திங்கள், 15 ஆகஸ்ட், 2022

பெரியபுராணம் காட்டும் பெண்கள்

 பெரியபுராணம் காட்டும் பெண்கள்

நான்கு நிலைகளில் உள்ள பெண்களில் முக்கியமானவர்கள் சிலரை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் பெண்களை எவ்வாறு வெவ்வேறு தரங்களில் வைத்து விவரிக்கிறார் 


நாயன்மார் நிலையில் உள்ள பெண்கள்- காரைக்காலம்மையார், மங்கயற்கரசியார்



கோயில் தொண்டில் ஈடுபட்ட பெண்கள்- திலகவதியார் நாயன்மாரான கணவருக்கு தொண்டில் உதவிய பெண்கள்- திருவெண்காட்டு நங்கை (சிறுத்தொண்டரின் மனைவி), இயற்பகை நாயனாரின் மனைவி அறியாது செய்த சிறு தவறால் தமது கணவரான நாயனாராலோ அல்லது வேறு நாயனாராலோ தண்டிக்கப்பட்டவர்- கலிக்கம்ப நாயனாரின் மனைவி, கழற்சிங்க நாயனாரின் மனைவி


இந்த நான்கு நிலைகளில் உள்ளவர்களை விட தமது கணவரின் தொண்டில் உதவிய பல பெண்கள் பற்றிச் சேக்கிழார் கூறிய போதும் அவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு ஏற்ற நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படவில்லை என்பதால் அவர்களை இக்கட்டுரையில் ஒரு பிரிவாகச் சேர்க்கவில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகளும் ஓரளவில் சேக்கிழார் கொடுத்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. முதல் மூன்று பிரிவினரும் தனியாக அல்லது தத்தமது நாயனார் கணவருடன் இறைவனடி சேரும் பேறு பெற்றவர். நான்காவது பிரிவைச் சேர்ந்தவர் தண்டனை பெற்றபின் அவர்களைப் பற்றிச் சேக்கிழார் குறிப்பிட விரும்பவில்லையாதலால் அவர்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி அறிய வழியில்லை.


முதலாவது பிரிவைச் சேர்ந்த பெண் நாயனார்கள் மூவரே. அவர்களுள்ளும் காரைக்காலம்மையாரே உண்மையில் நாயனார் வரிசையில் வைத்துக் கூறப்படுவதற்குரிய முழுச் சிறப்புக்களையும் பெற்றவர். இசைஞானியார் பெரியபுராணத்தின் கதாநாயகனான சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்ற காரணத்தாலும் சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையின் கடைசிப் பாடலில் தன்னை இன்னாரின் புதல்வன் என்று அடையாளம் காட்டிய காரணத்தாலும் நாயனாரானவர். சேக்கிழார் அவர் பற்றி அதிகமாக ஒன்றும் கூறிவிடவில்லை. சடையனாரின் மனைவியும் நம்பியைப் பெற்றவருமான அவரைத் தனது புன்மொழியால் புகழமுடியாது என்பதை மட்டுமே கூறுகிறார்.


பாண்டியநாட்டில் சமணம் மடிவதற்கும் திருநீற்றின் பெருமை ஓங்குவதற்கும் காரணமான சம்பந்தரை மதுரைக்கு அழைத்த காரணத்தால் சம்பந்தரால் பதிகத்தில் போற்றப்படும் சிறப்பைப் பெற்ற மங்கையற்கரசியார் இரண்டு பாடல்களில் பெரியபுராணத்தில் போற்றப்படுகிறார். அவர் இசைஞானியாரைப் போலன்றித் தான் ஒரு வகையில் சைவத்திற்குச் செய்த தொண்டால் பெருமை பெறுகிறார். பாண்டிய குலத்திற்கு வந்த பழியைத் தீர்த்த தெய்வப் பெண் என்று சேக்கிழாரால் போற்றப்படுகிறார். அவர் தனது கணவரான நெடுமாறனுக்குச் சைவ வழித் துணையாக நெடுங்காலம் வாழ்ந்து தனது கணவனுடன் ஈசன் திருவடியில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றதாகவும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.


தனது வாழ்வாலும் தான் பாடிய சிறப்புமிக்க பதிகங்களாலும் பெருமை பெற்றவர் புனிதவதியார் எனப்படும் காரைக்காலம்மையார். அவர் பற்றிய புராணத்தின் இறுதியில் தான் எழுதிய சூசனத்தில் நாவலர் சிவனடியார்களுக்கு உணவளித்தமையையும் சிவன் மீது அவர் கொண்ட அன்பையும் சிறப்பித்துக் கூறி, ‘இவ்வம்மையார் பெருமை இவரைப் பரமபதியாகிய சிவபெருமான் அம்மையே ‘ என்று அழைத்தருளியமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்கு திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் ‘அஞ்சியருளியமையானும் அறிக ‘ என்று குறிப்பிடுகிறார். புனிதவதியார் சிறு வயது முதல் இயல்பாகவே சிவனில் ஏற்பட்ட அன்பினால் சிவனடியாருக்கு உணவளிப்பதைத் தனது வாழ்வின் பணியாக ஏற்றுக் கொண்டார். அவர் அழகான பெண்ணாக தனதத்தன் என்ற செல்வந்தருக்குப் பிறந்து பரமதத்தன் என்ற செல்வந்தனுக்கு வாழ்க்கைப்பட்ட போதும் அவரது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்பது பெரியபுராணத்திலிருந்து தெரிய வருகிறது.


சிவனடியாருக்கு உணவளிக்கும் பணியுடன் சாதாரணமாகப் போய்க் கொண்டிருந்த அவரது இல்லற வாழ்வில் ஒருநாள் இடம்பெற்ற மாம்பழச் சம்பவம் அவரது வாழ்வையே திசை மாற்றியது. கணவன் கொண்டு வந்து கொடுத்த இரு மாம்பழங்களில் ஒன்றை உணவு தயாரித்து முடியாத நிலையில் பசியுடன் வந்த சிவனடியாருக்கு வழங்கிவிட்டார். பின்னர் முதல் மாம்பழத்தை உண்ட கணவன் அதன் சுவையில் மயங்கி மற்றதையும் கேட்க அச்சமுற்ற அவர் இறைவனிடம் பிரார்த்தித்து ஒரு மாம்பழத்தைப் பெற்றுக் கொடுத்தார். அதன் சுவை மூவுலகிலும் கிடைத்தற்கரியது என்று எண்ணிய அவன் மனைவியிடம் ‘எவ்வாறு இதைப் பெற்றாய் ? ‘ என்று வினவ அவர் உண்மையைச் சொல்ல, இன்னொரு பழம் அவ்வாறு பெற்றுத்தரும் படி கேட்டான். அவரும் இறைவனைப் பிரார்த்தித்து ஒரு மாம்பழத்தைப் பெற்றுக் கொடுக்க, அவன் வாங்கிய கணமே அது கையில் இருந்து மறைந்தது. அன்றிலிருந்து தன் மனைவி தெய்வப்பெண் என்று எண்ணி விலகியிருந்து, பின்னர் வணிகத்துக்கு வேற்றுருக்குப் போக நேர்ந்த சந்தர்ப்பத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணம் செய்து, தனது பெண் குழந்ததைக்குப் புனிதவதி என்று பெயரிட்டதுடன், ஒருநாள் தன் மனைவியுடனும் குழந்தையுடனும் வந்து புனிதவதியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான். அவர்கள் வணங்கிய அக்கணத்தில் தனது இல்லற வாழ்வு முற்றுப்பெற்றதை அம்மையார் அறிந்து கொண்டார்.



தான் கொடுத்தனுப்பிய மாம்பழங்களில் இரண்டையும் தானே உண்ண விரும்பிய பரமத்தனுடன் புனிதவதியார் வாழ்ந்த வாழ்க்கை பெரியளவில் மகிழ்ச்சிமிக்கதாக அமைந்திருக்க வழியில்லை. சிவனடியாருக்கு உணவளிப்பதில் அவர் இன்பம் கண்டபோதும் இல்லற வாழ்க்கையை வேண்டா வெறுப்புடன் வாழவில்லை. எனவே கணவன் தன்னை விட்டு விலகியிருந்த போதும், அவன் தனது இரண்டாவது மனைவியுடனும் குழந்தையுடனும் வந்து காலில் விழுந்த போதும் அவர் உள்ளுர வேதனையடைந்திருப்பார். தான் இனித் தனித்து வாழப்போகும் வாழ்க்கை பற்றி அச்சமடைந்திருப்பார். அதனாலேயே தன் அழகு தனக்குப் பகையாய் அமைந்துவிடும் என்ற பயத்தில் இறைவனிடம் பேயுருவை வேண்டிப் பெற்றுக் கொண்டு தன் வாழ்வை இறை அனுபவத்தில் திழைக்க அர்ப்பணித்துக் கொண்டார். ஆயினும் சிறுவயதிலிருந்தே சிவ வழிபாட்டில் அவருக்கு அளவில்லாத ஈடுபாடு இருந்ததால் இல்லற வாழ்வு சீர் குலைந்த போது அவர் முற்றாக இறை அனுபவத்தில் மூழ்க வழியேற்பட்டது. அத்துடன் அவரது உணவளிக்கும் பணி முடிவடைந்து அவரது பாடும் பணி ஆரம்பமாகியது.


அவரது பாடல்களான அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகியன அவர் பெற்ற இறை அனுபவத்திற்குச் சான்றாக விளங்குகின்றன. அவரது இல்லற வாழ்வின் முறிவு அவரைப் பாதித்ததற்கு அவற்றில் சான்றுகள் இல்லை. மாறாக மகிழ்ச்சியும், நகைச்சுவையும், கனிவும், பக்தியும் அவற்றில் நிறைந்து அவற்றுக்கு காலத்தை வென்று நிற்கும் சிறப்பை அளித்துள்ளன. அவர் இளம் வயதிலேயே பாட ஆரம்பித்த போதும் மற்ற நாயனார்களின் பாடல்களில் இடம் பெற்றுள்ள அகப்பொருள் அறவே இடம்பெறாது போயிருப்பது வியப்பளிக்கிறது. இளம் வயதிலேயே ஏற்பட்ட முதிர்ச்சி தாய்மையுணர்வுடன் இறைவனைப் பார்க்கும் மனப்பக்குவத்தை அவருக்கு அளித்துள்ளது. தலையால் நடந்து கைலாசத்தை அடைந்து இறைவனிடம் இறவா அன்பும், பிறவாமையும், பிறந்தால் இறைவனை மறவாமையும் வரமாகப் பெற்றவர். சுடுகாட்டிலே இறைவனது நடனத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்த அவருக்கு பேயுரு வாழ்க்கை கசப்பாக அமையவில்லை. பேராசிரியர் வேலுப்பிள்ளை கூறுவது போல சுடுகாட்டைக் காட்டி வாழ்வின் நிலையாமையைப் போதித்த சமணத்திற்கு மாறாக அங்கு நடனமிடும் இறைவனின் அழகைக் காட்டுகிறாaர் அம்மையார். ஆயினும் சமணத்தைக் கண்டிக்கும் எந்தச் சான்றையும் அவரது பாடல்களில் காணமுடியவில்லை. அவர் சமுகப் பாதிப்பு எதுவுமின்றி தானும் கடவுளும் உள்ள ஓருலகைச் சிருஷ்டித்து அதற்குள் வாழ்ந்தது போலவே பெரியபுராணமும் அவரது பாடல்களும் அவரைக் காட்டுகின்றன. சேக்கிழார் சிவனில் அம்மையார் கொண்ட அன்பை மிகவும் புகழ்ந்து பேசுகிறார்.


பெரியபுராணத்தில் வரும் அடுத்த முக்கிய பெண் நாவுக்கரசரின் சகோதரியான திலகவதியார். அவர் நாயனார் அந்தஸ்த்தைப் பெறாதுவிடினும் சிவபணிக்குத் தனது வாழ்வைப் பூரணமாக அர்ப்பணித்து விட்ட அவரைப் பற்றிச் சேக்கிழார் சிலாகித்துக் கூறுகிறார். காரைக்காலம்மையார் திருமணம் முடித்தும் கணவனுடன் அதிக காலம் வாழும் பேறைப் பெறவில்லை என்றால் திலகவதியாருக்கு நிச்சயம் செய்யப்பட்ட கலிப்பகையார் திருமணத்திற்கு முன்னரே போரில் இறந்து போய்விட்டார். அந்தத் துயரத்தில் பெற்றோரும் இறந்துவிட தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட கணவருடன் தானும் மேலுலகில் இணைய விரும்பி உயிரை மாய்க்க முற்பட்டபோது சகோதரன் வந்து தடுக்கவே அவருக்காக உயிர் வாழ ஒப்புக்கொண்டார். ஆயினும் பின்னர் சகோதரனான மருணீக்கியார் சமணத்தின் கோட்பாடுகளால் கவரப்பட்டு மதம் மாறிவிட நேர்ந்த போது திலகவதியாரது வாழ்வும் அம்மையாரது வாழ்வைப் போல தனிமையானதாகவே அமைந்துவிட்டது.



காரைக்காலம்மையார் பக்திப் பாடல்கள் பாடி திருவாலங்காட்டுடன் தன்னைப் பிணித்துக்கொண்டது போல திலகவதியார் திருவதிகை வீரட்டானத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். பிஞ்ஞகன்பால் ஆராத அன்பு கொண்ட அவர் திருக்கோயில் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்துடன் தனது சகோதரனைச் சமணசமயத்திலிருந்து மீட்டுத்தர வேண்டுமென்று இறைவனைத் தினமும் வழிபட்டு வந்தார். அவரது வேண்டுகோள் ஒருநாள் நிறைவேறியது. சூலைநோயால் பாதிக்கப்பட்ட மருணீக்கியார் சகோதரியிடம் ஓடோடி வந்தார். வந்தவருக்குத் திலகவதியார் திருவைந்தெழுத்து ஓதி திருநீற்றை அளித்து திருவீரட்டம் கோயிலுக்குள் புகுமாறு பணித்தார். அங்கே மருணீக்கியாருக்கு நோய் தீர்ந்தது, முதன் முதலாகப் பாட ஆரம்பித்தார். அதனால் நாவுக்கரசர் என்ற நாமமும் பெற்றார்.


தன் வாழ்வைத் தனது சகோதரனது வாழ்வுக்காகவும் இறை பணிக்குமாக அர்ப்பணித்த திலகவதியார் இறைவனது அருளால் பரசமயத்தில் இருந்து மருணீக்கியாரை மீட்டெடுத்தார். சைவத்துக்கு அருமையான தேவாரம் கிடைக்கவும், ஆன்மிகத்தில் சிறந்த நாயனார் கிடைக்கவும் வழி சமைத்தார். அம்மையாரும் திலகவதியாரும் பல வகைகளில் ஒற்றுமையுடையவர்கள். இருவரும் மிக இளம் வயதிலேயே சைவ சமயப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள். அம்மையார் திருமணத்தின் ஊடாகக் கடந்து வர, திலகவதியார் அது கிடைக்காமல் பணிக்கு வந்தவர். அம்மையார் முதலில் சைவ அடியார்களுக்கு உணவளிக்கும் பணி செய்த போதும் பின்னர் தனது பாடல்கள் மூலம் இறையனுபவமும் இறையருளும் பெற்றவர். திலகவதியார் கோயில் திருப்பணி மூலம் கடவுள் அருளைப் பெற்றவர். அம்மையார் வாழ்ந்த காலத்தில் ஒரு இளம் பெண் தனியாகத் திரிந்து பணியாற்றுவதற்குரிய சூழ்நிலை இருந்திருக்க வாயப்பிருக்கவில்லை போலுள்ளது. அதனாலேயே அவர் பேயுருவை வேண்டிப் பெற்றார். திலகவதியார் வாழ்ந்த காலத்தில் இந்த நிலை சற்று மாறியிருந்திருக்க வேண்டும். அவர் தனது இளமை உடலுடனேயே கோயிலில் பணியாற்ற ஆரம்பித்தார். வயது முதிரும் வரை அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இவ்விரு பெண்கள் பற்றியும் சேக்கிழார் மிக உயர்வாகப் பேசுகிறார். அவர்களது பணியையும் பக்தியையும் புகழ்கிறார்.


இவர்கள் இருவரும் தமது இல்லற வாழ்வை இழந்த போதும், தனியாக இருந்து சுதந்திரமாகத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்றவர்கள். ஆனால் நாயன்மாரது மனைவியராக வாழ்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில்f தமது கணவரால் கட்டுப்படுத்தப்பட்டனர், தமது நாயனார் கணவருடன் இணைந்து அனைத்துச் சமய காரியங்களிலும் கைகொடுப்பது மட்டுமல்ல விரும்பியோ விரும்பாமலோ தமது கணவரின் மிகக் கஷ்டமான தொண்டுகளுக்கும் அவர்கள் துணை செய்ய வேண்டி நேர்ந்தது. அவர்கள் செய்த சிறிய தவறுகளுக்கும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டனர். நாயனாருக்கு மனைவியாக இருப்பது என்பது லேசான காரியமில்லை என்பதைச் சேக்கிழார் தனது கதைகள் மூலம் காட்டுகிறார்.



இயற்பகை நாயனார் சிவனடியார் எது கேட்கினும் இல்லையென்னாது கொடுக்கும் இயல்பினர். ஒருநாள் சிவனடியார் அவரது மனைவியைத் தரும்படி கேட்டபோது மனைவியை ஒரு வார்த்தை கூடக் கேட்காது கொடுக்கச் சம்மதித்து விட்டார். தான் சிவனடியாருக்கு வழங்கப்பட்டதை அறிந்து மிகவும் மனம் கலங்கிய நாயனாரது மனைவி பின் தெளiந்து ‘ன்று நீர் கேட்பது இதுவாகில் இதை மறுப்பதற்கு எனக்கு உரிமை உள்ளதோ ‘ என்று கூறிக் கணவரை வணங்கி சிவனடியாருடன் புறப்பட்டார். நாயனாரது உறவினர் இதனைக் கேள்வியுற்று ஏஉன் மனைவியை அன்னியன் ஒருவருடன் அனுப்புகிறாயே உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறதுஏ என்று கூறி ஆயுதங்களுடன் வந்து தடுத்தபோது, நாயனார் ஆயுதம் தாங்கி வந்து தம் உறவினர் அனைவரையும் வெட்டிக் கொன்று விட்டு சிவனடியாரையும் தனது மனைவியையும் பாதுகாப்பாக ஊர் எல்லையில் கொண்டு போய் விட்டார். ஆயினும் சிவனடியார் மறைந்து இறைவன் தோன்றி அவரது அன்பைக் கண்டு மகிழ்ந்ததாகக் கூறி நாயனாரையும் மனைவியையும் தம்முடன் வரும்படி கூறி மறைந்தார்.


இயற்பகையாரின் மனைவி முதலில் மனச் சஞ்சலம் அடைந்தது போல சிறிதும் சஞ்சலம் அடையாது தனது பிள்ளையை வெட்டும் போது பிடிக்கவும், பின்னர் கறி தயாரிக்கவும் மனப்பூர்வமாகச் சம்மதித்தவர் சிறுத்தொண்டரின் மனைவியாகிய திருவெண்காட்டு நங்கை. அவர் தினமும் சிவனடியாருக்கு உணவளிக்கும் தொண்டில் மிக விருப்புடன் கணவனுடன் இணைந்து உதவி வந்தவர். ஆனால் ஒருநாள் வந்த சிவனடியார் பிள்ளைக் கறி, அதுவும் தாய் பிடிக்கத் தந்தை அரிந்து தயாரிக்கப்பட்ட கறி கேட்ட போதும் தமது பிள்ளையை வெட்டிக் கறி சமைக்க நாயனார் முடிவெடுத்த போதும் அவர் மனச் சஞ்சலம் எதுவுமின்றிச் சம்மதித்தார். பின்னர் நடைபெற்ற அனைத்துக் காரியங்களிலும் ஒரு கருமயோகி போல பங்குபற்றிச் சிவனடியாருக்கு உணவளித்தார். இறுதியில் சிவனடியார் வேடத்தில் வந்த சிவன் மகனை உயிருடன் மீட்டுக் கொடுத்ததுடன் அவர்கள் அனைவருக்கும் சிவபதமும் அளித்தார்.


இந்த இரு கதைகளிலும் சமூகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமான காரியங்களில் நாயன்மார் ஈடுபட்டதால் இறைவனே சிவனடியார் வேடத்தில் நாயனாரின் அன்பைப் பரீட்சிக்க வந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். மற்றவர்கள் இக்காரியங்களில் ஈடுபடக் கூடாதென்பதாலும் சேக்கிழார் இவ்வாறு கூறியிருக்கலாம். ஒருவர் தனது மனைவியை அன்னியன் ஒருவனுடன் அனுப்புவது என்பது தமிழர் காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த கற்புக் கொள்கைக்கு எதிரானது என்பதால் சேக்கிழார் மிகவும் அவதானமாகவே கதையை அமைத்துள்ளார். இக்கதை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் சேக்கிழார் சிந்தித்திருப்பார். எனவேதான் மனைவியின் தயக்கத்தையும் பின்னர் கணவர் கூறுவதற்கு எதிராக முடிவெடுப்பதற்குத் தனக்கு உரிமையில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டுவதையும் சேர்த்துள்ளார்.



சிறுத்தொண்டரது கதை சற்று மாறுபட்ட தன்மை கொண்டது. அத்துடன் அது பல நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தில் வழங்கி வந்த கதை. எனவே சேக்கிழார் சிறிதும் தயக்கமின்றிக் கதையை வளர்த்துச் செல்கிறார். இது முதல் கதையை விட மிகக் கொடுமையான செயல் மூலம் பக்தியைக் காட்டுவதால் அச் செயலில் கணவன் மனைவி இருவருக்கும் சமபங்களிக்க அவர் விரும்பி இருக்கவேண்டும். தன் பிள்ளையைக் கொல்லச் சம்மதிக்கவும் அக் கொலையில் பங்கு கொள்ளவும் பொதுவாக எந்தத் தாயும் சம்மதிக்க மாட்டாள். ஆனால் இங்கே தாய் சம்மதிக்கிறார். அவரின் மனநிலையில் எந்த மாற்றங்களும் ஏற்பட்டதாகச் சேக்கிழார் கூறவில்லை. கவனமாகக் காரியத்தைச் செய்து சிவனடியாரது பசியை ஆற்றவேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர அச் செயலில் ஈடுபட்ட போது துயரமோ வேறு மன நிலையோ இருக்கவில்லை. ஆயினும் மிகக் கொடுமையான ஓர் அனுபவத்தினூடாகச் செல்ல வேண்டிய நிலையைச் சேக்கிழார் சிறுத்தொண்டரின் மனைவிக்கு அளித்துள்ளார். ஆயினும் அவரது மனநிலையைக் கூறி கதை கேட்போரின் அனுதாபத்தை பெறும் சந்தர்ப்பத்தைச் சேக்கிழார் அவருக்குக் கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே மனைவி அனைத்துக் காரியங்களிலும் மனப்பூர்வமாக பங்கு பெறுவதாகக் கூறுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.


வேறு இரு கதைகளை சேக்கிழார் முற்றாகப் பெண்களுக்கு எதிராக அமைத்துள்ளார். அதாவது நாயனாரின் பணிக்குச் சாதகமாக இல்லாதவர் எவரும் தண்டனைக்கு உரியவர் என்பது அவரது கருத்து போல தெரிகிறது. கலிக்கம்பரின் மனைவி எப்போதும் சிவனடியாருக்கு உணவளிக்கும் பணிக்குத் தன் பங்களிப்பை வழங்கி வந்தவர். தினமும் பெரியளவில் சுவையான உணவு தயாரிப்பது மட்டுமல்ல சிவனடியார் வந்ததும் வாசலில் அவர்களது கால்களைக் கணவன் கழுவுவதற்கு தண்ணீர் வார்ப்பதும் அவரது கடமை. அவர் ஒரு போதும் அக்கடமைகளில் தவறியவர் இல்லை. ஒருநாள் தம்மிடம் முன்னர் பணியாளாக இருந்து கோபித்து விலகிச் சென்ற ஒருவன் சிவனடியாராக வந்திருப்பதை தண்ணீர் ஊற்ற வந்தபோது அவதானித்த அவர், தண்ணீர் வார்க்க ஒரேயொரு கணம் தாமதித்ததற்காக கணவனான நாயனார் உடனே போய் வாளை எடுத்து வந்து தண்ணீர் வார்க்க தாமதித்த அவரது கையைத் தறித்தார். பின் தானே நீர் ஊற்றிக் கழுவி அடியாருக்கு அமுது செய்வித்தார்.


அடுத்த கதையில் நாயனாரான கழற்சிங்கன் என்ற அரசனின் பட்டத்துராணி அவருடன் ஒருநாள் கோயிலுக்குப் போயிருந்த போது கீழே கிடந்த பூவொன்றை எடுத்துப் பெண்களுக்குள்ள இயல்பின்படி நுகர்ந்துவிட்டார். அப்போது அங்கே வந்த செருத்துணை நாயனார் இராணியின் அச்செயல் கண்டு தாளாத கோபங் கொண்டு கருவி எடுத்து வந்து அவளது பூவை மணந்த மூக்கை வெட்டினார். அதனால் ஏற்பட்ட வலியினால் அவள் கீழே விழுந்து அழுத அழுகுரல் கேட்டு அங்கே வந்த அரசன் நடந்ததை செருத்துணை கூறக் கேட்டு, பூவை எடுத்த கையையும் தறிக்க வேண்டுமென்று கூறித் தனது வாளால் அவளது கையையும் தறித்தார். அப்போது அவரது செயலை மெச்சி வானத்திலிருந்து தேவர் மலர்மாரி பொழிந்தனர்.


இவ்விரு கதைகளிலும் நாயனார்கள் மட்டும் இறுதியில் சிவனடி சேர்ந்ததாகக் கூறப்படுகின்றதேயன்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி பற்றி எதனையும் சேக்கிழார் கூறவில்லை. அத்துடன் மூக்கையும் கையையும் வெட்டிய செயல் கொடுமையானது என்று யாரும் கருதுவதற்கு இடமளியாது அது சரி என்பதை ஏற்றுத் தேவர்களே பூமாரி பொழிந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். கலிக்கம்பரின் மனைவி எந்த விதத்திலும் தனது கணவனின் பணிகளுக்குத் தடையாகவோ அல்லது ஒத்துழைக்காமலோ இருக்கவில்லை. விபூதியும் உருத்திராக்கமும் இடையில் கந்தையும் அணிந்து வருபவர் அனைவரும் சிவனடியார் என்ற பிரிவுள் அடங்குவர். அவர்களது உள் இயல்பையோ அல்லது முந்தைய வாழ்க்கையையோ ஆராயவேண்டிய அவசியமில்லை என்பது சேக்கிழாரது வாதம். வேறு கதைகளிலும் சேக்கிழார் இந்த வாதத்தை முன்வைப்பதைக் காணலாம். அதனாலேயே ஒரு சிறிய தவறுக்கு கலிக்கம்பரின் மனைவி பெரிய தண்டனை பெறவேண்டியதாயிற்று.


கழற்சிங்கனது மனைவி கீழே விழுந்து கிடந்த பூவையே எடுத்து மோந்தார். அதனால் அவர் மூக்கையும் கையையும் இழக்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளானார். இரண்டு நாயனார்களால் தண்டிக்கப்பட்ட ஒரேயொரு பெண் இவர்தான். கீழே விழுந்த பூ பூசைக்கு உரிய தகுதியை இழந்து விடுகிறது. ஆயினும் கோயிலுக்குள் இருந்ததால் அதற்கு ஒரு புனிதம் வந்ததென்றும் அதனை மணப்பதன் மூலம் இராணி அந்தப் புனிதத்தை மாசுபடுத்திவிட்டார் என்று சேக்கிழார் கருதியதாலேயே அவருக்கு அவ்வளவு பெரிய தண்டனையை அளித்துள்ளார். சைவத்தைப் பாதுகாப்பதற்கு சிவனடியாருக்குச் செய்யும் சேவைகளையும் கோயிலின் புனிதத்தையும் பாதுகாப்பது மிக அவசியம் என்று சேக்கிழார் கருதியதால் போலும் இரண்டு பெண்களும் சிறிய தவறுக்குப் பெரிய தண்டனை பெற்றார்கள்.


பொதுவாகப் பெரியபுராணத்தில் வரும் பெண்கள் அனைவரும் ஏதோ வகையில் தியாகம் செய்பவர்களாகவே காட்டப்படுகிறார்கள். ஒன்றில் இளமையையும் தமது வாழ்வையும் தியாகம் செய்பவர்களாயிருப்பர். அல்லது தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளையோ அல்லது தமது அழகிய உடல் உறுப்புகளையோ தியாகம் செய்பவர்களாயிருப்பர். ‘பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ‘ என்று பாரதியார் பாடிiயது பெரியபுராணத்தில் வரும் பெண்களுக்கும் பொருந்தும் போல தெரிகிறது.

திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

பரம்பொருள் ஒன்றே

 பரம்பொருள் ஒன்றே



மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்”  என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

 பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே”  என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.

  இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது.

  பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில்எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.

  நம்வாழ்வில் அவதூராக பேசும் வார்த்தைகள் கூட இன்று தெய்வமாக வணங்கப்படுகிறது. சீ ! சனியனே ! நாயே ! ஆ பாம்பு என்று கத்துகிறோம் ஆனால் அதற்கே தெய்வமாக சிலையை வைத்து பால் வார்த்து வணங்கப்படுகிறது. வழி பாதைகளில் ஒரு வேம்பு மரம் இருத்தால் உடனே அதற்கு ஒரு துணியை கட்டி மஞ்சள் பூசு பொட்டு வைத்து மாரி என்கிறார்கள்.இப்படி திடீர் தெய்வங்கள் கண்ட இடங்களில்எல்லாம் காட்சிகளாக மாறி வருகிறது.

  ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

  இன்னும் சிலர் சாதங்களில் பரிகாரம் என்று இந்த கோள் வழிபாடு செய்,அந்த கோள் வழிபாடு செய் என்றும் வீட்டில் காக்கை வந்தால் விரட்டியடுக்கிறோம் ஆனால் காக்கையே தெய்வமாக ஊர்வலம் வருகிறது.

மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால்தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப்படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.

சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய குமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.

  திருச்சிற்றம்பலம்


வியாழன், 28 ஜூலை, 2022

பெண்மையை போற்றுவோம்...


 பெண்மையை போற்றுவோம்...

63 நாயன்மார்களின் புகழுக்குத் துணை நின்ற போற்றுதலுக்குரிய மகளிர்.....தில்லைவாழ் அந்தணர்களின் தொண்டு சிறக்க துணைநின்ற அவர்களின் மனைவியர்....
தீண்டுவீராகில் எம்மை திருநீலகண்டம் என்ற வைராக்கிய பெண்மணி திருநீலகண்ட நாயனாரின் மனைவி மணம் முடித்தவுடன் கணவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிவனடியாருடன் செல்ல ஒத்துக் கொண்ட இயற்பகை நாயனாரின் மனைவி.
விதைத்த விதை நெல்லைக் கணவர் தர அதை அரிசியாக்கி வீட்டின் கூரையையே விறகாக்கி சிவனடியாராக வந்த இறைவர்க்கு உணவு சமைத்த இளையான்குடி நாயனாரின் மனைவி,
கணவரின் சொல்லை மதித்து, அடியாராக வந்த இறைவனாரின் கோவணத்துக்கு இணையாக தராசு தட்டில் தமது செல்வங்களுடன் தன்னுடைய மகனுடன் நிற்கத் துணிந்த அமர்நீதி நாயனாரின் மனைவி வறுமையிலும் செம்மை காத்த குங்கிலிய கலய நாயனாரின் மனைவி அடியாராக வந்த இறைவர், திருமணமாக வேண்டிய பெண்ணின் அழகிய கூந்தலை வேண்ட.
உடன் அதை அரிந்து கொடுக்க ஒப்புக் கொண்ட மானக்கஞ்சாற நாயனாரின் மகள் அரிவாட்ட நாயனாரின் ஆழ்பக்திக்குத் துணைநின்று வறுமையிலும் இறைவனாருக்கு அமுது படைத்த அவரது மனைவி சமணத்திலிருந்த தம்பியை திருநீறிட்டு சைவத்திற்கு கொணர்ந்து நாம் படித்து மகிழும் பல பதிகங்களை நமக்குக் கிடைக்கச் செய்த திருநாவுக்கரசு நாயனாரின் தமக்கை இறைவர்க்கு அமுதளித்து, இறைவரால் அம்மையே என்று அழைக்கப்பட்டு பேயுடம்புடன் தீந்தமிழ் பாடல்கள் பல பாடி இறைவனாரின் திருநடனத்தை தினம் கண்டு களிக்கும் பேறு பெற்ற நம் பாட்டியார் காரைக்கால் அம்மையார்.
பெற்றமகன் வாழை இலை கொணரச் சென்றபோது பாம்பு தீண்டி இறக்க, உடலை ஒரு அறையில் மறைத்து வைத்து தம் குல குரு அப்பர் பெருமானுக்கு உணவு பாறிமாறிய அப்பூதி அடிகளின் மனைவி
இறைவனாரின் மேலுள்ள ஆழமான அன்பாலும் கணவரின் சிவபக்திக்குத் துணை நிற்கும் தன்மையாலும் தான் சுமந்து பெற்ற மகனை மடியில் சுமத்தி கணவர் அரிய பிள்ளைக்கறி சமைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மனைவி.
கறியமுது சமைக்க உதவிய அவர்களது பணிப்பெண்
திருநீல நக்க நாயனார் வழிபாட்டில் இருந்தபோது இறைவர்மேல் சிலந்தி விழக்கண்டு வாயால் ஊதிய காரணத்தால் கணவரின் கோபத்திற்கு ஆளான திருநீலநக்க நாயனாரின் மனைவி
நாம் தமிழால் இறைவரைப் பாட பல பாடல்கள் தந்த திருஞானசம்பந்தரை ஈந்த தாயார் மறுநாள் மணமுடிக்கவுள்ள காதலரை பாம்பு தீண்ட அந்த துக்கத்திலும் இறைவரை அப்பெண் புகழ்ந்து அழ அதுகேட்டு ஞானசம்பந்தர் தேன்தமிழில் பதிகம் பாடி உயிர்பிக்கக் காரணமான அப்பெண்.
மயிலை செட்டியார் மகள் பூம்பாவையை பாம்புகடித்து இறந்து விட அப்பெண்ணினச சாம்பலை தீந்தமிழ் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் ஞான சம்பந்தப் பெருமான் . அவரது செந்தமிழ் பாடலால் உயிர்பெற்ற அப்பெண் பூம்பாவை.
மணமுடித்தவுடன் ஞானசம்பந்தப் பெருமானுடன் ஜோதியில் கலந்து இறைவரடி சேர்ந்த அவரது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை.
சமணத்தின் ஆதிக்கத்தால் சைவநெறி குன்றிய காலத்தில் ஞானசம்பந்தரை வரவழைத்து சைவத்தை தென்னகத்தில் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார்
பரவை நாச்சியாரிடம் இறைவரை தூது அனுப்பினார் சுந்தரர் என்பதறிந்து கோபிக்க, இரண்டு நாயன்மாரையும் இணைக்க விரும்பிய இறைவர் ஏயர்கோன் கலிக்காமருக்கு சூலை நோய் தந்து அது தீர சுந்தரர் பெருமான் நேரில் வந்து திருநீறு தரத் தீரும் என்றார். சுந்தரர் பெருமான் மேலுள்ள கோபத்தால் அவர் வரும் முன் தன்னை மாய்த்துக் கொண்ட கலிக்காமரின் உடலை ஒரு அறையில் கிடத்தி சுந்தரரை வரவேற்று உபசரித்த கலிக்காமரின் மனைவி
இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கும் மகன் கோயில்கள் பல எழுப்புவான் என்பதறிந்து தன்னை ஒருநாழிகை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்ததால் தனதின்னுயிர் துறந்த கோச்செங்க சோழரின் தாயார்.
அடியார்களுக்கு அமுது படைப்பதற்காகவே கணவர் சுந்தரப் பெருமானிடம் செல்வம் கேட்க அதற்காக பல செந்தமிழ் பதிகங்களை இறைவரிடம் பாடி பரிசுகள் பல பெற காரணமான பரவை நாச்சியார்.
இவரிடம் சுந்தரருக்காக இறைவனாரே தூது சென்றுள்ளார். இறைவர்க்கு பூமாலை செய்து வழிபட்டு அவரே தூதுசென்று சுந்தரரை மணமுடித்த சங்கிலியார்.
பரமன் தடுத்தாட்கொண்ட சுந்தரர் பெருமானாரிர் தாய் இசை ஞானியார்
உலகின் அனைத்து பெரியோர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார்.
ஆத்திச்சூடி வினாயகர் அகவல் என பல தேன்தமிழ் இலக்கியங்கள் தந்த ஔவையார்.

வெள்ளி, 15 ஜூலை, 2022

மானிடப்பிறப்பின் மாண்பு

 மானிடப்பிறப்பின் மாண்பு

  ஆதியாய் நடுவும் ஆகி, ஜோதியாய் உணர்வுமாகிய தில்லைப்பாெருமானின் கருணையினால் இந்த பெறுதற்கும் அரியதாய் உள்ள இந்த மானிடப்பிறப்பு நமக்கு கிடைத்துள்ளது. இப்பிறப்பில் ஊனமின்றி பிறந்து தவம் செய் வகுப்பில் இந்த தென்னாட்டில் பிறந்தது அவன் அருளால் அவன் தாள் வணங்கவல்லவா நாம் இப்பிறப்பில் மானிட உடல் தாங்கி பிறந்திருக்கிறோம்.இனி அடுத்த பிறப்பு நமக்கு நம் வினையின் பாெருட்டு என்ன பிறப்பு கிடைக்குமோ என்பது நமக்கு தெரியாது.எனவே கிடைத்த இப்பிறப்பிலே இறைவனின் கருணையை பெற்று அவன் தாள் சேர்ந்தால் இனி பிறவாமை என்ற முக்தியை அடையலாம். இதற்கு வழிசெய்யும் பொருட்டே தேவார திருவாசகம் மற்றும் சாஸ்திர நூல்கள் மூலம் நமக்கு வழிகாட்டியுள்ளனர் அதன் அருளாளர்கள்.

  உயிரோடு கலந்து நிற்கும் ஆணவ மலத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் தன் கருணையால் உயிர்களை பிறப்பு இறப்பிற்கு உட்படுத்துகின்றார். அவ்வாறு உயிர் பிறக்கும் போது நான்கு வகை தோற்றமும்,ஏழு வகை பிறப்பும் எண்பத்து நான்கு லட்சம்யோனி பேதமாகப் பிறந்து இறந்து உழல்கின்றன உயிர்கள்.

  நான்கு வகை தோற்றமாவது, உயிர்கள் முட்டையில் தோன்றுவது,(பாம்பு, பல்லி, ஆமை பாேன்றவை) வேர்வையில் அல்லது அங்கங்கள் மூலம் தோன்றுவது,(கிருமி, பேன்,விட்டில் பூச்சி போன்றவை), வித்துக்களில்,வேர்களில் தோன்றுபவை, ( மரம், செடி,கொடிவகைகள்), கருப்பையில் தோன்றுபவை, நான்கு கால் விலங்குகள்,மனிதர், தேவர் முதலான உயிர்கள், 

இந்த நான்கு வகையிலிருந்து தோன்றும் எழுவகைப்பிறப்பாவான. தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவர வகைகள்.

  மானிடப் பிறவியிலும் சைவ நெறி சார்ந்து திருநெறிய தமிழால் கோகழி ஆண்ட குருமணியை போற்றுவது நமது மேலைத் தவத்தால் அன்றி கிட்டா. உயிர் ஒவ்வொரு பிறவியிலும் தான் செய்த முன் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது,

  வினை = நல்வினை, தீவினை, 

நல்வினை = புண்ணியம் = இன்பம்

தீவினை = பாவம்= துன்பம்

  நாம் செய்த வினைகளை ஒரே பிறவியில் அனுபவித்து கழிக்கும் ஆற்றல் உயிருக்கு இல்லை, எனவே இறைவன் நம்மீது கருணை கொண்டு, நம்முடைய வினை முழுவதையும் ஒரே பிறவியில் கொடுக்காமல் நம்முடைய வினைத் தொகுதியில் ஒரு சிறிதளவே எடுத்து பிறவிக்கு அனுப்புகிறார். அந்த வினைத் தொகுக்கு நிகழ்வினை அல்லது பிரார்த்த வினை என்று பெயர்.

   நாம் கொண்டு வந்தது போக மீதமுள்ள வினைத்தொகுதி சஞ்சித வினை அல்லது பழவினை எனப்படும். நிகழ் வினையைக் கொண்ட நாம் செய்யும் வினை ஆகாமியம் எனப்படும். நம்முடைய பழவினை குருவிடம்தீக்கை பெறும் போது முற்றிலுமாக நீங்கப்பெறுகிறது.இறைப்பணியில் நாம் செய்யும் சிவத்தொண்டு ஆன்மீகப்பணிகள் மூலமாகவும், நாம் செய்யும் வினைகள் அனைத்தும் இறைவன் செயலாகவே நடக்கிறது இவ்வினையை நீக்குபவன் இறைவனே என்ற எண்ணப்பாங்கில் நாம் செய்யும்புண்ணிய செயல்களால் ஆகாமிய வினை ஏறாமல் தடுக்கப்படுகிறது. நாம் கொண்டு வந்த பிரார்த்த வினை அருளாளர்கள் அருளிச்செய்த பன்னிரு திருமுறைகள் ஓதியுணர்தலே வழி, நம்முடைய திருமுறைகள் திருவருளோடு ஒன்றி, காதலாகி கசிந்து கண்ணீர்மல்க பாடி வழிபடும் போத நிகழ் வினை மெலிந்தும், நீங்கவும் செய்கிறது.நம்முடைய திருமுறை பாடல்கள் 75 சதவிகிதம் வினை நிக்கம் பற்றியே பாடப்பட்டவை என்றும் அவைகள் பழவினையையும், வருவினையையும்நீக்க வல்ல ஆற்றலுடையவை என்பதை அருளாளர்களே தங்கள் வாக்கால்  அருளியுள்ளார்கள்

  திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே தி,மு, 1/11 பதிகம்

 பாடல் வல்லார்க்கு அறும்நீடு அவலம் அறும் பிறப்புத்தானே ,,,,.. தி,மு, 1/ பதி11

 பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே   சம்பந்தர் தேவாரம்

 உடைய தமிழ° பத்தும்உணர்வர்  தொல்வினை ஒல்கும் உடனே   சம்பந்தர் தேவாரம்

 நமச்சிவாய பத்தும் ஏத்த வல்லார்க்கு இடுக்கண் இல்லையே   அப்பர் தேவாரம்

 நாணனை தொண்டன் ஊரன் சொல்.... சொல்வார்க்கு இல்லை துன்பமே  சுந்தரர்


  எனவே நம்முடைய துன்பத்தை நீக்க ஞானமே வடிவான பன்னிரு திருமுறைகளை அன்றி பிறிதாென்றால் ஆகாது. தாயின் கருப்பைக்கு நாம் வரும்போது நமக்கு முன்பே காயக் கருக்குழியில் நம்மை ஆட்கொண்டு நம் வினைக்கு ஒப்ப தனு கரண புவனம் போகங்களை நமக்கு ஊட்டிவித்து வினைப்பயனை நுகர வைக்கிறார் நம் இறைவன். நம்முடைய பருவத்தை நான்காக வகுத்து அந்தந்த பருவத்தில் நாம்விரும்பியவற்றை அருளுவதைக் கண்டு நாம் தெளிவடைய வேண்டும்.

  நாம்இல்லறத்தில் இருந்து கொண்டே துறவியர் பெறும்வீடு பேற்றை அடைய முடியும் என்பது தமிழர் கண்ட நெறி,இதனை பட்டினத்தடிகள் மும்மணிக்கோவையில் அருளி செய்துள்ளார்.துறவியானாலும், இல்லறத்தான் ஆனாலும் மறவாது ஐந்தெழுத்தை சொல்லும்ஒருவர் நிச்சயமாய் வீடுபேறு பெறலாம் என்பது திண்ணம்.

 நம்முடைய பிறப்பில் இருந்து இறைவன் திருவடியைஅடையும் வரை நமக்கு ஏற்படும் இன்னல்களை நீக்க அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று திருமுறைகளை பாடிப் பரவுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வுலகிற்கு தேவையான பொருட் செல்வத்தையும், அருள் உலகிற்கு தேவையான அருளையும் ஒரு சேர தருவது நமது திருமுறைகளே என்பது திண்ணம். கருவாகிப் பின் உருவாகி பிறவியில் உழன்று கொண்டிருக்கும் நாம் மீண்டும் கருவாகாமல் உருவாகமல் இருக்க ஒரே வழி தில்லை அம்மலவாணர் அருள் பெறுதலே, நள்ளிருளில்நட்டம் பயின்றாடும் நாதனை வாழ்த்தவும், வணங்கவும் அவர் நமக்கு தந்த அருட் கொடையே திருமுறைகள். நவக்கோள்களால் வரும் துன்பததை நீக்க வல்லன நம் திருமுறைகள் ஒன்றே. எனவே நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் பன்னிரு திருமுறைகளை பாடி அருள் பெறுவோம், திருமுறைகளே நமது தமிழ° வேதம்.திருமுறைகளே நமது நாதம். 

திருச்சிற்றமபலம்

நன்றி கருமுதல் திருவரை


திங்கள், 11 ஜூலை, 2022

வேண்டுதல் வேண்டாமை இலான் நம் இறைவன்

 வேண்டுதல் வேண்டாமை இலான் நம் இறைவன்


வெறுப்பு விருப்பு இல்லாதவன் சிவபெருமான். எல்லா உயிர்களிடத்தும்நீக்கமற நிறைந்து நிற்கும் பரமான்ம சொரூபியாய் இருப்பவன். உயிர்க்குள்ள இயல்பு ஏதும் இல்லாத இறைவன் சச்சிதானந்த சொரூபியாய் , தான் நினைத்த வடிவத்தைத் தானே அமைத்து நிறுத்திக் கொள்பவன், அவன்உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்ப அருளுதல் பொருட்டு வடிவம் கொள்வதாலும், அவ்வாறு அவன் வடிவம்கொள்ளாவிடில் உயிர்கள் அவனை வழிபட்டு உய்யும் வழியை அறியா, ஆதலாலும் அவ்வாறு வடிவம் கொள்ளுதல் அவனுக்கு எந்த வித பயனும் இல்லாததாலும் , அதனால் அவனுக்கு எந்த குறையும் நேராது என்பதால் அவன் விருப்பு வெறுப்பு அற்ற எதையும் தன் பொருட்டு வேண்டாதவனாகையால் வள்ளவர் பெருமான் இறைவனுக்கு வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார. அவர் உயிர்களை உய்விக்கும் பொருட்டே தனது வடித்தை அமைத்து அருள்பாலிிக்கிறான்.

  நின்மலன் ஆகிய சிவபெருமான் நிலைபேறு உடடைய மேலான சிவசக்தி தனது வெவ்வேறு செயல்பாட்டினால் இச்சா, கிரியா, ஞான சக்தி என்னும் மூன்று ஆற்றல்களாக கொண்ட இச்சக்திகளை பொருந்தி, போறறுவதற்கு உரிய சிவபெருமான் அந்த ஆற்றல்களோடு திருவருளே திருமேனியாககொண்டு நிற்பன். உயிர்களுக்கு அருளுதல் பொருட்டு பொது வகையால் அறிவித்தும் அறிந்தும் நிற்பதாகிய ஞானம் ஒன்றே சிவசக்தியின் சொரூபம்ஆகும். அதுவே பராசக்தி எனப்படும். உயிர்களுக்கு மலபரிபாகம் வருதல் பொருட்டு அந்த பராசக்தி ஐந்தாெழில் ஆற்றுகின்றது. அந்நிலையில் அது ஆதிசக்தி அல்லது திரோதான சக்தி எனப் பெறுகிறது. அந்த வகையில் செயல்படும் போது அது இச்சா ஞான கிரியா சக்திகளாக மூவைப்பட்டு நிற்கிறது. இந்த சக்திகளை சிவ பெருமான் பொருந்துி நிற்கும் நிலையில் சக்தி காரியமான அருள் திருமேனி உண்டாகும். 

  அச்சக்திகளுள் ஞான சக்தியை சிவன் பொருந்திய போது நிட்கள திருமேனி ஆகிய அருவம் உண்டாகிறது. அந்நிலையில் சிவம் என்னும் பெயர் பெறுகிறது. 

  சிவபெருமான் ஞானசக்தியையும், கிரியா சக்தியையும் சமமாகப் பொருந்திய நிலையில் அவன் சதாசிவன் எனப்பெயர் பெறுகிறான். 

  ஞானசக்தி குறைந்தும் கிரியா சக்தி மிகுந்தும்இருக்கும் நிலை யில் அவன் மகேசுவரன் என்னும்பெயர் பெறுகிறான்.

 சிவம், சதாசிவம், மகேசுவரம் ஆகிய இந்த மூன்று மூர்த்தங்களுக்கும் தம்முன் பேதமாே, ஏற்றத்தாழ்வே இல்லை. சக்திகளின் தொழில் வேறுபாட்டினால் இப்பேதகங்கள் உண்டு. உயிர்களின் அறிவு நிலை வேறுபாட்டிற்கு ஏற்ப, சக்திகளின் தொழில்  வேறுபாடுகள் நிகழ்கின்றன.

  சிவதத்துவங்கள் தோன்றுதல்

  சுத்த மாயையை ஞான சக்தி பொருந்துவதால் நாத தத்துவமும், கிரியா சக்தி பொருந்துவதால் விந்து தத்துவமும் , ஞானமும் கிரயையும் சமமாக பொருந்துவதால் சதாசிவ தத்துவமும், கிரியா சக்தி கூடி, ஞான சக்தி குறைந்து பொருந்துவதால் ஈஸ்வர  தத்துவமும் , ஞானசக்தி கூடி கிரயா சக்தி குறைந்தும் பொருந்துவதால் வித்தை என்னும் தத்துவமும்தோன்றும். 

  இறைவன் அடைந்த இந்த மூன்று திருமேனிகளும் சிவபெருமானின் தடத்த திருமேனியாகும். 

 விருப்பு வெறுப்பு காரணமாக உயிர்களுக்கு நிகழும் சுகதுக்க மோகங்கள் இல்லாதவன் இறைவன்.எனவே ஒப்பற்ற ஒருதனிப்பொருளாய் இருப்பவன், எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து பரமான்ம சொரூபமாய் இருப்பவன் அவனுக்கென்று எந்த வித வேண்டுதல் , வேண்டாமை இல்லாதவன் நம் சிவபெருமான்,

திருச்சிற்றம்பலம்

தகவல் சிவப்பிரகாசம் பாடல் 14, 15

புதன், 6 ஜூலை, 2022

சைவத்தோடு இணைந்து வாழ்வோம்

 சைவத்தோடு இணைந்து வாழ்வோம்



 உலகை ஒன்றாக காண்பதே காட்சி என்பது ஆன்மீகம்

 ஒன்றே குலம் ஒருவனே தேவன் , .... அத்தேவனே பரம்பொருள் என்பதும்,

யாதும்ஊரே யாவரும் கேளீர் என்பதும் சைவம்.

 இந்த ஆன்மீக ஒருமைப்பாட்டு உண்மை நமது வாழ்க்கை குறிக்கோளாக கொண்டு சைவத்தோடு இணைந்து வாழ வேண்டும்.

  சைவர்களாகிய நாம் சைவ அனுஷ்டானங்கள்,சைவ மரபுகள், ஆதாரங்களை வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகுதல் வேண்டும். சைவ சமயத்தார் என்று சொல்லவோ , விபூதி, ருத்திராட்சம்அணியவோ வெட்கப்படக்கூடாது. பஜனை கூட்டு வழிபாடு பிராத்தனைகளல் பங்குபெறும் போது நாமும் சேர்ந்து தோத்திரங்களை பாட வேண்டும். மெய்யில் சைவ அடையாளங்களை தரித்து சிவ மந்திரம் கூறுதலே சைவத்தின் பிரதானம். இறைவன் நாமங்களை உரத்து சொல்ல வேண்டும். தீவண்ணர் திறம் பேசுதலும் திருநாமம் கூறுதலும் பிறப்பின் நோக்கம் என்பது அப்பர் அடிகள் வாக்கு. இறைவழிபாட்டு பூசையில் பஞ்சபுராணம் ஓதுவதற்கு முன்னும், ஓதிய பின்னும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும். இறைவழிபாட்டில் திருமுறைகள் பாடுவதற்கு கூச்சப்படக் கூடாது. குரல் நல்லாயில்லை என்று சாக்குபோக்கு கூறும் வழக்கம் நம்மைவிட்டு நீங்க வேண்டும். பாடல்கள் பாடப்பாடத்தான் குரல்ஒலி கை காெடுக்கும்., இறைவன் மீது காதலாகி கசிந்து  கண்ணீர்மல்கி தேவாரங்களையும் திருமுறைகளையும் ஓத குரல் வளமும் இசைப்பண்ணும் தாமாக வந்து சேரும். பக்தியும் நம்பிக்கையும் கைவரப் பெற்றால் பயம் போய்விடும். பயமும் கூச்சமும் முன்னேற்றதிற்கு பரம விரோதிகள்.

  சமய வைபவங்களில் திருமுறைகள் பாடி முடிந்ததும் நமப் பார்வதி பதயே என்று உரத்துக் கூறப்படும் போது, அங்குள்ளவர்கள் அரகர மகாதேவா என்று பதிலுக்கு கூற வேண்டும்.அதன்பின்னர் சிவ சிதம்பரம் என்றதும் மற்றவர்கள் சிற்சபேசா என்றும், தென்னாடுடைய சிவனே பாேற்றி எனும் போது மற்றவர்கள் எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி என்றும் கூறுவது சைவ சித்தாந்தத்தின் மரபு. இவ்வாறு கூறுபவர்களே புண்ணியம் செய்தவர்கள்.

  நாம் மனிதராய் பிறந்தது உண்ணவும், உடுக்கவும்உறங்கவும், பொருள் தேடவும் என்று பலர் நினைக்கிறார்கள். வாழ்க்கை இயந்திர மயமாகி விடக்கூடாது. சம்சார சாகரத்தில் என்றும் மூழ்கியிருத்தல் ஆகாது, என்பதனால் தான் நம் முன்னோர்கள் இறைவழிபாடு, ஆன்மீகம், புராணங்கள் படித்தல், பிராத்தனை என்றெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ளனர்.

நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன் என்று மனம் விட்டு கூறுபவர்கள் அரிதினும் அரிது.யாருக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். மனித வாழ்க்கையில் உலகியல் தேவையோடு ஆன்மீகத்தேவைகளும் இருக்க வேண்டும்.

  ஒவ்வொரு மனிதனுக்கும்மூன்று கடமைகள் உண்டு. 1. வாழ்வியல் கடமை,. 2. இல்லற கடமை, 3. ஆன்மீக கடமை , இந்த ஆன்மீக கடமையில் எளிமையை  வழிகாட்டுவது சமயம். ஆன்மீக கடமையில் ஐந்து பிரதானமாக கருதப்படுகிறது. 

 1. அனுஷ்டானம், 2. சிவபூசை, 3. திருக்கோயில் தரிசனம்., 4, திருமுறைகள் பராணயம். 5,  தான தர்மம்.

  எவ்வித சுகபோகங்கள் இருந்தும் ஆன்மீகம் இல்லையேல் அவற்றால் பயனில்லை. வாழ்வுடன் சுவை இருக்காது. ஆன்மீக ஈடுபாடுதான் மனிதனின் வாழ்க்கை சுமையை தணிக்க வல்லது. மனமது செம்மையானால் அமைதி பெற ஆன்மீகம் தேவை.

  சமய அனுஷ்டானம், இறைபக்தி, தியானம், இறைவன் புகழ் பாடுதல் ( திருமுறை பாடுதல்) கேட்டல், புராணஇதிகாசங்கள் படித்தல், என்பனவற்றில் ஈடுபடுவதால் வீண் விவகாரங்களில் மனதையோ, புலன்களையோ செலுத்தாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். அதனால் நாம் அடைவது நிம்மதி,அமைதி, சந்தோசம்ஆகியவை.

  இப்பேறுகளை வேறு எந்த மூலங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியாது. இந்த உண்மையை நாம் உணர்ந்து,நம் பிள்ளைகள் உணர்வதற்கும் இளம் பிராயத்திலேயே அவர்களையும் பழக்கி விட வேண்டும். இளைஞர்களும், சிறுவர்களும் சமய விசயங்களில் ஈடுபாடு கொள்வர். எதர்க்கும் நேரம் இல்லை என்று கூறிக்கொண்டு எத்தனையோ காரியங்களுக்கு நேரம் ஒதுக்கும் போது ஏன் இறை சிந்தனைக்கு நேரம் நம் வாழ்வு நெறியில் ஒதுக்கக்கூடாது. நாம்ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் சற்றே சிறிது நேரமாவது சைவ சமய நெறிக்கி ஒதுக்கி நம் மனமும் சந்தோசமும் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ° சைவ வாழ்வியல் சிந்தனை யாழ்பாண நூல்

செவ்வாய், 5 ஜூலை, 2022

பெண்மையை முதன்மை படுத்திய சமயம் (சைவம்

 பெண்மையை முதன்மை படுத்திய சமயம் (சைவம்)

உலகில் சமயங்கள் பல இருப்பினும் சைவ சமயமே சமயம் என்பா் ஆன்றோர்கள்.சைவ சமய முதற்கடவுளான சிவபெருமான் தன் இடப்பாகத்தை உமாதேவியாருக்கு வழங்கி, உமையோரு பாகனாக விளங்கி, பெண்மைக்கு முதன்மை படுத்தியவரும் நம் முதற்முதல் கடவுளே.

 சைவ சமயத்தில் மறுமலர்ச்சிக்காக இறைவனால் அருளாளர்கள் மூலம் அருளப்பட்டவை திருமுறைகள். தோத்திர நூல்களாக விளங்கும் திருமுறைகள் சைவ சமயத்தின் கருவூலங்கள். திருநாரையூர்நம்பிகள் மூலம் தில்லையிலிருந்து திருமுறை பதிகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை நம்பியாண்டார் நம்பிகள் சமயச்சாரியார்கள் திருவாய் மலர்ந்து பாடியருளிய முறையில் பண்கள் அறிய எருக்கத்தம்பூலியூர் இறைவனிடம் மனம் உருகி வேண்டினார். அப்போது நம் பெருமானார் திருநீலகண்ட யாழ்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணிக்கு திருமுறை பண்களில் பாட உணர்த்தியுள்ளோம் என்று அருள் பாலித்தார்., திருநீலகண்ட யாழ்பாணர் அவதரித்த தலம் எருக்கத்தம்புலியூர் திருத்தலமாகும். அவர்  மரபில் வந்த பெண்ணை அழைத்து ஆச்சாரியார்கள் பாடிய வாறே பாடுவித்து பண்களோடு பாடிக் காட்டினார், இதுவே இறைவன் நம் சமயத்திற்கு இரண்டாவது முதன்மைப் பெண்ணாக அறிமுகம் செய்தவர் நம் இறையனாரே.

 அதன்பின் நாயன்மார்கள் வரிிசையில் பெரியபுராணம் காட்டும் முதன்மை பெண்கள்

சிவனடியார்களான 63 நாயன்மார்களில் அறுபது பேர் ஆண்கள், மூவர் பெண்கள். காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆகியோரே அப்பெண் நாயன்மார்கள் ஆவர். 

காரைக்கால் அம்மையார் இறைவனாலே ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட சிறப்புடையவர்.இவரே பெண் நாயன்மார்களில் மூத்தவரும் ஆவார். கயிலைமலையானை கால்களால் மிதிக்க அஞ்சி கைகளால் நடந்து சென்றவர். பிறவாமை வேண்டும் என்றும் அப்படி பிறந்தால் நான் உன் அடியில் இருக்க வேண்டி பணித்தவர்.

மங்கையர்கரசியார் சமண சமயத்தின் பிடியிலிருந்த பாண்டிய நாட்டினை சைவத்திற்கு மாற்றியவர்.

இசைஞானியார் ‘வன்தொண்டர்’ என்றழைப்படும் சுந்தரரின் தாய்.

  இதன்படி நம் சைவ சமயம் தான் பெண்களை முதன்மைப்படுத்திய சமயம் நம் சமயமே

திருச்சிற்றம்பலம்