புதன், 22 டிசம்பர், 2021

உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)

 உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)



  உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந்து அறவு மயங்கி நிற்கும். முக்தி / சுத்த நிலையில் இறையைச் சார்ந்த வண்ணம் ஆகும்.

  இவ்விரு வகை சார்புகளுள் இறைச் சார்பே ேமலானது. ஏனென்றால் இறைச் சார்பு இன்பம் தருவது. உலக சார்பு / மாயா மலத்தின் சார்பு துன்பம் தருவது. உலக சார்பு உடைய உயிர்கள் அவற்றின் பற்றுக் கொண்டு அவ்வனுபவங்களை சுமை என்று உணராது சுகமெனக் கருதும். இப்பாரம் குறையக்குறைய இறைவனை அணையும் ஆசை மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒன்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன் கண் உவர்ப்படைந்து விட்டு பின்னர் மெஞ்ஞானத்தை தாணுவினோடு ஒன்றித்து நிற்கத்தலைப்படும். இதனை காளத்தி மலையை கண்டு அதனை அணுகி செல்லும் தோறும் தம்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம்உண்டானதாக கண்ணப்பர் (பெ,பு, 97) கூறுவதால் அறியலாம். கட்டு நிலையில் உயிர்கள் வினைகளை செய்யும் அதன் பலன்களையும் துய்க்கும்.இறைவனிடம் அன்பு கொள்ளும் ேபாது ( இறைவழிபாட்டில்) பாரம் குறைவது போல் உணர காரணமாவதை அறியலாம்.

 அவ் உயிர்களின் வினைகளையும் பலன்களையும் இறைவன் ஏற்றுக் கொள்வான். எனவே அவனை எடுத்து சுமப்பான் ( திருவருட்பா 65) என்பார் உமாபதி சிவம்.

   உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது என்பது சைவ சித்தாந்த கோட்பாடு. 

   அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்

  அன்பே சிவமாவது யாரும்அறிகிலார் ..... என்ற திருமந்திரம் கூறியபடி அன்புதான்

சிவம்/  சிவனைச் சார்ந்த சீவனான  உயிர்கள் அவனது உருவமாகிய அன்பு உருவ மானதை உணர்த்தும்.

திருச்சிற்றம்பலம்


திருமுறைகளை பாராயணம் செய்வோம்!

 திருமுறைகளை பாராயணம் செய்வோம்!   சிவன் அருள் பெறுவோம்!


சைவத்துக்கு பொதுநூல் ேவதம், சிறப்பு நூல் ஆகமம் எனவும் கொள்ளப்படுகின்றது. இவை இறைவனால் அருளப்பட்டவை. சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவ பெருமான். திருமுறைகள் தமிழ் வேதம் என போற்றப்படுகின்றன. சிவபெருமான் திரு அருளைப்பெற்ற திருவட் செல்வரகளால் சிவபெருமான் உள் நின்று உணர்த்திப் பாடப்பட்ட தெய்வத் திரு நூல்களே திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. இத்திருமுறைகள் பன்னிரண்டாகும்.

  ஆலயங்களிலும், வீடுகளிலும், மற்ற இடங்களிலும் கடவுள் வழிபாட்டின் போது இத்திருமுறை பாடல்களைப் பாடி பரவுவது சைவ மரபாகும். பன்னிரு திருமுறைகளிலும் அடங்கும் தோத்திரப்பாடல்கள் பிரணவ மயமானவை. தமிழ் வேதமாக விளங்குகின்ற திருமுறைப்பாடல்களுடன் வேறு எந்த பாடல்களையும் ேசர்த்து பாடக்கூடாது என்பது சிவ பரம்பொருளின் திருவுள்ளக் கிடக்கை என ஆன்றோர் கருத்து.

   திருமுறை பாடல்களை பாட தொடங்கும் முன்னும், பாடி முடித்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓதப்படவேண்டும்.திருமுறைகளில் உள்ள அனைத்து பாடல்பதியங்களையும் பாட இயலாததால் தேவாரம் திருவாசகம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தொண்டர்புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் வேண்டும்.

   திருமுறைப்பாடல்களை இறைவனை நினைந்து மனமுருகி , காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் நன்னெறிக்கு இட்டுசெல்லப்படுவர் என்பது அனுபூதி மான்களின் முடிவு. திருமுறைகள் பண்ணாடும் பக்தியோடும் பாடப்படவேண்டும் என்பது அருளாளர்களின் கருத்து.

      பரம்பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தித் துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு என்பவற்றை போற்றுதல் செய்வனவாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும் பக்தியையும் தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும் ஓதி உஉணர்வர்களை உய்விப்பனவாகவும் மந்திரம், தந்திரம், மருந்து என மூன்றுமாய் விளங்கித் தீராத நோய் தீர்த்த தருளும் தன்மையானவை யாகவும் விளங்கும் அருள்நூல்கள் திருமுறைகள். 

        இறைவன் ஒருவனே, அந்த ஒருவன் சிவனே, அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை. சிவபெருமானே முழு முதற்கடவுள். அப்பெருமான் திருவருட் சக்தியுடன் இணைந்து ஒரு பொருளாகவே உள்ளான். அன்பு நீதி உண்மை, செம்மை, அருள், ஞானம் என்பவற்றை அதிட்டித் நிற்கும் சிவம்.  அவற்றின்றும் பிரிவிலா ஒரு பொருள் ஆக உள்ளது. எல்லா உயிர்கள் மீதும் அளப்பெரும் கருணை கொண்ட சிவபெருமான் அவைகளி்ன் ஈடேற்றத்தின் பொருட்டு ஐந்தொழில் செய்கிறான்.

  அப்பெருமானின் மறைமொழி திருவைந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரமும். சிவ சின்னங்கள் திருநீறு, உருத்திராட்சமும், சிவனடியார் பெருமை சொல்லலும் பெரிதே. அப்பெருமானிடம் சேர்ப்பிக்கும்  நால்வகை நெறியான சரியை,, கிரியை, யோகம், ஞானம் என்ற நெறிகளை அறிவிப்பது திருமுறைகள் என்பதை நாம் அறிந்து மனிப்பிறப்பு எடுத்ததின் நோக்கமாகிய கடவுளைட வணங்கி முக்தி இன்பம் பெறுவதலுக்கு உறுதுணையாக விளங்குவது பக்தி இயக்கத்தினை வளர்ப்பதுமான சாதனமான திருமுறைகளை பாராணம் செய்து மீண்டும் பிறவா நெறி அடைந்து நல்வாழ்வு வாழ்வோமாக!

திருச்சிற்றம்பலம்




வெள்ளி, 17 டிசம்பர், 2021

திருவாதிரை நோன்பு

 திருவாதிரை


திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.


மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.


சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிப்பதால் திருவாதிரை திருவிழா என போற்றப்படுகின்றது. 2021 டிசம்பர் 19ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரம் தொடங்கி 20ஆம் தேதி இரவு 7.50 வரை நீடிக்கின்றது.


இதன் காரணமாக சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும். ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.


இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு (மார்கழி 4) டிசம்பர் 19ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், டிசம்பர் 20 காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசன பலன்கள் :


ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.


ஆருத்ரா தரிசனம் 2021: சிதம்பரம், உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். 

சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.




அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.




சிவாலயங்களில் மிக முக்கியமாக பஞ்ச சபைகளான


1. திருவாலங்காடு -இரத்தின சபை


2. சிதம்பரம் - கனக சபை


3. மதுரை -ரஜித சபை (வெள்ளி அம்பலம்)


4. திருநெல்வேலி - தாமிர சபை


5. திருக்குற்றாலம் - சித்திர சபை


குறிப்பாக இந்த ஐந்து சபைகளில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.

ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.

திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்

திருச்சிற்றம்பலம்


செவ்வாய், 9 நவம்பர், 2021

எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !

 எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !



" யாதெரு தெய்வங் கொண்டீர்அத்தெய்வ மாகியாங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்

வேதனைப் படும் இறக்கும்பிறக்குமேல் வினையுஞ் செய்யும்

ஆதலான் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே ,,,,...... சிவஞான சித்தியார்


" ஈறிலாதவன் ஈசன் ஒருவனே " என்கிறார் திருநாவுக்கரசர்


நல்வினையுள்ளுஞ் சிறந்தது தெய்வ வழிபாடு, அது எவ்வாறு எனில் ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையவராய் , தத்தம் மதத்திற் கேற்றவாறு, எவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு, எவ்வெவ் தெய்வத்தை வழிபடினும் அவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு , அவ்வெவ் தெய்வத்தை தமது சக்தியால்( இறைவி) அதிட்டி நின்று அவ்வெவ் வழிபாடு கண்டு, அதனை ஏற்று அனுகிரகிப்பவர், முன்னைப்பழம் பொருட்டு,முன்னைப் பொருளாகிய சிவபெருமான்ஒருவரே,

எவ்விடத்து யாதொரு தெய்வத்தை பொருளாகக் கொள்ளினும், அவ்விடத்து அவ் வழிபாட்டை அறிந்து உயிர்களுக்கு பலனை கூட்டுபவர். அச் சிவபெருமானர் ஒருவரே,ஏனைய தெய்வங்கள் சுதந்திர அறிவின்மையால் தாமே பலன் கொடுக்க மாடடா. எத்தெய்வத்தை வழிபடினும் அவ் வழிபாட்டிற்கு சிவபெருமானே பலன் தருவார்.

அவ்வாறாயின், பிற தெய்வ வழிபட்டவர்க்கு அவ்வத் தெய்வமே எதர் தோன்றி நின்று பலன் கொடுத்ததே என நூல்களிற் கூறப்படுகின்றதே யெனின் அன்றுஅரசன் ஆணையே மந்திரி முதலாயினோர் மாட்டு நின்று பிறர்க்கு பலன் கொடுக்குமாறு போல சிவபெருமானே தமது ஆணையை தம்ஏவர் வழி நிற்கும். அவ்வவ் கடவுள் மாட்டு , அவரோடு நின்று பலன் கொடுப்பார். அங்ஙன மின்றி அக்கடவுள் பிறருக்கு பலன் கொடுத்தல் ஒருபோதும் பொருந்தாது. அது அரசர் ஆணையை மீறியது போன்றே.

பிற தெய்ங்கள் அனைத்தும் பிறப்பு இறப்புக்குஉட்பட்டவை யாதலால் அது பசுவர்க்கமாகும். எனவே அவ் வழிபாட்டால் கிடைப்பது பசு (உயிர்) புண்ணியமே, பதி புண்ணியமன்று, பதியாகிய சிவனை நோக்கி வழிபாடே பதி புண்ணியம். எனவே ஏணைத் தெய்வங்களை யே முழுமுதற் கடவுள் என்று எண்ணி செய்யும் பசு புண்ணியம் சிவ புண்ணியமாகாது. எனவே ஏனை சிறு தெய்வ வழிபாடுகளையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டு பலன் தருவார். என்பதால் நேரிடையாக சிவபெருமான் திருவடியை வழிபடுதலே நல்ல அறமாம்.மற்றவை வீண் செயலாகும்.

தொகுப்பு : சிவ, பூமாலை, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்

திருச்சிற்றம்பலம்

திங்கள், 8 நவம்பர், 2021

சைவர்கள் அறிய வேண்டிய செய்திகள்

 சைவர்கள் அறிய வேண்டிய செய்திகள்


1. அடிப்படை நுட்பம்



இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.


நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.


நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:


பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்


இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். ஓம் நமசிவாய.


சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.


உயிர்கள் தங்களோடு இணைந்தே இருக்கும் மலத்தை நீக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிமுறைகள் உள்ளன. உயிர்களாகிய ஆன்மாக்கள், இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்கு புறத்தே வணங்கிச் சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தல் சரியை வழிபாடு ஆகும். சிவாலயத்தில் திருவலகிடுதல், திருநந்தவனம் அமைத்தல், சிவனடியார்களுக்குரிய பணிகளைச் செய்தல் ஆகியன சரியையாகும். இறைவனது அருவுருவத் திருமேனியை (சதாசிவனை – சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும். சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாகும். அது மனத்தை விடயங்களின் வழியே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தை தியானித்து, பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்று சமாதி நிலை அடைதலாகும். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டு சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும். இந்த நான்கு வழிகளும் சிவபெருமானை எளிதாக அடைய நமக்கு வழிகாட்டுபவை.


பஞ்ச புராணம் துதித்தல்

 பஞ்ச புராணம் துதித்தல்


தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.


தேவாரம்


அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]


திருவாசகம்


ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.       [8. மணிவாசகர்]


திருவிசைப்பா


இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்

களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு

என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)

என்னையும் புணர்ப்பவன் கோயில்

பண்பல தெளிதென் பாடிநின் றாடப்

பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்

செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்

திருவளர் திருச்சிற்றம் பலமே.         [9. கருவூர்த்தேவர்]


திருப்பல்லாண்டு


ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

வஞ்சகர் போயகல

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

புவனி யெல்லாம் விளங்க

அன்னநடை மடவாள் உமைகோன்

அடியோ முக்கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே.        [9. சேந்தனார்]


பெரிய புராணம்

உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்

மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்

“உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்

சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.       [10. சேக்கிழார்]


வாழ்த்துப்பா


ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே.   [3. சம்பந்தர்]


ஞாயிறு, 7 நவம்பர், 2021

ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

 சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படும் நம் ஆத்தடி பிள்ளையார் கோயிலின் சிறப்பு அமுசங்களை சற்று சிந்திப்போம். முதலில் நம் நகர் ஆத்தடி விநாயகர் என்றாலே வடக்குத்தெருக்கு அருகில் அர்ச்சனா நதியின் தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகணபதியைத்தான் குறிக்கும் விநாயகர் எங்கும் ஆத்தங்கரையில் அமர்ந்திருந்தாலும் இக்கோயிலுக்கு பின்தான் அத்தனையும் அவ்வளவு சிறப்பு பெற்றது இக்கோயில்


 1) ஒரு கோயில் சிறப்பு அடைய வேண்டுமானால் அது ஆதிகாலத்து நாம் அறியாப் பருவத்தில் தோன்றியிருக்க வேண்டும் ஆனாலும் அதன் பின் அதன் வளர்ச்சி கண்டு பரிகார தெய்வங்களின் வளர்ச்சி பெற்று பெருமை பெறலாம். அதன்படிதான் இங்கு விநாயகர் கோயில் கட்டும் முன்னேயே ஆத்தடியில் தோன்றி அனாதி காலம் தொட்டு அருள்பாலித்து வருகிறார் என்பது ஒரு சிறப்பு

2. ஒரு கோயில் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்றவாறு சிறப்பு (அதாவது நாம் வணங்கும் தெய்வம் )சிறப்பு பெயர் பெற்று நமக்கு விசேடமாக காட்சி அளிப்பது இதனால் இவர் இராஜகணபதி என்ற சிறப்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

3) தலம் என்ற வருசையில் இத்தலம் புகழ் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அடிவாரமாகிய சுந்தரபாண்டியத்தில் அமைந்தபடியால் தல வரிசையில் சிவபெருமானாரே அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்து அருள் செய்த சதுரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பது அதன் சிறப்பு

  மேலும் தலம் என்ற வரிசையில் அங்குள்ள தல விரிச்சம் முக்கியத்துவம் பெறும் அந்த வகையில் இங்கு வெகு சிறப்பு பெற்றது இக்கோயிலின் தல விரிச்சம் வன்னி மரமாகும். வன்னி மரத்தடி விநாயகர் என்றேலே மனம் இறை இச்சை தன்னாலேயே ேதான்றும் இக்கோயிலில் வன்னி மரத்தடியில் விநாயகரும் கைலாய நாதரும் அமர்ந்து அருள் செய்வது சிறப்பிலும் சிறப்பு, ஒரு கோயிலில் வன்னி மரம் அமைந்திருந்தால் அக்கோயிலின் சிறப்பே மிக அளவிடற்கரியது.வன்னிமரம் அமைந்த திருக்கோயில் புனிதத்தன்னை அளவிடற்கரியது. இத்தலத்தில் வழிபட்டவர்கள் ஆன்மா முக்தி அடையும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த அடிப்படையில் விருத்தாசலம் நகரில் உள்ள திருமுதுகுன்றம் என்ற தலத்திற்கு ஈடானது என்றால் தப்பில்லை. இந்த திருமுதுகுன்றம் கோயில் கட்டும் போது கட்டிடப்பணிக்காக கூலியாக இந்த வன்னி மரத்தின் இலையைத்தான் கொடுப்பார்களாம் அவ்விலை வேலை செய்த பணியாளர்களுக்கு அவர்கள் உழைத்த உழைப்பிற்கு தகுந்தாற்போல் இறை அருளால்  பொற்காசுகளாக மாறி பயன் தருமாம். என்பது வரலாறு. இத்தனை சிறப்பு பெற்ற வன்னி இலைகள் வில்வ இலையை விட சிறப்பு பெற்றதாக கூறுவது உண்டு இதனால்தான் இங்குள்ள கோயில் அர்ச்சகரும் வன்னி இலைக்கொண்டு பக்தர்களின் வேண்டுதலுக்கு அர்ச்சிப்பார், எனவே இங்கு அருச்சனை செய்வதற்கு வில்ல இலையும், வன்னி மர இலையும், மற்றும் சிவ பூசைக்கான சிகப்பு வெள்ளை அரளி பூக்களும் எளிதில் அமைக்கப்பட்ட இடமாக அமைந்துள்ளது இக்கோயில் கோயில் அமைந்த அன்றே இக்கோயிலுக்கு பக்கத்தில் நந்தவனம் இருந்த இடமும் இன்னும் உள்ளது. ஆனால் தற்போது பயன்பாடு அற்றதால் தற்போது கோயிலுக்குள்ளேயே இத்தனை வசதியும் தற்போது உண்டாக்கப்பட்டு விட்டுள்ளது. 

4) தீர்த்தம் என்ற வரிசையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி வைப்பாறு நதியுடன் இருக்கண்குடியில் கலந்து கடலில் சங்கமிக்கும் புண்ணிய நதியாம் அர்ச்சுனா நதியின் ஆற்றங்கரையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார், எனவே இக்கோயில் மூர்த்தி, தலம். தீர்த்தம் என்ற அடிப்படையில் ஆகம விிதிப்படி அமைந்த கோயில் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிறப்பு பெறுகிறது.

  இயற்கை சூழலிலும் இக்கோயில் முகவும் சிறப்பு பெற்று உள்ளது. அதிகம் ஜன நட மாட்டம் இலலாத அமைதியான சூழலில் இயற்கை எழில் கோலத்துடன் அமைந்துள்ளது. சுற்றிலும் எங்கும் பசுமை நிறைந்த சூழல். மனம் லயத்து ஒன்றிக்கும் சூழல் கொண்ட ரம்மியமான அருள் சக்தி கைகூடும் இடம்

5, ஓர் ஆன்மா தன் உடலை விட்டு பிரிந்து (பிறப்பு இறப்பு மனித உடலுக்குத்தான் ஆன்மாவிற்கு பிறப்பும் இறப்பும் கிடையாது  அது என்றும் உள்ள நித்திய பொருள் வினைப்பயனை முடித்து சிவமுக்தி பெறவேண்டும் அதுவரை அவ் ஆன்மா மறுபடியும் வேறு உடலில் தோன்றி பிறக்கும்)  ஒன்று சிவமுத்தி பெறவோ அல்லது தன் வினைப்பயனால் அடுத்த பிறப்பிற்கு உட்படுவதற்கு அந்த ஆன்மா கடைதேற அதற்கான சிறப்பு வழிபாடுகள் செய்யும் இடம் ஒன்று புண்ணிய நதியாக இருக்க வேண்டும் அல்லது சமுத்திரமாகவோ அல்லது கடலாகவோ இருக்க வேண்டும் உதாரணத்திற்கு இராமேஸ்வரம், காவேரி ஆறு,அல்லது புனித நதிகள் சங்கமிக்கும் இடம் இவ்விடங்களில் தான் புனி நீர் கொண்டு அபிசேகம் செய்ய எடுத்துச் செல்வார்கள் அதன்படி பார்த்தாலும் இக்கோயில் அமைந்துள்ள அர்ச்சுனா நதிக் கரையில் தான் இங்கு (நம் ஊர்மக்கள்) இவ்விடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே இவ்விடத்திலுள்ள இக்கோயில் இராமேஸ்வரம் காவேரிக்கரைகள் உள்ள கோயில்களுக்கு ஈடாக உள்ளதை நாம் அறியலாம்,மேலும் நாம் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு தூய உடம்புடன் முதல்தரிசனம் செய்யும் கோயில் தெய்வம் விநாயகர்தான் எனவேதான்ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் விநாயகர் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார் அவ் வரிசையில் அவ்வாறே அமைந்த கோயில் ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதில்லை அதற்காக அதன் சிறப்பில்லாது போய்விடுமா?

6) ஓர் ஆத்மா உடலை வி்ட்டு சென்ற பின் அவ் ஆன்மா தனக்கு ஓர் உடம்பு கிடைக்கவோ அல்லது முக்தி பேறு அடையவோ தவித்துக்கொண்டிருக்கும் அப்போது அவ் ஆன்மா சிறப்பு பெற அவ் ஆன்மாவின் வழித்தோன்றல்கள் செய்யும் கரும (ஈமக்கிரியை) காரியங்கள் செய்யும் இடமும் அவர்கள் (ஆன்மாக்கள் ) முக்தி பேறு அடைய மோட்ச தீபம் ஏற்றும் கோயில் இக்கோயில் தான் ( மோட்ச தீபம் ஏற்றும் கோயில் சிவலாயங்களில் சிதம்பரம் தான் எனவே இக்கோயில் சிதம்பரத்திற்கு ஈடான மோட்ச தீபம்ஏற்றி வழிபடும் கோயிலானதால் இதற்கு தனி சிிறப்பு உண்டு.

7) நம் ஊர் கிராமத்து தெய்வமான அருள்மிகு மாரியம்மன் சித்திரை மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடும் தெய்வம் முதல் நாள் அம்மன் எழுந்தருளச் செய்யப்படும் இடம் இக்கோயில் முன் உள்ள மாரியம்மன் சக்தி பீடத்தில்தான், மேலும் அவ்வாறு எழுந்தருளச் செய்யும் போது நம் ஊர் பெரியகோயில் காவல் தெய்வங்களான பெரிய கருப்பர், மாமுண்டி கருப்பர் ஆகியோர் மருளாடிகளால் எழுந்தருளி அருள் வாக்கு கொடுத்து அம்மனை வரவழைக்க செய்யும் இடமும் இக்கோயில்தான்

8) நம் ஊர் சாலிய சமுதாயத்தினரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் வைகாசி திங்களில் கொண்டாடும் போது இரண்டாம் நாளான புதன் கிழமையில் அம்மனையும், அம்மனோடு வரும் சுமார் 500 முளைப்பாரி அம்மனும் கரைக்கும் இடமும் இதுதான். எனவே நம் ஊர் கிராம தேவதைகள் திரியோதன சக்தியாக (மறைமுகமாக ) இங்கு ஆட்சி செய்யும் இடம் இக்கோயில்தான்

9) முன்னோரு காலத்தில் மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு அடியார் அல்லது சித்தர் இக்கோயிலில் நீண்ட நாள் தங்கியிருந்து இங்கு சமாதி அடைந்ததாக வாய்வழி செய்திகளாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அடக்கம் செய்த இடம் இக்கோயில் அருகில்தான் அமைந்திருந்தது யாவரும் அறிவர் எனவே இவர் சித்தராக இருந்து சமாதி ஆகியிருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அவ்வாறானால் பிரசித்தி பெற்ற தலங்களில் சித்தர்களின் சமாதி இருப்பதை நமக்கு இங்கு உறுதிபடுத்துகிறது. எனவே இவ்வகையிலும் இக்கோயில் சிறப்பு பெறுகிறது.

10.தெய் வழிபாட்டிற்கு சிவ முக்திக்கும் நம் பகுதி இறை தெய்வமான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் நம் ஊரின் வடக்கு திக்கில் அமைந்தபடியால் எல்லோராலும் வடக்கு திக்கு நோக்கியே வழிபாடு செய்வது முக்கியமானதாலும் நம் இஸ்ட தெய்வமான நம்ஆத்தடி விநாயகரும் கைலாய நாதரும் வடக்கு திக்கில் அமர்ந்து நம் ஊருக்கு அருள்பாலித்து வருகிறார்கள் எனவே இக்கோயில் வடக்கு திசையில் அமைந்தது இவ்வூருக்கு கிடைத்த சிறப்பு

   நம் ஊரில் சிவதலம் முதன்முதலில் சதுரகிரி சுந்தரமூர்த்தியின் பிரதிநிதியாக எழுந்தருளிஉள்ள அருள்மிகு  கைலாய நாதராக உள்ளார்.  இங்கு  அவர் முன்,  தினமும் காலை மாலை மணிவாசகர் அருளிய சிவபுராணம் ஒரு தடவையாவது மனம் மொழி மெய்யால் உணர்ந்து பாடி வர அவ் ஆன்மாவிற்கு வீடு பேறும் கடைசி காலத்தில் மரண அவஸ்தை நீங்கி எளிய இறப்புடன் முக்தி பேறும், வாழும் போது எல்லாச் செல்வங்களும் நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும்,தந்து குரு லிஙக, சங்கம பக்தியும் சிவஞானமும் மென்மேலும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம்.

 தற்போது இக்கோயிலில் பிரதி மாதமும் அமாவாசை பூசையும், பெளர்ணமி தோறும் அருள்மிகு மாரியம்மன் சக்தி பீடத்தில் அம்மனுக்கும், மூலவர் மற்றும் கைலாய நாதருக்கும், மற்றும் சங்கடகர சதுர்த்தி தினத்தில் மூலவர் இராஜகணபதிக்கும் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அடியார்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழிபாடு தமிழிலேயே அவர்ரவர்கள் இறைவனை போற்றி பாடி மலர் வில்வம் மற்றும் வன்னிமர இலைகளால் அரச்சனை செய்து சிறப்பு பெறலாம், இதன் மூலம் தான் ஒரு ஆன்மா மனம் மொழி மெய்யால் இறை வழிபாடு செய்ய முடியும்  இவ்வாய்ப்பு இவ் ஆலயத்தில் மட்டுமே உண்டு அவரரவர்கள் செய்தமாக வினைப்பயனுக்கு ஈடாக  " மாணிக்க வாசகரின் கூற்றுப்படி " முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " என்றபடி வினைப்யன் நீங்கவும் நல்வாழ்வு நல்கவும் தாங்களே அர்ச்சனை தமிழால் செய்யலாம். வெறு எந்கக் கோயில்களிலும்  செய்ய முடியாத செயல் இதுதான் எனவே இக்கோயிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் விரும்பி வந்து அபிசேக ஆராதனையிலும் அர்ச்சனையிலும் ஒன்றி பக்தி நெறியில் பங்கு பெற்று அருள் பெற்று உய்ய வேண்டுகிறோம். அபிசேக பொருட்களும் கோயிலுக்கு கட்டளையாக செலுத்த விரும்பும் பொருட்களும் அனைத்தும் தாங்கள் நேரிலேயே கொண்டுவந்து காெடுத்து சிறப்பு மற்றும் அபிசேக பூசையில் கலந்து அருள் ெபறலாம். இங்கு எக்காரியத்திற்கும் பணமாக வாங்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து்க் கொள்கிறோம். தங்களால் முடியாத தருணத்தில் அதற்கு வேண்டிய வழிமுறைகளை தெரிந்து காெள்ள திருநாவுக்கரசு வழிபாட்டு மன்றத்தார்களையும், சக்தி பீட உபாசகர்களையும் நேரில் அணிகி விபரங்கள் தெரிந்து கொள்ளலாம். இக்கோயில் மேலும் ேமலும் சிறப்பு பெற அவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க இக்கோயிலின் வளர்ச்சிக்கு தங்களின் யாக்கை மனம் ெமாழி, கொண்டு அர்ப்பனித்து இக்கோயில் சிறக்க உதவிட அன்புடன் வேண்டுகிறோம். இவ்வூரில் சிவலாயம் சிறப்பு பெற்று நம் ஊர் வளர்ச்சி அடைய அன்புடன் அழைக்கிறோம். தற்போது வரை இக்கோயில் வளர்ச்சிக்கு அடியார்கள் பூசை சாமான்கள். அபிசேக சாமான்கள் பிரசாதம் தயார் செய்ய சமையல் சாமன்கள் என்று அடியார்கள் நன்கு உதவி செய்துள்ளார்கள் மற்றும் கோயிலில் சுற்று சூழல் வளர்ச்சிக்கு பொருளாகவும் யாக்கையாலும் உதவிகள் செய்து வருகிறார்கள் இவர்களுக்கு ஊர் சார்பாகவும், திருநாவுக்கரசர் வழிபாட்டு மன்றத்தின் சார்பாகவும், சக்தி பீட உபாசகர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  இக்கோயிலில் வழிபாடு செய்ய விரும்பும் அடியார்களுக்கு "அவன் அருள் இருந்தால் தான் இது கிடைக்கும் எனவே அவன் அருளாலேயே அவன் தாள் வணங்கி வளம் பெறுவோம். தற்போது இக்கோயிலின் உட்பிரகாரத்தில் மலர் செடிகள் வைத்து பூத்துக் குலுங்கி வளம் சேர்த்து மனத்திற்கு ரம்மியமான சூழலில் கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.இதுவும் சிறப்பிற்கு ஒர் எடுத்துக்காட்டே

திருச்சிற்றம்பலம்