வியாழன், 16 மார்ச், 2017

ஆணவத்தோடு கொடுக்கும் தங்கத்தை விட அன்போடு கொடுக்கும் துளசி தழையே சக்தி அதிகம்

துலாபாரம்
ஆணவத்தோடு கொடுக்கும் தங்கத்தை விட அன்போடு கொடுக்கும் துளசி தழையே சக்தி அதிகம்

இதனை கிருஷ்ண பரமாத்மாவின் துலாபார நிகழ்வு உணர்த்தும்



துலாபாரம் என்றால் இந்தக் காலத்தில் கொடுக்கப்படும் வெங்காயம் காய்கறி, அரிசி பருப்பு போன்றதல்ல. தங்கத்திலேயே துலாபாரம்.

சத்திய பாமாவிற்கும் ருக்மணி தேவிக்கும் இடையே யார் கிருஷணரிடம் அன்பும் பக்தியும் உள்ளவள் என்ற பிரச்சனை ஏற்பட்டது.கிருஷ்ணரிடம் யார் அதிக பிரியம் அன்பு செலுத்துவது யார்?? என்ற வினா எழுந்தது.

சத்தியபாமாவோ தான்தான் கிருஷ்ணரிடம் மரியாதையும் அன்பும் உடையவள் என்னிடம் தான் தங்க ைவர நகைகள் எல்லாம் உள்ளது, என் அன்பு பக்திக்கு யார் அன்பும் ஈடாகாது என்று அதற்கு ஈடாக தனது தங்க, வைர வைடுரங்கள் அனைத்தையும் பகவனின் எடைக்கு எடையா துலாபாரத்தட்டில் வைத்தாள். ஆனால் தட்டு சிறிதும் அசையவில்ைல. மேலும் தான் கொண்டுவந்த சீதனப் பொருட்கள் எல்லாவற்றையும் வைத்தாள், இனனமும் தட்டு அசையவில்ைல.

மெதுவாக வருகிறாள் ருக்மணி

தனது அன்பின் அடையாளமாக ஒரு துளசி தழையை ஸ்ரீகிருஷணரின் காலில் வைத்து வணங்கிவிட்டு அதை எதிர் துலாபார எதிர் தட்டில் வைக்கிறாள். 

என்ன ஆச்சரியம் தராசு சமமாகிறது.

ஆணவத்தோடு கொடுக்கும் தங்கத்தை விட அன்போடு கொடுக்கப்படும் ஒரு சிறு துளசி தழைக்கு சக்தியும் மரியாதையும் அதிகம் என்பதைஇந்தக் கதை உணர்ததுகிறது அல்லவா?

திருச்சிற்றம்பலம்

நன்றி° கண்ணதாசனின் ஞானத்தைத்தேடி
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக