செவ்வாய், 28 மார்ச், 2023

 சைவ சமயத்தின் தொன்மை



ஒவ்வொரு சமயமும் தோற்றுவிக்கப்டும் போது தோற்றுவிக்கப்பட்ட ஒருவராலேயே தான் தோன்றி காலமும் பெயரும் அறிய முடியும், சைவ சமயத்திற்கு தொடக்க காலம் கூறுவதானால் அது யாரோ ஒருவரால் ஏதோ ஒரு காலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அங்ஙனம் அது எவராலேனும் எக்காலத்திலேனும் தோற்குவிக்கப் படாமையால் அதற்கு தொடக்க காலம் இல்லையாம்.
சிவபெருமான் எனறும் உள்ளவர். உயிர்களும் என்றும் உள்ளவை,என்றும் உள்ள சிவபெருமானை என்றும் உள்ள உயிர்கள் அடைந்து பேரின்பம் அனுபவிப்பதற்கான வழியும என்றும் உள்ளது, அந்த வழி சமயம் அதுதான் சிவ சமயம் - சிவத்தை அடைவிக்கும் சமயம்- சைவ சமயம், ஆதலால சைவ சமயம் என்றும் உள்ளது. அநாதி யானது எவராலும் தோற்றுவிக்கப்படாதது என்பது தெளிவாம்.
சிவபெருமான் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டு செய்தருளும் சர்வ சங்காரத்தில் எல்லாத் தனு, கரண, புவன, போகுங்களும் அழியும், மாயையிலே ஒடுங்கும், உயிர்கள் இளைப்பாறியபின் ஆணவ மல நீக்கத்ததின் பொருட்டு சிவனருளால் அவைட மீளவும் தோன்றும். இந்த புவனமும் தோன்றும், உயிர்களும்தனு, கரணங்கள் பெற்று தோன்றும், அவ் உயிர்கள் போகங்களை அனுபவிக்கும் போது முன் செய்த தவ விசேடத்தால் நாளடைவில் அவற்றிக்கு சமய உணர்வு தோன்றும், சர்வ சங்கார காலத்திற்கு முன் இருந்த அந்த சைவ சமயம் மீளவம் வந்தது, என்றும் தொடக்க முடையது என்றேனும் சொல்வது பொருந்தாது.
இந்த இயற்கை புவன போகங்களை கொண்டு அவற்றின் அமைப்பு விநோதங்களை நினைந்தும் அவற்றுக்கெல்லாம் மூலகரணமாய் ஏதோ ஒரு பொருள் இருத்தல் வேண்டும் என்று உணர்ந்து அந்த பொருளே பல இனமக்களாலும் பல பெயரிட்டு கூறப்படும் கடவுள் ஆகும். அந்த கடவுளே தமக்கு எவ்வகையிலும் நன்மையே செய்யும் சிவம் ஆவர் என்ற தெளிவும் உண்டான காலமே இப் பூமியிற் சைவ சமயத்தின் தொடக்க காலம் எனலாம். அதன்பின் கடவுளின் செயல்கள் இயல்புகள் பற்றி ஆராய்ந்து சைவத்தின் உண்மைகளை அறிந்து சைவ சமய வாழ்வு வாழ தலைப்பட்டன.
சைவ சமயம் வரலாற்றுக்கு முந்திய சமயம். உலகில் முதற் தோன்றிய சமயம் இதுவே மற்ற சமயத்தாருக்கு தோற்றுவித்தவரும் தோற்குவித்த காலமும் தெரியும் உதாரணமாக கிருஷ்து மதம் யேசு கிருஷ்துவால் தோற்றுவிக்கப்பட்டது எனவே யேசு பிறந்த நாளே அச்சமயமும் தோன்றய காலம் எனப்படுகிறது. ஆனால் சைவ சமயத்திற்கு இது பொருந்தாது சைவம் சிவ சம்பந்தமான / சிவமே கடவுள் சிவம் என்றல் அன்பானது, மங்கல கரமானது அதுவே சிவ சைவ சமயம் எனப்படுகிறது.
வேதாகமங்களும் புராணங்களும் சைவத்தின் தொன்மைக்கு சான்றாவன, சிவபுராணங்கள் உலக தோற்றங்களையும், பழைய வரலாறுகளையும் கூறுவன, திருவிளையாடற் புராணம் வரலாற்று செய்திகளால் அறியலாம், பண்டைய சித்தர்களும் முனிவர்களும் சிவ வழிபாட்டை கொண்டதால் சிவ சமயமே சைவ சமயத்தை அறிய செய்கின்றன எனவே சிவ வழிபாடே சைவ சமய நெறியாகும்,
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரும் அவர்பின் வந்த சமய குரவர்களும் சைவத்தின் தொன்மையை தெளிவாக்கியுள்ளனர். முன்னை பழம் பொருட்கும்- முன்னை பழம் பொருளே, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி, என மணி வாசகரும், அப்பாலும் அடிசார்ந்ததார் அடியாருக்கும் அடியேன் என்ற சுந்தரரரின் கூற்றும், சைவ சமயமே சமயம் என்ற தாயுமானவரும், கடவுள் ஒருவர் உண்டு என்ற தெளிவில் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற திருவள்ளுவ பெருமானரும் கூறிய வாக்குகள் எல்லாம் சிவ சைவ சம்பந்தமானவைகளாகும் இன்னும் பல சங்க கால நூல்களிலிலும் சைவ சமய நெறிமுறைகள் மேற்கோள்களாக காணப்படுகின்றன. உதாரணமாக "தீதும் நன்றும் பிறர்தர வார " யாதும் ஊரே யாவரும் கேளீர், எத்தனை எத்தனை பிறப்போ, எத்தனை எத்தனை அப்பனோ, என்ற பட்டினத்தார் வாக்கும் போன்ற மேற்கோள்கள் நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
சைவ சமயம் எவராலும், தோற்றுவிக்கப்படாதது என்பதும், அது சிவ பெருமானைப் போலஅனாதியானது என்பதும், சர்வ சங்கார காலத்தின் பின் உலகம் மீளப் படைக்கப் படும் போது ஆன்மாக்களது அறிவிலே இறைவனருளால் அத தோன்றும் என்பதும் அவ்வாறு தோன்றிய சைவ சமய உணர்வையே சிந்து வெளிப் பழங்குடி மக்களும் சங்க கால மக்களும் பெற்றிருந்தார்கள் என்பதும் அவர்கள் சிவ பெருமானரின் அருள்மூர்த்தங்கள் பலவற்றை வழிபட்டார்களென என்பதும் தெளிவாம்.
சைவ சமயமே சிந்து வெளி நாகரிக கால சிவ வழிபாட்டிற்கும் வித்தாாக அமைந்திருந்தாக ஆராய்ச்சியாளர்களின் தீர்க்கமான முடிவாகும், எனவே சைவ சமயம் அநாதி காலமே என்பது தெளிவு,
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக