சனி, 25 மார்ச், 2023

இறை வழிபாடு பற்றிய சிந்தனை

 இறை வழிபாடு பற்றிய சிந்தனை



*ஓம்*

*சிவயநம  யநமசிவ  மசிவயந  வயநமசி  நமசிவய*

*சிவயநம  யநமசிவ   மசிவயந   வயநமசி  நமசிவய*


இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்


இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை, பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்


இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பொரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும்    பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்


இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,


இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்


இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.


இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.


இறை வழிபாடு என்பது ஏழைகளுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்


இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.


இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,


இறைவழிபாடு என்பது எல்லாம் செயல்களும் இறைவன் அருளால் அவன் செயலால் நடக்கிறது என்பதை உணர்த்துவது


இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.


இறை வழிபாட்டின் இரண்டு கண்கள்  நேர்மையும், உண்மையும் ஆகும்.


விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு  உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.


நன்றி : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக