செவ்வாய், 23 மே, 2017

யோகிகள், ஆறு சக்கரங்களையும் மலரச் செய்வதன் மூலம் கடவுளாகி விடுகிறார்களா?


யோகிகள், ஆறு சக்கரங்களையும் மலரச் செய்வதன் மூலம் கடவுளாகி விடுகிறார்களா?


டலிலுள்ள சக்கரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) ஒவ்வொன்றும் பல வித ஆற்றல்களைக் கொண்டுள்ளன. சாதாரண வாழ்க்கையில் சிறிதளவே ஆற்றலை வெளிப்படுத்தும் சக்கரங்கள், யோக சாதனையின்போது பல உன்னத சக்திகளை வெளிப்படுத்துகின்றன. புலன்களைக் கடந்த நிலையில் அடையப்படும் இந்த சக்திகள், 'ஸித்திகள்' எனப்படுகின்றன!
குண்டலினி, ஒரே நேரத்தில் மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரத்தை அடைந்து விடுவதில்லை. மீண்டும் மீண்டும் தியானம் செய்யும்போது, சிறிது சிறிதாக மேலே ஏறிச் செல்லும். 
குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தைக் கடக்கும்போதும், மீண்டும் வந்த வழியாகவே கீழே இறங்கி வரும்போதும் அந்தச் சக்கரத்தின் ஆற்றலை வளர்க்கிறது.
மூலாதார சக்கரம் நன்கு விழிப்பு அடைந்து ஆற்றல் அதிகரிக்கும் போது, குண்டலினி பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. உடல், மூச்சு மற்றும் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆகியவை உண்டாகும். நோயற்ற உடல் வாய்க்கும். தியான வேளையில் ஸ்தூல உடல் புவி ஈர்ப்பில் இருந்து விடுபட்டு, அந்தரத்தில் மிதக்கும். பூமியால் 
எந்தவித பாதிப்பும் உண்டாகாது.
சுவாதிட்டானம் நன்கு விழிப்படைந்து ஆற்றல் அதிகரிக்கும் போது, ஸ்தூல- சூட்சும மன உணர்வுகளை உடனடியாக அறியும் ஆற்றல் உண்டாகும். நீரினால் எந்த பாதிப்பும் உண்டாகாது.
மணிபூரக சக்கரம் நன்கு விழிப்படைந்து ஆற்றல் அதிகரிக்கும் போது, மனித உடல் அமைப்பு பற்றிய முழு அறிவு உண்டாகும். நோயற்ற உடல் வாய்க்கும். மணிபூரகத்தில் இருந்து சஹஸ்ராரத்தை நோக்கி அதிக அளவு பிராண சக்தி செல்லும். அக்னியினால் எந்த பாதிப்பும் உண்டாகாது.
அனாகத சக்கரம் நன்கு விழிப்புற்று ஆற்றல் அதிகரிக்கும் போது பிராணனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் மற்றவர்களது நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலும் உண்டாகும். தெய்வீக அன்பு, கவிபாடும் திறன் ஆகியன உண்டாகும். அனைவரையும் ஊக்குவிக்கும் பேச்சாற்றலும் ஆழ்ந்த மன ஒருநிலைப்பாடும் வாய்க்கும். புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
விசுத்தி சக்கரம் நன்கு விழிப்புற்று ஆற்றல் அதிகரிக்கும் போது, வேதங்கள் பற்றிய முழு அறிவு உண்டாகும். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி அறியும் ஆற்றல் வாய்க்கும். பிறரது எண்ணங்களை அறிய முடியும். 
உண்ணாமல் உயிர் வாழ்வதற்கான ஆற்றல் கிடைக்கும். சோம சக்கரத்தில் இருந்து அமிர்தம் கீழிறங்கி வருவதை அறியலாம்.
ஆக்ஞா சக்கரம் நன்கு விழிப்புற்று ஆற்றல் அதிகரிக்கும் போது கூடு விட்டு கூடு பாயும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆற்றல்களும், ஸித்திகளும் வாய்க்கும். மனம், ஆத்மாவுடன் இணையும் ஆற்றல் உண்டாகும்.
சஹஸ்ராரம் நன்கு விழிப்புறும்போது ஆன்மாவைப் பற்றிய முழு உணர்வு உண்டாகும். சமாதி நிலை கைகூடும். பந்தங்களில் இருந்து மனிதன் விடுதலை அடைவான் (நன்றி: பிராண வித்யா; யோகி சிவானந்த பரமஹம்சா,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக