திங்கள், 4 ஆகஸ்ட், 2014

இறைவன் யார்?


இறைவன் யார்? எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம் , கோடான கோடி அணு்க்களின் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், ேமலும், வெளியும் அதுவதில் உயிர் சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இைத வள்ளலார் அவர்கள், "குலவு பேரண்டப் பகுதியோர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே நிலவிய பிண்டப் பகுதிகள் முழுவதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும் மெய்யறி வானந்தம் விளங்க அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும் அருட் பெருஞ்சோதி என் அரசே." இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் ெகாண்டிருக்கிறார், இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படி ெசயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்திைய நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும் உயிரையும் பேணப்படுத்தும் வழிவகைகளை ெதரிந்து கொள்வதே ஆன்ம ஞானம். ஆன்ம ஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவ்றறையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கணடு நிம்மதியாக வாழலாம். திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக