சனி, 20 ஜனவரி, 2024

சைவ சித்தாந்த முத்துக்கள்

 


சைவ சித்தாந்த முத்துக்கள்

                             ஆன்மாவாகிய உயிர் வீடு பேறு உய்யும் முறை
  ஆன்மாவாகிய உயிர் இறைவனின் திருவடி பேறு அடைய  சரியை,கிரியை, யோகம் என்ற தவம் செய்து ஞான அறிவு தெளிிந்து, இச்சை என்னும் பக்தியால் அன்பு செய்தும்,செயல் என்னும் தொண்டினால் பணிந்து ஏத்தியும வழிபடுதல் வேண்டும் பணிதலால் பாசம் நீங்கி, பரவுவதால்  வீடுபேறு கிட்டும். கீழ்கண்ட ஐந்து வழிகளால் வீடு பேறு அடைய முடியும் என்கிறது மெய்கண்டாரின் சிவஞானபோதம்
 1.பிறவி துன்பத்தை உயிர்கள் உணர்தல். பல பிணிகளை உடைய உடலில் உள்ள உயிர் அதிலிருநது கொண்டு, மிகச் சிறிதாக உள்ள இன்பத்தை நுகர விரும்புகிறது. இதனை சம்பந்தர் தன் பாடல் வாயிலாக 
  செடி கொள் நோய் ஆக்கைஆம்
  பாம்பின்வாய் / தேரை / வாய் சிறு பறவை
  கடிகொள் பூந்தேன் சுவைத்து 
 இன்புறல் ஆம்  என்று கருதினாயே  "  என்கிறார் 
   2, மல பரிபாகம்
   உயிர்கள் பிறவியில் இருந்து நீங்க மலபரிபாகம் பெற வேண்டும், மல பரிபாகம் என்பது மலத்தின் ஆற்றல் தேய்தல் ஆகும். அதாவது ஆணவமலத்தின் காரியம் ஆகிய மோகம் என்று கூறப்படும் கெட்ட குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல் ஆகும்
  ஆன்மா வீபரீத உணர்வு / பொய்யை உண்மை என்றும், உண்மையை பொய் என்றும் திரியுணர்வை உண்மை என்றும் எண்ணிக்கொண்டும் இருப்பது. ஆக ஆணவம்(மலம் ) பரிபாகம் அடையாத போது பிறவியை துன்பம் என அறியாது அதில்உழலும். மலபரிபாகம் உயிரில் படிப்படியாக நிகழும்  அறிவு வளரும் முன்பு அறியாத துன்பத்தை அறியும் பிறவியிலிருந்துநீங்க விரும்பும்.
  3, சக்தி நிபாதம்
 சக்திநிபாதம் என்பது  திருவருட் சக்தி பதிதல் ஆகும். அதாவது சிவபெருமான் திருவடியை அடையவேண்டும் என்னும் நாட்டத்தால் ஆன்ம அறிவில் சிவசக்தி பதிதல்.
   சக்தி நிபாதம் என்னும் சொல்லுக்கு பொருள் சக்தியினது வீழ்ச்சி என்பதாகும். அதாவது ஒரு சபையில் ஒரு கல் வந்து வீழ்ந்தால்அந்த கல் அங்குள்ளவர்களை அந்த சபையிலிருந்து அங்குள்ளவர்களை அஞ்சி ஓட செய்தல் போல , ஆன்மாவிற்கு திருவடியை அடையவேண்டும் என்னும் சக்தி நிபாதம் நிகழ்ந்தால் அந்த சக்தி நிபாதம் அந்த ஆன்மாவை உலகப் பொருளிலிருந்து அஞ்சி ஓடி சற்குருவை தேடும்படி செய்யும்
  திரோதன சக்தியால் மலங்களை கூட்டி உயிர்களை பிறவித்துன்பத்தில் உழல்வித்து உயிர் நோயால் உள்ள ஆணவ மலம் வலிவிழந்து நீங்கும்நிலைமை ஏற்படும் போது திரோதன சக்தி அறக்குணமாக மாறும் அதுவே அருள் சக்தியாகி சக்தி நிபாதம் ஆகும். 
  4, இருவினை ஒப்பு 
ஒரு ஆன்மாவிற்கு சக்தி நிபாதம் ஏற்பட்டுவிட்டால் இருவினை ஒப்பு கிடைக்கும்
 இருவினை ஒப்பு என்பது நல்வினையின் பயனாக இன்பம்வரும் போது அதனை விரும்புதலும் தீவினையின் பயனாக துன்பம் வருங்கால்அதனை வெறுத்தலும், செய்யாமல் உணர்ச்சி வேறுபடாமல் அவ்விரண்டையும் ஒன்றுபோல நினைத்து பற்றின்றி நிற்கும் மனப்பான்மையே இருவினை ஒப்பு என்பது, ஓடும் செம்பொன்னும் ஒக்க வே நோக்குவர் என்கிறது பெரியபுராணம், இவ்வினை ஒப்பு முற்ற நிகழ்ந்த போதே இறைவன் குருவாய் வந்து ஞானத்தை அருள்வான். 
 5- பக்குவம்
   இருவினை ஒப்பு, மலபரிபாகம், சக்தி நிபாதம் இம்மூன்றும் ஒருங்கே நிகழும் நிலையில் பக்குவம் நிகழும், இதனைதான் ஆன்மா பக்குவம் அடையும் நிலை என்றும் பக்குவப்பட்ட ஆன்மா முக்தி நிலைக்கு தயாராகும் என்பர் அருளாளர்கள்
 6, உய்யும் நெறி °
   மந்த தரத்தி்ல் இறைவன் உயிருக்கு நிகழ்விப்பது உய்யும் நெறி,
 இதுவரை மறைப்பு சக்தியை (திரயோதன சக்தி) செலுத்திய இறைவர் உய்யும் பொருளாகிய அருள் சக்தியை செலுத்தி உய்வுக்குரிய நெறியில் செலுத்துவான் இறைவன்.
  சரயை, கிரியை, யோகம் ஆன தவ புண்ணியமாகிய சிவபுண்ணியம் தீட்சையால் தலைவர் சிவனார் என்னும் குருநாதர் மூலம் தீட்சை பெற்று சரியை, கிரியை, யோகங்களை செய்தல் 
 யோக நெறியில் அகபூசை செய்தல் 
 ஆக, உயிரில் நிகழும் பக்குவத்தை உயிருக்கு உயிராய் உள்ள இறைவன் அறிந்து அவரே ஞானாசிரியராக எழுந்தருளி ஞானத்தை வழங்குவார். இதுவே உயிர் வீடுபேறு உய்ய உள்ள வழிகள் 
திருச்சிற்றம்பலம்

வியாழன், 18 ஜனவரி, 2024

சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்


 சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்

1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.

2. அந்த உயிக்கு உள்ளாக இறைவன்  என்னும் மற்றொரு பொருள் உண்டு.

3. உயிர் பொருள்,உளளிருக்கும் இறைவன் உணர்த்துதல் வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக் கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.

4. உயிரினை உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்கள் உள்ளன.

5. திருவருளால் இவற்றை ( மும் மலங்களை )சார்ந்து உயிர் வாழும் கட்டம் அவ்வளவும் பந்த நிலை, அல்லது பெத்த நிலை 

6.திருவருளால் இவற்றின் ெதாடர்பு நீங்கிச் சூட்சும உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை (அல்லது ) சுந்த நிலை

7. இந்த சுத்த நிலை பேறு ஒவ்வாெரு உயிர்க்கும் உரியது. ஆனால் அதன் அதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்தற்கு வாய்ப்பது

8. இவ்வகையில் சம்பந்தப்படும் பொருட்கள் மூன்று , அவை பதி,பசு, பாசம்

9. உண்மை அறிவியற் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையில் கற்று கேட்டுத் தெரிபவர்கள் மெய்ஞானம் பெறுவர். அவர்களே மேல் கதிக்கும் வீடு பேற்றுக்கு உரியவர்.

10.வீடு பேறு என்பது உயிர் தன் சீவத் தன்னை கழிந்து, சிவத்தோடு ஏகமாய்நின்று அநுபவிக்கும் ஆராத ஓரு பேரின்ப நிலை.

திருச்சிற்றம்பலம்

சனி, 13 ஜனவரி, 2024

ஆன்மாவும் குருவும்

 


ஆன்மாவும் குருவும்

"சாதித்த தெல்லாம் தவமேனும்சற்குருவைப்

 பேதித்தால் எல்லாம் பிழையாகும்.   சித்தாந்த சிகாமணி (பண்டார சாஸ்திரம்)

  ஒருவன்பொறிகளை தன் வசப்படுத்திச் சாதித்தன எல்லாம்தவமாகவே இருப்பினும் உபதேசம் அருளும்ஞானாசிரியனை வேறாக கருதி முரண்பட்டால் அத்தவம் அனைத்தும் பிழைபடும். அரிய தவங்களை ஆன்மா சாதித்தாலும் தானாகவே சுதந்திரமாக சாதிக்கவில்லை,சிவபெருமான் தோன்றாத் துணையாக விளங்கித் தவநெறியினை அறிவித்து அந்நெறியில் ஆன்மாவைச் செலுத்துவான். அவன் அருளால் ஆன்மா தவத்தை படிமுறையில் இயற்றி முற்றுவிக்கிறது.இவ்வாறு தோன்றாத்துணையாக இருந்து ஆன்மா தவநெறியை முற்றுவிக்க அருள்செய்த முதல்வனே சற்குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்த்துவான்,எனவே இந்நிலையில் மாணாக்கன் சற்குருவோடு முரண்பட்டு எதிர்த்தால் அது சிவபிரானையே எதிர்ப்பதாகும். யாரைத் தோன்றாத்துணையாக கொண்டு தவத்தை இயற்றினானோஅந்த முதல்வனையே எதிர்ப்பதால் செய்நன்றி கொன்ற குற்றம் பொருந்தி இயற்றிய தவம் அனைத்தும் பிழைபட்டு போகும். எனவே " சாதித்தது எல்லாம்தவமேனும் சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்" எனப்படுகிறது

 சற்குருவை எதிர்த்தால் சிவபிரானை எதிர்த்தலே ஆகும் எனும் உண்மை இனிது விளங்கும் பொருட்டு சிவநிந்தை செய்த தக்கன் வரலாறு சான்றாக உள்ளதை அறியலாம்.

திருச்சிற்றம்பலம்

நன்றி பண்டார சாஸ்திரம் சித்தாந்த சிகாமணி பாடல் 1






வியாழன், 11 ஜனவரி, 2024

தலைவராகக் கொண்ட அமைப்பு இன்று 11.1.24 பதவி யேற்பு நிகழ்வு







 சுந்தரபாண்டியம் சாலியர் சமூக த்தின் புதிய தலைவராக தெற்கு கீழத்தெருவின் முறைமையின்படி திரு. சிவ.வை. பூமாலையை தலைவராகக் கொண்ட அமைப்பு இன்று 11.1.24 பதவி யேற்பு நிகழ்வு









சனி, 30 டிசம்பர், 2023

திருவாரூர்–பிறக்க முக்தி

திருவாரூர்–பிறக்க முக்தி

தியாகராஜர்(வன்மீகநாதர்) & கமலாம்பிகை



திருவாரூர் தியாகராஜர் கோவில்-பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம்

நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்

மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேர்

தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை-ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.

எமபயம் போக்கும் திருத்தலம் .

சுந்தரருக்காக சிவனே வீதியில் நடந்து சென்று பெண் கேட்ட திருத்தலம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது.

காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் “மீளா அடிமை“ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.

நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.

நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .

பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.

இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 15 தீர்த்த கிணறுகள், என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.

365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம்.

இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன.

ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர்.

வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியது- இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.

தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் தரிசனம் செய்யலாம்.

உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.

சுந்தரர், அடியார்களின் “திருத்தொண்டத் தொகை”யைப் பாடுவதற்கு, பெருமை இப்பதிக்கேயுரியது

சுந்தரர் (ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த பன்னீராயிரம் பொன்):

சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று பொன் வேண்ட, இறைவன் பன்னீராயிரம் பொன் அருளினார். சுந்தரர், மேலும் பல தலங்களைத் தரிசிக்க எண்ணி இருந்ததால், பொன் கட்டிகளை திருவாரூரில் தான் பெறுமாறுச் செய்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் அசரீரியாய் ‘இவற்றை மணிமுத்தா நதியில் இட்டுப் பின் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்வாய்’ என அருளிச் செய்தார்.

சுந்தரர் பொன்னை மணிமுத்தா நதியில் இட்டார்.

பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திருவாரூர் வந்து சேர்ந்தார்.

பரவையாரிடம் கமலாலயக் குளத்தில் பொன்னை வருவித்துத் தருவேன் எனக் கூறி, திருக்குளம் சென்றார். குளத்தில் பொன் கட்டிகளை தேடத் துவங்கினார்.

பொன் தந்த பொன்னார் மேனியன்: இறைவன் சுந்தரரின் தேவாரம் கேட்கும் பெரும் விருப்பத்தால் பொன்னைத் தருவித்துத் தராமல் இருந்தருளினார். பரவையார் புன்சிரிப்புடன் ‘ஆற்றில் இட்டு குளத்தில் தேடுகிறீரோ’ என உரைத்தார்.

சுந்தரர் ‘பொன்செய்த மேனியினீர்’ என்னும் பதிகம் பாடி விண்ணப்பிக்க, இறைவன் மிக மகிழ்ந்து பொன்னை வருவித்து அருளினார்.

திருச்சிற்றம்பலம்

சனி, 23 டிசம்பர், 2023

நம் நால்வா் வாழ்வு காட்டும் உண்மை:

 நம் நால்வா் வாழ்வு காட்டும் உண்மை:


எங்கும் நிறைந்த இனிய ஈசனின் பேரருளால்
பரமன் பாலைக்கொடுத்து திருஞானசம்பந்தரை ஆட்கொண்டாா்.
"போதையாா் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத், தாதையாா் முனிவுறத் தான்எனை ஆண்டவன்" என்பது திருஞானசம்பந்தா் அகச்சான்று.
சூலைகொடுத்து திருநாவுக்கரசரை ஆட்கொண்டாா்
"சூலை தீா்த்து அடியேனை ஆட்கொண்டாரே" என்பது திருநாவுக்கரசா் நற்சான்று.
ஓலை கொடுத்துச் சுந்தரரை ஆட்கொண்டாா்.
"அன்று வந்தெனை அகலிடத்தவா் முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி" என்பது சுந்தரா் சொல்மாலை.
காலைக்காட்டி மணிவாசகரை ஆட்கொண்டாா்.
"இணையாா் திருவடி என்தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்" என்பது மணிவாசகா் மணிமொழி.
இந்நால்வரும் சைவசமய ஆசாாியா்களாவா்.
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அவரவா் தன்மைக்கு ஏற்ப ஆட்கொண்டுள்ளாா்.
"ஆட்பாலவா்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்கவேண்டா" என்பது ஞானசம்பந்தாின் நல்வாக்கு.
திருஞானசம்பந்தா் வாழ்வில் துன்பமே இல்லாத நிலையைக் காணமுடிகிறது.
திருநாவுக்கரசா் வாழ்வில் அடிமுதல் முடிவுவரை துன்பங்கலந்த நிலையையே காண்கிறோம்.
"என்னை வகுத்திலனேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே" என்பது அப்பா் அநுபவ வாக்கு.
சுந்தரா் வாழ்வில் துன்பமும் இன்பமும் கலந்தே நடையிடுகிறது.
"பாடிய அடியேன் படுதுயா்களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்பதும் "கஸ்தூாி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்" என்பதும் சுந்தரா் அநுபவ அருள்மொழி.
மணிவாசகா் வாழ்வில் முன்னா் இன்பமும் பின்னா்த் துன்பமும் கலந்து வருவதைக் காண்கிறோம்.
"இன்றோா் இடையூறு எனக் குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" என்பது மணிவாசகாின் மணிமொழிச்சான்று