செவ்வாய், 21 ஜூலை, 2015

சைவராகப் பிறந்தது மேலான புண்ணியம் / சைவத்தின் தத்துவார்த்தம்


சைவராகப் பிறந்தது மேலான புண்ணியம் 


      சைவத்தின் தத்துவார்த்தம் எல்லாப் பிறப்புகளையும் தப்பி மானிடராய் பிறப்பது பெரும் புண்ணியம்,அதிலும் சைவராகப் பிறப்பது பலகோடி புண்ணியம். இதனை தமிழ்முறை வேதங்களிலும் ஆங்காங்கே காணலாம். பிறவி ஞானி , ஞானப்பால உண்டு அரும் பெரும் தெய்வீக ஞானி, திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய மூன்றாம் திருமுறை திருக்குடி பதிகத்தின் பத்தாவது பாடலில்ஓர் அரிய ெசய்தியை கூறியுள்ளதை அறிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள்ள ேவண்டும். சிவ பெருமானாருக்கு தலையால் வணங்கி நன்றி கூறவேண்டும். "அருந்திரு நமக்கு ஆக்கியஅரன் " சம்பந்தர் நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் ெசய்தது மிகப் பெரிய செல்வம் நமக்கு அளித்ததாகும் என்பதை நாம் உணர ேவண்டும். உலகில் உள்ள அனைத்திலும் ( உயிர உள்ளவை, உயிர் அற்றவை) இறைமை கலந்துள்ளது என்றும், பிற உயிர்கட்கு எந்த வகையிலும் துன்பம் செய்யக்கூடாது என்று முதலில் கூறுயது, தற்போதும் கூறிவருவது, சைவ சமயமே ஆகும், எல்லா மதக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது சைவ சமயம், சைவ மதமே ஒரு இந்து மகாசமுத்திரம், இவற்றிலிருந்து இதன் கொள்கை கோட்பாடுகளை அடிப்படையாகக் ெகாண்டு தோன்றியதே ஏனைய மதங்கள் அத்தனையும், உதாராணமாக எடுத்துக் கொண்டால், கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த, சமண மதங்களும் இந்து மத கொள்கை த்த்துவத்தை கொண்டே வேறுண்ணின. அன்பை அடிப்படையாகக் ெகாண்ட கிருஸ்துவ மதமும், இந்து மதத்தின் அன்பே சிவம், என்ற அடிப்படைத் தத்துவ்த்தை ெகாண்ட தோன்றியது. நம்இந்து மதம் பிரதான நதி, மற்றவையெல்லாம் இத்ன் கிளை, நதிகள், மற்றும் வாய்க்கால்கள் தான். போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது. இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி. வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது. கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின. மனிதன் எப்போது சிந்திக்க தோன்றினானே அன்றே தோன்றியது இந்து மதம், இந்து மதத்தை தோற்றுவித்தவர் யாரென்று யாருக்கும் ெதரியாது, ஆனால் மற்ற மதங்களை தோற்றுவித்தவர்களின் பெயர்களைக் ெகாண்ட மற்ற மதங்கள் விளங்குகின்றன, எனவே இந்து சைவ இந்துமதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று, ஒரு மதம் வளர, அதனை சார்ந்தவர்கள் நமக்கு தந்த வேதங்களும், அவர்களின் அறிவுரைகளும் தான், இவற்றில் தான் நம் சைவம் தலைதூக்கி நிறகிறது, தமிழ் முறை தந்த சிவ சைய சமயக்குறவர்களும், பன்னிரு திருமுறைகள் தந்த அடியார்களின் தோத்திரப்பாடல்கள் தான் சைவத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டன என்றால் மிகையாகாது. சைவ சமயத்தின் உயிர் நாடியாக உள்ள பன்னிரு தமிழ் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்துக்கருத்துக்களும் எல்லா மத்தவர்கட்கும் எல்லா இனத் தவர்களுக்கும் பொருந்துனவே ஆகும், தான் பெற்ற இன்பத்தை வளர்ச்சியை தானும் வளர்ந்து, பிற இனத்தவரையும் சிறக்க செய்வதே நம் சைவ மதத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம், " நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம். " இதுதானே தமிழ் வேதத்தின் உட்கரு, இதைத்தானே தந்துள்ளது. நம் தமிழ் வேதங்கள், இத்தகைய சமயத்தில் நம்மைப் பிறக்க செய்ததை மதித்து போற்ற வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர் , " வாய்த்தது நம்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்." த,வே, 4 முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வணங்கி, இனிப் பிறவாமையைப் பெறுவதற்கு வழி வகுப்பது சைவ சமயமே ஆகும், ஆதலால் தான் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததைப் " அருந்திரு " (மிகப் பெரிய செல்வம்) என்கிறார் சம்பந்தர், இதனை உணர்ந்து இச் சைவ மதத்தில் பிறந்ததின் பயனை பெற்று உய்தி, இன்னும் பிறவாமை பிறக்கவும், அப்படி இன்னும் ஒரு பிறவி பிறக்க நேர்ந்தால் , இந்த சைவ சமயத்திலேயே பிறந்து, என் ஈசனை மறவா நிலையை அடைந்திட அருள் வேண்டுவோம், திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக