திங்கள், 12 ஜூன், 2017

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே


அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே 


மருந்து வேண்டில் மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும்புண்ணியங்கள் இவை
திருந்துதேவன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே .. த,வே, 3,25,01

திருவேண்ணீறு, உத்திராக்கம், துவர் ஆடை, சடைமுடி, முதலியன சிவச் சின்னங்களாகும். சிவனடிார்கள் இவற்றினை அணிவதும், அணிந்து கொண்டுள்ள அடியார்களை வணங்குவதும் வேண்டிய ஒன்றாகும் என்பது திருஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கும்.

பாடலின் திரண்ட கருத்து : திருத்து தேவன்குடியில் ( நண்டாங்கோயில்) எழுந்தருளியிருக்கும் தேவர்கட்கெல்லாம் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் அருந்தவத்தோர்களர் தொழப்படுவார்.
1, இப்பெருமானாருடைய திருவேடங்கள் ( திருவேண்ணீறு, உத்திராட்சம், சடைமுடி) மருந்து வேண்டுவோருக்குமருந்தாகும்.
2. மந்திரங்கள் வேண்டுபவர்க்கு மந்திரங்களாகும்.
3, சிவபுண்ணியங்கள் அளிப்பவனவாகவும் அமையும்,


மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச் செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே, 3-25-3

4, நமக்கு பெருமையை அளிப்பன
5. அறியாமையால் மனத்தில் ஏற்படும் தீய எண்ணங்களை அகற்றுவன
6. முக்திக்கு உரிய வழிகளை காட்டுவன
இதே கருத்தினை திருநாவுக்கரசர் சுவாமிகளும் கூறியுள்ளதைக் காணலாம்.
" வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும், 6-89-6

சிவ வேடங்களான திருநீறு, உத்திராட்சம், சடைமுடி துவர் ஆடை ஆகியவற்றை கண்ட பொழுதே சிவ பெருமானாரை நினைந்து வணங்கும் தொண்டர்கள் துன்பப்படாவண்ணம் காத்து நிற்பவர் சிவனார். என்பது நாவுக்கரசரின் அனுபவ வாக்கு,
மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதி நாத நாயனாரும் தம்மைக் கொல்ல வந்தவர் திருவெண்ணிறு அணிந்திருந்ததைக் கண்ட உடன் சிவபெருமானாரே வந்துள்ளார் என்று நினைந்தார்கள்.
புகழ்சோழர் தமது படைத்தலைவர் ஒரு சடைமுடியுடைய தலையைக் கொண்டு வந்ததைக் கண்டவுடன் தீயில் மூழ்கி இறைவரடி சேர்ந்தார்.


சலவைத் தொழிலாளியின் உடம்பு உவர் மண்ணால் வெண்மை நிறமாகத் தெரிந்தது, பேரரசராகிய சேரமான் பெருமான் நாயனார் இவரைக் கண்டவுடன் மண்ணில் வீழ்ந்து வணங்கினார், காரணம் திரவேடத்தைக் கண்ட மாத்திரத்தில் சிவபெருமானாருடையநினைவு வந்தது.

வரகுண பாண்டிய மன்னர் திருடன் ெந்ற்றியில் திருநீறு கண்டவுடன் சிவபெருமானார் நினைவு பெற்றார். ஆதலால் அத்திருடனைத் த்ண்டிக்காமல் அனுப்பி வைத்தார்.
"எவரேனும் தாமாக இலாத்திட்ட திருநீறுஞ் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி இரண்டடாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும்அடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே, த,வே, 6

திருநீறும், உத்திராட்சமும், அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெறுக்காமல் இவர்அவர் என்று வேறுபாடு கருதாமலும், அவர்களைக் கண்ட பொழுதே உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அவர்களைச் சிவமாகவே எண்ணி மனம் ஒன்றுபட்டு வணங்க வேண்டும். அவ்வாறு தொழும் அடியார் நெஞ்சினுள்ளே சிவபெருமானார் எழுந்தருளுவார்.
சிவச்சின்னங்கள் அணிவதாலும், அணிந்தவர்களைக்காணும் பொழுதே வணங்குவதாலும் சிவபெருமானாருடைய மனங்களையே இறைவர் கோயிலாகக் கொள்வார்.பிறகு முத்தி நிச்சயமாகும்..
சிவ நினைவினால் மற்ற அவ நினைவுகள் மனதில் தோன்றுவதில்லை, அதனால் மனம் அலைவதில்லை,மனம் அலைய வில்லையானால் சக்திகள் பல உண்டாகும்.இதனால் நோயற்ற வாழ்வு, நீண்ட வாழ்நாள், முடிவில் பிறவா நெறி பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக