டி கருப்பையில் இருந்து , உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கடைசியில் அந்த உடலாகிய தோண்டிடைய போட்டு உடைக்கிறான் என்ற மாபெரும் தத்துவம் இந்த நான்கு வரிப்பாடல் வாய்லாக வெளிப்படுகிறது, இதனால் தானே இரண்டு வரிப்பாடல்களை இயற்றி திருவள்ளுவரும் சித்தராக வர்ணிக்கப்படுகிறார், சித்தர் திருமூலர் சிதம்பரம், திருவாடுதுறை ஆகிய தலங்களில் ஜீவசமாதியானதாக கூறப்படுகிறது, குருபகவானின் அருள் ஆதிக்கம் பெற்றவராக இருப்பதால் இவரை வியாழக்கிழமை தோறும் வழிபட்டால் குருபகவானின் அனுக்கிரகம் பெறமுடியும் குருவினால் ஏற்படும் தோசங்களிலிருந்து தப்பிக்க முடியும். திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய ஓம் மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

1 கருத்து: