இறைவனைப் பற்றி அறியும் ஞானமே பிரம்ம ஞானம் என்று சொல்லப்படுகிறது. பெளதீக, சூக்கும, மனோ தத்துவங்களை உருவாக்கியவர்கள் , பிரம்ம ஞானம் பெற்ற சித்தர்கள். உடலில் இருக்கும் ஞானேந்திரியங்களை சரியான முறையில் வசப்படுத்தினால் உயர்ந்தஜீவன்களாக ஆக முடியும். மனிதனின் அறிவுக்கு எட்டாத ரகசியம் எதுவும் இல்லை. காலச் சக்கரம் சுழலும் போது அந்த ரகசியங்கள் சில காலம் மறைந்து விடுகின்றன. மனிதர்களின் நிலையைப் புரிய வைப்பதற்காக சித்தர்கள் தோன்றினார்ககள். அந்த சித்தர்கள் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
உடலையும் மனதையும் வசப்படுத்தினால் உடலே கோவில் என்பதை உணர முடியும் என்று கூறய சித்தர்தான் சிவவாக்கியர், கருவில் இருக்கும் குழந்தை உலகம் என்ற பிரபஞ்சத்தில் அடியெடுத்து வைக்கும் போது எழுப்பும் முதல் ஒலி அம்மா என்ற குரலே. ஆனால் சிவ சிவா என்ற குரல் எழுப்பி குழந்தை பிறந்தது என்றால் ஆச்சரிய படுவோம் அல்லவா?. அப்படி பிறந்த குழந்தை க்கு சிவ நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் வகையில் சிவ வாக்கியர் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்த சிவ வாக்கியர் முக்திக்கு விடை தேடி தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு காசியில் ஒரு சித்தரை பார்த்தார்.
அந்த சித்தரை செருப்பு தைக்கும் தொழிலாளியாக மட்டுமே மற்றவர்கள் பார்த்தார்கள். ஆனால் சிவவாக்கியர் அவர்களின் கண்களுக்கு உலகத்தை அறிந்த ஞானிபோல் தென்பட்டார். அவர் அருகே அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த சித்தரின் மனதில் உபதேசம் கற்க போகும் மாணவன் கிடைத்து விட்டான் என்று தோன்றியது. எவரிடமும் இல்லாத புரிந்து கொள்ளும் சக்தி சிவவாக்கியருக்கு இருப்பதாக அவரது உள் உணர்வு கூறியது.
சிவ வாக்கியரிடம் அவர் பெயரை கேட்காமலேயே " சிவவாக்கியரே இந்த காசை, என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்துவிட்டு, இந்த சுரைக்காயின் கசப்புத் தன்மையை கழுவிட்டு வா" என்றார் சித்தர. சிவவாக்கியருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மறுப்பு சொல்லாமல் பேய் சுரக்காயையும் காசையும் வாங்கிக் கொண்டு கங்கை நதிக்கு சென்றார். காசை கங்கை நதியில் போடுவதற்காக தண்ணீர் அருகே கொண்டு சென்றார். நதியிலிருந்து ஒரு கை வெளியே வந்து காசை பெற்றுக் கொண்டுவிட்டது. வியப்பு மேலிட, பேய்ச் சுரக்காயை கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் வந்தார், மீண்டும் சிவவாக்கியரைச் சோதிக்க நினைத்த சித்தர், " சிவவாக்கியரே, இந்த தோல் பையில் உள்ள கங்கை தண்ணீரிடம் நீ கொடுத்த காசை கேட்டு வாங்கிக் கொடு" என்றார். குருவுக்கு அடிபணியும் சீடனைப்போல எந்த வித சலனமும் இல்லாமல் " கங்கை நீரே, என் ஆசான் கொடுத்த காசைக் கொடு" என்றார். அந்த தோல்பையிலிருந்து ஒரு கை நீண்டது. அந்த கையிலிருந்து காசை பெற்று சித்தரிடம் கொடுத்தார் சிவவாக்கியர்.
காசை பெற்றுக் கொண்ட சித்தர் " உன்னிடம் மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது. இனி நான் உனக்கு உபதேசம் செய்கிறேன், என்று கூறி உபதேசம் செய்தார். சில காலம் அவரிடம் சீடராக இருந்தார் சிவவாக்கியர்.
ஐம்பத்தொரு வயதான நிலையில் சிவவாக்கியருக்கு இல்லற ஈடுபாடு மனத்துக்குள் தோன்றயது. இதையறிந்த சித்தர், " சிவவாக்கியரே சிறிது காலம் இல்லற சுகத்தில் ஈடுபட்டு அதன்பின் முக்தி நிலையை அடைவாய்" என்று கூறினார். மனதில் இருந்த எண்ணத்தை எப்படி அறிந்தார் என்ற கேள்விக் குறியோடு சித்தரை நோக்கினார் சிவவாக்கியர்,
சித்தர் அவரது கையில் மணலையும், பேய் சுரக்காயையும் கொடுத்து " இந்த இரண்டையும் எந்த பெண் சமைத்துக் கொடுக்கிறாளோ அவளை மணந்து கொள்" என்று கூறி விடையளித்தார் சித்தர். அவைகளை பெற்றுக் கொண்ட சிவவாக்கியர் உபதேசங்களை செய்து கொண்டே நடந்தார், கூட்டங்களில் புதிர்போடுவது போல் " இந்த மணலையும், பேய் சுரைக்காயையும் சமைத்து உணவாக பரிமாற முடியுமா? என்று கேப்பார், பெண்கள் திகைத்தனர், யாராலும் முடியும் என்று கூற முடியவில்லை, ஒரு கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது " மணலையும் பேய் சுரக்காயையும் சமைத்து தர முடியுமா? என்று நரிக்குறவர்கள் மத்தியில் இருந்த பெண்களிடம் கேட்டார், அப்போது யாரும் எதிர் பாராமல் ஒரு பெண் முன்னே வந்து " நான் சமைத்துத் தருகிறேன் என்று கூறி வாங்கிச் சென்றது. சிறிது நேரத்தில் மணலையும் பேய்ச் சுரைக்காயையும் சமைத்து கொண்டு வந்தாள். அதை சாப்பிட்ட சிவவாக்கயர் இவளே என் மனைவி என்பதை அறிந்து , அவளது பெற்றோர்களிடம் தங்களது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டு திருமணம் செய்து கொண்டார். நரிக்குறவர்களோடு சிவவாக்கியரும் வாழத் தொடங்கினார். மூங்கில் மரத்தை வெட்டி கூடை செய்யும் தொழிலை கற்றுக்கொண்டார், ஒருநாள் மூங்கில் மரத்தை வெட்டினார், அந்த மரத்தில் இருந்து தங்கத்துகள்கள் கொட்டத் தொடங்கியதைக் கண்டார். இதைப் பார்த்த சிவவாக்கியர் " சிவபெருமானே ! உன்னிடம் நான் முக்திக்கு வழி கேட்டுக் கொண்டு இருக்கும் போது செல்வத்தைக் காட்டி என்னை மயக்குகிறாய்? என்று தங்கத்தை பார்த்த அதிர்ச்சியில் தலை தெறிக்க ஒடினார், இதைக்கண்ட கிராமத்து மக்கள் அவரிடம் என்ன என்று கேட்க, அந்த மரத்தில் பூதம் வருகிறது என்று பொய் கூற மக்கள் அதன் பக்கத்தில் நெருங்கி பார்க்க தங்க துகள்கள் இருப்பதை கண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தங்கத்துக்காக மாண்டார்கள்,
இதைப் பார்த்த சிவவாக்கியர் மனம் வெறுத்து அங்கிருந்து புண்ணியத் தலங்களுக்கு சென்று ஆசைகளை ஒழித்தால் சிவனைக் காணலாம் ஆசையை ஒழிக்காவிடில் எமனைத்தான் காண முடியும் என்ற தத்துவத்தை மக்களுக்கு போதித்தார். நாத்திக கருத்துக் கொண்டு ஆன்மீகத்தை நெறிபடுத்தி ஆன்மீகத்தை தத்துவப்பாடல் கள் கொண்டு நூல்கள் இயற்றி உள்ளார், அவர்தம் கருத்துக்கள் எதிர் மறை போல் தோன்றினாலும் அதன் உள்கருத்து பல தத்துவங்களை கொண்டது என்பது தெளிவர விளங்கும். இறுதியில் இவர் சமாதி ஆன இடம் கும்பகோணம்,
சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை
தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர்
கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.
சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும்
சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
விக்கிரக ஆராதனை
சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள்
இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ
மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”
நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?
சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்துஅழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.
இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.
உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?
திருச்சிற்றம்பலம்
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
புதன், 29 ஏப்ரல், 2015
தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் - சிவ வாக்கியர்
இறைவனைப் பற்றி அறியும் ஞானமே பிரம்ம ஞானம் என்று சொல்லப்படுகிறது. பெளதீக, சூக்கும, மனோ தத்துவங்களை உருவாக்கியவர்கள் , பிரம்ம ஞானம் பெற்ற சித்தர்கள். உடலில் இருக்கும் ஞானேந்திரியங்களை சரியான முறையில் வசப்படுத்தினால் உயர்ந்தஜீவன்களாக ஆக முடியும். மனிதனின் அறிவுக்கு எட்டாத ரகசியம் எதுவும் இல்லை. காலச் சக்கரம் சுழலும் போது அந்த ரகசியங்கள் சில காலம் மறைந்து விடுகின்றன. மனிதர்களின் நிலையைப் புரிய வைப்பதற்காக சித்தர்கள் தோன்றினார்ககள். அந்த சித்தர்கள் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
உடலையும் மனதையும் வசப்படுத்தினால் உடலே கோவில் என்பதை உணர முடியும் என்று கூறய சித்தர்தான் சிவவாக்கியர், கருவில் இருக்கும் குழந்தை உலகம் என்ற பிரபஞ்சத்தில் அடியெடுத்து வைக்கும் போது எழுப்பும் முதல் ஒலி அம்மா என்ற குரலே. ஆனால் சிவ சிவா என்ற குரல் எழுப்பி குழந்தை பிறந்தது என்றால் ஆச்சரிய படுவோம் அல்லவா?. அப்படி பிறந்த குழந்தை க்கு சிவ நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் வகையில் சிவ வாக்கியர் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்த சிவ வாக்கியர் முக்திக்கு விடை தேடி தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு காசியில் ஒரு சித்தரை பார்த்தார்.
அந்த சித்தரை செருப்பு தைக்கும் தொழிலாளியாக மட்டுமே மற்றவர்கள் பார்த்தார்கள். ஆனால் சிவவாக்கியர் அவர்களின் கண்களுக்கு உலகத்தை அறிந்த ஞானிபோல் தென்பட்டார். அவர் அருகே அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த சித்தரின் மனதில் உபதேசம் கற்க போகும் மாணவன் கிடைத்து விட்டான் என்று தோன்றியது. எவரிடமும் இல்லாத புரிந்து கொள்ளும் சக்தி சிவவாக்கியருக்கு இருப்பதாக அவரது உள் உணர்வு கூறியது.
சிவ வாக்கியரிடம் அவர் பெயரை கேட்காமலேயே " சிவவாக்கியரே இந்த காசை, என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்துவிட்டு, இந்த சுரைக்காயின் கசப்புத் தன்மையை கழுவிட்டு வா" என்றார் சித்தர. சிவவாக்கியருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மறுப்பு சொல்லாமல் பேய் சுரக்காயையும் காசையும் வாங்கிக் கொண்டு கங்கை நதிக்கு சென்றார். காசை கங்கை நதியில் போடுவதற்காக தண்ணீர் அருகே கொண்டு சென்றார். நதியிலிருந்து ஒரு கை வெளியே வந்து காசை பெற்றுக் கொண்டுவிட்டது. வியப்பு மேலிட, பேய்ச் சுரக்காயை கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் வந்தார், மீண்டும் சிவவாக்கியரைச் சோதிக்க நினைத்த சித்தர், " சிவவாக்கியரே, இந்த தோல் பையில் உள்ள கங்கை தண்ணீரிடம் நீ கொடுத்த காசை கேட்டு வாங்கிக் கொடு" என்றார். குருவுக்கு அடிபணியும் சீடனைப்போல எந்த வித சலனமும் இல்லாமல் " கங்கை நீரே, என் ஆசான் கொடுத்த காசைக் கொடு" என்றார். அந்த தோல்பையிலிருந்து ஒரு கை நீண்டது. அந்த கையிலிருந்து காசை பெற்று சித்தரிடம் கொடுத்தார் சிவவாக்கியர்.
காசை பெற்றுக் கொண்ட சித்தர் " உன்னிடம் மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது. இனி நான் உனக்கு உபதேசம் செய்கிறேன், என்று கூறி உபதேசம் செய்தார். சில காலம் அவரிடம் சீடராக இருந்தார் சிவவாக்கியர்.
ஐம்பத்தொரு வயதான நிலையில் சிவவாக்கியருக்கு இல்லற ஈடுபாடு மனத்துக்குள் தோன்றயது. இதையறிந்த சித்தர், " சிவவாக்கியரே சிறிது காலம் இல்லற சுகத்தில் ஈடுபட்டு அதன்பின் முக்தி நிலையை அடைவாய்" என்று கூறினார். மனதில் இருந்த எண்ணத்தை எப்படி அறிந்தார் என்ற கேள்விக் குறியோடு சித்தரை நோக்கினார் சிவவாக்கியர்,
சித்தர் அவரது கையில் மணலையும், பேய் சுரக்காயையும் கொடுத்து " இந்த இரண்டையும் எந்த பெண் சமைத்துக் கொடுக்கிறாளோ அவளை மணந்து கொள்" என்று கூறி விடையளித்தார் சித்தர். அவைகளை பெற்றுக் கொண்ட சிவவாக்கியர் உபதேசங்களை செய்து கொண்டே நடந்தார், கூட்டங்களில் புதிர்போடுவது போல் " இந்த மணலையும், பேய் சுரைக்காயையும் சமைத்து உணவாக பரிமாற முடியுமா? என்று கேப்பார், பெண்கள் திகைத்தனர், யாராலும் முடியும் என்று கூற முடியவில்லை, ஒரு கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது " மணலையும் பேய் சுரக்காயையும் சமைத்து தர முடியுமா? என்று நரிக்குறவர்கள் மத்தியில் இருந்த பெண்களிடம் கேட்டார், அப்போது யாரும் எதிர் பாராமல் ஒரு பெண் முன்னே வந்து " நான் சமைத்துத் தருகிறேன் என்று கூறி வாங்கிச் சென்றது. சிறிது நேரத்தில் மணலையும் பேய்ச் சுரைக்காயையும் சமைத்து கொண்டு வந்தாள். அதை சாப்பிட்ட சிவவாக்கயர் இவளே என் மனைவி என்பதை அறிந்து , அவளது பெற்றோர்களிடம் தங்களது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டு திருமணம் செய்து கொண்டார். நரிக்குறவர்களோடு சிவவாக்கியரும் வாழத் தொடங்கினார். மூங்கில் மரத்தை வெட்டி கூடை செய்யும் தொழிலை கற்றுக்கொண்டார், ஒருநாள் மூங்கில் மரத்தை வெட்டினார், அந்த மரத்தில் இருந்து தங்கத்துகள்கள் கொட்டத் தொடங்கியதைக் கண்டார். இதைப் பார்த்த சிவவாக்கியர் " சிவபெருமானே ! உன்னிடம் நான் முக்திக்கு வழி கேட்டுக் கொண்டு இருக்கும் போது செல்வத்தைக் காட்டி என்னை மயக்குகிறாய்? என்று தங்கத்தை பார்த்த அதிர்ச்சியில் தலை தெறிக்க ஒடினார், இதைக்கண்ட கிராமத்து மக்கள் அவரிடம் என்ன என்று கேட்க, அந்த மரத்தில் பூதம் வருகிறது என்று பொய் கூற மக்கள் அதன் பக்கத்தில் நெருங்கி பார்க்க தங்க துகள்கள் இருப்பதை கண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தங்கத்துக்காக மாண்டார்கள்,
இதைப் பார்த்த சிவவாக்கியர் மனம் வெறுத்து அங்கிருந்து புண்ணியத் தலங்களுக்கு சென்று ஆசைகளை ஒழித்தால் சிவனைக் காணலாம் ஆசையை ஒழிக்காவிடில் எமனைத்தான் காண முடியும் என்ற தத்துவத்தை மக்களுக்கு போதித்தார். நாத்திக கருத்துக் கொண்டு ஆன்மீகத்தை நெறிபடுத்தி ஆன்மீகத்தை தத்துவப்பாடல் கள் கொண்டு நூல்கள் இயற்றி உள்ளார், அவர்தம் கருத்துக்கள் எதிர் மறை போல் தோன்றினாலும் அதன் உள்கருத்து பல தத்துவங்களை கொண்டது என்பது தெளிவர விளங்கும். இறுதியில் இவர் சமாதி ஆன இடம் கும்பகோணம்,
சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை
தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர்
கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.
சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும்
சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
விக்கிரக ஆராதனை
சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள்
இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ
மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”
நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?
சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்துஅழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.
இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.
உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?
திருச்சிற்றம்பலம்
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
செவ்வாய், 28 ஏப்ரல், 2015
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர்
மனித உடல் கூறுகளைப் பற்றி சித்தர்கள் பாடல்களாகப் பாடி வைத்திருக்கிறார்கள்
ஐம்பூலங்களால் ஆன உடம்பில் எத்தனை ஒட்டைகள், ஒன்பது வாசல்கள் என நவத்துவாரங்கள் என பாடியுள்ளனர், கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, நாசி துவாரங்கள் இரண்டு, வாய், சிறுநீர் துவாரம், மலத்துவாரம்,என ஒன்பது வாசல்கள் என்றனர், உடலில் எழுபத்திரண்டாயிரம் நரம்புகள், உடலைத் தாங்க முதுகெழும்புத்தண்டு, எட்டு நீண்ட எலும்புகளுடன்இணைக்கப்பட்ட எழுபது எலும்புகள் என கண்டறிந்துள்ளனர்,
விஞ்ஞான காலத்திற்க முன்பே உடல்கூறுகளின் ரகசியங்களையும், ஏதாவது பாகம் பழுது பட்டால் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் அறிந்தவர்கள் சித்தர்கள், இதனாலேயே அவ் வைத்தியத்திற்கு சித்தர் வைத்தியம் (சித்த வைத்தியம்) என வழங்கப்படுகிறது.
வட இந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் என்ற சித்தரைப்பற்றி பார்ப்போம்.
சிவபெருமானும் பார்வதிதேவியும் பூவுலகில் சஞ்சரித்து வரும்போது கடற்கரையில் அமர்ந்து சிவபெருமான் பார்வதி தேவிக்கு தாரக மந்திரம் உபதேசித்தார், பார்வதி தேவி சற்று நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார், அதை அறிந்த சிவபெருமான் மந்திரத்தை உபதேசித்துக் கொண்டே இருந்தார், கடற்கறையில் ஒரத்தில் பெரிய மீன்களுக்கு பயந்து ஒரு மீன்குஞ்சு தண்ணீரில் இருந்தது. அப்போது அந்த மீன்குஞ்சு, சிவபெருமான் கூறிய தாரக மந்திரத்தைக் கேட்டது, மந்திரத்தை கேட்ட அந்த மீன்குஞ்சு மனிதனாக மாறியது.
இதைப்பார்த்த சிவபெருமான் மீனாகஇருந்து மனிதனாக மாறியவனுக்கு மச்சேந்திரன் என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்தார், ஞானம் பெற்ற மச்சேந்திரன் சித்தராகி ஞான வழியை மக்களுக்கு போதித்த கொண்டு இருந்தார்.
ஒரு கிராமத்தை சித்தர் மச்சேந்திரன் கடந்த போது, ஒரு வீட்டு வாசலில் கவலையோடு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் சித்தரைப் பார்த்ததும் அவசரமாக உள்ளே சென்று உணவை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தார். அவளது முக வாட்டத்தைப் பார்த்த சித்தர் உனக்கு என்ன மனக்குறை என்று வினவினார்,
எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாள்.
சித்தர் சிறிது திருநீற்றை கொடுத்து இந்த திருநீற்றை பாலில் கலந்து குடி குழந்தை பாக்கியம் கிடைக்கும், என்று கூறி ஆசிர்வதித்தார், நற்செய்தி கேட்ட பெண் முகமலர்ந்து சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பியதும் நடந்த நிகழ்வுகளை கூறினாள். அவனோ உனக்கு திருநீறு கொடுத்தவன் உண்மையான துறவியா? என்பது உனக்கு எப்படி தெரியும்? அந்த திருநீற்றை அடுப்பில் போட்டுவிடு என்றான், சிவன் நமக்கு நல்வழீகாட்டுவான் என்றான். கணவன் சொல்லை மறுக்க முடியாத நிலையில் திருநீற்றை அடுப்பில் போட்டாள் மனைவி.
இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன, அந்தப் பெண்ணுக்கு குழந்தைப்பாக்கியம் அதன் பின் கிடைக்க வில்லை. சிவத்தலங்களை தரிசித்து விட்டு மீண்டும் அந்த கிராமத்தின் வழியாக வந்தார் சித்தர் மச்சேந்திரன்.தான் திருநீற்றை கொடுத்த பெண் வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினார், கதவைத்திறந்த பெண் சித்தரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கினாள்.
சித்தரோ வீட்டின் உள்ளே பார்த்தபடி உன் மகன் எங்கே அவனை அழை நான் பேச வேண்டும் என்றார். அவளோ, எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றாள். நான் தந்த விபூதி என்னவாயிற்று என்றார், உடனே அப்பெண் " என்னை மன்னியுங்கள், தாங்கள் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டேன் என்றாள், எந்த அடுப்பில் என்றார் சித்தர், இந்த அடுப்பில் தான் போட்டேன் இந்த சாம்பலை இங்கே தான் கொட்டினேன் என்று அவ்விடத்தைக் காட்டினாள். உடனே அவ்விடத்தின் அருகில் நின்று சித்தர் " கோராக்கா வெளியே வா! என்றார், என்றைக்கு திருநீறு கொடுத்தாரோ, அன்று முதல் இன்று வரை எவ்வளவு காலங்கள் ஆனதோ அத்தனை காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடு அந்த சாம்பலில் இருந்து குழந்தை வெளிப்பட்டது. அந்தக் குழந்தைக்கு "கோரக்கர்" என்று பெயர்சூட்டினார், அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சித்தர்.
கோரக்கர் எட்டு வயது ஆகும்போதே சித்தரோடு சேர்ந்து அவர் கற்றுக் கொடுக்கும் மந்திரங்களை கற்று குருவுக்கு மிஞ்சின சிஷ்யராக திகழ்ந்தார். சித்தர் மச்சேந்திரனுக்கு மீனாக இருக்கும் போது சிவபெருமான் உபதேசித்த மந்திரங்களையும் உபதேசித்தார். நிறைகுடம் போல் அறிந்தவற்றை வெளிக்காட்டாமல் சிறந்த ஞானியாக வாழ்ந்தார் கோரக்கர் சித்தர். குருநாதருக்கு உணவு வேண்டி வீடுகளில் பிச்சை வேண்டி குருவிற்கு உணவு அளித்தார், ஒரு நாள் பிச்சை எடுக்கும் போது ஒரு வீட்டில் வடை கிடைத்தது. அதை தம் குருநாதருக்கு கொடுத்தார். மறுநாளும் குருநாதர் அதேவீட்டில் வடை வாங்கி வர அனுப்பினார், ஆனால் அந்த வீட்டில் வடை கேட்டார். ஆனால் அந்த பெண் இன்று வடை இல்லை. அரிச்சாதம் தான் உள்ளது. என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார், உடனே அந்த பெண்மணி நல்ல வேளை உன் குருநாதர் வடைதான் கேட்டார், உன் கண்ணை கேட்டால் என்ன செய்வாய் என்றாள். கேட்ட மாத்திரத்தில் சற்றும் தாமதிக்காமல் கண்ணை தோண்டி எடுத்து, அந்த பெண்ணிடம் கொடுத்தார்., குருபத்தி எப்படிப்பட்டது என்பதை விளக்குவதைப் போல் இருந்தது அச்செயல். ஆசிரம் திரும்பிய கோரக்காரரை குருநாத சித்தர் பார்த்து திடுக்கிட்டார். எங்கே உன் கண் என்றார், உடனே கோரக்கார் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார். கோரக்கரின் குருபக்தியை பார்த்து வியந்த சித்தர், தன் சக்தியால் இழந்த கண்ணை திரும்பக் கிடைக்கச் செய்தார்.
இருவரும் சிவத்தலங்களை தரிசித்து வரும்போது, கேரள தேசத்தில் அந்நாட்டு மன்னனின் மகளை மணந்தார் சித்தர்.
கோரக்கர் தன் குருநாதரிடம் நாம் இங்கே வந்து அதிக காலம் ஆகிவிட்டது. நமது ஆசிரமம் செல்ல வேண்டினார். உடனே குருநாத சித்தர் தன் மனைவியிடம் விடைபெற்று கோரக்கருடன் ஆசிரமம் புறப்பட்டார், அப்போது அவரின் மனைவி தன் கணவரிடம் கோரக்காரருக்கு தெரியாமல் ஒரு தங்க் கட்டியைகொடுத்தர்ர்,
மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் வருவது இயற்கைதானே. வழியெல்லாம் கோரக்காரரிடம் இங்கு கள்ளர் பயம் உண்டா என கேட்டுக் கொண்டே வந்தார், கோரக்காருக்கு பயத்தின் காரணம் தெரிந்து விட்டது. அன்று இரவு ஒரு இடத்தில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தூங்கும் போது அதனை கோரக்காரருக்கு தெரியாமல் வைத்து விட்டு சித்தர் தூங்கினார். அப்போது கோரக்கார் சித்தர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியை எடுத்து கண்காணாதஇடத்தில் புதைத்து விட்டார், தங்கக் கட்டி எடுத்த இடத்தில் அதே எடையுள்ள கல்லை வைத்துவிட்டார்,
காலையில் எழுந்த சித்தர் தங்கக் கட்டி இருந்த இடத்தில் கல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார், உடனே தன் சீடன் கோரக்கரிடம் என்னுடைய தங்கக் கட்டியை நீ அபகரித்துக்கொண்டாய் , நீ என் சீடனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய் என்று கூறினார்,
கோரக்கரோ அமைதியாக அங்கே இருந்த மலைமீது ஏறி கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை தெளித்து தான் நின்றிருந்த மலையையே தங்கக் கட்டியாக மாற்றினார். குருவே தங்கள் தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
சித்தராக வாழும் பேற்றினை இழந்து அறியாமையின் பிடியில் சிக்கிய எனக்கு நல்வழிகாட்டிவிட்டாய் என்று வாழ்த்தினார் மச்சேந்திரன். அதன் பின் குருவை பிரிந்து சென்ற கோரக்கர் தவத்தில ஈடுபட்டார். அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.
சித்தர் கோரக்கர் பேரூரில் ஜீவ சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோசங்கள் நீங்கும். வீண் பயம் அகன்று தைரியம் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
மாந்திரீக மர்மங்கள்: பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்தி...
மாந்திரீக மர்மங்கள்: பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்தி...: ஒவ்வொரு மனிதனும் பூமியில் ஜனனம் ஆகும் காலத்தின் அடிப்படையில் அவன் எந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறக்கிறான். அந்த நட்சத்திரம் ...
வியாழன், 23 ஏப்ரல், 2015
திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்;
செவ்வாய், 21 ஏப்ரல், 2015
சொற்றுணை வேதியன்
வெள்ளி, 17 ஏப்ரல், 2015
நாயன்மார் வரலாறு - கலிக்காம நாயனார்
வியாழன், 16 ஏப்ரல், 2015
சொறகள் சொல்லும் சுவையான செய்தி
செவ்வாய், 14 ஏப்ரல், 2015
சொற்கள் சொல்லும் சுவையான செய்தி / முகநூல் வெளியீட்டதன் தொகுப்பு
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
அரிக்கேன் விளக்கு
அரிக்கேன் என்னும் சொல் ஒரு புயலைக் குறிக்கும் பெயர். அந்தப் புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணை விள்க்கு தான் அரிக்கேன் விளக்கு என்று பெயர் வந்தது.
**********************************************************
கதர்
கதர் என்பது அரபு மொழிச் சொல்லாகும், அதற்கு கவுரவம் என்பது பொருள். கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை சுதந்திர வீரரான முகம்மது அலி காந்தியடிகளுக்கு போர்த்தி இதை கதராக (கவுரமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் தான் நூற்பு ஆடை "கதர்" என்று அழைக்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
சிசேரியன்
ரோம் நாட்டில் ஜூலியஸ் சீசர் பிறந்த போது, அவனது தாயின் வயிற்றில் அறுவை செய்து தான் குழந்தையை எடுத்தார்கள். அதனால் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு அவனது பெயரே " சிசேரியன்" என்று நிலைத்து விட்டது.
*************************************************************************
ரூபாய்
ரூபாய் .. ரூபி என்பது ஆங்கிலச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல்
"ராப்யா " என்பேத ரூப்யாவாகி, ரூபாய் ஆகியுள்ளது,ராப்யா என்றால் வார்ப்பட வெள்ளி என்று பொருள்.
மன்னர் ஷெர்ஷா தான் முதலில் கி,பி. 1538..1545 ரூபியா என்ற பெயரில் ெவள்ளிக் காசுகளை வெளியிட்டார்.
ஆப்பிரி்க்கா
ஆப்பிரிக்கா என்றால் " வெயில் நிலம் " என்று பொருள்
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
ஆங்கிலச் சொற்கள்
1 முதல் 99 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c,d எழுத்துக்கள் கிடையாது, 100 (Hundred)எழுதும் போது மட்டும் 'd' வரும்.
1 முதல் 999 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c, எழுத்துக்கள் கிடையாது, 1000 (Thousand )எழுதும் ேபாது தான் a வரும்
b என்னும் எழுத்து முதன் முதலாக billion மட்டும் வருகிறது. மொத்த எண்ணிக்கையிலும் ஒரு ஸ்பெல்லிங்கில் கூட வருவதில்லை.
*************************************************************************
கபடி
கபடி என்பது ஒரு விளையாட்டின் பெயர். இந்த விளையாட்டில் எதிர் அணியினரை நோக்கி "கபடி" கபடி" என்று பாடிக் கொணடு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது கையைப் பிடித்தோ , காலை பிடித்தோ வந்தவரை வெளியேற்றுவது வழக்கம்.
அப்போது சொல்லப்படும் " கையைப்பிடி" என்று சொல்லப்படும் வார்த்தை "கைப்பிடி" என்று மருவி , கபடி என்று சுருங்கி, அதுவே விளையாட்டின் பெயராகவும் நிலைத்து விட்டதெனவும் கூறப்படுகிறது. இது தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு எனவே இது ஒரு தமிழ் சொல்லின் சுருக்கமே என்பதாகும்.
******************************************************************************************************
உங்களுக்கு தெரியுமா?
ெசாற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
நீலப்புத்தகம்
பிரிட்டிஷ் அரசின் அலுவலக அறிக்கை "நீலப்புத்தகம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
வெள்ளைப் புத்தகம்
ஜெர்மனி மற்றும் சீனாவின் அலுவலக அறிக்கை " வெள்ளை புத்தகம் " என்னும் பெயரி்ல் அழைக்கப்படுகிறது.
ஆரஞ்சு புத்தகம்
நெதர்லாந்தின் அலுவலக வெளியீடுகள் அனைத்தும் " ஆரஞ்சு புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது.
மஞ்சள் புத்தகம்
பிரான்சின் அலுவலக வெளியீடுக்ள் அனைத்தும் " மஞ்சள் புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது
சாம்பல் புத்தகம்
ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அலுவல வெளியீடுக்ள் " சாம்பல் புத்தகம் என அழைக்கப்படுகிறது.
சிவப்பு புத்தகம்
ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட நூல் " சிவப்பு புத்தகம்" என அழைக்கப்படுகிறது
பச்சை புத்தகம்
இத்தாலி மற்றும் ஈரானின் அலுவலக வெளியீடுகள் பச்சைபுத்தகம் என்று அழைக்கப்படுகிறது
வெள்ளை அறிக்கை
அதிகார பூர்வ உண்மைகள் பற்றி அரசு வெளியிடும் சிறு கையேடு " வெள்ளை அறிக்கை " எனப்படுகிறது.
**********************************************************************************************
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
அனைத்து எழுத்துக்களும் கொண்ட ஆங்கிய வாக்கியம்
இந்த ஆங்கில வாக்கியத்தில் ஏ முதல் இசெட் (A -Z)வரையிலான அனைத்து ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளது இதன் சிறப்பு
Pack my box with five dozen Jugs of liquor.
The quick brown fox jumps over the lazy dog.
Jackdaws love my big sphinx of Quartz.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
(Boyocott) பாய்காட்
"காப்டன் பாய்காட்" என்பவர் அயர்லாந்தில் ஒரு பண்ணையின் உரிமையாளர், ஒரு சமயம் விவசாயிகள் இவர் சொற்படி நடக்க மறுத்தார்கள் வியாபாரிகளும் அவருக்கு தங்கள் பொருட்களை விற்க மறுத்தார்கள், அதிலிருந்து பகஷ்காரம் (புறக்கணிப்பு) செய்வதைக் குறிப்பிட பாய்காட் என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.
--------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்தி:
டாங்க் (Tank)
போர்க்களத்தில பயன்படும் முக்கியமான வாகனம் டாங்க் ஆகும். 1915ல் இது உருவானது. முதல் உலகப் போரின் போது இது ஒரு வகை போர் சாதனம் என்பது எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க, தண்ணீர் கொண்டு வரும் வண்டி , அதாவது ' டாங்க்' Tank என்று சொன்னார்கள், இதுவே , நாளடைவில் நிலைத்து விட்டது.
-------------------------------------------------------------------------------------------
நோபல் பரிசு
1896 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி காலமான ஆல்பிரட் நோபல் என்பவர் 90 லட்சம் டாலர்களை பேங்கில் வைப்பு நிதியாக போட்டு, அதன் வட்டியை ஆண்டுதோறும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். இதுவே நோபல் பரிசாகும். 1901ஆம் ஆண்டு முதல் பெளதிகம், ரசாயனம், மருத்துவம், இலக்கியம், சமாதானம், ஆகிய ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1968 ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது.
-------------------------------------------------------------------------------------------
ஜெராக்ஸ்
பொதுவாக, ஒரு பிரதி போல் மற்றொரு பிரதி காப்பி எடுப்பதை "ஜெராக்ஸ்" எடுப்பது என்று சொல்லப்படுவதுண்டு. ஜெராக்ஸ் என்ற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா? முதன் முதலில் நகல் எடுப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட மெசினின் பெயர்தான் ஜெராக்ஸ் என்பது அதுவே நாளடைவில் காப்பி எடுப்பதற்கான சொல்லாக மாறிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------
செங்கடல்
செங்கடல் என்றால் சிவப்பாக இருக்கும் கடல் என்பதல்ல. எடாம் என்ற மலையின் நிழல் கடலில் தெரியும். ஹிப்ரூ மொழியில் எடாம் என்றால் சிவப்பு எனப்பொருள் அதனால் தான் செங்கடல் என பெயர் பெற்றது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்:
அட்ட (அஷ்ட) வீரட்ட ஸ்தலங்கள்
ஈசன் சிவபெருமானார் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் எட்டு இதனையே அட்ட வீரட்ட ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் அனைத்தும் தஞ்சை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களான காவேரி டெல்டா பகுதிகள் காணப்படும் தலங்கள், இத்தலங்கள் சமயக்குறவர்கள் நால்வர் பாடல்களில் அதிகம் காணப்படும் கோவில்கள் கொண்ட தலங்கள் உதாரணமாக திருநாவுக்கரசர் பாடலில் கண்ட வரிகள் "அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே," அவையாவன:
1) திருப்பறியலூர் வீரட்டம் : தக்கன் யாகம் அழித்தல் ஸ்தலம்
2) திருக்கண்டியூர் வீரட்டம் : தான் என்ற கர்வம் பெற்ற பிரம்மன் சிரத்தை பைரவர் மூலம் தலை கொய்தல் ஸ்தலம்
3) திருவதிகை வீரட்டம் : முப்புரம் - மும்மலங்கள் - திரபுர சம்காரம் செய்த ஸ்தலம்
4) திருக்கோவிலூர் வீரட்டம் : பைரவர் உருவம் தாங்கி வானர்களுக்காக அந்தகா சூரன் வதம் செய்த ஸ்தலம்
5) திருக்குறுக்கை வீரட்டம் : காமதகன மூர்த்தி யாகி காமமை - மன்மதனை எரித்த ஸ்தலம்
6) திருக்கடவூர் வீரட்டம் : சிவபக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை - கூற்றுவனை வதம் செய்த ஸ்தலம்
7) வழுவூர் வீரட்டம் : கயமுகா சூரனாகிய யானையினை (கொன்று ) வதம் செய்து அதன் தோலை உரித்து யானைத் தோ லினை அணிந்த தலம்
8) திருவிற்குடி வீரட்டம் : சலந்திர ஸ்தலம் ( தன்கால் பெருவிரலால் கீறியமைந்த சக்கரத்தினால் தலையைஅறிந்த ஸ்தலம்)
ஆக எட்டு வீரச்செயல்கள் புரந்த ஸ்தலங்கள் அட்ட வீரட்டம் என்றழைக்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
ஓசி OC
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது கம்பெனித் தபால்களை On Company Service என்று குறித்து கட்டணம் செலுத்தாமல் அனுப்புவது வழக்கம், ( தற்போதும் அரசு அலுவலகத்தபால்கள் அனைத்தும் அரசு இலவச சேவையிலேயே அனுப்பப்படுகிறது, அதனை தற்போது இந்திய அரசு பணி சர்வீஸ் ' OIGS" ) அதன் சுருக்கமான OCS என்பதே ஓசி ( OC ) ஆகி , காசு கொடுக்காமல் வாங்கும் பொருளை எல்லாம் இன்று ஓசி என்று அழைக்கின்றோம்
----------------------------------------------------------------------------------------------12.4.2015
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
நீலப்படம் Blue Film
அந்த மாதிரியான படங்ககளுக்கு நீலப்படம் என்று பெயர் வந்தது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
ஸ்காட்லாந்தில் விலை மாதர்களை கைது செய்தால் , நீலநிற கவுனை அணிவித்து விடுவார்கள், அங்கே இது போன்ற தவறான தகாத செயல்களை நீலநிறத்தில் தான் அடையாளப்படுத்துவார்கள்.
அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல்களைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது,அதன் பெயர் " ப்ளூ" . என்பதாகும், மேலும் நீல நிறத்திற்கு செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதற்குரிய சக்தி இருக்கிறது, எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
A,B,C,D,E, F ஆங்கில வரிசை எழுத்துக்கொண்ட சிறிய வார்த்தை
A,B,C,D,E, Fஆகிய ஆறெழத்துக்களையும் கொண்ட மிகச் சிறியஆங்கில வார்த்தை 'FEED BACK"
**********************************************************************
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
தினமும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் அதிகம் பயன்படும் வார்த்தை எது தெரியுமா?
" ஹலோ "என்னும் வர்த்தை தான்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
எட்டுன் (அட்ட ) பொருள் கொண்ட வார்த்தைகள்
அட்ட சுபம் பொருட்கள்
இணையக் கயல், கண்ணாடி, சாமரம், கொடி, தோட்டி, நிறைகுடம், முரசு, விளக்கு
அட்ட சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், காயம், இந்துப்பு
அட்ட தனம்
அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, வித்தை, விவேகம், தனம்
அட்ட தாது
எட்டு உலோகம்: பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம்,
அட்டதானப் பரீட்சை
வைத்தியன் அறிகுறி எட்டு, நாடி, முகம், மலம்,அமுரி, கண்,நா, சரீரம், தொனி.
**********************************************************************************************************
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
திரி கடுகு
சுக்கு, மிளகு, திப்பிலி இம் மூன்றும் திரிகடுகம்என்றுரைப்பர்
திரி சாதம்
லவங்க பத்திரி, ஜாதிபத்திரி, தாளிய பத்திரி
திரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், மர மஞ்சள்
திரி கந்தம்
சந்தனம், அகில், கட்டை, தேவதாரி
திரிகாயம்
வெளளுள்ளி, சுக்கு, பெருங்காயம்
திரி கோபம்
சந்தனம், சிவதை,, வெங்குங்குலியம்
திரி மூலம்
கண்டு பரங்கி மூலம், திப்பிலி மூலம், சித்தர மூலம்
திரி நிம்மம்
மலை வேம்பு, நில வேம்பு, கறி வேம்பு
திரி பத்திரி
லவங்க பத்திரி, ஜாதி பத்திரி, தாளிச பத்திரி
திரி லவங்கம்
கிராம்பு, அகில், சண்பகம்
திரி லவங்கப்பூ
சண்பகப்பூ, சிறு நாகப்பூ, கிராம்பு
முக்கூட்டு எண்ணெய்
நெய், ஆமணக்கெண்ணை,எள் எ்ண்ணெய்
முச் சீரகம்
சீரகம், கருஞ்சீரகம், காட்டு சீரகம்
****************************************************************************
13.4.2015
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
முலட்டோ
நாம் ஆங்கிலேயரும் இந்தியரும் கலந்த இனத்தை ஆங்கிலோஇந்தியன் என்று கூறுவது போல் வெள்ளையரும் நீக்ரோவும் கலந்த கலப்பினத்திற்கு பெயர் " முலட்டோ " என்பதாகும்.
கம்யூனிகேஷன் Communication
கம்யூனிகேஷன் Communicationஎன்ற சொல், Communis கம்யூனிஸ் என்ற லத்தீன் சொ்ல்லிருந்து தோன்றியது, இதற்கு பொது என்று பொருள், இருவருக்கிடையே பொதுவான கருத்து என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகின்றது,
கறுப்பு பெட்டி
விமானத்தின் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டியின் இன்னொரு பெயர் சிவிஆர் ( CVR) காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்டர் எ்ன்பதாகும்
பாரதி
பபரதியாருக்கு " பாரதி" என்ற பட்டப் பெயர் எட்டயபுரம் அரச சபையால் அளிக்கப் பட்டது,
டிராகுலா DRACULA
செஞ்சிலுவைச் சங்கத்தினர் , தாங்கள் அமைத்த புதிய இரத்த சேமிப்பு நிலையத்திற்கு BLOOD BANK டிராகுலா DRACULA எனப் பெயர் வைத்தனர், DRACULA என்பது 'DONORS REGISTRATION AND CALL UP LINKED ACCESSION 'என்பதன் சுருக்கப் பெயராகும், பெயர் பொருத்தம்சூப்பராக இருக்கிறதல்லவா?
மஞ்சள் புரட்சி, வெண்மை புரட்சி
ஒரு நாட்டில் உணவு எண்ணெய் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க உணவு எண்ணெய் உற்பத்திக்கு சூரியகாந்தி என்ற எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி திட்டத்தினை மஞ்சள் புரட்சி என்றும்,
பால் மற்றும் முட்டை அதி தீவிர உற்பத்தி திட்டத்திற்கு
வெண்மை புரட்சி என்றும் பெயரிடப்பட்டு தி்ட்டங்கள் செயல் படுத்தப்பட்டன.
திருக்குறளில் காணப்படாத எழுத்து
தமிழ் கடவுள் ஆகிய சொற்களும், ஒள என்ற எழுத்தும் திருக்குறளில் எங்கும் காணப்படவில்ைல
நெம்பர் 1 ன் சிறப்பு
2011 ஆம் ஆண்டிற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு, அதாவது நெம்பர் 1ஐ மட்டுமே உபயோகித்து இவ்வருடத்தி்ல் நான்கு நாட்களை குறிப்பிட முடியும், அதாவது, 1.1.11 , 11/1/11. 1/11/11. 11/11/11 ஆகியவையே அந்த நாட்கள் இது போன்று 100 வருடங்கள் கழித்துதான் மறுபடியும் வரும் எனபதை காண்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
14.4.2015
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
பஞ்சா (5) ஐந்து இனத்தினை குறிக்கும் சொற்கள்
பஞ்ச தந்திரங்கள்
கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல், நண்பர்களை சம்பாதித்தல், பகைவரிடம் உறவாடி வெல்லுதல், பொருள் அழிவு,ஆய்வினையின்றி ( ஆராய்ச்சின்றி) செயலில் இறங்குதல், ஆகியவை ஆகும்.
பஞ்ச புராணம்
தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து இலக்கியங்களை பஞ்சபுராணம் என்று கூறப்படும்.
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலியன கொண்டது ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
பஞ்ச பூதங்கள்
பூமி, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் ஆகிய பஞ்ச பூதங்கள் எனப்படும்.
பஞ்ச பூத தலங்கள்
காஞ்சிபுரம் ( பூமி), சிதம்பரம்( ஆகாயம் ), காயஹ்திரி (காற்று), திருவண்ணாமலை ( நெருப்பு), திருவானைக்கால் ( நீர்)ஆகியன.
பஞ்சமா பாதகங்கள்
கொலை, பொய், திருட்டு, மது, குருநிந்தை முதலிய கெட்ட குணங்கள்
பஞ்ச வர்ணம்
வெள்ளை, கருப்பு, சிவப்பு, பசுமை என்ற பச்சை, பொன்னிறம் ஆகியன
ஐம்படைத் தாலி
சங்கு, சக்கரம், கதை, வாள், வில், ஆகிய உருவம் கொண்ட குழந்தைகளுக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி என்பதாகும்.
திருமண பஞ்சமூலம்
நாணல் வேர், தருப்பை வேர், கரும்பு வேர், நெல்பயிர் வேர், வெள்ளை அசன் வேர் ஆகியன.
பஞ்ச கவ்வியம்
ஆவின்பால், தயிர், வெண்ணை , நீர், சாணம், - கோமாதாவின் சீறு நீரையும் ( கோமியத்தையும் பஞ்சகாவியம் என்று சொல்லும் பழக்கம் உள்ளது)
பஞ்ச கோலம்
சுக்கு, திப்பிலி, திப்பிலி மூலம், செவ்வியம், சித்திரை மூலம்
பஞ்ச அமிர்தம்
பால், சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம்,( அல்லது) பேரீச்சம் பழம்.
பஞ்ச காரம்
சீனிக்காரம் , சவுக்காரம், பொரிகாரம், பிரிகாரம், படிகாரம்.
பஞ்ச காரகம்
காயம், வெள்ளுள்ளி, வெங்காயம், கடுகு, வெந்தயம்
பஞ்ச சாரம்
நவச்சாரம், எவச்சாரம், உவாச்சாரம், சத்திச்சாரம், கதவிச்சாரம்
பஞ்ச திரவியம்
ஏலம், சண்பகம், சீரகம், கிராம்பு, கொட்டம்
பஞ்ச மோகினி
கோரோசினை, குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், புணுகு
பஞ்ச வர்க்கம்
சிறுநாகப்பூ, ஏலம், லவங்கம், சாதிக்காய், கற்பூரம்
பஞ்ச வேம்பு
நல்வேம்பு, மலைவேம்பு, கருவேம்பு, நிலவேம்பு, சிவனார் வேம்பு முதலியன
பஞ்சாக்கினி மூலம்
காட்டுக்கறணை, கறிக்கறணை, புளிமடல், பிரண்டை, கோப்பிரண்டை.
பஞ்சரத்தினம்
முத்து, வைரம், மரகதம், நீலம், பொன்(தங்கம்) இவை ஐந்தும் பஞ்சரத்தினம் என்று அழைக்கபடுகிறது.
பஞ்ச இந்திரியம்(உறுப்புக்கள்)
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் பஞ்ச இந்திரயம் எனப்படும்
பஞ்சாங்கம்
நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் என்னும் ஐந்து அங்கங்கள் கொண்ட குறிப்பு புத்தகத்திற்கு பஞ்சாயங்கம் என்று பெயர்.
பஞ்சக்கிரி
சாதிக்காய், சாதி பத்திரி, கிராம்பு குராசாணி, வசுவாசி ஆகியன
பஞ்ச தரு
சந்தனம், பாரிசாதம், அரிசந்தனம், மந்தாரம், கற்பகம்
பஞ்சபீத மூலி
வெள்ளெருக்கு, மாவிலங்கை, கொடி வேலி, புன் முருங்கை,கோவை கிழங்கு
பஞ்சலோகச்சாயம்
திப்பிலி,திப்பிலி மூலம், சுக்கு, செவியம், கண்டுபரங்கி
பஞ்சலோகம்
பாசை, வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு
பஞ்சவாசம்
ஏலம், தக்கோலம்,இலவங்கம், சாதிக்காய், கற்பூரம்
பஞ்சாட்சர மந்திரம்
நமசிவாய என்ற மந்திரத்தின் நடு எழுத்தினை மாற்றி மாற்றி அமைக்கும் சொற்கள்
நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவநசி , வசியநம,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்கு தெரியுமா?
சொறகள் சொல்லும் சுவையான செய்தி
கடிகாரம்
"கடிகை" என்னும் சொல் தமிழில் நாழிகை என்ற கால அளவை குறிக்கும், அதனால் காலத்தை அளக்கும் கருவிக்கு கடிகாரம் என்று தமிழில் ெபயர் வந்து விட்டது. 14ம் நூற்றாண்டில், வழக்கத்தில் இருந்த கடிகாரத்திற்கு மணியைக்காட்டும் ஒரே ஒரு முள் மட்டுமேஇருந்தது.
கிராம வாத்தியங்கள்
முரசு, பறை, உறுமி, பம்பை, தாளம், ெநடுங்குழல் ஆகியன
கோவில் வாத்தியங்கள்
கொம்பு, தாதை, திருச்சினம், பூரி, சங்கு
கச்சேரி வாத்தியங்கள்
யாழ், வீணை, குழல், மிருதங்கம், கோட்டு வாத்தியங்கள்
நரம்புக் கருவிகள்
யாழ், வீணை, பிடில்
தோலிசைக் கருவிகள்
தவில், தப்பட்டை, டமாரம், மத்தளம், மிருதங்கம்
துளைக் கருவிகள்
வேங்குழல், நாதசுரம், மகுடி
நரம்புக்கருவிகள்
யாழ், வீணை, பிடில்
குதிரைச் சக்தி HP
ஒரு நொடிப் பொழுதில் ஒரு அடி தூரத்திற்கு 550 பவுண்ட் எடையை தூக்க தேவையான சக்தியே ஒரு குதிரை சக்தி HP எனப்படும்,
நாலும் / இரண்டும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் ( நாலடியார்) இரண்டும் ( குறள்) சொல்லுக்குறுதி
தந்தை நாடு
உலகில் ஒரே ஒரு நாடு மட்டும்தான் தந்தை நாடு என்று அழைக்கப்படுகின்றது, அது ஜெர்மானியர்கள் தாம் பிறந்த நாட்டை "தந்தையர் நாடு" என்றே அழைக்கின்றனா்.
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்பதற்கு " தாயே உன்னை வணங்குகிறேன்" எனப் பொருளாகும்.
சிம் கார்டு SIM
நாம் நம் கைபேசியில் பயன்படுத்தும் சிம் SIM கார்டு என்பது SUBSCRIBER INFORMATION MODULE என்பதன் சுறுக்குமாகும்
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
அனைத்து எழுத்துக்களும் கொண்ட ஆங்கிய வாக்கியம்
இந்த ஆங்கில வாக்கியத்தில் ஏ முதல் இசெட் (A -Z)வரையிலான அனைத்து ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளது இதன் சிறப்பு
Pack my box with five dozen Jugs of liquor.
The quick brown fox jumps over the lazy dog.
Jackdaws love my big sphinx of Quartz.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
(Boyocott) பாய்காட்
"காப்டன் பாய்காட்" என்பவர் அயர்லாந்தில் ஒரு பண்ணையின் உரிமையாளர், ஒரு சமயம் விவசாயிகள் இவர் சொற்படி நடக்க மறுத்தார்கள் வியாபாரிகளும் அவருக்கு தங்கள் பொருட்களை விற்க மறுத்தார்கள், அதிலிருந்து பகஷ்காரம் (புறக்கணிப்பு) செய்வதைக் குறிப்பிட பாய்காட் என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.
--------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா?
சொற்கள் சொல்லும் சுவையான செய்தி:
டாங்க் (Tank)
போர்க்களத்தில பயன்படும் முக்கியமான வாகனம் டாங்க் ஆகும். 1915ல் இது உருவானது. முதல் உலகப் போரின் போது இது ஒரு வகை போர் சாதனம் என்பது எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க, தண்ணீர் கொண்டு வரும் வண்டி , அதாவது ' டாங்க்' Tank என்று சொன்னார்கள், இதுவே , நாளடைவில் நிலைத்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------
நோபல் பரிசு
1896 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி காலமான ஆல்பிரட் நோபல் என்பவர் 90 லட்சம் டாலர்களை பேங்கில் வைப்பு நிதியாக போட்டு, அதன் வட்டியை ஆண்டுதோறும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். இதுவே நோபல் பரிசாகும். 1901ஆம் ஆண்டு முதல் பெளதிகம், ரசாயனம், மருத்துவம், இலக்கியம், சமாதானம், ஆகிய ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1968 ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெராக்ஸ்
பொதுவாக, ஒரு பிரதி போல் மற்றொரு பிரதி காப்பி எடுப்பதை "ஜெராக்ஸ்" எடுப்பது என்று சொல்லப்படுவதுண்டு. ஜெராக்ஸ் என்ற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா? முதன் முதலில் நகல் எடுப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட மெசினின் பெயர்தான் ஜெராக்ஸ் என்பது அதுவே நாளடைவில் காப்பி எடுப்பதற்கான சொல்லாக மாறிவிட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
செங்கடல்
செங்கடல் என்றால் சிவப்பாக இருக்கும் கடல் என்பதல்ல. எடாம் என்ற மலையின் நிழல் கடலில் தெரியும். ஹிப்ரூ மொழியில் எடாம் என்றால் சிவப்பு எனப்பொருள் அதனால் தான் செங்கடல் என பெயர் பெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
