வெள்ளி, 17 மார்ச், 2023

மானிடப்பிறப்பின் மான்பு

 மானிடப்பிறப்பின் மான்பு

Uploading: 86587 of 86587 bytes uploaded.


  சைவ சித்தாந்தத்தின் அடிப்படையும், முக்கிய பொருள்களாக கருதப்படும் முப்பொருளுமான,அனாதி பொருளுமான பதி,பசு, பாசம் என்றவற்றில் பசுவாகிய உயிர் பொருள் பாசத்தை சார்ந்தும், பின் இதனை விட்டு விலகி, பதியினை சாரவும் வழி முறைகளை உயிர்க்கு உணர்த்துவதே சைவ சித்தாந்தம் , இந்த மூன்று முக்கிய பொருள்களில் பசுவாகிய ஆன்மா தன்னுடைய வினைக்கு ஈடாக இறைவனால் தனு கரண, புவன,  போகங்களை பெற்று,பாவ புண்ணிய வினைகளை செய்தும், நீக்கியும் பிறப்பற்ற நிலைக்கு உந்தி இறைவனை அடைய பலபிறப்புக்களுக்கு ஆளாகிறது. மாணிக்கவாசகர் கூற்றுப்படி, அது, " புல்லாகி பூடாய், புழுவாய் மரமாகி பல்விருகமாய், பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய், வல்லசுர ராகி, முனிவாய், தேவராய், செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" ,,, என்றபடி உயிர்கள் நான்கு வகை தோற்றம், எழுவகை பிறப்பு, எண்பத்து நாக்கு நூறாயிரம் என்னும் யோனி பேதங்களை உடையதாய் அறிவுக்கறிவாய் நின்று பரிந்து வளர்ந்து பரிிமாணிக்கிறது, 

   இவ்வுயிர் இனங்களுக்குள்ளே மானிட பிறவியானது முதன்மை வாய்ந்து விளங்குகிறது. மானிப்பிறப்பில் மட்டுமே உயிர்கள் தவம் செய்து பக்குவம் பெற்று பாசம் நீங்கி பதியை சேர்ந்து, மறு பிறப்பு இன்மையை பெறுகிறது. பிறவிப் பெரும் பயனை அடைவதற்கு இதுவே வேண்டப்படுகிறது. இதனாலேயே பெறுதற்கரிய பிறவியாகிறது. இதனை தாயுமான சுவாமிகள்..

 " எண்ணரிய பிறவிதனில் யாதினும் அரிதரிது காண்

  இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, ஏது வருமோ அறிகிலேன்" என்கிறார்.

 சுவாமிகளின் வழித்தோன்றல்களாய் பெறற்கரிய மானிடப் பிறவியை பெற்ற நாம் இப்பிறவியின் பரமப் பிரயோசனத்தை அடைய முயனுவதே மாண்புடையதாகும். இந் நன் முயற்சிக்கு எம்மாட்டு சில சிறப்புக்கள் வேண்டப்படுகின்றன. சைவ சமயத்தில்  வேத சிவாகமங்கள் பயிலப்டும் நாட்டில் தவஞ் செய்தற்குரிய சாதியில் பிறத்தல் வேண்டும். பல பிறவிகளில் செய்த பெரும் புண்ணியப் பயனால் இந்நிலையை எய்திய போதும், சிறப்புடைய அருட் பேறு  பெற விரும்புவோர் உலக வாழ்க்கையில் உயர்ந்ததாக கருதப்படும் கல்விப்பேறு, காணிபூமிப்பேறு, பெரும்பதவி பேறு, பிற பொருட்கள் பேறு, முதலியவற்றால் மயங்காதிருத்தல் வேண்டும்.

  வறுமையாம் சிறுமை வந்தடடையாதிருத்தல் வேண்டும்

 சிவபெருமானையும் சிவனடியார்களையும் அன்போடு வணங்கும் பண்பினராய் இருத்தல் வேண்டும்

  இச் சிறப்புடையோர் ஞானத்தாலே சிவபெருமானை போற்றி வழிபட்டு பேரின்ப பெருவாழ்வு பெறுவர், இச்சிவப்பேறு அடைய தவம் செய்வதற்குரிய நெறிகள் இரண்டு உளன,

 அவை அன்பு நெறி, அறிவு நெறி என்பன, சமயாசாரிய மூர்த்திகள் அன்பு நெறியையும்  சந்தானாசரியார் மூர்த்திகள் அறிவு நெறியையும் விளக்கி அருளினர். இவை முறையே தேவார திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆக காணப்படுகின்றன. இவை இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்து இணைபிரியாது விளங்குபவை.  திருமுறைகள் இலக்கியமாகவும், சாத்திரங்கள் அவற்றின் இலக்கணமாகவும் கருதப்படுகின்றன. எனவே இலக்கியமாகிய திருமுறை பொருள்களை உள்ளவாறு உணர்வதற்கு இலக்கண மாகிய சாத்திர அறிவு இன்றியமையாததாகும். 

   இந்த சிவாகம திருமுறைகளும், சித்தாந்த சாத்திரங்களும் தான் கிடைத்தறகரிய மானிட பிறவி பெற்ற உயிர்கள் சிவபேறு அடைய நெறிகளைட கூறி உயிர்கள் முக்தி பேறு பெற உதவும் பாெக்கிசங்கள்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக