வெள்ளி, 7 ஏப்ரல், 2017

திருவாசகமென்னும் தேனின் துளிகள்

திருவாசகமென்னும் தேனின் துளிகள்


" ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே "

இறைவனை எந்தை என்றும் பெருமானே என்றும் அழைப்பது சிந்திப்பதற் கென்றாகும். அனைத்து உலகையும் படைத்தவன்என்ற கருத்தில் எந்தை என்று கூறுவது பொருத்தமாயினும் அந்த சொல்லை இங்கே பயன் படுத்துவதற்கு ேவறு காரணமும் உணடு, முன்பின் சிந்தியாமல் தன் வழியே செல்லும் மகனை தடுத்து நிறுத்தி தன்வழிப்படுத்துகிறான் தந்தை அடிகளாரைப் பொருத்தட்டில் ஈர்த்து என்னை ஆட்கொண்டாய்என்று கூறுவது ஆழமான கருத்துடையதாகும். திருவாதவூரில் பிறந்து, பாண்டிமன்னனுக்கு அமைச்சு  பூண்டு, அம்முறையில் குதிரை வாங்கவே பெரும்பொருளோடு போகின்றார், உலகில் வாழ்க்கையில் பெரிதும் ஈடுபட்டு இருந்தாரே தவிர வாழ்க்கையை துறந்து துறவியாக மாற நினைக்கவே இல்லை, இறைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சிந்தித்து துறவு கொள்ளவும் இல்லை, பாண்டியமன்னனின் அமைச்சராககுதிரை வாங்குவதற்கு புறப்பபட்டு செல்கின்ற அவர் திரு்ப்பெருந்துைற எல்லையை அடைகின்ற வரை அமைச்சராகத்தான் இருந்தார். அவருடைய ஒரே சிந்தனை கடற்கரைப் பட்டினம் ( தொண்டி) ெசன்று நல்ல குதிரைகள் வாங்க வேண்டும் எ்ன்பதுதான். திருப்பெருந்துறை எல்லையில்  ஒரே விநாடியில் அவர் எ்ல்லாவற்றையும்துறக்க நேரிடுகின்றது. இதுவரை  இருந்த வந்த அவரது லெளவீக வாழ்வு இந்த நொடியிலிருந்து ஆன்மீக துறவு வாழ்விற்கு வித்துவிடுகிறது.
  இது அவராக விரும்பி நீ்ண்ட நாளாக சிந்தனை செய்து ஏற்றுக் கொண்ட முடிவன்று. என்று உறுதியாக கூறலாம். ஆகவே மதுரையிலிருந்து துறைமுகப் பட்டிணம் ஆகிய தொண்டி செல்கின்ற அமைச்சரை வழியே குருந்த மரத்தடியில் இருக்கின்றஒருவர் ஈர்த்து கொண்டார். கை தட்டியோ ஒரு பணியாளரை அனுப்பியோ அழைக்கவில்லை. இவை ெசய்யப் பெற்றிருந்தால்  திருவாதவூரார் அழைக்கப்ட்டார் என்று சொல்லலாம். ஈர்த்தல் என்பது இவ்விரண்டு செயல்களிலும்மாறுபட்ட ஒன்றாகும்.
   காந்தத்தால் ஈர்ககப்படுதல் என்பதைச்சேர்ந்தது. காந்தத்தின் எதிரே வைக்கப்படும் இரும்பு கொஞ்சம் கொஞ்சமாகநகர்கிறது. நகர்கிறது என்ற எணணம் இரும்புக்கு இல்லைவே இல்லை.ஆனால் காந்தம் எவ்வித புறச்செயலுமின்றி இரும்பை இழுக்கின்றது. அந்த இரும்புக்கு தன்னைதடுத்தி நிறுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லை. காந்தத்தின் வலுவுக்கு ஏற்ப இரும்பு மிக விரைவாக சென்று காந்தத்துடன் ஒட்டிக்கொள்கிறத.
    அதுபோல திருவாதவூரருடையஉள்ளத்தில் துறவு பற்றிய எந்த எண்ணமும் இல்லாத நிலையில்எங்கோ இருக்கின்ற குரு அவரை ஈர்க்கின்றார் காந்தம் இழுப்பது போல, இங்கேயும்தாம் இழுக்கப்படுவதை அமைச்சராகிய வாதவூராருக்கு தெரியவில்லை. அறியப்படுவதுமில்லை. எல்லாம் நடைபெற்ற பிறகு நினைத்து பார்க்கின்றார் அமைதியாக இருந்து நினைக்கும் போதுதான் தம்மையும் அறியாமல் தாம் ஈர்க்கப்டடது நினைக்க வருகிறது. ஆகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் வாழ்கின்ற இந்த உலகில் தம் ஒருவரை மட்டும் ஈர்த்து அருள் செய்த ஒருவரை எந்தை என்றுசொல்லக் கூடிய அந்த உறவுமுறை  காரணமாக குருவின் பெருமையினை உணராமலே அடிகளார் ஆகிவிடக்கூடும் , அந்த தவறும் நிகழாமல் இருப்பதற்காகவேதான் பெருமானே என்கிறார் அவர் செய்தது ஒரு தந்தை செய்த காரியம் எனவே எந்தை என்று அறிவித்தார். ஆனால் இறைவன் உலகிடை  அப்படிப்பட்ட தன்ைம உடையவனாகஇருப்பதோடு மட்டும் அல்லாமல் கற்பனை கடந்து நிற்கின்றவன் ஆதலாலே பெருமானே என்று முடிக்கின்றார்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக