திங்கள், 6 ஏப்ரல், 2020

பேரின்பத்தை பெற்றய்யும் வழி


பேரின்பத்தை பெற்றய்யும் வழி

பெறுதற்கரிய மனித பிறப்பினை உடையவர்களாய், மெய்நூல்களாகிய தேவ, சிவகாமங்கள் வழங்கும் புண்ணிய பூமியாகி இப்பரத கண்டத்தில் தவஞ்செய் சாதியிலே, சைவ மரபிலே பிறந்தும, அநேகர் இவைகளின் அருமை சிறிதும் அறியாமலும், கருணைநிதியாகிய சிவபெருமானாரின் மகிமையையும், புண்ணிய பாவங்களையும் பலன்களையும் கற்றாயினும், கேட்டாயினும், அறியாதும், பாவங்களை வெறுத்து புண்ணியங்களை செய்யாதும், தனது வாழ்நாளை வீணாக கழித்து எரிவாய் நரகத்திற்கு இரையாகின்றனர். சிலர் ஒரே புண்ணியங்களை செய்யப் பகுந்தும் அவைகள் செய்யும் முறைசிறிதும் அறியாமல் குளிக்க போய் சேறுபூசிக்கொள்வது போல பாவத்தையே ஈடடிக் கொள்கிறார்கள். இப்படி கெட்டு போகாது, நமது சைவ சமயிகள் இந்த மனித பிறப்பு பெறுதற்கரிய என்பதையும் இப்பிறப்பு மீண்டும் மீண்டும் பிறவாது இ்ருக்க வழிகளையும் சைவ நெறி அருளாளர்கள் வகுத்துதந்த நெறிமுறைகளை தெரிந்தறியாமல் பாவங்களை வெறுத்து, சிவபெருமானானுடைய திருவடிகளை தங்கள் மனம் வாக்கு மெய்களால் விதிப்படி மெய்யன்போடு வழிபட்டு, நித்தியமாகிய ேபரின்பத்தை பெற்றய்யக்கடவார்கள்.
 இறைவன் நமக்கு அவன் கருணையினால் உகந்தளித்த தனு, கரண, புவனங்களை நாம்அனுபவிக்கவும், அவன் கருணையினால் அவன் அளித்தவை அவனுக்கு பணிவிடை செய்யவும், அவனை மனத்தால் நினைக்கவும், மெய்யால் அவனை வழிபடவும் நாம் மட்டும்அனுபவிக்க வேண்டும்என்ற குறுகிய எண்ணத்தாலும், அவனை மறந்து தன் விளம்பரத்திற்காக இறைத்தொண்டு என்ற பெயரில் புண்ணியத்திற்கு பதில் பாவங்களை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டு வருகிறோம். அவன் அருளாலே அவன் தாள வணங்காது அதனை மறந்து இப்புவனத்தை நாமே நமக்கென்று அனுபவித்து வருகிறோம். அவன் கருணையினால் கொடுத்த இந்த தனு, கரண, புவனங்கள் அவனுக்கே என்றும் நாம் செய்யும் செய்யும் செயல்கள் அத்தனையும் அவன் அருளாலே நடக்கின்றது என்ற உண்மையையும்உணர்ந்து வினைகளை நல்வினைக்கே பயன்படுத்தி பேரின்ப வாழ்வு பெற வேண்டும்.
  இதன் கருத்தில் தான் அப்பர் அடிகள் திருஅங்கமாலை என்ற பதிகத்தில் நம் அவயவங்கள் அத்தனையும் இறைவனுக்கே அவனை நினைக்கவும்  பணிசெய்வதற்கும் என்கிறார்
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை
மூக்கே நீமுரலாய்.

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.

நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.

உற்றா ராருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றா ராருளரோ.

எங்கும் நிறைந்த பொருள் உடற்குள் இருக்கும் உயிர்க்குள்ளும் அகலாதுஇருந்து, அதனை அவ்வப்பொழுது துன்பத்தினின்றும் தடுத்தாட்கொண்டு வருகின்றது. முடிவான துன்பமாகிய இரப்பினின்றும் காத்து அருள்வது.

திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 31 மார்ச், 2020

சிவபெருமான் பஞ்ச பூதங்களாக உள்ள தலங்களும் அதன் சிறப்புகளும்!!

பஞ்ச பூத தலங்கள் தென்னிந்தியவில் மட்டுமே காணப்படுகின்றன. அதில் ஒன்று மட்டும் ஆந்திராவிலும் மற்ற நான்கு தலங்கள் தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றன. சிவபெருமானே பஞ்ச பூதங்களாகவும் உள்ள தலங்கள் இவை:
1,காற்று- ஸ்ரீ காளஹஸ்தி -ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீ காளஹஸ்தி. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது வாயுத் தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காற்றாக எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும். காளத்தி நாதரான சிவலிங்கத்திற்கு கண்ணப்ப நாயனார் கண் தானம் செய்த இடமும், அவர் முக்தியடைந்த இடமும் இதுவே. இங்குள்ள கருவறையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம் காற்றால் அசைவதைப் போலவே அசைந்துக் கொண்டிருக்கும். காற்றே இல்லாத கருவறையில் காற்று வீசுவதைப் போல தீபம் எந்நேரமும் அசைவது அதிசயமே. காட்டு வேடரான திண்ணன்
( கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர்) முதல் வேட்டைக்குப் போகும் பொழுது காட்டுப்பன்றியைத் துரத்திக்கொண்டு, ஓடிய மலை கோயிலின் அருகிலேயே உள்ளது. காட்டுப்பன்றியைத் துரத்திய திண்ணன், சிவலிங்கத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இடம் இம் மலையே.
2,நிலம்- ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் –தமிழ்நாடு.
இங்குள்ள சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும்.
சிவலிங்கத்தின் மீது தைமாதம் இரதசப்தமி தினத்தில் சூரிய ஒளி விழும். இந்த கோயிலின் அருகேயுள்ள மாமரம் 5000- ஆண்டு பழமையானது ஆகும். இங்கு சிவலிங்கத்தை, அம்மனே மணலால் பிடித்து வைத்து வழிபட்டார். அப்பொழுது கம்பா நதி பெருக்கெடுத்து வர தண்ணிரிலிருந்து சிவலிங்கத்தை பாதுகாக்க அம்பாள் கட்டியணைத்தார். அதன் அடையாளம் இன்றும் சிவலிங்கத்தில் உள்ளது. இதனால் சிவபெருமான் தழுவக் குழைந்த நாதர் எனப் பெயர் பெற்றார்; அம்மன் ஏலவார் குழலி அம்மன்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. மாமரமே இங்கு தல விருட்சம். அம்பிகைச் சிவனாரை மணந்தக் கோலத்தில் முகத்தில் நாணத்துடன் காட்சியளிப்பது தெய்விகமான,அருமையான காட்சி. சிவனாரைச் சாட்சியாக வைத்து வாக்குக் கொடுத்தச் சுந்தரர், அதை மீறியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். பின்னர் இத்தலத்தில் வந்து சிவனாரை வழிபட்டு இடக்கண் பார்வையைப் பெற்றார்.
3,நீர் -திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் திருக்கோயில்- திருச்சி.

ஜம்பு என்றால் நாவல் மரம். முற்காலத்தில் நாவல் காடாக இருந்த இடமிது. இங்குள்ள சிவலிங்கமானது தரைமட்டத்திற்கு கீழே இருக்கும். இங்கு தண்ணீராக சிவபெருமான், இருப்பதால் எப்பொழுதும் கருவறையில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும். சிவலிங்கமே தண்ணீரில் மூழ்கிவிடுமளவு நீர் சுரப்பதுண்டு. அவ்வப்போது தண்ணீர் இறைக்கும் பம்புகள் மூலம் நீரை இறைத்து கோயிலுள் இருக்கும் ஒரு கிணற்றில் விட்டு விட்டே பூசாரிகள் பூஜைகளைச் செய்வர்.
நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைக் காக்க ஒரு சிலந்தி வலையமைக்க, யானையொன்று அதைச் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தது. இதனால் கோபமான சிலந்தி யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடித்துவிட இரண்டும் இறந்தன. சிவபெருமான் யானைக்கு முக்தியையும், சிலந்திக்கு மறுபிறப்பில் சோழவம்சத்தில் பிறந்து, நிறைய சிவாலயங்களைக் கட்டும் பாக்கியத்தையும் அளித்தார். அவரே யானை ஏறாத மாடக் கோயில்களாகக் காவிரியோரமாக 96 சிவாலயங்களைக் கட்டிய சோழன் கோச்செங்கணான்.
4.நெருப்பு- அண்ணாமலையார் திருக்கோயில் -திருவண்ணாமலை.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் அடிமுடி தெரியாதவாறு அக்னிப் பிழம்பாகச் சிவபெருமான் நின்ற தலம் இது. அந்த அக்னியே குளிர்ந்து மலையானது என்பர். எனவே திருவண்ணாமலையையே சிவபெருமானாக வழிபடுவர். இதற்கேற்ப ஆராய்ச்சியாளர்களும் இம்மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது குளிர்ந்ததே! என்கின்றனர்.
இந்த கோயிலை கட்டி முடிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது, இந்த தகவல் கோயில் கல்வெட்டுகளிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது.
இங்கு பங்குனி உத்திரம் நாளில் இரண்டு முறை திருக்கல்யாணம் நடக்கும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கும், அதன்பின் உற்சவரான பெரிய நாயகருக்கும் நடக்கும் இந்நிகழ்வு திருவண்ணாமலை கோயிலில் மட்டுமே நடக்கும் வைபவமாகும்.
5,ஆகாயம்- ஶ்ரீநடராஜர் திருக்கோயில் -சிதம்பரம்.
தில்லை என முற்காலத்தில் வழங்கப்பட்ட இத்தலம் சிவபெருமான் ஆகாயமாக இருக்கும் தலம். பதஞ்சலி, வியாக்ரபாதர் ஏன்ற இரு முனிவர்களுக்கும் சிவபெருமான் அருளிய இடம். இங்குள்ள தல விருட்சம் தில்லை மரம். இங்குள்ள கோயிலும், மனித உடலின் அமைப்பும் ஒன்றாக கருதப்படுகிறது. சிதம்பரத்தைப் பொன்னம்பலம் என்பர். சிதம்பர ரகசியம் என்ற இரகசியம் இங்கு வெகு பிரசித்தம்.
சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும். இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதே! சிதம்பர ரகசியம் எனப்படுகிறது. ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது , அதை உணரத்தான் முடியும் என்பதை இதை உணர்த்துவதாகும்.
ஆடலரசன் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன்! என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன்! என்பதைக் காட்டுகிறது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னை வணக்கும் பக்தர்களுக்கு ஆபயமளிக்கும் இடம் இது என உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது.
“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வியாகரபாத முனிவருக்கு நடராஜராகத் தரிசனம் தந்தார்.

ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், பிறவிப்பிணித் தீரும். அவர் இடது காலை, தூக்கி ஆடல் அரசனாகக் காட்சித்தரும் கோலம் அனைவரையும் மயக்கும். அவரது கால் விரலின் கீழே தான் உலகின் மொத்த காந்தப் புலத்தின் மையப்புள்ளி உள்ளதாம். எண்ணற்ற அதிசயங்கள் கொண்ட தலமிது. நந்தனார் என்ற திருநாளைப்போவார் இறைவனோடு கலந்த தலம் இது. சைவக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பூலோகக் கைலாயம் இது.
கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

சிவபெருமான் பஞ்ச பூதங்களாக உள்ள தலங்களும் அதன் சிறப்புகளும்!!

பஞ்ச பூத தலங்கள் தென்னிந்தியவில் மட்டுமே காணப்படுகின்றன. அதில் ஒன்று மட்டும் ஆந்திராவிலும் மற்ற நான்கு தலங்கள் தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றன. சிவபெருமானே பஞ்ச பூதங்களாகவும் உள்ள தலங்கள் இவை:
1,காற்று- ஸ்ரீ காளஹஸ்தி -ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீ காளஹஸ்தி. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது வாயுத் தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காற்றாக எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும். காளத்தி நாதரான சிவலிங்கத்திற்கு கண்ணப்ப நாயனார் கண் தானம் செய்த இடமும், அவர் முக்தியடைந்த இடமும் இதுவே. இங்குள்ள கருவறையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம் காற்றால் அசைவதைப் போலவே அசைந்துக் கொண்டிருக்கும். காற்றே இல்லாத கருவறையில் காற்று வீசுவதைப் போல தீபம் எந்நேரமும் அசைவது அதிசயமே. காட்டு வேடரான திண்ணன்
( கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர்) முதல் வேட்டைக்குப் போகும் பொழுது காட்டுப்பன்றியைத் துரத்திக்கொண்டு, ஓடிய மலை கோயிலின் அருகிலேயே உள்ளது. காட்டுப்பன்றியைத் துரத்திய திண்ணன், சிவலிங்கத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இடம் இம் மலையே.
2,நிலம்- ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் –தமிழ்நாடு.
இங்குள்ள சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும்.
சிவலிங்கத்தின் மீது தைமாதம் இரதசப்தமி தினத்தில் சூரிய ஒளி விழும். இந்த கோயிலின் அருகேயுள்ள மாமரம் 5000- ஆண்டு பழமையானது ஆகும். இங்கு சிவலிங்கத்தை, அம்மனே மணலால் பிடித்து வைத்து வழிபட்டார். அப்பொழுது கம்பா நதி பெருக்கெடுத்து வர தண்ணிரிலிருந்து சிவலிங்கத்தை பாதுகாக்க அம்பாள் கட்டியணைத்தார். அதன் அடையாளம் இன்றும் சிவலிங்கத்தில் உள்ளது. இதனால் சிவபெருமான் தழுவக் குழைந்த நாதர் எனப் பெயர் பெற்றார்; அம்மன் ஏலவார் குழலி அம்மன்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. மாமரமே இங்கு தல விருட்சம். அம்பிகைச் சிவனாரை மணந்தக் கோலத்தில் முகத்தில் நாணத்துடன் காட்சியளிப்பது தெய்விகமான,அருமையான காட்சி. சிவனாரைச் சாட்சியாக வைத்து வாக்குக் கொடுத்தச் சுந்தரர், அதை மீறியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். பின்னர் இத்தலத்தில் வந்து சிவனாரை வழிபட்டு இடக்கண் பார்வையைப் பெற்றார்.
3,நீர் -திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் திருக்கோயில்- திருச்சி.

ஜம்பு என்றால் நாவல் மரம். முற்காலத்தில் நாவல் காடாக இருந்த இடமிது. இங்குள்ள சிவலிங்கமானது தரைமட்டத்திற்கு கீழே இருக்கும். இங்கு தண்ணீராக சிவபெருமான், இருப்பதால் எப்பொழுதும் கருவறையில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும். சிவலிங்கமே தண்ணீரில் மூழ்கிவிடுமளவு நீர் சுரப்பதுண்டு. அவ்வப்போது தண்ணீர் இறைக்கும் பம்புகள் மூலம் நீரை இறைத்து கோயிலுள் இருக்கும் ஒரு கிணற்றில் விட்டு விட்டே பூசாரிகள் பூஜைகளைச் செய்வர்.
நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைக் காக்க ஒரு சிலந்தி வலையமைக்க, யானையொன்று அதைச் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தது. இதனால் கோபமான சிலந்தி யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடித்துவிட இரண்டும் இறந்தன. சிவபெருமான் யானைக்கு முக்தியையும், சிலந்திக்கு மறுபிறப்பில் சோழவம்சத்தில் பிறந்து, நிறைய சிவாலயங்களைக் கட்டும் பாக்கியத்தையும் அளித்தார். அவரே யானை ஏறாத மாடக் கோயில்களாகக் காவிரியோரமாக 96 சிவாலயங்களைக் கட்டிய சோழன் கோச்செங்கணான்.
4.நெருப்பு- அண்ணாமலையார் திருக்கோயில் -திருவண்ணாமலை.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் அடிமுடி தெரியாதவாறு அக்னிப் பிழம்பாகச் சிவபெருமான் நின்ற தலம் இது. அந்த அக்னியே குளிர்ந்து மலையானது என்பர். எனவே திருவண்ணாமலையையே சிவபெருமானாக வழிபடுவர். இதற்கேற்ப ஆராய்ச்சியாளர்களும் இம்மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது குளிர்ந்ததே! என்கின்றனர்.
இந்த கோயிலை கட்டி முடிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது, இந்த தகவல் கோயில் கல்வெட்டுகளிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது.
இங்கு பங்குனி உத்திரம் நாளில் இரண்டு முறை திருக்கல்யாணம் நடக்கும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கும், அதன்பின் உற்சவரான பெரிய நாயகருக்கும் நடக்கும் இந்நிகழ்வு திருவண்ணாமலை கோயிலில் மட்டுமே நடக்கும் வைபவமாகும்.
5,ஆகாயம்- ஶ்ரீநடராஜர் திருக்கோயில் -சிதம்பரம்.
தில்லை என முற்காலத்தில் வழங்கப்பட்ட இத்தலம் சிவபெருமான் ஆகாயமாக இருக்கும் தலம். பதஞ்சலி, வியாக்ரபாதர் ஏன்ற இரு முனிவர்களுக்கும் சிவபெருமான் அருளிய இடம். இங்குள்ள தல விருட்சம் தில்லை மரம். இங்குள்ள கோயிலும், மனித உடலின் அமைப்பும் ஒன்றாக கருதப்படுகிறது. சிதம்பரத்தைப் பொன்னம்பலம் என்பர். சிதம்பர ரகசியம் என்ற இரகசியம் இங்கு வெகு பிரசித்தம்.
சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும். இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதே! சிதம்பர ரகசியம் எனப்படுகிறது. ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது , அதை உணரத்தான் முடியும் என்பதை இதை உணர்த்துவதாகும்.
ஆடலரசன் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன்! என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன்! என்பதைக் காட்டுகிறது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னை வணக்கும் பக்தர்களுக்கு ஆபயமளிக்கும் இடம் இது என உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது.
“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வியாகரபாத முனிவருக்கு நடராஜராகத் தரிசனம் தந்தார்.

ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், பிறவிப்பிணித் தீரும். அவர் இடது காலை, தூக்கி ஆடல் அரசனாகக் காட்சித்தரும் கோலம் அனைவரையும் மயக்கும். அவரது கால் விரலின் கீழே தான் உலகின் மொத்த காந்தப் புலத்தின் மையப்புள்ளி உள்ளதாம். எண்ணற்ற அதிசயங்கள் கொண்ட தலமிது. நந்தனார் என்ற திருநாளைப்போவார் இறைவனோடு கலந்த தலம் இது. சைவக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பூலோகக் கைலாயம் இது.
கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

புதன், 1 மே, 2019

ஊடல் திருவிழா

ஊடல் திருவிழா












ஆடலில் மகிழும் மழலைப் பருவம்
ஓடலில் மகிழும் பிள்ளைப் பருவம்
தேடலில் மகிழும் குமரப் பருவம்
(ஊடலுக்கு பின்)
கூடலில்  மகிழும் வாலிப்பருவம்
ஆட்டத்தில்முடியும்முதுமைப் பருவம்

  கூடி மகிழும் இல்வாழ்வில் ஊடிப் பிணக்கு கொள்கிறாள் மனைவி. இந்த ஊடல் பற்றிய செய்ததிகள் சங்க இலக்கியங்கள் முதல், தெய்வீக இலக்கியம் வரை எல்லாதமிழ் ஆவணங்களிலும் சுவை பெற பதிவாகி யுள்ளது.

 ஊடல் என்றால் என்ன?
தமிழர் வாழ்வை இரண்டாக பகுத்தனர். காதல் வாழ்வை,அகம் என்ற அகப்பொருள், என்றும், மோதல் வீரத்தை புறம் என்று புறப்பொருள் என்றும் இலக்கணம் வகுத்தனர். வீரத்தின் விளை நிலமாக தமிழன் எதிரியை இமயம் வரை சென்றும், கடல் கடந்து சென்றும் அழித்தான் என்ற வரலாறுகள் இலக்கியங்கள் வாயிலாக நாம் கண்டோம்.
  ஆனால் வீட்டுக்குள் இருக்கும் மனைவியின் எதிர்ப்பை கண்டு அஞ்சி அவளை எதிர்த்து வீழ்த்த எண்ணாது பணிந்து துதித்தான். எதிரியை வீழ்த்தியவன் எதிரில் நிற்கும் மனைவியின் ஊடல் எதிர்ப்பில் விழுந்தான்.
  மனைவியின் சிறு மனக்குறைவே ஊடல், பொய் கோபம் கொண்டு பேசாது போவாள். அவள் ஊடல் போக்க மன்றாடி தாள் பணிவான் தலைவன். கெஞ்சியும் கொஞ்சியும் அஞ்சியும் பேசி மன்னிப்பு கேட்பான் , தூதும் அனுப்புவான்.
 கணவனே தெய்வம் என்றும், வேறு தெய்வம் எனக்கு தேவை யில்லை என்றும் தினமும் தொழுது எழுபவள் மனைவி, இத்தகு மனைவியை ஊடலில் கணவன் தொழுது எழுவான் கணவன் என்று தொல்காப்பியம் காட்டுகிறது.
  ஆற்று நீரை அப்படியே விட்டால் கடலில் கலந்து வீணாகும். அணையிட்டு தடுத்தால் மின்சாரம்உருவாகும். ஆசை வெள்ளம் கூடி மகிழவே ஓடும் அதை ஊடலால் தடுக்கும் போது உறவும், அன்பும் வலிமை பெறும்.
  தெய்வங்களின் ஊடல்
சிவபெருமான் மீது உமாதேவி கொண்ட ஊடல் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன. வரலாறுகளில் இன்னும் திருவிழாக்களாக இன்றும் சிவலாயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடராஜர் மீது சிவகாமி அம்மாள் காட்டும் ஊடல்  எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
 நடராஜர் சிவகாமி இருவருமாகஆலயத்தில் இருந்து புறப்படுவர். நான்கு மாட வீதியில் வலம் வருவர் கோயில் புகுமுன் சிவகாமி முந்திக் கொண்டு ஆலயத்துள் சென்று பெருங்கதவை மூடிக் கொள்வார். நடராஜர் வீதியில் தனியே நிற்பார்.உடனே சுந்தரமூர்த்தி சிவகாமிஅம்மையாளிடம் சென்று ஊடல் தீருமாறு வேண்டி திருமுறை பாடி, பின் ஊடல் தீர்ந்து நடராசருடன் சிவகாமி சேர்ந்த காட்சி தருவது ஊடல் திருவிழா ஆகும்.இதே திருவிழா திருவண்ணாமலையிலும் இன்றளவும் நடைபெற்று வருகிறது.
 ஊடல் காரணம் 
அம்பிகை சிவன் மேல் கொண்டதற்கான காரணங்கள் சுவாரஸ்யம் மிக்கதாகும். மகளிர்களின் ஊடல் காரணம் பெரும்பாலும் மற்றொரு பெண் தன் வாழ்வின் குறுக்கே வருவதுதான்.
  சிவபெருமான் சடையில் கங்கையை மறைத்து வைத்திருந்தார். இதனை அறிந்த உமாதேவி ஊடல் கொண்டார்.  
 பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவனை மட்டுமே வழிபட்டார் இதனால் உமாதேவி ஊடல் கொண்டாள் என்னை வணங்காத முனிவருக்கு ஏன் காட்சி தந்தீர் என்று ஊடினாள்.
 ஊடல் தீர்த்த சிவன்
தன் மனைவி ஊடல் தீர்க்க சிவன் அலைந்தார், அந்த நன்றிக் கடனாக சுந்தரர் சிவனுக்கும் உமாதேவிக்கும் ஊடல் தூதுவராய் சென்றார்.
 திருவாரூரில் பரவையார் கொண்ட ஊடலைத்தீர்தது வைக்குமாறு சிவனை வேண்டினார் சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்ததால் பரவையார் சுந்தரரிடம் ஊடல் கொண்டு கதவை சாத்த அவரை வெளியே நிறுத்தினார். பரவையார் வீடுதேடி சிவனார் ஊடல் தீர்க்க இரண்டு முறை நடந்து சென்று ஊடல் தீர்க்க அலைந்தார் என்பதை திருமுறை வாயிலாக அறியலாம்
 இது பாேன்று சங்க இலக்கியங்களில் தசரதன்  கையேகி ஊடலாக இராமாயணத்ததிலும், சிலப்பதிகாரத்திலும் பாண்டியமன்னன் தன் மனைவியின் கால் சிலம்பிற்காக ஊடல் கொண்டதன் காரணத்தால் கண்ணகியின் கால் சிலம்பை தனதென்று தவறாக புரிந்து நடந்த வரலாறு ஊடல் காரணத்தால் என்பது தெளிவாகும்.
 உப்பின் அளவு மீறல் விருந்தை கெடுக்கும், ஊடலின் அளவு மீறல் வாழ்வைட கெடுத்து விடும். இதை உணர்த்தவே தெய்வங்கள் ஊடல் கொண்டும், பிறகு அதில் வெற்றி கண்டும் நமக்கு வழிகாட்டின.
 ஊடலின்உவகை மகிழ்வு உள்ளது. என்பதை கூறிதிருக்குறளின் இறுதியில் ஊடல் உவகை அதிகாரத்தை முடிக்கிறார் வள்ளுவர்
  " ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
     கூடி முயங்கப் பெறின் "
 தெய்வங்கள் காட்டிய வழியில்எல்லைக்குள் நின்று ஊடல் கொண்டு மீண்டு வர வேண்டும். ஏனெனில் ஊடல் உட்பகை ஆகியே விரிந்து விவாகரத்து செய்துவிடல் தமிழர் பண்பாடு அல்ல. ஊடலில் தோற்றவர் கூடலில் வெல்வர் என்கிறார் வள்ளுவர்
திருச்சிற்றம்பலம்
நன்றி திருக்கோயில் கட்டுரை

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

யார் பெரியவர்? யார் சிறியவர்?

யார் பெரியவர்? 
யார் சிறியவர்?

Image result for பெரியோர் எல்லாம் பெரியவர் அல்ல!

மன்னரை மதிக்காதவர்கள், உண்மையை மதிப்பவர்கள் நாட்டில் இருக்கக் கூடுமோ?
இவ்வாறு அரசர் ஒருவருக்கு ஐயப்பாடு உண்டாயிற்று
தமது சேவகனையை கூப்பிட்டார். 
நாளை காலை உன் கண்ணில் முதன் முதலாக தென்படும் மூவரை நீ அழைத்து வா என்றார் அரசர்
சேவகனை அரசரின் உத்தரவுப்படி ராஜவீதியில் வந்த மூன்று நபர்களை ராஜாவின் பிடித்துக் கொண்டு வந்தான்
அவர்களில் ஒருவர் பாண்டியத்துவம் நிறைந்த புலவர் ஒருவர், கோவில் பூசை செய்யும் பரமவைதீக சிகாமணி ஒருவர், தன்னை விற்கும் விலைமகள் ஒருத்தி, மூவரையும் அரசர் முன் கூட்டிவந்து நிறுத்தினார். அவர்களை தனித்தனியாக சந்தித்தார் அரசர்
 பாண்டியத்துவம் பெற்ற புலவரிடம் புலவரே " சகலசாஸ்திரம் படித்த பண்டிதரே கோயில் பூசை தேர் திருவிழா முதலானவை நடப்பதைறீவீர் இதனால் மக்களுக்கு பயனில்லை என்று யாம் நினைக்கிறேன். தங்கள் கருத்து என்ன? என்று கேட்டார் அரசர்
  படித்த மேதாவி சில விநாடிகள் யோசித்து விட்டு முடிவைக் இவ்வாறு கூறினார்.
 அரசர் பெருமானே ஆலயத்தால் யாருக்கு என்ன பயன்? ஆலய வழிபாடு பயனற்றது என்பதற்கு என்னால் மேற்கோள் சொல்ல முடியும் என்றார்,
 ஆலய வழீபாட்டால் பயன் உண்டா இல்லையா? என்றதற்கு இல்ைல என தீர்மானமாக கூறிவிட்டார் பண்டிதர் எனவே அவரை ஆசனத்தில் உட்கார வைத்துவிட்டனர்
 அடுத்து கோயில் குருக்கள் வந்தார். அவரது திருமேனியில் வழிபாட்டு சின்னங்கள் முத்திரைகள் யாவும் விளங்கின, அவரிடமும் இக்கேள்வி கேட்கப்பட்டது
 ஆலய வழிபாட்டால் நன்மை உண்டா? என்றார் மன்னர்
அரசர் பெருமானே என் போன்று ஆலயத்தில் சேவஞ் செய்பவர்களுக்கு ஆலயத்தின் மூலம் வயிறு நிறைகிறது. ஆலயம்  இல்லாது போனாலும் என் போன்றவர்கள் உண்ண முடியும் ஆலய வழிபாடு தேவை இல்லை என்பது என் கருத்து சொல்லி விட்டு அவரும் ஆசனத்தில் அமர்ந்தார்
  அடுத்து விலைமகள் வந்தாள். பழைய கேள்வியே அவளிடமும் கேட்கப்பட்டது
 அரசர் பெருமானே நான் படித்த பண்டிதர் அல்ல. பூசை செய்யும் குருக்களும் அல்ல, அறிவும், அனுபவமும் இல்லாதவள். ஆண்டவன் இல்லையென்று முடிவு செய்வதும் ஆலயத்தை வழிபாடு செய்யாமலும் என்னால் இருக்க முடியாது. அரசர் சொன்னார் என்பதற்காக தலையாட்டும் துணிச்சல் இல்லாத பேதை. ஆண்டவன் என்ற தத்துவத்தால் மனதில் நிம்மதி, பிறருக்கு இரக்கப்படும் சமுதாயப் பண்பாடு, பணப்பங்கீடு யாவும் நடக்கின்றன. ஆண்டவனை சுற்றி ஊர், அமைகிற மாதிரி உள்ளங்களும் அமைதல்வேண்டும். தங்கள் கருத்துக்கு எதிரான கருத்தை கூறியதால் எனக்கு என்ன தண்டனை தந்தாலும், அது ஆண்டவன் கருணை என்று ஏற்றுக் கொள்கிறேன்.
 பண்டிதரும், கோயில் குருவும் சிரித்தனர்.
அரசர் பெருமான் எழுந்து " தாயே ஆண்டவனின் தன்மையை அரச பதவியுற்றவன் சாெல்லுக்காக ஏற்காது மறுக்கும் அளவு நெஞ்சத் துணிவுடன் கூறும் தன்மை உங்களுக்கு இருக்கிறது. பக்தர்கள்  எவருக்கும் பயப்பட மாட்டார்கள், பக்தியை பற்றி படிப்பவர்கள், பகவானின் அருகில் நின்று பயன் அடைவார்கள் சந்தர்ப்ப வாதிகள்! தாங்களோ உண்மையின் வாரிசு கடவுளுக்கு அஞ்சுபவர் என் வணக்கததிற்கு உரியவர் தாங்களே என்று விழுந்து வணங்கினான்.
 படித்த மேதாவிகள், பக்தி மார்க்கம் கைங்கரியம் செய்கிறவர்களும் எப்படி சாய்வார்கள் பாமர்கள் உறுதிப்பாட்டுடன் இருப்பாா்கள்.
 பெருயோர் எல்லாம் பெரியவர் அல்ல!
 சிறியோர் எல்லாம் சிறியவர் அல்ல!!
திருச்சிற்றம்பலம்
நன்றி ; திருக்கோயில் இதழ்

புதன், 3 ஏப்ரல், 2019

சிவ பூஜனம்

சிவ பூஜனம்

சிவ பூஜனத்திற்கு சிரத்தையும் பக்தியும் மிக மிக அவசியமாகும். அக்னிஹோத்ராதி கர்மாக்களை செய்வது சிரம சாத்தியம். அர்ச்சனை என்பது மிகச்சுலபம். அந்த அர்ச்சனம் சிவனுக்கே செய்ய வேண்டும். வேதங்களும், ஸ்ம்ருதிகளும் சிவனே உயர்ந்தவர் என்று பாராட்டுகின்றன. இதனுடைய விரிவை “சிவதத்துவ விவேகம்” என்னும் ஶ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரின் நூலிலும் “சிவோத்கர்ஷமஞ்சரி” என்னும் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதரின் நூலிலும் காணலாம்
வைஷ்ணவ மரபிலேயே தோன்றி, சிவனையே வழிபடு தெய்வமாகக் கொண்டு வைஷ்ணவர்களோடு போராரி நெருப்புப் பாய்ச்சிய முக்காலியில் வைஷ்ணவர்கள் கோரியபடி பெருமாள் சந்நிதியிலேயே அமர்ந்து ஹரதத்தாசாரியார் அவர்கள், சிவனுடைய உயர்வைக்கொண்ட “ச்ருதி ஸூக்தி மாலா” என்னும் நூலைப் பிரகாசப்படுத்தினார்கள். சிவனருளால் தீயும் மலராக ஆகிவிட்டது. அத்தகைய பெருமை வாய்ந்த நூலிலும் தெள்ளெனக் காணலாம். சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்யம் செய்து இருந்தால்தான் கிடைக்கும். சிவன் ஒருவரைப் பூஜை செய்துவிட்டால் மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜை செய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர். எவ்வாறு மரத்தின் அடியில் நீர் விடுவதால் மரங்கள் திருப்தி அடைந்து மலர்களையும் பழங்களையும் தருகின்றனவோ, அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர் என்று வாயு ஸம்ஹிதையில் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றது
ஆதிசங்கராச்சாரியார் அவர்களும் சிவனுக்கே பூஜை செய்யுங்கள், மீண்டும் உங்களுக்கு பிறவி கிடையாது என்று கூறியுள்ளார். சிவனுடைய அடிமுடி காணாது தவித்த பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் கர்வத்தை அடக்கி பெண்ணாயிருக்கும் தன்மையைக் கொடுத்து லிங்கோத்பவராகக் காட்சி அளித்ததை இன்றும் எல்லா சிவாலயங்களிலும் காணலாம். அத்தகைய சிவார்ச்சனத்தை விபூதியையும், ருத்திராட்சங்களையும் அணிந்து கொண்டு செய்ய வேண்டும். தனக்குச் செய்யக் கூடிய உடல் வலிமையோ அறிவு வலிமையோ இல்லாவிடில் மற்றவரைக் கொண்டு செய்வதும் தவறல்ல
பூஜை செய்யுங்கால் இதர எண்ணங்களைவிட்டு சிவனிடத்திலேயே மனதைச் செலுத்தி இருப்பது தான் முக்கியம். சிந்தை வேறிடத்தில் வைத்து பூஜை செய்வது பயனற்றது.

இத்தகைய சிவபூஜையிலும் ஶ்ரீ நடராஜர் வழிபாடே மிகச்சிறந்தது. அதை இங்கு சிறிது காண்போம். இவ்வுலகையே தெய்வ புருஷனாக உள்ளத்தில் எண்ணி அப்புருஷனுடைய தலையாக ஶ்ரீபர்வதத்தையும், நெற்றியாக கேதாரத்தையும், இரு புருவங்களின் நடுபாகமாக வாராணசி (காசி)யையும், குருக்ஷேத்திரத்தை குசஸ்தானமாகவும் [ஸ்தன ப்ரதேசம்], பிரயாகையை இருதயமாகவும், சிதம்பரத்தை உயிர் ஸ்தானமான ஹிருதய மத்யமாகவும் கருதி வழிபட வேண்டும்
மனிதன் கை, கால், கண், மூக்கு, செவி இல்லாமல் வாழ முடியும். ஆனால் உயிர் பிரிந்து விட்டால் சடலமாகி விடுகிறது. செயலற்று விடுகிறது என்பது உலகப் பிரசித்தம். தூங்குங்கால் மனிதனுடைய உள்ளத்தில் எல்லா புலன்களும் ஒடுங்குகின்றன. அதுபோல் ஶ்ரீ நடராஜருடைய அர்த்தஜாம காலத்தில் எல்லா க்ஷேத்ரங்களிலுமுள்ள தேவதைகளும் ஒடுங்குகின்றன. விழிக்குங்கால் எவ்வாறு அந்தப் புலன்களும் ஆங்காங்கு சென்று செயல்படுகின்றனவோ அவ்வாறே காலை விச்வரூப தரிசன பூஜையில் அந்தந்த தேவதைகள் தத்தமது இருப்பிடம் சென்று செயல்படுகின்றன. எனவே, சிதம்பரம் ஶ்ரீ நடராஜராஜ தரிசனம் ஒன்றே எல்லா ஸ்தலங்களில் உள்ள தேவதைகளின் தரிசனத்தால் ஏற்படும் பயன்கள் யாவற்றையும் அளிக்கவல்லது
லக்ஷ்மீபதியான மஹாவிஷ்ணுவினால் பூஜிக்கப்பட்டவர் நடராஜமூர்த்தி. வேதம் இதன் விளக்கத்தைத் தருகிறது. “அக்ஞானத்தைப் போக்கி, ஞானத்தை அளிக்கும் சிவனே! பிரம்மனுக்கு வேதத்தை உபதேசித்த சிவனே! அழகிய ரத்தினங்களாலும் கற்களாலும் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் பவழத்தினாலும் ஆகிய உனது லிங்கத்தை தேவர்கள் சிறந்த சம்பத்திற்காக அபிஷேகம் செய்து, ஆராதனம் செய்தனர். இச்சிவலிங்கத்தை பூஜை செய்ததின் பயனாகத்தான் விஷ்ணுவிற்கு வைகுண்டலோக நாயகராகும் தன்மை கிடைத்தது. [திருவீழிமிழலை] மாகாத்மியத்தில் விஷ்ணு ஐம்புலன்களையும் அடக்கி, ஆகாரமின்றி லக்ஷ்மியுடன் கூட இருந்து கொண்டு ஆயிரம் தாமரை மலர்களால் ஒவ்வொரு நாளும் பூஜை செய்தார். அப்பொழுது ஒரு நாள் சிவன் விஷ்ணுவை சோதனை செய்ய ஒரு தாமரை மலர் குறையும்படிச் செய்துவிட்டார். எந்த ஓடைகளிலும் ஒரு மலர் கிடைக்காததால் இன்று 999 மலர்கள் தான் கிடைத்துள்ளன, ஒன்று கிடைக்கவில்லையே என்று மிக வருந்தி வைராக்கியத்துடன் எப்படியாவது ஆயிரம் தாமரை மலர்களால் பூஜையை செய்துவிட வேண்டியதுதான் என்று பூஜையைத் துவக்கினார். 999 மலர்கள் பூஜித்தபின் தனது வலது கண்ணைப் பிடுங்கி தாமரை ஸ்தானத்தில் அர்ச்சனை செய்தார். இதைக் கண்டு மகிழ்ந்த சிவன், முன் கண்ணைக் காட்டிலும் மிக அழகான, பிரகாசமான கண்ணை அளித்துப் புண்டரீகாஷர் என்னும் பெயரையும் சூட்டினார். “உனது பூஜையினாலும், துணிவினாலும் மகிழ்ச்சியுற்றேன். எனவே தேவை யானதைக்கேள்” என்று வேண்ட சிவனும் அவ்வாறே பார்ப்பதற்கு அழகான “சுதர்சனம்” என்னும் சக்கரத்தை அளித்து உலகைக் காத்து அருள் ஆணையிட்டார். தேவீ பாகவதத்திலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.

சிவலிங்கம் அமைந்திருக்கும் ஸ்தானம் விஷ்ணுபீடம் என்று கூறப்படுகிறது. இதைத்தான் சக்தி உபாசகர்கள் ஶ்ரீ சக்கர உபாசனத்தில் நடுவில் விந்து ஸ்தானத்தில் சிவனைச் சேர்த்து ஒன்று படுத்தி வழிபடுகின்றனர்.

சுந்தரரர் பெருமான் திருவொற்றியூரில் சங்கிலியாரை மண முடித்தபின், திருவாரூர் செல்லவும், அங்குள்ள வீதிவிடங்க பெருமானாரை வழிபட எண்ணங் கொண்டு திருவொற்றியூரை வி்ட்டு நீங்கும் போது சங்கிலியாரை மணப்பதற்கு " இவ்வூரை விட்டு போகேன் " என செய்த சத்தியம் மீரப்பட்டதால் , இதனா்ல் ஈசன் தந்த சபாத்தால் இருகண்களும் இழந்து குருடானார். அப்போது சுந்தரரர் இந்த கொடுந் துயரத்தை நீக்கும் பொரு்ட்டு இறைவரை நினைந்து திருப்பதிகங்கள் பாடினார். பின் காஞ்புரம் ெசன்று ஏகாம்பர நாதரை வணங்கி உன்னை தரிசிக்க என் கண்ணைத் தந்தருள் என்று வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்தார். அப்போது இறைவர் இடக்கண் மட்டும் பார்வை கொடுத்தருளினார். அப்போது பாடிய பதிகமே " ஆலந்தான் உகந்து அமுது செய்தானை " என்ற பதிகம் திரு கச்சி ஏகம்பரஈஸ்வர் முன் நின்று பாடிய பதிகம் இறைவரும் சுந்தரரின் அன்பிற்கு பணிந்து அவருக்கு கண் பார்வை அளித்த வரலாறு . எனவே நாம் இப்பதிக பாடல்களை மனம் உருக வேண்டி பாடினால் கண் சம்பந்தப்பட்ட கண்நோய் உள்ளவர்களுக்கு அந்நோய் நீங்கப்பட்டு பூரண குணமைடவர் என்பது உறுதி. சுந்தரரரின் திருவாக்குப்படி இப்பதிகப் பாடல்கள் பத்தும் பாடுவோர் "நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகெய்துவர் தாமே " திருக்கச்சி ஏகம்பம் பாடல் எண் : 1 ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும் , காலகாலனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 2 உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள் உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய் கின்ற பெருமானும் , ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும் , தேவர் கட்குத் தலைவனும் , தன்னை விடாது பற்றினவர்க்கு , பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும் , தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று , அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய , அழிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற , கற்றையான நீண்ட சடையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 3 திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து , அக்காலை , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும் , யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும் , மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும் , வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய , திருவேகம் பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 4 குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும் , கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும் , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் , கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய , கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற , கண்டத்தில் நஞ்சினையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 5 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : யாவரையும் வெல்லும் தன்மையுடைய , வெள்ளிய மழு ஒன்றை உடையவனும் , கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும் , அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும் , அரிய வேதங்களையும் , அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய , அளவற்ற புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் , துதித்து வழி படப்பெற்ற , நன்மையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 6 திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : பிறை தங்கியுள்ள சடையையுடையவனும் , தேவர்க்குத் தேவனும் , வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற , ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும் , சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய , என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி , துதித்து வழிபடப்பெற்ற , கங்கையை யணிந்த , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 7 விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாமுகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும் , வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும் , தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும் , நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய , எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற , கண்களும் மூன்று உடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 8 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நாள்தோறும் தன்னையே சிந்தித்து , துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும் , உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும் , பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய , முடிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற , கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய , நீண்ட சடையையுடைய , திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு , அடியேன் , கண் பெற்ற வாறு , பாடல் எண் : 9 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுர மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் , வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும் , தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய , பரவிய , பழைய புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற , எட்டுக் கைகளையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 10 எள்கல் இன்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர் பெருமானாகிய சிவபெருமானை , அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே , தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி , ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று , முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து , பின்பு , புறத்தே வழிபடச் சென்று , அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு , தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட , வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள , அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 11 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன் நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே பொழிப்புரை : குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன் , ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும் , மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் , ` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும் , யாவர்க்கும் தலைவனும் , கூத்தாடுதலை உடையவனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் . நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் . திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் .......... தென்னாடுடைய சிவனே போற்றி மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

 http://vpoompalani05.blogspot.in/ http://
vpoompalani05.wordpress.com http:/

/www.vpoompalani05.weebly.com