ஞாயிறு, 13 ஜூலை, 2014


திருச்சிற்றம்பலம் நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே! திருவாசகம் (Thiruvasagam) திருச்சிற்றம்பலம் திருவாசகம் தேடித் திருவடி வந்து சேர வழிகாட்டுகிறது திருவாசகம் . சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய சிவனைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல்,அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல்,அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல்,இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது. ”திருவாசகம் வேறு, சிவன் வேறு”,என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். “திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், “அழுதால் உன்னைப் பெறலாமே!” மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். ... சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது. சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,” என்று ஆகமத்தைச்சிறப்பித்து விடுகிறார்.. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது.–தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”/கட்டாயம்படியுங்கள் பரப்புங்கள். தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும்-மனிதன் இறைவனுக்குச் சொன்னதுதிருவாசகம் Sivapuranam Vilakkam A-மாணிக்கவாசகர் திருவாசகம்-Thiruvasagam http://www.youtube.com/watch?v=uWBEkIy1NsE

சனி, 12 ஜூலை, 2014

சிதம்பரம்


சிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லை என அழைக்கப்பட்டது.மத்யந்தன முனிவரின் மகன் புலிக்கால் முனிவர் என்ற வியாக்கிரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என கோயில்புராணம் கூறும். அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகின்றான். இருமுனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை என இன்று அழைக்கப்படுகிறது. இதுதான் ’திருச்சிற்றம்பலம்’ ஆகும். இங்குதான் ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தச் சிறு வெளியினை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் – சிறுமை. ஆகாயம் – வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது.இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது. சிதம்பரம்: சித் – அறிவு; அம்பரம் – வெளி; பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாயம் அல்ல இது; அறிவு மயமான வெளி என்று சுட்டிக்காட்டுவதற்காக இவ்வாறு கூறினர் நம் முன்னோர்.இதனைப் பெரியபுராணத்துள் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் “சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலம்” எனவும் திருஞானசம்பந்தர் புராணத்தில்,”அண்ணலார் தமக்குஅளித்த மெய்ஞ்ஞானமேஆன அம்பலமும் தம்,உள்நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒருபெரும் தனிக்கூத்தும்” எனவும் சேக்கிழார் சுவாமிகள் கூறுகிறார்.சிதம்பரம், திருச்சிற்றம்பலம் என அழைக்கப்படுவதை இங்கே ’சிற்பர வியோமம்’ , ‘மெய்ஞ்ஞானமே ஆன அம்பலம்’ எனத் தெளிவுபடுத்துகிறார் சேக்கிழார். திருச்சிற்றம்பலத்தின் அமைப்பு: சாதாரணமாக எந்தவொரு சிவாலயத்திலும் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி அமைந்திருக்கும் கோயிலில் இறைவனின் திருவுருவங்களான தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் ஆகியோர் வீற்றிருப்பர். ஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார். மகாசதாசிவ தாண்டவேசுவரர்: சிவாகமங்களில் இறைவன் ‘மகாசதாசிவ தாண்டவேசுவரர்’ எனப் போற்றப்படுகிறார். மகுடாகமம் 34 ஆவது தத்துவ மூர்த்தியான சதாசிவ மூர்த்திக்கு மேற்பட்டவராக தாண்டவேசுவரரை நியசிக்கச் சொல்கிறது. சர்வஞானோத்தர ஆகமம் “ பதியாவார் சதாசிவர், இவர் மந்திர வடிவினரும், பஞ்சகிருத்தியங்களைச் செய்பவருமாயிருக்கிறார்” எனக் கூறுகிறது. காரணாகமமும் மகுடாகமமும் சதாசிவ தாண்டவேசுவரரையே 36 ஆம் தத்துவ முடிவிலுள்ள பரம ஆகாய அத்யட்சர் என்கின்றன. இறைவன் உயிர்களுக்காக 9 வித வடிவங்கள் எடுக்கின்றான். பிரமன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம் என்பன அவை. இந்நிலையை ’நவந்தரு பேதம்’ என சைவ சித்தாந்த நூல்கள் கூறும். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் மேலான நிலைதான் மகாசதாசிவ தாண்டவேசுவரர். இதனை,” எந்த நடராச மூர்த்திக்கு சதாசிவ மூர்த்தி ஆசனமாக அமைகிறாரோ அவரே, நவந்தரு பேதத்துக்கு மேலானவர். இந்த நவந்தரு பேதங்களும் எவனிடத்தில் ஒடுங்குகின்றனவோ அவனே துவாத சாந்தப் பெருவெளியில் பரமானந்தத் தாண்டவம் புரிபவன். ஆதலால் தாண்டவ மூர்த்தியே மிக மேலானவர் என்பதில் ஐயமில்லை. ஆகவே ஞானி தாண்டவ மூர்த்தியையே இம்மை மறுமை இன்பங்கட்காக தியானிக்கக் கடவன்” என ஞானானந்த பரிபாஷை எனும் நூல் கூறுகிறது. இதனால்தான் தில்லை ஆனந்த நடராஜப் பெருமானின் வழிபாட்டின் போது ”நடராஜ ராஜ ராஜர் வருகிறார்” எனும் கட்டியம் கூறும் மரபு உருவானது. எனவே இந்த அடிப்படையிலேயே தில்லை நடராஜப் பெருமான் மூல மூர்த்தியாக வழிபடப்பெறுகிறார். திருச்சிற்றம்பலத்தின் சிறப்பு: சாதரணமாகக் கருவறை என்பது ஒரு கலசம் உடையது. கருவறைக்கு அதிஷ்டானம், பாதம், பிரஸ்தரம், கண்டம், சிகரம், ஸ்தூபி என்று 6 உறுப்புகள் உண்டு. இதிலிருந்து வேறுபடுவது சபை. திருச்சிற்றம்பலம் சபை ஆதலினால் அதற்கு 9 கலசங்கள் உள்ளன. அதில் கண்டம் என்ற உறுப்பு தவிர பிற காணப்படுகின்றன. திருச்சிற்றம்பலம் மரத்தாலானது. இது அதன் தொன்மையைக் காட்டுகிறது. தில்லையில் மட்டுமே 5 சபைகள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் ஆன ராஜசபை, உற்சவ மூர்த்திகள் வீற்றிருக்கும் தேவ சபை, நிருத்த சபை, கனக சபை, சித்சபை என்பன. இவை ஐந்தும் அன்ன, பிராண, மனோ, விஞ்ஞான, ஆனந்த மய கோசங்களைக் குறிப்பன. ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம் தங்கப்பூச்சு அமைந்த செப்பு விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டுள்ளன. ஆனந்த நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது. இதன் கீழ் முதல் மேல் வரையில் உள்ள கற்கள் மாத்ருகாட்சரங்கள் என்பர். சபையின் வாயில் தெற்குப் பகுதியில் மட்டுமின்றி கிழக்கு மேற்குப் பகுதிகளிலும் இரு வாயில்கள் இருப்பது இக்கோயில் இதயத் தானம் என்பதைக் குறிப்பதற்காக. திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. அடியார்கள் இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவர். இந்த கனகசபையில் 9 வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள 9 வாசல்களைக் குறிக்கும். இந்த கனக சபை பிரம்மபீடப் பகுதியாகும். இதற்கு எதிரம்பலம் எனவும் அழைக்கப்படும். கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களாகும். அச்சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 பெரிய தளவரிசைக் கற்கள் பஞ்ச பூதங்களாகும். கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறும் 5 வெள்ளிப் படிகளும் பஞ்சாட்சரப் படிகள் எனப்படும். இப்படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் திருக்களிற்றுப்படி எனவும் அழைக்கப்படும். கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்பர். இருபுறமும் சுபாகு, விமலன் எனும் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவ்வாயில் இதயவாயில் எனப்படும். திருச்சிற்றம்பலத்தில் 5 தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம். இது கால் அடி அகலமே இருக்கும். பிரம்ம பீடத்தை அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சற்றேறக்குறைய ஓரடி அகலமுள்ள இடத்தில் 5 தங்கத் தூண்கள் உள்ளன. இப்பகுதி விஷ்ணுபீடம் எனப்படும். இவ்வைந்து தூண்களும் பஞ்ச பூதங்களாகும். நடராஜப் பெருமான் முன்பு அர்ச்சகர் நின்று பூசை செய்யும் இடம் ருத்ரபீடம் எனப்படும். இது மூன்றடி அகலமிருக்கும். இங்குள்ள 28 வெள்ளித் தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடமாகும். இது ஏறக்குறைய 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் இருக்கும். இப்பீடம் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். மகேஸ்வர பீடத்துக்கு இருபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீசுவரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப்புறம் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது. ஆனந்த நடராஜமூர்த்தியும் சிவகாமிஅம்மையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் உள்ள 4 தூண்களும் 4 வேதங்களைக் குறிக்கும். சிதம்பர ரகசியம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரகஸ்யம் இருக்கும் பீடம் சதாசிவ பீடம் ஆகும். இறைவன் ஓர் உருவும் ஒரு நாமமும் இன்றி சிற்பர வியோமமாக அண்ட சராசரங்களையும் தொழிற்படுத்தி நடத்தி வரும் ஞான வடிவமே சிதம்பர ரகசியம் ஆகும். திருச்சிற்றம்பலத்தினுள் இறைவனைச் சுற்றியுள்ள இடம் பிரணவப் பிராகாரம் எனப்படும். இத்திருச்சிற்றம்பலம் சுத்த வித்தை தத்துவமாகக் குறிப்பிடப்படும். திருச்சிற்றம்பலத்தின் மேல் அமைந்த 64 சந்தனக் கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கும். பொன்னம்பலத்தின் தங்கக் கூரையில் உள்ள 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இவ்வோடுகளில் திருவைந்தெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுகளில் பொருத்தப்பட்டுள்ள 72,000 ஆணிகளும் நம் உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையைக் குறிப்பனவாகும். சித்சபையின் 9 கலசங்கள் நவசக்திகளைக் குறிக்கும். இதில் உள்ள 224 அடைப்புப் பலகைகள் 224 உலகங்களைக் குறிப்பன. சிதம்பர ரகசியத்தை கனகசபையிலிருந்து 96 துவாரங்கள் உள்ள பலகணி வழியாக தரிசிக்க வேண்டும். இந்த 96 துவாரங்கள் 96 தத்துவ தாத்துவிகங்களைக் குறிப்பன. சித்சபையினுள்ளே இறைவன் அருவம், உருவம், அருவுருவம் எனும் 3 நிலைகளில் எழுந்தருளியுள்ளான். சிதம்பர ரகசியம் அருவம், ஆனந்த நடராஜ மூர்த்தி உருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம். இதனை சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத் தொடக்கத்தில், ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எனும் திருப்பாடலில் சுட்டிக் காட்டி அருளியுள்ளார். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ – என்பது அருவம். ‘நிலவுலாவிய நீர்மலி வேணியன்’ – என்பது உருவம் ‘அலகில் சோதியன்‘ – என்பது அருவுருவம். இப்பொருளை நமக்கு தில்லைத் திருச்சிற்றம்பலமே காட்டித் தருகிறது. ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி வருடத்திற்கு இருமுறை திருவீதியுலாக் கொண்டருளுவார். மார்கழித் திருவாதிரை ஒன்று. ஆனித் திருவுத்திரம் மற்றொன்று. பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுக்குப் பிறகு தில்லையில் வழிபட்டு இறைவன் அருள் பெற்ற கௌட தேசத்து அரசன் ஹிரண்யவர்மன் எனும் இரண்டாம் சிம்மவர்மன் (கி.பி.550-575) ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் ஆனித் திருவுத்திரத் திருவிழாவும் நடத்தினான் என கோயில் புராணம் கூறும். ஆக தில்லையில் நடைபெறும் ஆனித் திருவுத்திரத் திருவிழா நால்வர் ஆசாரியர் பெருமக்கள் காலத்திற்கு முன்பே நடைபெற்று வந்தது என்பது தெளிவாகும். ஆடல்வல்லான் பற்றி….: இலிங்க மகா புராணத்தில் நிருத்தப் பிரியன், நித்ய நிருத்தன், நர்த்தனன், சர்வ சாதகன், என இலிங்க புராணத்தில் இறைவன் போற்றப்படுகிறான். சோழ மன்னர்கள் நடராஜ மூர்த்தியை ‘ஆடல்வல்லான்’ எனப் போற்றினர். நெல் அளக்கும் மரக்காலுக்கு ‘ஆடல்வல்லான்’ எனப் பெயரிட்டனர். ஒரு மாவட்டத்துக்கு ‘நித்ய வினோதம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஒரிசாவைச் சேர்ந்த சிற்பப் பிரகாசம் எனும் நூல் கர்பக சங்கர நிருத்தமூர்த்தி, சௌம்ய நட்டம்பரர், நந்தி மேல் நடமிடும் நட்டம்பரர் எனும் 3 வகை நடராஜர்களைக் குறிப்பிடும். மச்ச புராணம் ‘புஜ தாருவனம்’ எனும் 16 கைகளை உடைய திரிபுர தாண்டவத்தை விளக்கும். கூர்மபுராணத்தில் வரும் சிவகீதையில் நடராஜர் யோகீஸ்வரராக கூறப்படுகிறார். இந்தியாவின் வடபகுதியில் இலக்குமாண்டல், ஜாகேசுவர், நீலகண்டேசுவர், குவாலியர், புந்தி, சிட்டோகர், நாக்டா, அபு, உதயபுரி, அர்த்தனா, புமாரா, சிர்புர், புவனேசுவர், கொனாரக், அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா, பட்டடக் கல், பாதாமி, பேலூர், ஹளபேடு ஆகிய இடங்களில் நடராஜர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் சிவ தாண்டவம்: திரிபுவனமல்ல விக்ரமாதித்யன் -6 என்ற மேலைச் சாளுக்கிய மன்னனின் முனிராபாத் கல்வெட்டொன்றில் “சிவன் கை தட்டினால் சூரிய சந்திர மண்டலங்கள் அதிர்ந்து இவ்வுலகைச் சுமந்து நிற்கும் சேஷ நாகம் சுமை தாங்காது துடிக்க கடல் வேகமாக அலை வீசிப் பொங்குகின்றது” என்று குறிப்பிடப்படுகின்றது. காலசூரிக் கல்வெட்டொன்று, சிவ தாண்டவத்தின் போது “ உலகமாகிய பாத்திரம் சுழல்கையில் அதனைச் சுமக்கும் நாகராஜனின் படமும் தாழ்கிறது. அஷ்ட திக் கஜங்கள் நடராஜரின் அசைவின் போது அஞ்சி ஓடுகின்றன. தண்டம் போன்ற நீண்ட கைகள் வீசும் போது பிரபஞ்சத்தின் முகடு சுழல்கின்றது” என்று கூறுகிறது. ஹர்ஷரின் கல்வெட்டு,” வேகமான சிவதாண்டவத்தின் போது பிரபஞ்சத்தின் பௌதிக அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பூமி தாழ்வதும் திசைகள் மேல் எழுவதுமாக இருக்கின்றன” என்கிறது.

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 23 புலன்களுக்கு போடணும் கடிவாளம்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 23 புலன்களுக்கு போடணும் கடிவாளம் புலன்கள் ஐந்து அவை அடைகிற அனுபவங்களுக்கு அளவே இல்லை, அவற்றால் உண்டாகிற விளைவுகளுக்கும் கணக்கே இல்லை. கண்போன போக்கில் மனம் போகக்கூடாது என்பார்கள், வாயில் வந்ததைப் பேசக்கூடாது காதில் விழுந்ததை நம்பக்கூடாது என்றெல்லாம் பெரியோர்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள், அதைத்தான் ஐம்புலனடக்கம் பஞ்சேந்திரிய ஒழுக்கம் என்பது, சாத்துவிகக் குணத்தில் ஒன்று ஐம்புலங்களையும் அடக்கி வைத்தல், ஐம்புலங்களின் நுகர்ச்சியை பஞ்சேந்திரியாநுபவம் என்பர், பொறிகள் ஐந்து அவை கண்,காது, தோல், நாக்கு மூக்கு என்ற புலன்கள் அவற்றின் அறிவாகும் பார்த்தல், கேட்டல், ஸ்பரிசித்தல, ருசித்தல், முகர்தல், (ஒளி,ஒசை, ஊறு, சுவை, நாற்றம்) புலன்களின் இயக்கம் ஒருவனுக்கு நன்மையும் செய்யும தீமையும் செய்யும், அது அவற்றின் செயலைப் பொறுத்தது. மனிதரின் மாமனிதன் என்ற போற்றப்படுகிறவன் புலன்களை அடக்கியவன்தான் சாதனைகளில் மிகப் பெரிய சாதனை புலனடக்கம், வெற்றிகளில் சிறந்த வெற்றி புலன்களை வெல்வதுதான், " அறிவைப் பயன்படுத்தி பொறிகளை அடக்க வேண்டும், சாப்பாட்டில் ஆசை வைத்தாலும், சம்போகத்தில் ( புணர்ச்சி) பெருவிருப்பு கொண்டாலும் ஆன்ம வெற்றியை அடைய முடியாது" என்கிறார் திருமூல்ர் விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள், ஆனால் மதியை மறைக்கும் மயக்கத்தை ஏற்படுத்தி அதைச் செயல்படாதவாறு தடுக்கும் விதி, அதனால்தான் விதி வலியது என்கிறார்கள், புலன்கள் செருக்குற்று பாதிப்பை ஏற்படுத்துவதும் அப்படித்தான். புலன் மயக்கம் கூடாது. புலனை வென்றவன் முனிவன், புலன் வழி சென்றவன் சராசரி மனிதன். ஐம்பொறிகளும் துள்ளி குதிக்கும் கன்றுகளாயிருந்தால் கயிற்றால் பிணைத்து அடக்கலாம், அவை மதங்கொண்ட யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். புலன்களின் விருப்பத்தை கட்டுபடுத்த என்ன வழி பொறிகளை தறிகெட்டு போகாமல் காப்பது எப்படி? பிரணவமான திருவைந்தெழுத்தை ஒதியிருப்பதே பாதுகாப்பு என்கிறது திருமந்திரம். பாடல்: ஐந்தில் ஒடுங்கில்....... பேசாத வார்த்தை உங்களுக்கு அடிமை பேசியவார்த்தைக்கு நீங்கள் அடிமை, என்பார்கள். நிறையப் பேசுவதால் என்ன பயன்? சொற்கள் விளைவுடையவை விளைவறிந்து பேச வேண்டும், பேசிய வார்த்தைகளும் இழந்த காலமும் மீண்டும் பெற முடியாத முத்துக்கள். பொறிகளை இயக்குவது மனம் மனந்தான் அவற்றை உந்துகிறது. சிவத்தியானத்தில் மனதை அடக்கினால் இந்திரியங்கள் ( பொறிகள்) அடங்கும், பொறிகள் வழியே மனம் போகாமலிருக்க நல்ல கருத்துடைய நூல்களை கற்க வேண்டும். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பர் பெரியோர், அவை செயலின் விளைவேயாகும், சிவசிந்தையாயிருந்தால் பொறி வழி போகிற நிலையிருக்காது. உடலுக்கு ஒன்பது வாசல் என்றால் மனதுக்கு ஒராயிரம் வாசல், ஒவ்வொரு எண்ணமும் ஒரு வாசல் தான், எந்த வழி போவது என்பதைவிட எந்த வழியிலும் போகாமல் இருப்பதே சிறப்பு. ஞானியரும், யோகியரும் அதைத்தான் செய்கிறார்கள். மனமிறக்க வாயேன் பராபரமே என்பார் தாயுமானவர் " மனவழி சென்று உடலின் இன்பத்தை நாடினால் குற்றங்கள் உண்டாகும், வாழ்க்கை நிம்மதியை இழக்கும், உடலின்பத்தை நாடாதிருந்தால் உள்ளம் சிந்தனையற்று ஆனந்தத்தில் நிலைபெறும். பாடல்: எண்இலி இல்லி உடைத்து அவ்இருட்டடை ............ சகஸகரத்தலத்தில் விளங்கும் சிவனை வணங்கி தறிகெட்டோடும் புனன்களை அறிவால் மீட்டிடுங்கள். பெருமானின் திருமேனியை மனதில் பொருத்தி கொண்டால் பிறிதொன்றில் கவனம் செல்லாது. அப்போது உள்ளத்தில் ஊறும் அமுதத்தை துய்த்திடுங்கள்" நீங்கள் உலகியல் நாட்டம் கொண்டு பேசுகிறவரை உளளொளி காண இயலாது போகும் சொல்லற்றிரு! சும்மாயிரு! என்பது அதற்கான சொன்ன வார்த்தைகள், அதற்காகத்தான் பொறிகளின் இயல்பை அறிந்தவரே இருளை கடந்து ஒளியை காண்கிறார்கள். அதைவிடு, இதைவிடு, என்பது துறவறம், இல்லறத்தான் ஐம்பொறிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் போதும், எதையும் விடுகிற கட்டாயம் இருக்காது, இறைவனை பற்றியிருங்கள். இலலையேல் பற்றகள் உங்களை நாலாபக்கமும் ஐந்து பக்கங்களிலும் (ஐந்து புலன்கள் வழி) கவர்ந்து சென்றுவிடும், எனவே ஐம்புலன் அடக்கம் அருளைத் தரும் திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஒம் மேலும் ஆன்மிகத்தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வெள்ளி, 11 ஜூலை, 2014

ஞானமே அழிவற்ற பரப்பிரம்மம் அடைய உறைவிடம்


ஞானமே அழிவற்ற பரப்பிரம்மம் அடைய உறைவிடம் " காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை, மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போகமாட்டான்" பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், ஞானமார்க்கம் அடைய பல ஞானிகளான சித்தர்களும், வேதங்களும் கூறிய நெறிகளைஅவர்களின் சீடர்களுக்கு உபதேசமாக வழங்கியுள்ளனர், அந்த ஞான மொழியே பரம்பொருளாகிய ஞானசொரூபன் அருளியதாகும், பிறவிப் பிணி நீக்கி முக்தி எனும் விடுதலை அடைய காணும் வழிகள் நான்கு உண்டு இந்த மெய்யறிவான ஞான மார்க்கம் கொண்டால் முக்தி எனும் வீடு பேற்றை அடையலாம். ஞானத்தை அறிந்துஅதனை பின்பற்றி இறைவனின் செரூபத்தை அடைந்தவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதுமில்லை, பிரளய காலத்தில் துன்புறுவதுமில்லை.இதனையே திருமூலரும் திருமந்திரத்தில் முன்னை செய்த தவத்தால் சிவஞானத்தைப் பெற்று தன் உண்மை உணர்ந்தால் பிறவி அறும் என " முன்னை அறிவினிற் செய்த முதுதவம் ............. " என்ற பாடல் மூலம் விளக்கிறார், பலவிதமான அனைத்து பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள் உடல்கள் கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ அவை எல்லாவற்றிக்கும் பிரகிருதியே பிறப்பிடம் அதாவது கருத்தரிக்கும் தாய் , விதையளிக்கும் தந்தை, அவ்வாறு பிறக்கும் உயிர்களில் அழிவற்ற ஜீவாத்மாவாகிய உடலில் சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் என்ற பிரகிருதியிலிருந்து உண்டான மூன்று குணங்கள் காணப்படுகின்றன. ரஜோகுணம்: விருப்பு வடிவாகிற ரஜோகுணம் ஆசை, பற்று இவற்றால் உண்டாகிறது. அது ஜீவாத்மாவைக் கர்மங்களிலும் கர்மகளின் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டுகிறது. ரஜோ குணம் அதிகமாகும் போது, பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றோடு கூடிய கர்மங்களைத் தொடஙகதல், அமைதியின்மை, உலகியல் நுகர்பொருட்களில் பேராவல் இவையாவும் உண்டாகின்றன. தமோகுணம்: உடற்பற்றுடைய எல்லோரையும் மயக்கக்கூடியது. அஞ்ஞானத்திலிருந்து உண்டானதாகும். அது இந்த ஜீவாத்மாவை வீணான செயல்களில் ஈடுபடுவது சோம்பல், தூக்கம் இவற்றை கட்டுகிறது. இந்த தமோகுணம் அதிகமாகும் போது அந்தக்காரணங்களிலும், புலன்களிலும் ஒளியின்மையையும், செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மை, அசட்டைத்தனம், அதாவது வீண் செயல்களில் ஈடுபாடும், தூக்கம் முதலிய அந்தக்காரணஙகளின் மயக்கமும் உண்டாகின்றன. சத்துவ குணம்: இந்த சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுகிறது, ரஜோகுணம் செயலில் ஈடுபடுகிறது தமோகுணமோ, ஞானத்தை மறைத்து கவன மின்மையில் அதாவது வீணான செயல்களில் ஈடுபடுகிறது. ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்கி சததுவகுணம் மேலோங்குகிறது. சததுவகுணத்தையும், தமோகுணத்தையும் அடக்கி ரஜோகுணம் மேலோங்குகிறது. அப்படியே சத்துவகுணத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கி, தமோ குணம் மேலோஙகுகிறது. எப்போது மனிதன் சத்துவகுணம் பெருகி உள்பொழுது இறப்பை அடைகிறானோ, அப்போதே உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சுவர்க்கம் முதலிய புண்ணிய உலங்களை அடைகிறான். ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைந்து கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே பிறக்கிறான்,, அவ்வாறே தமோகுணம் அதிகமாக இருக்கும் போது இறந்தவன் புழு-பூச்சி, விலங்கு முதலிய அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான். சததுவ குணத்திலிருந்து ஞானம் உண்டாகிறது. ரஜோகுணத்திலிருந்து ஐயமின்றிப் பேராசையே உண்டாகிறது. தமோகுணத்திலிருந்து கவனமின்மை மதிமயக்கமும் உண்டாகின்றன. மேலும் அறியாமையும் உண்டாகின்றது. சத்துவ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் சொர்க்கம் முதிலிய உயர்ந்த லோகங்களை அடைகின்றனர், ரஜோகுணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் நடுவில் அதாவது மனித உலகிலேயே நிற்கின்றனர். தூக்கம், சோம்பல், வீண்செயல், முதலிய தாழ்ந்த குணங்களில் நிலை பெற்ற தமோச குணம் உடைய மனிதர்கள் புழு, விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிறவிகளையும் நரகத்தையும் அடைகின்றனர். மனித உடல் தோன்றுவதற்கு காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு மூப்பு இவற்றிலிருந்தும், பிற எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு பரமானந்தத்தை அடைகிறான், எந்த மனிதன் சத்துவ குணத்தின் செயலான பிரகாசத்தையும், ரஜோகுணத்தின் செயலான செயலூக்கத்தையும் தமோகுணத்தின் செயலான மோகத்தையும் அவை வரும்போது அவற்றை வெறுப்பதில்லையோ விலகும் போது அவற்றை திரும்பவும் பெற விரும்பவதில்லையோ, எவன் தன் நிலையான ஆத்ம சொரூபத்தில் இடையறாது நிலைத்து நிற்கிறானோ, இன்ப துன்பங்களை சமமாக கருதுவானோ, மண்ணையும் கல்லையும், பொன்னையும், சமமாக மதிப்பானோ, ஞானியோ, வேண்டியது-வேண்டாதது இரண்டடையும் ஒன்றாக நினைப்பானோ, இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் ஒன்றாக கருதுவானோ, பெருமையையும், சிறுமையையும் சமமென நினைப்பாநோ, நண்பர் பகைவர் பக்கலும் சமநோக்குக் கொண்டவனோ, செயல்கள் அனைத்திலும் நான் செய்கிறேன் (தான் கர்த்தர் - நான் என்ற ஆங்காரம்) என்ற மனப்பான்மையை விட்டானோ, அந்த மனிதன் முக்குணங்களையும் கடந்தவன், அந்த முக்குணங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்து சம்சாரசகரத்திலிருந்து விடுபட்டு சித்தியாகிய பரமாத்மாவை அடைவான். மேலும் எவன் வேறு எதிலும் நாட்ட மில்லாமல் ஒன்றிய பக்தியோகத்தினால் அந்த பரம்பொருளை அடைகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களிலிருந்து முற்றிலுமாக கடந்து சத் சித்தானந்தமான பரமானந்தத்தை அடைய தகுதி பெற்றவன், ஏனெனில் அந்த அழிவற்றதான பரம்பிரம்மத்திற்கும் அமிர்த நிலைக்கும் ( இறவா நிலைக்கும்) எப்போதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடமான சத் சித்தானந்தத்தை அடைவான், திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம மேலும்ஆனமீகத் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

குதம்பைச்சித்தர் பாடல்


குதம்பைச்சித்தர் பாடல் அழுகணி சித்தரின் என் கண்ணம்மா, அகப்பேய் சித்தரின் அகப்பேயைப் போன்று குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற வார்த்தை ஜாலம் வருகின்றது. இவர் ‘குதம்பை’ என்ற காதணியணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற பெயர் பெற்றார் என்பர். பெண் குழந்தை இல்லாத குறைக்கு ஆணாய்ப் பிறந்த இவரைப் பெண் குழந்தை போல அலங்காரம் செய்து மகிழ்வார்களாம். அப்படி அணிகலன்கள் அணியும் நிலையில் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந் திருக்கையில் அவ்வளவு அழகாகக் காட்சி தருமாம் அந்தக் குழந்தை. அதனால் அதனை ‘குதம்பை’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கத் தொடங்கினார்களாம். இந்தக் கதை இப்படியிருக்க, இவர் இடையர் குலத்தைச் சேர்ந்த கோபாலர் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்து சித்தர் ஒருவரிடம் ஞானோ பதேசம் பெற்று மயிலாடுதுறையில் சித்தியடைந்தார் என்ற வரலாறும் கூறப்படுவதுண்டு. ஏனைய சித்தர்களைப் போல இவரும் தமது பாடலில் “தன்னையறிய வேணும் சாராமல் சாரவேணும்” என்ற தத்துவக் கொள்கையைப் பின்பற்றுகிறார். இராமலிங்க சுவாமிகள்கூட ‘தன்னையறிந்து இன்புறவே’ என்று வெண்ணிலவை நோக்கிப் பாடியதை நோக்க எல்லா ஞானிகளும் தன்னையறிதலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் என்பது புலப்படும். “தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு பின்னாசை யேதுக்கடி - குதம்பாய் பின்னாசை யேதுக்கடி” இவர் தம் பாடலில் யோக சித்திகளைப் பற்றிப் பலப்படக் கூறினாலும் இறைவனையடையும் பக்குவம் பெற்றோர்க்கு இதெல்லாம் தேவையற்ற வழிமுறைகள் என்றும் காட்டமாகக் கூறுகிறார். “ஆதாரமான வடிமுடிகண்டோர்க்கு வாதாட்ட மேதுக்கடி - குதம்பாய் வாதாட்ட மேதுக்கடி” “நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்க ளேதுக்கடி - குதம்பாய் வாட்டங்க ளேதுக்கடி”. “முக்கோணந் தன்னில் முளைத்த மெய்ஞ் ஞானிக்கு சட் கோண மேதுக்கடி” “சித்திரக் கூடத்தைத் தினந்தினந் காண்போர்க்கு பத்திர மேதுக்கடி” என்ற பாடல் வரிகள் குண்டலினி தவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுவனவாகும். முதற்பாடல் மூலாதார யோகத்தையும், இரண்டாம் பாடல் சுழுமுனை வழியையும், மூன்றாம் பாடல் அநாகத சக்கரத்தையும் நான்காம் பாடல் சகஸ்ராரம் பெருவெளியையும் குறிப்பால் உணர்த்துவன. இறைவனாகிய உண்மைப் பொருளைக் கண்டு தெளிந்த மெய்ஞானிகள் மெய்யாகிய உடலை நீடித்துவாழவைக்கும் காயகற்ப முறைகளை நாடி வீண் பொழுது கழிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். யோக சக்தி படைத்தவர்கள் காலனை வென்றவர்களாவார்கள். அவர்களைக் காலன் நெருங்க மாட்டான். நீண்ட நாள் உயிர் வாழும் தன்மையை அவர்கள் இயல்பாகவே பெற்றிருப்பதால் மரணம் என்பது அவர்களாகவே நிர்ணயித்துக் கொள்வது. இந்த நிலையில் அட்டாங்க யோகத்தில் ஒன்றான வேண்டிய வடிவமெடுக்கும் ஈசத்துவம் தேவையில்லை என்பது குதம்பைச் சித்தரின் கருத்து. இதனை, “காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி” என்கிறார். காயகற்ப சாதனைகளைச் செய்யாத சித்தர்களே இல்லை என்று கூறுமளவு பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் காயகற்பப் பயிற்சியை மேற்கொண்ட நிலையில் உண்மை ஞானிகள் காயகற்பந் தேட மாட்டார்கள் என்று வித்தியாசமாகத் தெரிவிக்கின்றார். “மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்” கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார். “வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு யோகந் தானேதுக் கடி” என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது. உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும் இலகும் கடவுளை ஏத்தி - நலமார் குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு நிதம்பார்த்து நெஞ்சில் நினை. எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி. 8 அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. 9 ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச் சேவித்துக் கொள்வாயடி குதம்பாய் சேவித்துக் கொள்வாயடி. 10 தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய் மாண்டாலும் போற்றிடுவாய். இவ்வாறு இறைவனை ஜோதிவடிவாய் காண்பதை மேற்கண்ட பாடல் வரிகளின் மூலம் காணலாம் உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித் திருவாகி நின்றது காண் குதம்பாய் திருவாகி நின்றது காண். 23 நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும் பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய் பாருமாய் நின்றதைக் காண். 24 புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச் சிவனாலே ஆகுமடி குதம்பாய் சிவனாலே ஆகுமடி. 25 அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல் புவனத்தில் உண்மையடி குதம்பாய் புவனத்தில் உண்மையடி. ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே சோதியாய் நின்றானடி குதம்பாய் சோதியாய் நின்றானடி. முத்திநிலை பெறும் வழி பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக் கற்றார்க்கு முத்தியடி குதம்பாய் கற்றார்க்கு முத்தியடி. 52 பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால் சந்தத முத்தியடி குதம்பாய் சந்தத முத்தியடி. 53 ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய் ஊமைக்கு முத்தியடி. தேகத்தைப் பழித்தல் பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு வாசனை ஏதுக்கடி குதம்பாய் வாசனை ஏதுக்கடி. காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு வாகனம் ஏதுக்கடி குதம்பாய் வாகனம் ஏதுக்கடி. பரத்தயரைப் பழித்தல் வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய் தளர்ந்து விழுந்திடுமே. மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும் பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய் பஞ்சுபோல் ஆகிடுமே. நலம் நிலைமை கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய் பாபத்துக்கு ஏதுவடி. 83 கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள் பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய் பள்ளத்திற் தள்ளுமடி. 84 பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு இருளாம் நரகமடி குதம்பாய் இருளாம் நரகமடி. பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல் செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு எங்காகும் நல்வழியே குதம்பாய் எங்காகும் நல்வழியே. வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப் பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் பெண்ணாசை ஏதுக்கடி? நிலையாப்பொருள் தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு நாடி வருவதுண்டோ? குதம்பாய் நாடி வருவதுண்டோ? 102 போம்போது தேடும் பொருளில் அணுவேனும் சாம்போது தான்வருமோ? குதம்பாய் சாம்போது தான்வருமோ? செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் தங்காது அழியுமடி! குதம்பாய் தங்காது அழியுமடி! தன்னோடு செல்பவை நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால் செல்வன் நிச்சயமே குதம்பாய் செல்வன நிச்சயமே. 111 செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும் எய்த வருவனவே குதம்பாய் எய்த வருவனவே. 112 முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய பத்தியும் பின்வருமே குதம்பாய் பத்தியும் பின்வருமே. 113 ஆசையை ஒழித்தல் இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது நிச்சய மாகுமடி குதம்பாய் நிச்சய மாகுமடி. 114 வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால் நல்ல துறவாமடி குதம்பாய் நல்ல துறவாமடி. 115 ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய் ஓசையைக் கேட்டிலையோ? தவநிலை கூறல் காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு ஏமன் பயப்படுவான் குதம்பாய் ஏமன் பயப்படுவான். 123 யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு மோகந்தான் இல்லையடி குதம்பாய் மோகந்தான் இல்லையடி. ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள் சம்புவைக் காண்பாரடி குதம்பாய் சம்புவைக் காண்பாரடி. சாதி பேத மின்மை ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய் வீண்சாதி மற்றவெல்லாம். சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய் ஓதி உணர்ந் தறிவாய். சமயநிலை கூறல் பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள் கற்பனை ஆகுமடி குதம்பாய் கற்பனை ஆகுமடி. மந்திரநிலை கூறல் ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய் சிந்தையுள் கண்டறி நீ. 157 வாதநிலை கூறல் ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில் வீறான முப்பாமடி குதம்பாய் வீறான முப்பாமடி. 158 விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால் வந்தது வாதமடி குதம்பாய் வந்தது வாதமடி. பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் மண்ணாலே இல்லையடி குதம்பாய் மண்ணாலே இல்லையடி. வயித்தியங் கூறல் முப்பிணி தன்னை அறியாத மூடர்கள் எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய் எப்பிணி தீர்ப்பாரடி. 164 எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற் விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் விட்டோடும் நோய்கள் எல்லாம். 165 நாடி ஒருபது நன்காய் அறிந்திடில் ஓடிவிடும் பிணியே குதம்பாய் ஓடுவிடும் பிணியே. தலங்களிவை எனல் கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு ஏயும் பலன் வருமோ? குதம்பாய் ஏயும் பலன் வருமோ? அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே இன்பான கோயிலடி குதம்பாய் இன்பான கோயிலடி. காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும் ஈசனைக் காணுவையோ? குதம்பாய் ஈசனைக் காணுவையோ? அஞ்ஞானங் கடிதல் தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார் சிந்தை தெளிந்திலரே குதம்பாய் சிந்தை தெளிந்திலரே. பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய் தீர்ப்பாக எண்ணிடுவாய். மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத் தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி. 213 வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச் சேதம் மிகவருமே குதம்பாய் வேதம் மிகவருமே. ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு ஞானந்தா னேதுக்கடி குதம்பாய் ஞானந்தா னேதுக்கடி. திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

புதன், 9 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22 இறங்கத்தக்க நிலை


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22 இறங்கத்தக்க நிலை மனிதன் தன்னுடைய அழிவை நோக்கி விரைந்து செல்கிறான். தன் வாழ்வை மாற்றும் விதியை அவன் வலிந்தேற்கிறான். " விரும்பியோ விரும்பாமாலோ வினைகள் குவிகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ அந்த வினைகள் அவனை தேடிக் குவிக்கின்றான். மனிதர்கள் வினையை விதைக்கிறார்கள், அவர்களுடைய சரீர நாற்றாங்காலில் அந்த விதைகள் முளைத்து நாற்றுக்களால் தலை நிமிர்கின்றன. பின்பு விளைந்து பலனை அவர்கள் அறுவடை செய்யத்தயார் ஆகிறார்கள். காலம் நில்லாது. அது ஒடிக்கொண்டே இருக்கும்,வாழ்நாள் திடீரென்று முடிந்து விடும். இந்த உண்மையை உணராமல் அவர்கள் வாதிடுகிறார்கள், வாதிட்டு பெறுவது எனன? நாம் வாழும் குறுகிய காலத்ததிலேயே இறைவனிடத்தில் அன்பால் பொருந்தும் நெறியை அறிந்திருக்க வேண்டும். அன்பால் பொருந்தும் நிலையை அறிந்திருக்க வேண்டும், ஆனால் புரிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள், சரீரத்தை போற்றுவதில் தாங்கள் முழுக்கவனத்தையும் செலுத்துகிறவர்கள் அறிவார்களா? அந்த சரீரம் விறகுக் கட்டைகளுக்கு விருந்தாக போவதை இந்த விறவி நமக்கு இறைவனால் வந்தது ஆனால் அவனை மறக்கின்ற காரியத்தையே நாம் செயது கெ ாண்டு இருக்கிறோம்,இறைவனின் திருவடியைப் போற்றாத காரணத்தால் பெறற்கரிய இன்பங்களை நாம் பெறாமலே போகிறோம். குரு காட்டும் வழியில் சென்றால் சிவனை காணக்கூடும், ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை, நேர்த்தியற்றவை களை நேர்த்தியானதாய் பேசித்திரவோம், இறைவனின் சிறப்புகளை நாம் எப்போதேனும் எண்ணி பார்த்திருப்ேப்மா? களியாட்டங்களில் காலத்தை வீணடிப்பவர்கள் கண்டடைந்த பலன் எது? சிவபொருமான் தன் அன்பர்களின் மனத்தில் சோதியாய் உணர்ந்தெழுவான். நாம் அவனை திருஐந்தெழுத்தால் தொழுவரவேண்டும். அல்லாவிடில் எதுவும் கட்டுப்பாட்டில் இருக்காது. இரங்கத்தக்க நிலையில் நாம் இருப்பதாய் எண்ணி வருந்துகிறார் திருமூலர் தென்னாடுடைய சிவனே போற்றி ..... திருசிற்றம்பலம் மேலும் ஆன்மீகத்தகவலுக்கு

செவ்வாய், 8 ஜூலை, 2014

கடுவெளிச் சித்தர்


கடுவெளிச் சித்தர் பாடல் கடுவெளி என்பது ‘வெட்டவெளி’ அதாவது பிரமம். இந்தச் சித்தர் பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும் அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச் சித்தர் பாடல்களாக நமக்கு அறிமுகமாகின்றன. இவரது இயற்பெயரோ வரலாறோ தெரியாத நிலையில் இவரது ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்ற செய்தியை மட்டும் போகர் தெரிவிக்கின்றார். வானென்ற கடுவெளிச் சித்தர்தானும் வளமான திருக்காஞ்சிப் பதியிலாச்சு இந்த ‘திருக்காஞ்சிப்பதி’ என்ற ஊரைப் புதுச்சேரிக் கருகிலுள்ள ‘திருக்காஞ்சி’ என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம் தான் அவர் ஜீவசமாதி கொண்ட தலம் என்று சுட்டுவாருளர். இது ஆய்வுக்குரியது. இந்த சித்தரைப் பற்றி அறியாத நிலையில் இவர் பாடிய ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் தமிழகமெங்கும் வெகுபிரசித்தம். “நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி” என்ன அருமையான சொல்லாட்சி. இலக்கணம் பிறழாமல் அதே சமயம் எளிமை கூட்டி பாடலின் வரிகளைக் கொண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையேற்று உண்பவன். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றைக் காண்கிறான். என்ன வித விதமான வண்ண மலர்கள். வாசம் மிகுந்த மலர்கள் தனிமையில் இங்கு அமர்ந்து இயற்கையை ரசிப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது. அருகில் ஒரு சேய்குளம். நிறைந்துதான் இருக்கிறது ஆனாலும் என்ன பயன்? செடி கொடிகளுக்குத் தேவையான நீர் வானம் மழைப் பொழியும் போது மட்டுந்தானே கிடைக்கிறது. குளம் நிறைய தண்ணீர் இருந்தாலும் வான் மழையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நந்தவனத்திற்கு குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும்? ஆண்டியின் கற்பனை அளவுக்கு அதிகமானதுதான். அதனைச் செயலாக்கிப் பார்த்தால்தான் என்ன? பக்கத்து ஊரில் உள்ள குயவன் ஒருவனைப் பார்க்கிறான். தனக்குக் குடம் ஒன்று வனைந்து கொடுக்குமாறு கேட்கிறான். குயவன் ஆண்டியை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். அவனுக்குச் சிரிப்புதான் வருகிறது. “ஏன் சிரிக்கிறீர்?” “நீயோ ஆண்டி, உனக்கெதற்கய்யா தோண்டி?” குயவன் குசும்பாகக் கேட்டான். “உனக்கெதற்கு அந்தக் கதையெல்லாம். தோண்டி கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே? எதற்கு தேவையற்ற கேள்வி?” “சரி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தோண்டி எட்டணா.” “என்ன தோண்டிக்கு விலையா?” “ம்,,, பின்னே என்ன இனாமாகவா தருவார்கள். உன்னைப் பார்த்தாலே வாங்குகிற மூஞ்சில்லை என்றுதான் உனக்கு எதற்கு தோண்டி என்றேன்.” ஆண்டியின் சுருதி இறங்கி விட்டது. “ஐயா நானோ ஆண்டி, எம்மிடம் நீர் விலை சொல்வது நியாயமா? ஏதாவது தர்மம் செய்வதாக நினைத்துக் கொண்டு இந்தத் தோண்டியைத் தரக்கூடாதா?” ஆண்டியின் பேச்சு குயவன் மனதை இளக்கவில்லை. “போ, போ, காலையில் வந்து வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு,,,,,,” குயவன் வேறு வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான். ஆனால் ஆண்டி போகவில்லை. அவன் பார்வையில் படும் இடமாகப் பார்த்து தூரத்தே அமர்ந்து கொண்டான். தினசரி பிச்சை எடுத்த நேரம் போக மீதி நேரத்தை அந்த மரத்தடியில் அமர்ந்து குயவன் வியாபாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாளில்லை ஒருநாள் மனமிறங்கித் தோண்டி தர மாட்டானா என்ன? இப்படியே ஒரு நாளல்ல, ஒருமாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஆண்டியின் பொறுமை குயவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. குயவனும் போனால் போகிறது என்று நன்கு வனைந்த குடமொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான். ஆண்டியின் சந்தோஷத்திற்கு அளவேது. ஆகா, இனி என்னைவிட பணக்காரன் உலகில் யாருமில்லை. இந்த குடத்தைக் கொண்டு குளத்து நீரைச் செடிகளுக்குப்பாய்ச்சுவேன். செடிகளெல்லாம் நிறைய பூக்களைப் பூக்கும். பூக்களையெல்லாம் பறித்துக்கொண்டு போய் நல்ல விலைக்கு விற்பேன். எனக்குப் பெரும் பொருள் சேரும். அந்தப் பொருளைக் கொண்டு பெரிய மடம் ஒன்றைக் கட்டுவேன். அந்த மடத்தில் நிறைய ஆண்டிகள் தங்குவார்கள். ஆண்டி மடம் கட்டினான் கற்பனையில். சரி, கற்பனைக்கு யார் தடை விதிக்கப் போகிறார்கள்? அரும்பாடுபட்டு வாங்கி வந்த தோண்டியை அருமையாகப் பாதுகாக்க வேண்டு மல்லவா? தனக்குத் தோண்டி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தலையில் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பார்த்தான். சந்தோஷத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்தத் தோண்டியைப் பொத்தென்று கீழே போட்டு உடைத்து விட்டான். பத்து மாதங்கள் குயவனிடம் கெஞ்சி வாங்கி வந்த குடம் பத்தே விநாடிகளில் ‘படார்’. இனியென்ன செய்வது? குயவன் மறுபடியும் ஒரு தோண்டி தருவானா? கேள்விக்குறியுடன் பரிதாபமாகக் குயவனைப் பார்க்கிறான் ஆண்டி. இது சாதாரண ஆண்டி, குயவன், தோண்டி கதையல்ல. மனிதனின் ஜீவரகசியம். பத்து மாதம் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை அவன் போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து வருகிறானே என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது. பத்து மாதங்களாகத் தவம் செய்து பெற்றது மனிதா நீ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத்தானோ? அடப்பாவீ, எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறாய். இந்த உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளிச் சித்தர். தோண்டியை உடைத்த ஆண்டியைப் போல மேற் கொண்டு என்ன செய்வது என்று நாம் திகைத்திருக்கும் போது தமது அனுபவ உபதேசங்களை அள்ளி விடுகின்றார் சித்தர். “தூடணமாகச் சொல்லாதே” “ஏடணை மூன்றும் பொல்லாதே” “நல்லவர் தம்மைத் தள்ளாதே” “பொல்லாங்குச் சொல்லாதே” “பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே” “பெண்ணாசைக் கொண்டு அலையாதே” “மனம் போன போக்கு போகாதே” “மைவிழியாரைச் சாராதே” “மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே” “வைதோரைக் கூட வையாதே - இந்த வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே” “வைய வினைகள் செய்யாதே” “பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன் பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே” “கஞ்சா புகையாதே” “வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே” “மூடனுக்கு அறிவுரைப் புகலாதே” “கள்ள வேடம் புனையாதே” “கொள்ளைக் கொள்ள நினையாதே” என்று செய்யக்கூடாதவற்றையெல்லாம் பட்டியலிடுகின்றார். அப்படி இவையெல்லாம் செய்யக்கூடாதது என்றால் செய்யக்கூடியதுதான் என்ன என்று கேட்பவருக்கு மீண்டும் ஒரு பட்டியலை நீட்டுகின்றார்.“நல்ல வழிதனை நாடு” “எந்த நாளும் பரமனை நத்தி தேடு” “வல்லவர் கூட்டத்திற்கூடு” “வேத விதிப்படி நில்லு” “நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு” “சாதக நிலைமையையே சொல்லு” “பொல்லாத சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு” “மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த வேதாந்த வெட்டவெளிதனை தேடு” மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் மூலம் குறிப்பாகச் சொன்ன கடுவெளிச் சித்தர் அந்தக் குறிப்பைப் புரிந்துகொள்ளாத பக்குவமில்லாத பாமரர்களுக்குப் புரியும்வண்ணம் அதே கருத்தமைந்த மற்றொரு பாடலையும் பாடுகின்றார். “நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்” அழகான வர்ணஜாலங்களுடன் மிதந்து வரும் நீர்க்குமிழியானது காற்று வேகமாக அடித்தாலோ அல்லது எதன் மீதாவது மோதினாலோ பட்டென்று உடைந்து தெரிந்து விடும். மனித வாழ்வும் இப்படித்தான் மாட மாளிகை, ஆள், அம்பு சேனைகளுடன் பெரும் சிறப்புடன் வாழ்ந்தாலும் திடீரென்று அழிவுற்றுக் காணாமல் போய்விடும். இந்த மாய வித்தையின் இரகசியத்தை மனிதா நீ அறிந்து அழியும் உலகப் பொருள்களின் மேல் பற்று வைக்காமல் இருப்பாயாக என்கிறார். மேலும் இந்த உலக வாழ்க்கை மட்டுமல்ல, நீகூட நிலையில்லாத ஒரு பொருள்தான். இந்த உலகம் உனக்குத்தான் சொந்தம் என்று உலகிலுள்ள பொருட்களைச் சொந்தம் கொண்டாடி சேர்த்து வைக்காதே. இன்று உனக்குச் சொந்தமான அந்தப் பொருட்களெல்லாம் நாளை வேறொருவருக்குச் சொந்தமாகும். நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். ஆகையால் பாபஞ் செய்யாதிருப்பாயாக என்று உபதேசமும் செய்கிறார். பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக் கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான் பாபஞ் செய்யாதிரு மனமே முடிந்த வரை உன் வாழ்க்கையில் யாருக்கும் வயிறெரிந்து சாபமிடாதே. ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும். ஆகையால் உன் வயிற்றெரிச்சல் அந்த மனிதனைத் துன்பத்திற்காட்படுத்தும் என்பதையும் அறிந்து கோபத்தைக் கட்டுப்படுத்து என்றும் அறிவுரை கூறுகின்றார். “சாபங் கொடுத்திடலாமோ - விதி தன்னை நம்மாலே தடுத்திட லாமோ கோபங் தொடுத்திட லாமோ - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ” கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தது. மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால் இவைகளை ஆனந்தக் களிப்பில் பாடினாற் போலும். “மெய்ஞானப் பாதையிலேறு - சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு” என்று நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகத் தம் பாடலில் எளிய வார்த்தைகளால் கூறியுள்ளார் கடுவெளிச் சித்தர். ஆனந்தக்களிப்பு பாடல்கள் பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே இச்சைய துன்னை யாளாதே - சிவன் இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு - அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. அன்பெனும் நன்மலர் தூவிப் - பர மானந்தத் தேவின் அடியினை மேவி இன்பொடும் உன்னுட லாவி - நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே. எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன் துங்க அடியவர் தாசன் - தன்னைத் துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.