வெள்ளி, 31 ஜூலை, 2015
பட்டினத்து அடிகள்
இன்றைய நாளில் அன்னாரின் துறவர வாழ்க்கை பற்றி நாம் சற்று நினைவு ெகாள்வோம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு இளம் வயதிலேயே துறவர வாழ்வு கொண்டதால் இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.
திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.
வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.
அவருடன் சென்ற நண்பர்கள் தான் கொண்டு சென்ற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டு மருதவாணர் எருமூட்ைடகளை வாங்கிவந்துள்ளார் என கேலி செய்தனா். ஆனால் அவரின் தந்தையார் அதனை நம்பாமல் மூட்டைகளை பிரித்து பார்த்ததில் அதில வைரமும் தங்கத்தூள்களும் இருப்பதை அறிந்தாா். சில நாட்கள் கழித்து அதுவும் மறைந்து மறுபடியும் எரு மூட்டைகளாக மாறியது.இதனால் கோபம் கொண்ட தந்தையார் மகனை திட்ட அதனால் பற்றற்ற நிலை ெபற்று துறவறம் கொண்ட மருதவாணர் என்ற பட்டிணத்து அடிகளார், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என எழுதிய ஓலையினைக் ெகாண்ட பேழையை தன் தாயிடம் கொடுத்து விட்டு துறவறம் பூண்டார்.
சிவசமாதி
திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.
செல்வந்தராக வாழ்ந்த பட்டிணத்து அடிகள் பாடிய எளிய பாடல்கள் அனைவரையும் மனம்உருக வைக்கும் பாடல்கள்
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே
தனக்கென்று எதுவும் வேண்டுமென்று வைத்துக் கொள்வது இல்லை. ஒரு பாடலில் தனக்கு உடுத்த, வெயில் மழை, குளிருக்கு, பழைய வேட்டி ஒன்று உண்டு, பசித்தபோது உணவு கொடுக்க சிவனுண்டு, உறங்க திண்ணை உண்டு என்று பாடியுள்ளார்.
பட்டிணத்து அடிகளாரின் பற்றற்ற வாழ்வுக்கு அளவே கிடையாது, ஒரு தடவை அடிகளார், அறுவடை செய்த வயலில் வரப்பில் தலை வைத்து படுத்திருந்தார், அவ்வழியே வந்த பெண்கள் இருவர், அடிகளா்ர் படுத்திருப்பதை முற்றும் துறந்த பின்னும் இன்னும் தன் ெசல்வ செழிப்பில் தூங்குவது ேபால், தலையை வரப்பில் வைத்தல்லவா படுத்துள்ளார் என்றனா், உடனே இதனை கேட்ட அடிகளார், தலையை தரையில் வைத்து படுத்திருந்தார், மீண்டும் இப்ெபண்கள் அவ்வழியே திரும்பி வரும் போது இதனைக் கண்டு, மேலும் அடிகளார், நாம் பேசுவதைத்தானே கவனிததுள்ளார், துறவிக்கு ஏன் நாம் பேசுவதை கேட்டார் என்றனா். அவர்களின் கூற்றையும் அடிகளார் எடுத்துக் கொண்டு பிணம் போல் வாழவேண்டிய இந்த ஊன் உடம்பிற்கு வம்பு பேசுவதை ேகட்பது தவறுதானே என உணர்ந்தார். இதன் பொருட்டு அவரின் பாடல்
பட்டினத்தார் கூறுகிறார் கேளுங்கள் ...
“”பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே
மேலும் தனது உடம்பை நரி, புழு, கழுகு,மண் திண்பதற்கான புழுத்துப்போகும் உடலை வீணே வளர்ப்பது ஏனோ ? என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
ேமலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
நாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு
நாளும் கோளும் நளிந்தோருக்கு இல்லை என்பது நாட்டு வழக்கு. இதனையே ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரும் உறுதிபடுத்துகிறார்.
ஒரு சமயம் தென்பாண்டிநாட்டில் சமண மதம் தலைவிரித்தாடிய ேபாது, சைவ மதத்தினரை ஓர் இழிந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் போலவும் அவர்களை கண்டுமுட்டி என்று அழைத்தும் சைவ மதத்தினரை கேவலமாக நடத்தி ஆட்டிபடைக்கும் சமண மத்தினரை பழி தீர்ககவும் எண்ணிய , பாண்டிய மன்னனின் இளவரசி இதனை பொருக்காமல் இதன் ஆதிக்கத்தை தடுக்க ஞான சம்பந்தரின் பெருமையினை அறிந்து, அன்னார்தான் நம் நாட்டில் சைவ மதத்தை மீட்ெடடுக்க முடியும் என உணர்ந்து அந்த இளம் சைவ மத ஞானியை பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்தார்கள். அப்போது திருவாதவூரில் திருநாவுக்கரச சுவாமிகளுடன் இருந்த சம்பந்தர் பாண்டிய மன்னனின் அரசியார் மங்கையர்கரசியின் வேண்டு ேகாளினை ஏற்று அங்கு செல்ல அப்பர் பெருமானிடம் கூறினார், அப்போது சமணர்களால் துயர் பல பெற்ற அப்பர் பெருமானார், தான் பட்ட துன்பங்களை மனதில் எண்ணி , தாங்கள் மதுரை செல்லவதானால் நல்ல நேரம் கண்டு / நாளும் கோளும் கண்டு செல்க என வேண்டினார் , அப்போது, சிவனேயே சிந்தைதனில் கொண்டு நாளெல்லாம் சிந்தித்திருப்போருக்கு நாளும் கோளும் நல்வினையே செய்யும் என்று கூறு கோளாறு பதிகம் பாடினார் அப்பர் சுவாமிகளிடமிருந்து விடை பெற்றார்,
அப்பதிக பாடல்களை பாடினால் நவக்கோள்களும் நம்மை அணுகா என்றும் அவைகள் எல்லாம் நல்லனவற்றையே செய்யும் , மேலும் இப்பதிக பாடல்களை பாடும் அடியார்கள் அரசனைப்போன்று உயர்வார்கள் என்பது இது திருஞான சம்பந்தனின் ஆனண என்கிறார்.
கோளாறு பதிகம்
""வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவவாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே ".
இப்பாடலில் ஒன்பது கிரகங்களையும் நல்லவனவே செய்யும் என்கிறார்
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
02
*இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத
12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது.
விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.
ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது
நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய
நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.
12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம்,
கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,
ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.
மேலேகண்ட நட்சத்திரங்கள் எல்லாமே நல்ல நாட்களாகும்
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
பொழிப்புரை :
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் .
பாடல் எண் : 4
மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
பொழிப்புரை :
பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் .
பாடல் எண் : 5
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
பொழிப்புரை :
நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .
திருச்சிற்றம்பலம்.
செவ்வாய், 28 ஜூலை, 2015
ரவுவார் (வணங்குபவர்) உலகில் அரசராவாரே !
மூன்று வயதில் ஞானப்பாலூட்டப்பெற்ற திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுதுகுன்றத்து இறைவரை வணங்கி பாடியருளிய ஒரு பதிகத்தின் பொருளை இக்கட்டுரையில் காணலாம்.
1, சிவபரம்பொருளைப் போற்றி வணங்குபவரகள் உலகினில் அரசர் ஆவர்,( எல்லோரும் நாட்டிற்கு அரசர் ஆக முடியுமா? என நினைக்காலாம், அவரரவர் சிவனை வணங்கினால் அரசர் போன்ற அதிகாரத்தினையும், நல்ல செல்வத்தினையும் தமது வீட்டிலேயே அடையாலம் என்பது தான் இதன் உட்கருத்து. அவரவர் புண்ணியத்திற்கு ஏற்ப அரசபோகத்துடன், வாழலாம், பெரிய அழகான வீடு, தேவையான வேலையாட்கள், பொன் விளையும் பூமி, வாகனங்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து, இராசபோக வாழ்க்கை என்பன பெறுவர் என்பது தான் இதன் உட்பொருள்)
"பரசுஅமர் படையுடையீர் உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே." தமிழ் திருமுறை 3,பதிகம் 99
பரசு என்னும் ஆயுதத்தை உடைய சிவபெருமானாரே! உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர் ஆவர்.
2, நாள்தோறும் நன்மைகளையே பெறுவர்
" பையரவம் அசைத்தீர் உமைப் பாடுவார்
நைவிலர் நாள்தொறும் நலமே " திருமுறை 3 -பதி 99
பாம்பைக் கச்சாசையாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானாரே! தங்களைத் தீந்தமிழ் பாடல்களால் பாடி வணங்குபவர் எவ்வித குறையும் இலாதவர் (நைவிலர்) நாள்தொறும் நன்மைகளையே பெறுவர்.
3. பழியும், பாவமும், இல்லாதவர் ஆவர்
"மழவிடை யதுவுடையீர் உமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே".
இளமை வாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட தங்களை வாயார வாழ்த்துபவர்கள், பழியும், பாவமும் இல்லாதவர் ஆவர்.
4. செல்வமும், புகழும் உடையவர் ஆவர்
"உருவமர் சடைமுடியீர் உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே"
அழகு பொருந்திய சடைமுடியினை உடையவரே தங்களைப் போற்றி செய்து வணங்குபவர்கள் செல்வமும், புகழும் பெறுவர்.
5. உயர்ந்த உள்ளம் வாய்க்கப் பெறுவர்
" பத்து முடியடர்த்தீர் உமைப்பாடுவார்
சித்த நல்லவ் அடியாரே"
இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெறித்த தங்களைப்பாடி வணங்குவோர் உயர்ந்த உள்ளம் படைத்த அடியார் ஆவார்கள்.
6. முத்தியும், பெறுவர்
"கட்டமண் தேரைக் காய்ந்தீர் உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே"
சமணர்களையும், புத்தர்களையும் அடக்கியருளிய தங்களை உள்ளத்தில் வைத்து தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுவதற்குரிய முத்திப் பேற்றினையும் பெறுவார்கள்.
சிவபெருமானாரை வாயினால் பாடி, மனத்தினால் தியானித்தால் இம்மையில் எல்லா நலன்களையும் பெற்று, இறுதியில் முத்தியும் அடையலாம் என்பது திண்ணம் இது சிவனருள் பெற்று ஞானப்பால் உண்ட சம்பந்தர் திருவாக்கு.
நாமும் வாயாரப் பாடி, மனதார நினைந்து சிவனருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
புதன், 22 ஜூலை, 2015
ஞானம்
செவ்வாய், 21 ஜூலை, 2015
சைவராகப் பிறந்தது மேலான புண்ணியம் / சைவத்தின் தத்துவார்த்தம்
சைவத்தின் தத்துவார்த்தம்
எல்லாப் பிறப்புகளையும் தப்பி மானிடராய் பிறப்பது பெரும் புண்ணியம்,அதிலும் சைவராகப் பிறப்பது பலகோடி புண்ணியம். இதனை தமிழ்முறை வேதங்களிலும் ஆங்காங்கே காணலாம். பிறவி ஞானி , ஞானப்பால உண்டு அரும் பெரும் தெய்வீக ஞானி,
திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய மூன்றாம் திருமுறை திருக்குடி பதிகத்தின் பத்தாவது பாடலில்ஓர் அரிய ெசய்தியை கூறியுள்ளதை அறிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள்ள ேவண்டும். சிவ பெருமானாருக்கு தலையால் வணங்கி நன்றி கூறவேண்டும்.
"அருந்திரு நமக்கு ஆக்கியஅரன் " சம்பந்தர்
நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் ெசய்தது மிகப் பெரிய செல்வம் நமக்கு அளித்ததாகும் என்பதை நாம் உணர ேவண்டும்.
உலகில் உள்ள அனைத்திலும் ( உயிர உள்ளவை, உயிர் அற்றவை) இறைமை கலந்துள்ளது என்றும், பிற உயிர்கட்கு எந்த வகையிலும் துன்பம் செய்யக்கூடாது என்று முதலில் கூறுயது, தற்போதும் கூறிவருவது, சைவ சமயமே ஆகும், எல்லா மதக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது சைவ சமயம், சைவ மதமே
ஒரு இந்து மகாசமுத்திரம், இவற்றிலிருந்து இதன் கொள்கை கோட்பாடுகளை அடிப்படையாகக் ெகாண்டு தோன்றியதே ஏனைய மதங்கள் அத்தனையும், உதாராணமாக எடுத்துக் கொண்டால், கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த, சமண மதங்களும் இந்து மத கொள்கை த்த்துவத்தை கொண்டே வேறுண்ணின. அன்பை அடிப்படையாகக் ெகாண்ட கிருஸ்துவ மதமும், இந்து மதத்தின் அன்பே சிவம், என்ற அடிப்படைத் தத்துவ்த்தை ெகாண்ட தோன்றியது. நம்இந்து மதம் பிரதான நதி, மற்றவையெல்லாம் இத்ன் கிளை, நதிகள், மற்றும் வாய்க்கால்கள் தான்.
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.
அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.
கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
மனிதன் எப்போது சிந்திக்க தோன்றினானே அன்றே தோன்றியது இந்து மதம், இந்து மதத்தை தோற்றுவித்தவர் யாரென்று யாருக்கும் ெதரியாது, ஆனால் மற்ற மதங்களை தோற்றுவித்தவர்களின் பெயர்களைக் ெகாண்ட மற்ற மதங்கள் விளங்குகின்றன, எனவே இந்து சைவ இந்துமதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று, ஒரு மதம் வளர, அதனை சார்ந்தவர்கள் நமக்கு தந்த வேதங்களும், அவர்களின் அறிவுரைகளும் தான், இவற்றில் தான் நம் சைவம் தலைதூக்கி நிறகிறது, தமிழ் முறை தந்த சிவ சைய சமயக்குறவர்களும், பன்னிரு திருமுறைகள் தந்த அடியார்களின் தோத்திரப்பாடல்கள் தான் சைவத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டன என்றால் மிகையாகாது. சைவ சமயத்தின் உயிர் நாடியாக உள்ள பன்னிரு தமிழ் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்துக்கருத்துக்களும் எல்லா மத்தவர்கட்கும் எல்லா இனத் தவர்களுக்கும் பொருந்துனவே ஆகும், தான் பெற்ற இன்பத்தை வளர்ச்சியை தானும் வளர்ந்து, பிற இனத்தவரையும் சிறக்க செய்வதே நம் சைவ மதத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம், " நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம். " இதுதானே தமிழ் வேதத்தின் உட்கரு, இதைத்தானே தந்துள்ளது. நம் தமிழ் வேதங்கள், இத்தகைய சமயத்தில் நம்மைப் பிறக்க செய்ததை மதித்து போற்ற வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர் ,
" வாய்த்தது நம்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்." த,வே, 4
முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வணங்கி, இனிப் பிறவாமையைப் பெறுவதற்கு வழி வகுப்பது சைவ சமயமே ஆகும், ஆதலால் தான் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததைப் " அருந்திரு " (மிகப் பெரிய செல்வம்) என்கிறார் சம்பந்தர், இதனை உணர்ந்து இச் சைவ மதத்தில் பிறந்ததின் பயனை பெற்று உய்தி, இன்னும் பிறவாமை பிறக்கவும், அப்படி இன்னும் ஒரு பிறவி பிறக்க நேர்ந்தால் , இந்த சைவ சமயத்திலேயே பிறந்து, என் ஈசனை மறவா நிலையை அடைந்திட அருள் வேண்டுவோம்,
திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம்
ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
மூர்க்க நாயனார்
சோழ நாடு சோறுடைத்து, ( கோவில்கள் - பக்திநெறி ) பாண்டியநாடு முத்துயுடைத்து,(முத்திபெற்ற சித்தர்கள்) தொன்டை நாடு சான்றோருடைத்து, ( சான்றோர்கள் - சித்தர்கள்) இப்படி சான்றோர்கள் பலர் வாழும் தொண்டை நன்னாட்டில் உள்ள வளம் நிறைந்த ஊர் திருவேற்காடு. இவ்வூர் பூவிலிருந்தவல்லியிலிருந்து மூன்று கி,மீ. தொலைவில் உள்ளது.
இவ்வூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் மூர்க்க நாயனார். திருவெண்ணீற்றையும் மெய் பொருளாகக் கருதி தினமும் திருவெண்ணீர் அணிந்து சிவனடியார்கட்கு மிகச் சிறந்த உணவளித்து பின் தான் உண்ணும் குணம் கொண்டு சிவநெறி யை அணிதினமும் சிவனடியார்கள் சேவை செய்து வந்தார். சிவனடியார்கள் சிவமாகவே நினைத்து வணங்கி, இன்னுரை கூறி அகமும் முகமும் மலர்ந்து அன்புடன் அமுது செய்விப்பார்.
இப்படி இவரது செல்வம் யாவும்செலவழிந்தன. நிலம், வீடு, முதலிய யாவும் விற்றாயிற்கு. வறுமை வந்த போதும் தமது குறிக்கோளினின்று நாயனார் மாறவில்லை. தாம் முன்பு கற்றிருந்த சூது ஆட்டத்தில் பொருளீட்டி அடியார்கட்கு அமுதூட்டத் திட்டமமிட்டார். பல ஊர்கட்கு சென்று அங்குள்ள சிவலாயங்களை தொழுவார். அங்கு சூதாடி அதனால் வரும் பொருளை கொண்டு அடியார்கட்கு அன்னம் அளித்து மகிழ்ந்தார்.
சூதாடுவது பெரும்பாவம் என்று தெரிந்தும், அவர் அதனால் தான் கொண்ட குறிக்கோள் நன்மையானது புண்ணியமானது என்று உணர்ந்து இந்த பாவச்செயலில் கிடைத்த பொருளையும் சிவனடியார்கட்கு அன்னம் அளித்து புண்ணியம் செய்து வந்தார். நாம் சொல்லும் பொய்யினால் ஒரு நன்மை நடக்குமானால் அது உண்மையாகும் என்பதையும் செய்யும்தொழில் பாவத்தொழிலானாலும் அதன் விளைவு நன்மை பயக்குமானால் அதுவும்புண்ணிய செயலே என்று உணர்ந்திருந்தார்.
தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சூதாடினால் அது தவறே, தான் செய்யும் ஒப்பற்ற சிவபுண்ணியச் செயலுக்காக சூதாடியது புண்ணியமே ஆகும். பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் வழிபபறி செய்து திருமாலயடியார்கட்கு உணவளித்தார். என்ற வரலாற்றையும இத்துடன் வைத்து நாம் எண்ணி பார்க்க வேண்டும்.
நாயனார் திருக்கடந்தை தலத்தை அடைந்து அங்கே எழுந்தருளியுள்ள பிறைசூடிய பெருமானாரை அளவிலா அன்புடன் வணங்கினார். அத்தலத்தில் பல நாட்கள் தங்கினார். ஈட்டிய பொருளை கொண்டு பணியார்கள் மூலம் சிவனடியார்கட்கு அறுசுவை உணவளித்தார். அடியார்கள் யாவரும் உணவருந்திய பிறகு முடிவில் இவர் உணவு உண்பார். சூதாடியதால் இவர் மூர்க்கர் எனப்பெயர் பெற்றார்.
குணத்தால் மூர்க்கர் இல்லை. தூய உள்ளமும், இனிமையான சொல்லும், உயர்ந்த செயலும், கொண்டவர். மண்ணில் பிறந்தவர்கள் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தலாகும்.. இத்தகைய மேலான தொண்டினை செய்து முடிவில் சிவபதம் எய்தினார்.
திருச்சிற்றம்பலம்
நன்றி :தமிழ் வேதம்
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
ஞாயிறு, 19 ஜூலை, 2015
திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள்
சனி, 18 ஜூலை, 2015
ஆக்கையால் பயன்

நம்முடைய திருமுறைகளில் பெரும்பாலனவை வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டுள்ளன. வினை கழிய என்ன செய்வது என்று நமது அருளாளர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அது கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுவதே ஆகும். கைவினை ெசய்தல் என்றால், திருக்கோவில்களில் அலகிடுதல், ெமழுகுதல், பூப்பறித்து பூமாலை சாற்றுதல், பாமாலை பாடுதல், தலையார கும்பிடுதல், கூத்தாடுதல், போன்ற தொண்டுகளை செய்து இறைவன் திருவடியை போற்றி பரவுதன் மூலம் வினைப்பயின்று நாம் நீக்கம் பெறலாம், எ்னபது தெளிவு், நாம் இந்த மானிடப்பிறப்பு பிறந்ததன் பயன் பெற உடலுறுப்புக்ள நலமடையவும், நம் உடல் உறுப்புக்ளால் வழிபாட்டிற்கு எவ்வாறு பயன்பட ெசய்ய வேண்டும் என்று திருமுறைகள் கூறுவதைப்பார்ப்போம். தலை; தலையை தாழ்த்தி வணங்க வேண்டும் " தலையே நீ வணங்காய் .............. தலைவனை " ,,,,, அப்பர் " சிரங்குவிவார் ஓங்குவிக்கும் ......... சிவபுராணம் கண்கள் ; கண்காள் காண்மின்களோ .... கடல் நஞ்சுண்ட கண்டனை தன்னை ................ அப்பர் அடிகள் செவி ; செவிகாள் கேண்மின்களோ ..... எரிபோல் மேனிபிரானை வாய் ; வாயே வாழ்த்து கண்டாய் ..... மதயானை உரிபோர்த்தானை மூக்கு ; மூக்ேக நீ முரலாய் ..... முது காடுறை முக்கண்ணனை நெஞ்சு ; நெஞ்சே நீ நினையாய் ....... நிமிர் புன்சடை நின்மலனை கைகள் ; கைகாள் கூப்பி தொழீர் ....... பாம்பணிந்த பரமனை ஆக்கை (உடல்) ; ஆக்கையால் பயன் என் ..... அரன் கோவில் வலம் வருதல் கால்கள் ; கால்களால் பயன் ... கோவில்கோபுரங்களை வலம் வரல் அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தக்கால் கூன், செவிடு, முடம் அற்று பிறத்தல் அரிது. இவ்வாறு ஒச்சமின்றி பிறந்த நம் உடல் ெகாண்டு ஈசனை வணங்க பயன்படுத்தாத இந்த ஆக்கையினால் பயன் என்ன? " உற்றார் ஆர் உளரோ ... உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ " அப்பர் ெபருமான் திருமுறை பாடல் 4 இதனையே பட்டினத்து அடிகளும் "ஊரும் சதமல்ல , உற்றார் சதமல்ல, ............................... கச்சியப்பா நீ யே சதம் " என்கிறார், எனவே இப்பிறப்பின் பிறவி பயனை அடையவும், இன்னும் பிறவா நிலை பெறவும் நம் ெபற்ற ஆக்கையால் ஆலவாய் சுந்தரனை வணங்கி பாடி பிறவி பயன் பெறுவோம். திருச்சிற்றம்பலம் வை.பூமாலை http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com
திங்கள், 13 ஜூலை, 2015
என்.கணேசன்: இருந்தும் இல்லாமலும் இறைவன்!
என்.கணேசன்: இருந்தும் இல்லாமலும் இறைவன்!: கீதை காட்டும் பாதை 36 "பொ றாமை இல்லாதவனான உனக்கு இந்த இரகசிய வித்யையை உபதேசிக்கிறேன், இதை அறிந்து இந்த அசுபமான சம்சாரத்திலிரு...
வியாழன், 9 ஜூலை, 2015
புதன், 8 ஜூலை, 2015
Sadhananda Swamigal: ஆனி அமாவாசை சிவனருளை சீக்கிரம் தரும் மஹாவில்வம் !!...
Sadhananda Swamigal: ஆனி அமாவாசை சிவனருளை சீக்கிரம் தரும் மஹாவில்வம் !!...: Thank to : https://www.facebook.com/pages/சித்தர்களின்-குரல் உலகின் ஒரே கடவுள் என்பது ஈசன் என்ற அண்ணாமலையார் தான்;அவருக்கு கோடிப...
திங்கள், 6 ஜூலை, 2015
திருமுறைகள் வெளி வர வித்திட்டவர்கள்
சைவத்தின் ஆனிவேராகக் கருதப்படும் பன்னிரு திருமுறைகள் இன்று எல்லாராலும் பாடப்படும் தேவாரப் பதிகங்கள் இன்று நம்மால் ஓதி ஆராதிக்க வித்திட்டவர்கள் சங்க கால சோழ மன்னர்கள் வம்சாவழியினருக்கே சாரும்.தென் தமிழ்நாட்டில் சோழ சாம்ராஜ்யத்தில் செங்கோலாட்சி வந்த இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டியார் தான் முதன் முதலில் இந்த தேவாரப்பதிகங்கள் இருப்பதை கண்டறிந்து அதனை நமக்கெல்லாம் கிடைக்கச் செய்து, இறைவனின் திருவருளை பெற தேவாரப்பதிகங்கள் புத்துயிர் பெற செய்தவர்கள். இந்த குந்தவை பிராட்டியார் ஒருநாள் தன் நகரிலுள்ள சிவலாயத்தில் சிவதரிசனம்செய்ய சென்றபோது, கோவிலில் பூ தொடுக்கும் ஒரு சிறுவன் பூவை தொடுத்தவாறு அப்பரின் தேவாரப்பாடலான " குனிந்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குவின் சிறிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்மாநிலத்தே " என்ற பதியத்தை இராகத்தோடு பாடுவதை கேட்ட இளவரசி, அவனை அருகில் அழைத்து இந்த பாடல்கள் எங்கு கற்றாய் இது யாருடைய பாடல்கள் என வினவினார், அதற்கு அச்சிறுவன் இது திருநாவுக்கரசர் பெருமான் பாடிய தேவாரப்பதிகப் பாடல் இதனை எனது தந்தையார் எனக்கு பயின்று கொடுத்ததை சிவனார் சந்நதியில் அனுதினமும் பாடி மகிழ்வேன் என்றான். இந்த பாடல்கள் மட்டும்தான் தெரியுமா ? இன்னும் பாடல்கள் உள்ளனவா என்றதற்கு சிறுவன் எனது தந்தையாரிடம் வினவினீர்களானால் தங்களுக்கு வேண்டிய விபரங்கள் தெரியும் என்றான். உடனே அவனின் தந்தையை அனுகி இதன் விபரங்களை சேகரித்தார். இது சைவ சமய சிவனடியார்களால் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு இது தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. அதன் பதிகப்பாடல்கள் ஒன்றிரண்டுதான் எனக்கு தெரியும் மீதமுள்ள பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்னும் சிவனடியார் ஒருவர் உள்ளார் அவரிடம் கண்டு தெளிவு பெறலாம் என்று விபரங்கள் கூறியனுப்பினார் குந்தவை பிராட்டியாரை. உடனே குந்தவை பிராட்டியார் தன் சகோதரன் இராஜராஜசோழனிடம் இது பற்றி கூறி தேவாரப்பதிகங்கள் எங்கிருந்தாலும் அதன் பிரதிகளை கண்டுபிடித்தருளிட உத்தரவு இட்டார், மன்னரின் சேனைகளும் இதனை தேடும் பணியில் ஈடுபட்டதுடன் நம்பியாண்டார் நம்பிகளையும் காண மன்னனே நேரில் சென்றார், மேலும் இந்த தேவாரப்பதிகப்பாடல்கள் கொண்ட ஏடுகள் எங்கும் கிடைக்கிறதா என்பதையும் அறிய பல திக்குகளுக்கு தன் பணியாளர்களை நியமித்தான்.
மன்னன் தேடிச்செல்லும் நம்பியடிகள் ஒருநாள் தான் முறையாக வழிபடும் பொல்லாப் பிள்ளையார் என்ற திருக்கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலையில் நம்பியடிகளின் பாலகன் நம்பி என்ற பள்ளி செல்லும் சிறுவனை தன் பொருட்டு பொல்லாப் பிள்ளையாருக்கு அபிசேக ஆராதனை செய்யும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் அவனுடைய தாயார். அவனும் பிள்ளையாருக்கு அபிசேகம்செய்ய வேண்டிய பொருட்களையும், அவருக்கு படையல் பொருளான கொழுக்கட்டையையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சிறுவன் நம்பி பொல்லா பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயக பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்து, நீரால் அபிசேகம் செய்து தான் கொண்டு வந்த வஸ்திரங்களால் அலங்காரம் செய்து தான் கொண்டுவந்த படையல் நெய்வேத்திய பொருட்களான கொழுக்கட்டையை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். பிள்ளையார் உண்ண மாட்டார் என்பது அவனுக்கு தெரியத தால் அவன் மேலும் மேலும் அரைகூவி பிள்ளையாரை சாப்பிட வேண்டினான். பாலகன் பலமுறை கெஞ்சியும் தரிசனம் அளிக்காத பிள்ளையாரை தான் படைத்த கொழுக்கட்டையை உண்ணா விடில் தான் இங்கே மாண்டு விடுவதாகவும் பிள்ளையாரின் காலில் முட்டி மோதினான், உடனே பிள்ளையார் அவனுக்கு தரிசனம் கொடுத்து படைத்த கொழுக்கட்டை வேத்தியங்களை உண்டு மகிழ்ந்தார். பிள்ளையார் தான் படைத்த கொழுக்கட்டைகளை உண்ட சந்தோசத்தில் தான் கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அவனுடைய தாயார் விநாயகருக்கு படைத்த கொழுக்கட்டைகளை எங்கே என்று அன்னை கேட்க அவனே விநாயகர் உண்ட செய்தியை கூறினான் ஆனால் அன்னை அதனை நம்ப வில்லை. பாலகன் பொய் சொல்கிறான் என்றே நம்பினார்கள். இது பற்றி ஆராவாரம் ஏற்பட்டது. உடனே எல்லோரும் பிள்ளையார் உண்டதை உன்னால் நிரூபிக்க முடியுமா? என்று வினவ , அவனே தான் இன்னும் ஒரு முறை பிள்ளையாருக்கு படைத்து அவர்தான் உண்டார் என்பதை நிருக்கிறேன் என்று கூறி மறுபடியும் பொல்லா பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். இதன்படி பலமுறை வேண்டி பிள்ளையார் வராத நிலையில் மறுபடியும் சிறுவன் பிள்ளையாரை உருக்கத்துடன் வேண்டி தான் வரவில்லை எனில் தான் இங்கே இறந்து விடுவேன் என்று வேண்ட உடனே பிள்ளையார் தரிசனம்எல்லாருக்கு கிடைத்து கொழுக்கட்டையையும் உண்டு சென்றார், இச்செய்தி சோழ மன்னன் வரை பரவியது , எனவே மன்னனும் நம்பியாண்டரின் பாலகனை சந்தித்து தேவாரப்பதிகங்கள் எங்கு உள்ளன. என்று விநாயகரிடமே கேட்டு சொல்ல கூறினார், அதன்படி பிள்ளையார் தரிசனம் கொடுத்து தேவாரப்பதிகங்கள் யாவும் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் ஓதுவாரகளின் பொறுப்பில் உள்ளது. என செய்தி கிடைத்தவுடன் மன்னன் அங்கு சென்று, சிதம்பரம் ஓதுவார்களிடம் வினவினார், அவர்கள் மூவரின் தேவாரப்பதிகங்கள் நடராஜபெருமானின் சன்னதியில் உள்ள அறையில் உள்ளது, என்றும், அது அந்த மூவர்கள் வந்தால்தான் தங்களால் எடுத்துக் கொடுக்க முடியுமென கூறினார்கள். மன்னன் யோசனை செய்தான் சித்தி முத்தியடைந்த மூவரை எப்படி அழைத்து வருவது எப்படி தேவாரப்பதியங்களை பெறுவது என்று மனம்வருந்திக் கொண்டிருக்கும் போது ஒரு சித்தர், மறைந்த மூவரின் விக்ரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வாருங்கள் உங்களுக்கு தேவாரப்பதியங்கள் கிடைக்கும் என அருள் வாக்கு கிடைத்தது. மன்னரும் அதன்படி மூவரின் விக்கரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார், ஓதுவார்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை, ஏனனெனில் இது வெறும் விக்கிரங்கள் என்றால் கோவிலில் குடிகொண்டிருக்கும் நடராஜபெருமானும் விக்கிரமாகத்தானே தெரியும், உடனே மூவர் பெருமக்களும் நடராஜர் சன்னதி வந்தவுடன், அறையில் தேவாரப்பதியங்கள் கொண்ட நூல் ஆடைகளால் மூடப்பட்டிருந்த மூட்டையை எடுத்து கொடுத்தனர் , அதில் சுமார் 10 ஆயிரம் கொண்ட ஏடுகள் காரையானால் அரிக்கப்பட்டு மீதம் இருந்த சுமார் 6000 ஒலைச்சுவடுகள் தான் எஞ்சியிருந்தன, அதனை கொண்டு வந்து அதற்கு பூஜைகள் செய்து தேவாரப்பதிகங்களை முறைப்படுத்தி உலகிற்கு வெளியிட்ட பெருமை சோழ மன்னர்களுக்கே சார்ந்தது.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் ஓம்
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
சனி, 4 ஜூலை, 2015
பிரம்ம ஞானம் பெறுதல்
மனித்தப் பிறவி வேண்டுவதே .............
வெள்ளி, 3 ஜூலை, 2015
பிச்சைக்காரனும் அறிவாளியே
விஜயாபதி விசுவாமித்திரர் மகிரிஷி தரிசனம்

விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும். இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது. விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார். இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம் . இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும் . தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் சிறப்புகள்: இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம். 2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள். 3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள். 4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம் போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்
இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் .. விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!! அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு நாளை 28.06.2015 திட்கட் கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் சிறப்புடன் நடைபெற்றது
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

