ஞாயிறு, 11 ஜூன், 2023

அடியார்கள் வழிபாடு

 இறைவன் வழிபாட்டில் அடியார்கள் வழிபாடு

  சிவ வழிபாட்டின் மூன்று அம்சங்களான குரு,லிங்க, சங்கம வழிபாட்டில் குரு வழிபாடு நம் குல குரு, வித்தியா குரு, ஆகம குரு என்றபடி நமக்கு இறைவனை அடைய செய்யும் அற நெறிகளை நமக்கு புகுட்டி நமக்கு வழிகாட்டும் குருவை இறைவனாக வழிபாடுதல், இரண்டாவதாக இறைவனை லிங்க வடிவில் வழிபடுதல், மூன்றவாதாக சங்கம வழிபாடு என்ற வகையில் இறைவனின் தொண்டு செய்யும் அடியார்களை இறைவனாகவும், குருவாகவும் கொண்டு அடியார்களை அவர்களோடு சேர்ந்து அடியாரோடு அடியாராக வணங்கி வழிபாடுசெய்தல் 

இந்த அடியார் வழிபாட்டில் என்ன, எப்படி வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை நம் அருளாளர்கள் கூறிய வழங்கிய அறிவுரைகள் பற்றி சிந்திப்போம்.

 அடியாரை கண்டபோது செய்யத்தக்கது பற்றி அப்பர் அடிகள் கன்ராப்பூர் பதிகத்தில் கூறியஅறிவுரைகள் 

  அடியார்களின் உயர்வையும், தன்னுடைய இழிவையும் எண்ணி நாணிப் பணிவது,

 இனிய மொழிபேசி கும்பிட்டு கொண்டாடி அவர் பணியை தம் பணியாக செய்தல், அப்படி தாம் செய்யும்பணியை சிவப்பணியாக கருதி செய்ய வேண்டும்.

  " எவரேனும் தாமாக விலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி

    உவராதே அவரவரைக் கண்ட போது உகந்தடிமை திறநினைந்தும் உவந்து நோக்கி

    இவர்தேவர்அவர்தேவர் என்று சொல்லிஇரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்

    கவராதே தாெழுமடியார் நெஞ்சு னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே         அப்பர் தேவாரம் 

    நெற்றியில் திருநீறு அணிந்து உருத்திாட்சம் பூண்டு வந்தவரைக் கண்டால், அவர் எவராயினும் அவரது குற்றங்களைக் காணாமல், அவரைக் கண்டபோதே உளம் மகிழ்ந்து இறைவனை வழிபடுதல் போன்று அடியாரைத் தொழுதல் வேண்டும். அப்படி தொழுவார் நெஞ்சத்து இறைவன் குடியிருக்கும் இடமாகும் அவரே இறைவன் , திருவேடம் உடையாரைச் சிவன் எனத் தெளிந்து அவரை வழிபடுதல் சிறிதும் பிறழாது இருத்தல் வேண்டும்.

  இதன் பலன், பாசப்பற்று நீங்கி வீடுபேறு திருவேடம் சிவன் உருவே ஆகும்.

  இதனை சிவஞான சித்தியாரும் கூறியிருக்கிறார்.

 அறிவு அறியான் தனை அறிய யாக்கை ஆக்கி

 அங்கு அங்கே உயிரிக்குயிராய் அறிபொடுத்து அருளால்

 சேறிதலினால்திருவேடம் சிவம்உருவே ஆகும்

 சிவோகம்பா விக்கும் அத்தால்சிவனும் ஆவர் ......... சித்தியார்

  சிவனடியாருக்கு செலுத்தும் அன்பே சிவனுக்கு செலுத்தும் அன்பாகும்.  சிவனடியார் சிவமே ஆவார், அன்பின் அளவு சிவனடியாரிடம் காட்டும் அன்பின் அளவாகவே தெரியப்படும். ஆக, அடியவரிடத்து அன்பிலாதார் ஈசனிடம் அன்பிலாதாரே ஆவர். அடியவரிடம் காட்டும் அன்பு ஈசனுக்கு செல்லு்ம் மற்றும் எவ்வுயிருக்கும் செல்லும, இதன் பயனாக தன்னுயிர் நிலைத்த இன்பத்தை தரும்.வினைகள் குறைந்து புண்ணியங்கள் பெருகும், பிறப்பு இறப்பு ஒழிந்து இறைபேறு அடைந்து வீடுபேறு நிச்சயம் கிடைக்கும்.இதனைத்தான் பெரியபுராணம் நமக்கு அடியார் வழிபாட்டையும், அவர்கள் அடியார்களுக்கு செய்த தொண்டையும் விரிவாக நமக்கு உணர்த்துகிறது.

 எனவே அடியார் வழிபாடும் இறைவழிபாடாகும், என்பதனால் அடியார் வழிபாட்டுடன் அவ்வடியார்களோடு இணங்கி அவர்களோடு நாமும் பூவுடன் சேர்ந்த நார் நறுமணம் பெறுவதுபோல அவர்களோடு இயைந்து வாழும் போது இறைவழிபாட்டு பலன் நம்மை சேறும். அதன் வாய்ப்பாகத்தான் தற்போது நம் இராஜபாளையம் நகரில் உலக சிவனடியார்கள் ஒன்றிடும் நிகழ்வு நடைபெற போகிறது. அவ் நிகழ்வில் சிவ பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்தும், அவ்விழாவிற்கு தேவையான உதவிகள் செய்து அடியார் சேவையாகக் கொண்டு அதில் பங்கு பெற்று நாமும் அருள்பெறுவோம். அடியார்கள் என்றால் வெறும் திருநீறும் கண்டிகையும் அணிவது மட்டுமல்ல, அவர்கள் முறைப்படி தீட்சை பெற்று அனுதினமும் அனுஷ்டத்துடன் சிவபூசை பெற்று இறை அருளை தக்க வைத்துக்கொண்டவர்கள் இவர்கள் தங்களின் ஆன்மார்த்த பூசையுடன் திருக்கோவில்களிலும் உள்ள சிவலிங்கத்திற்கு பிராத்தபூசையும் உழவாரப்பணியுடன் செய்து அடியார்களின் சின்னமும் தாங்கி சிவப்பணிகள் செய்யும் ஆற்றலை கொண்டவரகள் எனவே அடியார்களை வழிபாட்டால் இறை வழிபாட்டு அருள் நமக்கு கிடைக்கும் என்பது உறுதி. எனவே வரும் 25,6,23 அன்று நடைபெறும் உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தில் கலந்து விழாவினை சிறப்பித்தும் அடியார்களோடு ஒன்றி அருள்பெற்று அவ்விழாவிற்கு தேவையான உதவிகள் வழங்கி உதவி அருள் பெறுங்கள்

திருச்சிற்றம்பலம்

புதன், 24 மே, 2023

விருதுநகர் மாவட்ட உலக சிவனடியார்கள் ஒருங்கிணைப்பு விழா &அடையாள அட்டை வழங்கும் விழா

 விருதுநகர் மாவட்ட உலக சிவனடி






யார்கள் ஒருங்கிணைப்பு விழா &அடையாள அட்டை வழங்கும் விழா





 சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்) 

உலகப் பற்றினை விடுவதற்கு குரு கூறும் உபாயம் 

“துரத்தி யுன்னை ஆசை தொடராமல் என்றும் விரத்தியினர் ஆங்கவற்றைவிட்டு / பரத்திலன்பு செய்யடா செய்யடா சேரப்ரபஞ்ச மெலாம்பொய்யடா பொய்யடா பொய் ” 


 பாடல் 107 ஸ்ரீ குருஞானசம்பந்தரின் சிவபோக சாரம்இப் பிரபஞ்ச மெல்லாம் ஒருசேர பொய் பொய் என்று உணர்ந்து அவற்றின்ேமல் உள்ள ஆசை உன்னைத் துரத்தித் தொடராத வண்ணம் அவற்றை உவர்த்து நீக்க, என்பெருமானிடத்து என்றும் நீங்காத அன்பை வைப்பாயாக, குருவின் உபதேசமாக அமைந்துள்ளது இந்தப் பாடல். இறைமீது வைக்கின்ற அன்பும் வழிபாடுமே பற்றை விடுவதற்கு வழி என்பதை வலியுறுத்துகிறார். பிரபஞ்சம் என்றால் உலகம், இந்த உலகமெல்லாம் ஒருசேரப் பொய் என்கிறார். பொய் என்றால்இல்லாதது என்று அர்த்தமன்று. பொருளின் நிலையற்ற தன்மையையே பொய் என்கிறது சைவ சித்தாந்தம். அதாவதுமாறுதலுக்கு உட்பபட்டதாய், ஐம்பொறிகளால் சுட்டி அறியப்படுவதாய் கால எல்லைக்கு உட்பட்டதாய் உள்ள அனைத்தும் பொய் என காட்டப்படுகிறது. அவை தோன்றி, நின்று, அழியும் தன்மையுடயது. இந்த பொய்யான பிரபஞ்சத்தை பற்றிக் கொண்டுதானே நாம் வாழ முடியும், அப்படி பற்றிக் கொ ள்வதால் அதுவே ேமலும் மேலும் நமக்கு ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசையே வினைத் துன்பமாக நம்மைத் துரத்தி துரத்தி தொ டர்வதற்கு காரணமாகிறது. யான் எனது என்னும் இருவகைப் பற்றினால் இந்த பிரபஞ்சத்தை இறுகப்பற்றிக் கொண்டு விடாதவர்களை துன்பமும்இறுகப்பற்றிக் கொண்டு விடாத என்கிறார். நம் உடம்போடு நம் உடமைகளோடும் எளிதல் பிரிக்க முடியாதபடி அவ்வளவு பற்றுக் கொண்டிருக்கும் நமக்கு விரத்தியோ நிறைவோ எளிதில்வராது. எனவே நம் எண்ணத்தை இறைவன் பால் நாம் திருப்பி விட வேண்டும், இறைவனது கருணையை நினைக்க நினைக்க அவன் மீது அன்பு மிகுந்து இறைபத்தியின் மூலம் இப் பிரபஞ்ச இன்பம் மிக மிக சிறுமையானதாக புலப்படும். பத்தி நெறியில் சிவத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து உள்ளம் உருகும் அன்பே பிரபஞ்ச பற்று விட காரணமாக அமையும் என்று தேவார திருவாசக அருளாளர்கள் அனுபவித்து பாடியுள்ளதை பார்க்கிறோம். தாயின் அன்பைப்போன்றே இறை அன்பு என்று உணர்த்தும் அப்பர் அடிகளைப் போல ஸ்ரீகுருஞானசம்பந்தரும்உபதேசமாக பரத்தில் அன்பு செய்யடா செய்யடா இந்த பிரபஞ்சமெல்லாம் பொய்யடா பொயயடா பொய் என்று வலியுறுத்தியுள்ளார் ஆக குருவுபேசத்தின் வழியாக இறைவனிடத்து அன்பு செய்யச் செய்ய இப்பிரபஞ்சம் நிலையானது என்றும் உண்மை புரியவரும். அதனால் அவற்றின் உவர்ப்பு வர ஆசையும் துன்பமும் துரத்தி தொடராது என்று இறையின்பத்தினை வலியுறுத்துகிறார் குருநாதர்.

திருச்சிற்றம்பலம்

புதன், 3 மே, 2023

தவத்திற்குத் தலைவனானவன் சிவபெருமானே!

 தவத்திற்குத் தலைவனானவன் சிவபெருமானே!



தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய இயல்பே தவத்திற்கு வடிவம் என்பார் ஐயன் திருவள்ளுவர். உலகிலுள்ள உயிருள்ள பொருள்களையும் உயிரற்றப் பொருள்களையும் பெருமானே அவற்றின் உள்ளே கலந்து நிற்பதனால் கலப்பினால் ஒன்றாயும்  அப்பொருள்களை அவற்றின் உள்ளே நின்று செலுத்தும் வகையால் உடனாகவும் இறைவன் வேறு பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் நின்று அருள்புரிகின்றான் என்ற உண்மையை உணருமானால், தனக்கு வருகின்ற துன்பத்தினைத் தாங்கிக்கொள்ளும் செவ்வியை உயிர்கள் பெறும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும்.


“பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய்ப் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய்ப் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய்ப் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய்ப் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய்ப் போற்றி “ என்று உயிரற்றப் பொருள்களான, நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்தினில் பெருமான் எவ்வாறு கலப்பால் ஒன்றாய் நின்று அருளுகிறான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். பெருமானின் திருவருள் துணையாலேயே உலகங்களும் கோள்களும் விண்மீன்களும்   இயங்குகின்றன. இதனால் மேற்கூறியவற்றாலும் பிற உயிர்களினாலும் பிற சத்திகளினாலும் உலகிற்கும் உலக உயிர்களுக்கும் கிட்டும் இன்ப துன்ப உணர்வுகள் பெருமானாலேயே கொடுக்கப்படுகின்றன. அதுவும் அனைத்தும் உயிர்களின் நன்மைக்காகவே கொடுக்கப்படுகின்றன. எனினும் நம் விருப்பு வெறுப்புக்களினாலும் அறியாமையினாலும் சிலவற்றை இன்ப நுகர்வாகவும் சிலவற்றைத் துன்ப நுகர்வாகவும் எண்ணுகின்றோம் என்ற தெளிவு அல்லது செவ்வி ஏற்படுமாயின், உயிர் தனக்கு ஏற்படுகின்ற  ன்ப துன்ப உணர்வுகளைப் பொறுத்துக்கொள்ளும்; அவற்றை ஒருபடித்தாகவே நுகரும். சரிசமனாக எல்லாவற்றையும் எதிர்கொள்கின்ற ஒக்கு நோக்கும் நிலை ஏற்படும். “கேடும் ஆக்கமும் கெட்டத் திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவர்” எனும் இருவினை ஒப்பு ஏற்படுதலையே தவம் முற்றுதல் என்று குறிப்பிடுவர்.


இன்ப நுகர்வு துன்ப நுகர்வு, நல்ல செயல் தீய செயல் என்ற வேறுபாடு அற்றவர் பிற உயிர்களைத் துன்பப்படுத்தி இன்பம்  காணுதல் எனும்  இழிய செயலுக்கு ஆளாக மாட்டார். மன்னுயிரைத் தன்னுயிர் போல காக்கவும் அதற்கு உதவவும் மட்டுமே துணிவர். ஆரியிர்களுக்கு அன்பு செய்யும் உயர்ந்த இயல்பைப் பெறுவர். இறைவன் வாழும்  இடமாக  எல்லா உயிர்களையும்  போற்றி வணங்கி, அவை எப்பொழுதும்  இன்புற்று இருத்தலையே வேண்டுவர். இதனையே, “ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பிரான் குறிப்பிடுவார்.இதுபற்றியே பிற உயிர்களின் மீது பரிவும் அன்பும் கொண்டு, இன்ப துன்பங்களை ஒருபடித்தாய் எதிர்நோக்கி வாழ்ந்த அருளாளர்களைத் தவச்சீலர்கள் என்கிறோம்.


தனக்கு வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமலும் இருக்கின்ற தவத்தினை எய்துவதற்குச் சிலர் தங்களை அன்றாட உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொண்டு, காவி அணிந்து, தாடியையும் மீசையையும் வெட்டாமல், துறவு கோலத்தோடு தங்களைக் காடுகளிலோ குகைகளிலோ தனிமை படுத்திக் கொள்கின்றனர். மூச்சுப் பயிற்சிகள் மூலமும் நீண்ட நேரம் அமரக்கூடிய இருக்கை வகைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமும் உலகை மறந்து இறைவனைத் தொடர்ந்து எண்ண முற்படுகின்றனர். அப்படி முயன்று இறைவனோடு அகத்திலே கூடி இருக்கின்ற அகத்தவ நிலையைச் சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்கின்றனர். இதற்குக் கடின பயிற்சியும் முயற்சியும் தேவையாகின்றது. இவர்கள் இப்பயிற்சியினால் கிட்டும் சிறு-சிறு சத்திகளான எட்டுச் சத்திகளைப் பெறுவர்.


உடலை மென்மையாக்கிக் கொள்ளல், உடலை நுண்மையாக்கிக் கொள்ளல், உடலைப் பருமையாக்கிக் கொள்ளல், விரும்பியதை எய்தல், விண்தன்மை அடைதல், ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல், சிற்சத்திகளை ஆட்சி செய்தல், தன்வயப்படுத்துதல் போன்ற எட்டு சிற்சத்திகளைத் துணைக்கொண்டு இறைவனை மேலும் தொடர்ந்து உய்த்து உணரவும் தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொண்டுப் பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதற்கும் மட்டுமே எண்ணுவர். இவ்வாற்றல்களை ஒருபோதும் எளிய உலகச் சிற்றின்பங்களைப் பெறுவதற்கும் நுகர்வதற்கும் பயன்படுத்தமாட்டார்கள். சிவ அறிவையும் திருவடிப்பேற்றினையும் பெறவே அவற்றைத் துணைக்கொள்வர். எது எப்படி இருப்பினும், அகத்தவம் இயற்றுகின்றவரும் பத்திநெறியில் நிற்பவரும் தங்களுடைய தவத்தினை இயற்றும்போது நினைவில் நிறுத்த வேண்டிய கடவுள் பரம்பொருளான சிவபெருமானே என்பது திருமூலர் வாக்கு.


நாம் இயற்றும் இவ்விருவகைத் தவங்களையும் நிறைவு பெறச் செய்யக்கூடிய இறைவன் சிவபெருமான் ஒருவனே! அவன் இட்ட பணிகளைச் செய்யும் இந்திரன், வாயு, வருணன், தீ, காலன், முதலாய தேவர்களும் ஒன்பது கோள்களும் அவனின் ஆணைப்படியே செயல்படுகின்றன. இறைவனின் ஆணைப்படி இயங்கும் தேவதைகளும் பிறவும் தாம் உய்வதற்குக் கால காலனாகிய, மகாதேவனாகிய சிவபெருமானையே வேண்டிப் பணிந்து நிற்கின்றன. சிவபெருமான் இல்லையேல் அவனுக்கு ஏவல் செய்யும் தேவர்களின் பணி இல்லாமல் போகும். இதனால் தேவர்களை எவரும் மதியாமல் போவர்.


தவத்திற்குத் தலைவனானவன் சிவபெருமானே! தவத்தின் முடிந்த முடிவாகிய வீடு பேற்றினை அளிப்பவனும் அவனே என்பதனை, “அவனை ஒழிய அமரரும் இல்லை, அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை, அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை, அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே” என்று திருமுலர் குறிப்பிடுவார். உண்மைத் தவத்தினை இயற்றி நிலைத்தப் பேரின்பப் பெருவாழ்வினை அடைவோமாக!

திருச்சிற்றம்பலம்

சனி, 29 ஏப்ரல், 2023

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

 


 சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை




பாறையில் விதை விதைத்தால் ..... பலன் உண்டோ?

  செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

  பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ

அத்தன் என்று அரியோடு பிரமனும்

 துத்தியஞ்செய நின்றநற் சோதியே ............தி,மு,5 பதி, பொது


   ( மனப்பாறைப்பட்டு =பாறைபோான்ற கல்மனம் உடையவர்கட்கு,  அத்தன் = தலைவன்., துத்தியம் செய = போற்றித்துதித்தல், தேஎன்று = பெருந்தெய்வம் என்று)


  செத்துச் செத்து பிறக்கும் சிறுதேவதைகளையே கடவுள் (முழுமுதற் பொருள்) என்று எண்ணி பக்தி செய்யும் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு முழுமுதற் பொருள் சிவபெருமானார் என்று திருமாலேோடு, பரமனும்துதித்து போற்றுவது பொருந்துமோ?

  கடவுள் நிலை உணர்ந்து அமமயமான அருளாளர்கள் முழுமுதற் பொருள் / பெருந் தெய்வத்திற்கும், செத்துச் செத்துப் பிறக்கும் சிறு தேவதைகட்கும் இலக்கணம் கூறியுள்ளார்கள்.

  செத்து செத்து பிறப்பவை யாவும் சிறு தெய்வங்களாகும். அவை பிறக்கும் இறக்கும் மேல் வினையும் செய்யும்,வேதனைப்படும்,

  பிறப்பும் இறப்பும் / முதலும் முடிவும் இல்லாததது தான் பெருந்தெய்வம் அதுவே முழுமுதற்கடவுள்

  தோற்றம் உண்டானால் இறப்பும் நேர்ந்தே தீரும். பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு. தோற்றம் உடையவையெயல்லாம் பிறந்து, குழந்தையாய் வளரும் இவைகட்கு பிள்ளைத்தமிழ் உண்டு.  ஆனால் சிவபெருமானார் பிறந்திருந்தால் தானே குழந்தையாய் இருந்திருப்பார் அதனலாேயே அவருக்கு பிள்ளைத்தமிழ் ஏதும் கிடையாது. திருநாவுக்கரசர் திருவாரூர் திருத்தாணடகத்தில் தி,மு 6ல் சிவபெருமானார் பிறாவதவர் என்பதை பாடி யுள்ளதைக் காணலாம். "பாலனாய் வளர்ந்திலாப் பான்மையான் " என்கிறார்.

   ஒரு ஊருக்கு ஒரு தலைவன்,ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியர் ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர், ஒரு நாட்டிற்கு ஒரு அரசன் அல்லது பிரதமர், இதைப்போல அகில் உலகங்களையும் ஆளக்கூடிய கடவுளும் ஒருவரே. அவரைத்தான் சிவபெருமான் என்கிறோம். இவரே முழுமுதற்கடவுள்.

  மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள், ரிசிகள், திருமால், பிரம்மா, கிரகங்கள், தேவேந்திரன் சூரியன், சந்திரன் மற்றமுள்ள எல்லா தெய்வங்களும் தேவதைகளும் சிவபெருமானாரைத்தானே தொழுகின்றன, ஆனால் இப்பெருமான் தொழக்கூடியவர் எவரும் இல்லையே என்பதை மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் கூறியுள்ளார.

 " என்னால் தொழப்படும் எம் இறை மற்றவன்

  தன்னால் தொழப்படுவார் இல்லை தானே "   திருமந்திரம் (தி,மு10)


 " சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

   அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,,,  திருமந்திரம்


  பிரமனும் மாலும் மேலைமுடியோடு பாதம்

  அறியாமை நின்ற பெரியோன்      ....  திரு,மு, 4/14/02


 ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

  ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே    ...... 05/100/03


  அவனை ஒழிய அமரரும் இல்லை

 அவனன்றி ெசய்யும் அருந்தவம் இல்லை

 அவனன்றி மூவரல் ஆவது ஒன்றில்லை

  அவனன்றி ஊர்புகுமாறு அறியேனே......  திருமந்திரம் 


 சிவபெருமானை அன்றி வேறு பெருந்தெய்வம் உலகில் இல்லை. முத்திக்கடவுள் என்று இவருக்கு ஒர் பெயரும் உண்டு. இவரைத்தவிர ேவறு யாராலும் பிறப்பை அறுக்க முடியாது என்கிறார் திருமூலர்.

  இவரை வழிபடுவதால் நாம் அடையும் பலன்கள்

 1. இம்மண்ணில் மீண்டும் பிறக்க மாட்டார்கள்

 2. சிவனுலகு அடைந்து இன்பமாய் வாழ்வர்.

 3. மனச்சோர்வு அடையார்.

  4. பசியால் வருத்தப்பட மாட்டார்கள்

  5. நோயால் வருந்த மாட்டார்கள்.

     இந்த உண்மைகள் எல்லாம் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு  சொன்னால் கேட்க மாட்டார்கள் என்கிறார் அப்பர் அடிகள்.

  பஞ்சு மென்மையானது அதனை தண்ணீரில் போட்டால் ஈர்த்துக் கொள்ளும் , கல்லை தண்ணீரில் போட்டால நீரை ஈர்க்காது. அதைப் போல கல்போன்ற மனம் உடையவர்களுக்கு உண்மைகள் புகா.

 பாறையில் விதை விதைத்தால் முளைக்காது. கல்மனம் உடையவர்கள் மனத்தில் சிவ பெருமானரை பற்றி மேற் கூறிய உயர்ந்த உண்மைகள் நிற்காது. இவர்கள் செத்து செத்து பிறக்கும் சிறு தெய்வங்களையே வழிபடுபவர்கள் என்கிறார் நாவரசர் அப்பர் அடிகள்.

திருச்சிற்றம்பலம்

(நன்றி தமிழ் வேதம்)


புதன், 26 ஏப்ரல், 2023

அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும்


 அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.
அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.
இதனால் பெறும் பயன் வருமாறு :-
கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.
இதற்குப் பிரமாணம் :-
சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).